Posted in இலங்கை செய்திகள்

யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின்

மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை

மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்

ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாள்வெட்டு
வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற

வாள்வெட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு 7.30 மணி அளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை

வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில்

நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை

முன்னெடுத்து வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு

      யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு

      யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வாள் வெட்டு குழு நடத்திட திடீர்

      வெட்டு தககுத்தலில் பலத்த காயமடைந்த நிலையில் இருவர்

      யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      இவரக்ளில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

      இந்த வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவு வழங்கி காவல் துறையினர் காப்பாற்றி செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்

          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

          வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்

          இலங்கை தமிழர் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து செல்கிறது ,


          தம்மை ஒரு விடுதலைக்காக போராடும் நபர்கள் போல காட்டி கொள்ளும் இந்த காவாலி ரவுடிகள் பணம் பறித்தல் ,மற்றும் கடத்தல் என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்

          இவ்வாறு தமது பங்கு பிறிப்பதில் ஏற் பட்ட தகராறு கரணமாக, தமது அணியினர் செய்த கடத்தல் ,

          மற்றும் கொலைகள் என்பன தொடர்பான விடயங்களை எதிர் அணிக்கு காட்டி கொடுத்து விடுவதால் இந்த குழுவுக்குள் உள்ளக மோதல் சண்டை இடம்பெற்றுள்ளன

          நெல்லியடியில் இடம்பெற்ற படுகொலையும் இவ்விதமே இடம்பெற்றுள்ளது .பொலிசாரின் ஆதரவுடன் குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டார் ,

          சிலர் வெட்டியும் ,வீதி விபத்தில் கொலை செய்ய பட்ட நிலையிலும் கொலைகள் இடம்பெற்றுள்ளன

          சிலர் கொன்று பின்னர் மரங்களில் தூக்கில் தொங்க விட பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளன
          ,இந்த கஞ்சா ரவுடி வாள் வெட்டு குழுக்கள் மோதல்கள் ,

          அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது ,.சிங்கள போலீசாரும் இவர்களுடன் இனைந்து செயல் படுவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது

          இந்த குழுக்களை அழித்திட புலிகள் தான் வரவேண்டும் என மக்கள் மூணு முணுப்பது அங்காங்கே தொடர்கிறது .

          வாள்வெட்டு குழுக்களுக்குள்
          வாள்வெட்டு குழுக்களுக்குள்
              Posted in இலங்கை செய்திகள்

              மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வெட்டி கொலை

              மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வெட்டி கொலை

              மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்

              ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

              இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

              சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.

                படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

                மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

                உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால்

                ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

                மிருசுவில் பகுதியில் வாள்
                மிருசுவில் பகுதியில் வாள்