Tag: இலங்கை
12 வருடங்களின் பின்னர் புலிகளுக்கு பணம் சேர்த்தவர் விடுதலை
12 வருடங்களின் பின்னர் புலிகளுக்கு பணம் சேர்த்தவர் விடுதலை
12 வருடஙக்ளுக்கு முனர்கொழும்பில் இருந்து புலிகளுக்கு நிதி சேகரித்த குற்ற சாட்டில்
கைதான நபர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுவிக்க பட்டுள்ளார்
சட்டத்தரணி தவராசாவின் வாத திறன் காரணமாக இவர் விடுவிக்க பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்
வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்
இலங்கை வவுனியாவில் இருந்து அனுராத புரம் நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள்
எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு தடை பட்டுள்ளது
தண்டவாளத்தில் உள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த சேவைகள் இடை நிறுத்த படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை
அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி
கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள்
என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில்
வெளிவிவகாரம், சுகாதாரம், நெடுஞ்சாலைகள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ஆகிய அமைச்சர்கள் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கென நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்களான அலிசப்ரி, நாமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்
வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்
சிரியா டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினர் சென்ற வண்டி ஒன்றில் ஆயுதம் வெடித்து
சிதறியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இராணுவத்தினர் சென்ற வண்டி பலத்த சேதமடைந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்
உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் ஒரு லட்சம் துருப்பினர் தாக்குதலை நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்
முக்கிய ஆயுத தளபாடங்களுடன் முக்கிய தாக்குதல் படை பிரிவுகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலை வருகிறது
தமது நாட்டை ரசியவிடம் இருந்து பாதுகாக்க வயோதிபர்கள் முதல் உக்கிரேனில் அவசர இஇராணுவ பயிசிறை பெற்ற வண்ணம் உள்ளனர்
பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்
பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்
பிரான்ஸ் Saint-Laurent-de-la-Salanque பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தி விபத்தில் சிக்க ஏழு பேர் பலியாகினர்
மேலும் சிலர் தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு
துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு
திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில்
துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் காணியிலிருந்து நீர் வடிந்தோடுவதற்க்காக குழாய் பொருத்தும் நோக்கில்
நேற்று (14) மாலை வெட்டப்பட்ட நிலத்திலிருந்தே குறித்த எஸ்.எம்.ஜி ரக துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் மூன்று மகசீன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அவ்வீட்டிற்க்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் குறித்த வீட்டின்
உரிமையாளர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்
தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் வாயில் சுட்டவர் கைது
சிறுவனின் வாயில் சுட்டவர் கைது
கொஸ்லாந்த – கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி
மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 21 வயதான இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்
யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்
யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்
யாழ் . மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் (வயது 11) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த வாரம் காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.
குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.
இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மின்வெட்டு அமூல் – மக்கள் அவதி
இலங்கையில் மின்வெட்டு அமூல் – மக்கள் அவதி
இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்படும் முறை மற்றும் அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு
நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு
இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அத தெரண செய்திச் சேவைக்கு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
2022 வரவு செலவு திட்ட யோசனையை சமர்ப்பித்து என்னால் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு திட்ட உரையின் 68 ஆவது பக்க 7.9 இல் ஒரு முறை மாத்திரம் அறவிடப்படும் வரி யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில் 2000 மில்லியனை விட அதிக வரி
வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்களின் மீது சுமத்தப்படும் 25 சதவீத மிகை வரி குறித்து தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரி ஊடாக சுமார் 100 பில்லியன் ரூபாயினை ஈட்ட எதிர்ப்பார்த்துள்ளோம். இவ்வாறுதான் 68
ஆம் பக்கத்தில் உள்ளது. அதன்படி, 69 பேரை இனங்கண்டிருந்தோம். இவர்களிடம் இருந்து 105 பில்லியன் வரி வருமானம் கிடைக்கும். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்களை இதில் உள்ளடக்க நாம்
எப்போதும் எதிர்ப்பார்க்கவில்லை. அதை நாங்கள் திட்டமிடவே இல்லை. எனினும் கடந்த அரசாங்கத்தின் 2017 இலக்கம் 24 உள்நாட்டு வருமான சட்டத்தில் இந்த 11
நிதியங்களும் வரி அறிவிட வேண்டிய நிறுவனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மிகை வரிக்கு குறித்த நிதியங்களும் உள்ளடங்கும் என பொது மக்கள்
மத்தியில் கருத்து பரவியுள்ளது. இதனை நாம் அமைச்சரவையில் விளக்கப்படுத்தி குறித்த 11 நிதியங்களையும் இந்த வரியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 31 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து 1500 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தீயில் எரிந்து நபர் மரணம்
தீயில் எரிந்து நபர் மரணம்
லிந்துலை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அந்த
சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுளளார்
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடரால் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
உக்ரைனில் போர் பதற்றம்; இலங்கையர்களின் நிலை
உக்ரைனில் போர் பதற்றம்; இலங்கையர்களின் நிலை
உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பல
நாடுகள் உக்ரைனிலுள்ள தமது நாட்டு பிரஜைகளை நாடு திரும்புமாறு அறிவித்துள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் தற்போது 42 இலங்கையர்கள் வசித்து வருவதாகவும், அவர்களில் 7 பேர் மாணவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.
மேலும், இவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வருவதாகவும், உக்ரைனிலுள்ள இலங்கையர் தொடர்பில் மிகுந்து அவதானத்துடன் செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
உக்ரைனில் இலங்கை தூதரகமொன்று இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள
தூதரகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு மேலும் கூறுகின்றது.
இதேவேளை, உக்ரைனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள
இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக்கு வந்தது
சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக்கு வந்தது
தற்சமயம் சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபயகுணவர்த்தன தெரிவித்தார்.
தற்போது துறை முகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு தாமதக்கட்டணம் இன்றி விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல
நடவடிக்கைகளுமள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு
உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் சுமார் 98,000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறவில்லை. இவர்களுள், கணிதப்
பாடத்தில் சித்தியடையாத, ஆனால் பின்னர் அதன் பெறுபேற்றை பெற்றுத் தருவதாக கூறி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகைமை பெறாத மாணவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் இனங்காணப்பட்டு அவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப
தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது
20 மில்லியன் போதைவஸ்துடன் ஐவர் கைது
இலங்கையில் மகிந்த ஆட்சியின் பின்னர் பரவி வரும் போதைவஸ்து வியாபாரம் கொடி
கட்டி பறக்கிறது
இராணுவம் போலீசார் இணைந்து நடத்திய தேடுதலிஞ் பொழுது இருபது மில்லியன் ரூபா பெருமாதியான போதைவஸ்து மீட்க பட்டுள்ளது
இந்த கடத்தலை புரிந்த ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
வெட்டி கொன்று சடலம் எரிப்பு – அதிர்ச்சியில் கிராம மக்கள்
வெட்டி கொன்று சடலம் எரிப்பு – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை பெயர்வைலை பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை முற்றி கொலையில் முடிந்துள்ளது
வெட்டி கொலை செய்ய பட்ட நபர் அதே வீட்டுக்குள் வைத்து எரியூட்ட பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொலை செயலில் ஈடுபட்டவர் கைது செய்ய பட்டுள்ளார்
12 இந்திய மீனவர்கள் – கைது
12 இந்திய மீனவர்கள் – கைது
இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற
குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளனர்












