Tag: பொலிஸார்
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.
அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.
தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.
அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது
Featured
விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்
விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்
மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை அனைவராலும் பேசப்படுகின்றது.
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனை அமுல்படுத்தப்பட்டது.
மஹியங்கனை மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 தொழிற்பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் “யுக்திய” நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக போக்குவரத்தையும் பொதுமக்களையும் சோதனை செய்ய இவ்வாறு ஒன்றிணைந்தனர்.
ரிதிமாலியத்த, எகிரியன் கும்புர, லொக்கலோயா, தம்பான 51 மைல்கல், வெரகந்தோட்டை பாலத்திற்கு அருகில், சொரபொர சந்தி ஆகிய 06 இடங்களில் இந்த சோதனைகள் இடம்பெற்றன.
பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு ஆய்வுகளின் நடைமுறை அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்
பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையில் 773 கைது
யுக்திய நடவடிக்கையில் 773 கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (06) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
130 கிராம் ஹெரோயின், 159 கிராம் ஐஸ், 900 கிராம் 1725 கிலோகிராம் கஞ்சா ஆகியன சந்தேகநபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களில் 05 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுக்திய நடவடிக்கையில் 773 கைது
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 08 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 108 சந்தேக நபர்களில் 12 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 128 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனை கட்டுப்படுத்த பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
இலங்கை பொலிஸாருக்கு புதிய உத்தரவு பொலிஸ் தலைமையக்கத்தால் பிறப்பிக்க பட்ட நிலையில் இலங்கை பொலிஸார் திணறி வருகின்றனர் .
லொறி சாரதி ஒருவரை சிவில் உடையில் நின்ற பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தனர் .
இதனை அடுத்து இலங்கை பொலிஸ் நிலையங்கள் யாவற்றுக்கும் உடனடி அமூலுக்கு வரும் நிலையில் ,சிவில் உடையில் பணியாற்றும் இலங்கை பொலிஸார் யாவரும் வாகனங்களை சோதனை செய்த்திட தடை விதிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு வழங்க பட்ட இந்த அதிரடி உத்தரவை அடுத்து லஞ்ச போலிஸ் பெருச்சாளிகள் கலக்கத்தில் உறைந்துள்ளனராம் .
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மதுபோதையில் இருந்துள்ளார்.
அந்த பகுதி வீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு
சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்துக்கொண்டார்.
மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிழித்துள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீதும், இளைஞனுடன் அவரது தாயார், சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்
காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியல் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்
முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்
பொது மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுத்தால் உடன் அறித்தருமாறு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிரேஸ்ட அத்தியட்சகருக்கும் இடையில் வவுனியாவின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் சில பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுப்பதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்
அத்துடன் திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான அதாவது குறைந்த பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக எனக்கு அறியத்தரவும். எனது தொலைபேசி இலக்கமான 0718591340 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்.
வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் பதில் அளிக்காத சந்தர்ப்பத்தில் குறித்த தொலைபேசிக்கு தன்னால் மீள தொடர்பு ஏற்படுத்தப்பட்டு முறைப்பாடு பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தவறு செய்தால்
பொலிஸார் தவறு செய்தால்
வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்கே அவர்கட்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது
இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்கர் வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர்
எனவும் அதேவேளை திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும்போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில்
பொலிஸார் தவறு செய்தால்
பதிவதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால்
பொதுமக்கள் உடனடியாக தமக்கு அறியப்படுத்துமாறும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் தெரிவித்துள்ளார்
பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என்றும் 071-8591340 குறித்த தொலைபேசி ஊடாக தகவல்களை நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
by நிருபர் காவலன் - பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
by நிருபர் காவலன் - ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
by நிருபர் காவலன் - இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
by நிருபர் காவலன்
பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
நேற்று (26) இரவு நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததை அடுத்து பொலிஸார் எச்சரிக்கைக்காக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனினும், இச்சம்பவம் கொலை என்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பொலிஸார் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு
குறிப்பிட்ட மரணம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குழு ஒன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும்
காவல் நிலையத்திற்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், பணியில் இருந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு,
நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 8 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்
இலங்கை
வீடுகளுக்குள் திடீரென புகும் பொலிஸார்
மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு
அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று வருகிறார்கள்.
வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் 20.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிசாரரினால் வவுனியா நீதிமன்றில் தடை
உத்தரவு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை ஆராய்ந்த மன்று குறித்த நிகழ்விற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிசாரினால் பெயர் குறிப்பிட்டப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவு கட்டளையை வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் முன்னால் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர்
கோ.ராஜ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர் சு.தவபாலன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாக பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களை தேடி வவுனியா பொலிசார் வீடு வீடாக திரிந்து வருகின்றனர். பின்னர்
தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று குறித்த தடை உத்தரவுகள வழங்கப்பட்டடு வருகின்றது.
இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள்
பிழையாக உள்ளதாகவும், பொலிசாரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு
நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம்,
இன்றைய தினம், நல்லூர் கோவில் உள்வீதியில் இடம்பெற்ற நிலையில், கோவில் சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் கோவில் தேர் உற்சவத்தை தரிசிக்க அடியவர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்கும் முகமாக, நல்லூர் கோவில் சூழலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவில் உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல
அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு, கோவிலுக்கு முன்பாக பொலிஸாரின் பஸ் ஒன்று, வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு, நல்லூர் கோவில் வளாகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது
மற்றொரு நபரைத் தாக்கும்போது வேடிக்கைப் பார்த்த பொலிஸார் கைது
வெலிகம பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மற்றொரு நபரைத் தாக்கும்போது அதனைக் கண்டுங்காணாததுபோல வேடிக்கைப் பார்த்த இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பிரதேசத்தில் வைத்து பஸ் சாரதி ஒருவர் அங்கிருந்த மற்றொரு நபரை இரவில் கடுமையாகத் தாக்கியிருந்த நிலையில்,
சம்பவ இடத்திலிருந்த இரு பொலிஸார் அதனை வேடிக்கைப் பார்த்ததோடு, தாக்குதலை தடுக்கத் தவறியமைத் தொடர்பான சிசிடீவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, அச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தில்
தாக்குதலை மேற்கொண்ட குறித்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
மேலும் இச்சம்பவம் நடைபெற்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமாக இருந்தால், அதனைத்
தடுக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. தாக்குதலுக்குள்ளாகும் நபரைக் காப்பாற்ற வேண்டியதும், தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளியை கைது செய்வதும் பொலிஸாரின் பொறுப்பு என்றார்.
எனவே தாக்குதலைத் தடுக்கத் தவறியப் பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்
மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நோயை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் இதற்கு பொதுமக்கள் கடமைப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பொழுது அல்லது வீட்டுக்கு அப்பால் வெளியே செல்லும் பொழுது தமது முகவரி தேசிய அடையான அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி
இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடித துண்டுகளை எப்பொழுதும் வைத்திருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்டிகை கால வைபவம் உள்ளிட்ட சில வைபவங்களில் பொதுமக்கள் ஈடுப்படக்கூடும். அனைத்து வைபவங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொலிஸார்,
பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பல்வேறு தனிமைப்படுத்தல் முறை, கொவிட் தொற்றை தடுப்பதற்கு மூலோபாயங்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. இவ்வாறான
சந்தர்ப்பங்களில் உங்களிடம் தகவல்களை கேட்டால், தகவல்களை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
படிவம் ஒன்றில் இந்த தகவல்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை
குறித்த கடிதத்துண்டு ஒன்றை உங்கள் வசம் வைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய வகையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்; கைது
செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இந்த விதிமுறைகளை மீறியதன் காரணமாக இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவ்வாறானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டவாறு செயல்படுமாறு
நாம் கேட்டுக் கொள்கிள்றோம். பண்டிகை மற்றும் குடும்ப வைபவங்களை குடும்பத்துக்குள் மாத்திரம் வரையறுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பி.சீ.ஆர் பரிசோதனையின் போதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், ஏனைய சுகாதார நடவடிக்கைகளின் போதும் போலியான பெயர்கள் தகவல்கள்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இதுதொடர்பில் நாம் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு செயல்படுவோர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சமூக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி வழக்கு தொடரக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு. இவ்வாறான வழக்கு
ஒன்றில் குற்றம் இழைத்தவராக காணப்படுவோர் 5 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் . இதனால் போலி ஆவணங்கள், போலித் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு
பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்..





























