டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்
Posted in உலக செய்திகள்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்

டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம் ,டிக் டாக் நிறுவனத்திற்கு 530 மில்லியன் ஈரோ தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அறிவித்துள்ளது.

சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்பது உலகளாவிய ரீதியில் பரபரப்பான சமூக வலைத்தளமாகும்.

பல மில்லியன் கணக்கான மக்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்கிறது இந்த tiktok.

அயர்லாந்து நாட்டில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்கின் அந்த நிறுவனம் அந்த நாட்டு மக்களுடைய தனி நபர் விபரங்களை திருடி சீனாவுக்கு விற்று வந்ததாக அது குற்றம் சுமத்தி இருக்கிறது.

அதனால் திட்டமிட்டு இடம்பெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு 539 மில்லியன் ரூபாய் வரை தண்டம் அறவிட படப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் டெக் டாக் நிறுவனத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது .

ஆனால் அதற்காக அந்தந்த நாடுகள் பல மில்லியன் தண்டமரம் விடப்பட்டு வருகிறது.

குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த குற்றங்களை எடுத்தும் பல மில்லியன்கள் தண்ட மரபிடப்படுவதுடன் பல நாடுகளில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்பொழுது tiktok உலகளவு மக்கள் மத்தியில் பரபரப்பாகவும் பயமுறுத்தும் ஒன்றாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் டிக்டாக் தடை
Posted in உலக செய்திகள்

டிக்டாக் அமெரிக்காவில் தடை

டிக்டாக் அமெரிக்காவில் தடை

டிக்டாக் அமெரிக்காவில் தடை , அமெரிக்காவில் tiktok தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

புதிதாக வருகை தந்துள்ள ஜனாதிபதி டிராம்ப் அவர்கள் நீதிமன்றத்தில் டிக் டாக் வர்த்தக வியாபார விவரங்கள் தொடர்பான விசாரணை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் நடத்தி வருகின்றார்.

அவர்கள் எவ்வாறு இவ்வாறான பணத்தை ஈட்டி கொள்கிறார் அதனை அடுத்து தற்பொழுது மோசடியான முறையில் இந்த வருமானத்தை ஈட்டிக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்கள் .

அதன் அடிப்படையில் தற்போது அமெரிக்காவில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .

எதிர்வரும் தை மாதம் பத்தாம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது .

வீடியோ

அவ்வாறு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற பொழுது அமெரிக்காவில் முற்று முழுதாக பயன்பாட்டுக்கு tiktok வருவது தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது .

அதனை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் உண்டு.

டிக் டாக்கிற்கு பயனாளர்கள் உலகளா விய ரீதியில் அதிகமாக காணப்படுகிறார்கள் .

அதன் மீது தடைகளை விதித்து இல்லாது வலிக்கின்ற நடவடிக்கையில் மேற்குலகங்களில் ஈடுபட்டு வருகிறதா என்று சந்தேகத்தை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுவதாக .

இப்படி எதிர்மறை விடியுங்கள் வீழ்ந்த வண்ணம் இருக்கின்றன .

Posted in உலக செய்திகள்

டிக்டாக்’ நிறுவனம் இந்தியாவில் அடித்து பூட்டு

டிக்டாக்’ நிறுவனம் இந்தியாவில் அடித்து பூட்டு

டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

அரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது

பாதுகாப்பு காரணங்களைக் கூறி, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடைவிதித்தது.

இந்நிலையில், டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தொடர் கட்டுப்பாடுகள்தான் இந்த முடிவுக்குக் காரணம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டிக்டாக்கின் உலக இடைக்காலத் தலைவர் வனேஸா பாப்பாஸ், துணைத் தலைவர் பிளேக் சாண்ட்லீ ஆகியோர் கூட்டாக தமது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை

அனுப்பியுள்ளனர். அதில், இந்திய பிரிவை மூடுவதை ஒட்டி இந்தியாவில் உள்ள 2 ஆயிரம் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க

எண்ணிக்கையிலானவர்களை குறைப்பதாகவும், அது இங்குள்ள தமது அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சட்டங்கள், விதிகளுக்கு உள்பட்டு தங்கள் நிறுவனம் நடந்தபோதும், அரசின் கட்டுப்பாடு தொடரும் நிலையில் தமது

இந்தியப் பிரிவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது நிலையற்ற தன்மை நிலவினாலும், எதிர்காலத்தில் இந்தியாவில்

தங்கள் தொழிலை மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

டிக்டாக், லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டிக்டாக், லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டிக்டாக் லைட் உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிக்டாக் லைட் உள்பட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு மீண்டும் அதிரடி
கோப்பு படம்
புதுடெல்லி:

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களில் டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் என செயலிகளின் குளோன்கள் (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) மீண்டும் இந்தியாவுக்குள் நுழையத்தொடங்கின.

இந்த செயலிகள் அனைத்துமே இந்தியாவால் தடைசெய்யப்பட்ட சீன நிறுவனங்களின் கீழ் இயங்கும் பிரதியாகும்.

இந்நிலையில், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்பட 47 சீன செயலிகளிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

47 சீன செயலிகளுக்கான தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தடையின் மூலம் மத்திய அரசு தடை விதித்துள்ள சீன செயலிகளின் மொத்த எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.