Tag: உன்னை தேடி
நெஞ்சை பிளந்து உன்னை தேடி
நெஞ்சை பிளந்து உன்னை தேடி
நெஞ்சை பிளந்து உன்னை தேடி
நெடும் தூரம் நடந்தேன்
கொடும் போரில் கூட உனைத்தாங்கி
கோர வலியுடன் கடந்தேன்
இன்றெங்கே நீ இன்றெங்கே
இதயம் இன்றும் தேடுதே
உள்ளாயா இல்லை உயிர் நீத்தாயா
உள்ளமே பதில் கூறாயா
தாளம் இடும் இசையே
தரை தட்டும் கடலே
எங்கே இன்றெங்கே
என் சொந்தம் இன்றெங்கே
வான் முட்டும் மரமே
வளைந் தாடும் காற்றே
நீதி சொல்லாயா
நீர் விழி துடைக்காயா
நெஞ்சை பிளந்து இறக்க வா
நெஞ்சே உன்னை சுமந்து வாழ வா
தாய் மண்ணே பதில் கூறு
தாய் எங்கே என் தாய் எங்கே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-05-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

உன்னை தேடி வருவேன் காத்திரு
உன்னை தேடி வருவேன் காத்திரு
விழுந்து விழுந்து நீ பேசும்
விடயங்களை இரசிக்கிறேன் …
விடலையில நான் தொலைத்த
விடயங்களை ருசிக்கிறேன்….
மூச்சு வாங்கி பேசும் உந்தன்
முன்னழகு பிடிச்சிருக்கே …
காற்று வந்து ஆடை விலக்கி
காட்டும் மேனி பிடிச்சிருக்கே ….
தடக்கி விழும் வார்த்தைகளின்
தடையங்களை முகர்கிறேன்
தனிமையதை தேடும் உந்தன்
தாகமதால் துடிக்கிறேன் ….
மேனி களைத்து உடல் வேர்த்து
மோகத்தாலே துடிக்கிறாய் ..
வெள்ளி நிலா ஓடிவர
வேகம் பிடிக்க நினைக்கிறாய் ….
தேகம் வேர்க்கும் வேலை வரும்
தேவதையே பொறுத்திருப்பாய்
தேடி வந்த பணி முடித்து
தேடி வருவேன் காத்திருப்பாய் ….!
வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் -25,08,2017
வன்னி மைந்தன் கவிதைகள்







