நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு

Spread the love

நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம்,

இன்றைய தினம், நல்லூர் கோவில் உள்வீதியில் இடம்பெற்ற நிலையில், கோவில் சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் கோவில் தேர் உற்சவத்தை தரிசிக்க அடியவர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்கும் முகமாக, நல்லூர் கோவில் சூழலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில் உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல

அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு, கோவிலுக்கு முன்பாக பொலிஸாரின் பஸ் ஒன்று, வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு, நல்லூர் கோவில் வளாகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *