Tag: பதவிப்பிரமாணம்
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம் ,முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03)
சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.
இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்
ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் ,இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த தினம் இடம்பெற்ற வாக்களிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டுள்ளஅனுரகுமார திசாநாயக்க வருகையை அடுத்து இலங்கையில் பாரியளவு அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாதாரண ஆடையில் தோன்றிய அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .
இவரது வருகையை அடுத்து நாட்டில் பல்வேறுபட்ட அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் ,லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காணாமல் ஆக்கப்படக்கூடிய நிலைகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் மனங்களை வென்ற அனுரகுமார திசாநாயக்க அந்த மக்களின் அன்புக்குரியவராக இறுதிவரை செயல்படுவாரா என்பதே தற்பொழுது மக்களுக்கு கேள்வி ஆகிறது.
இவரது பதவியேற்று நிகழ்வு முடிவடைந்தது அடுத்து பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்ற தேர்தலை எப்பொழுது நடத்துவார் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளதுடன், லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் பதறி கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.





















