Tag: துறைமுக நகரில்
Posted in இலங்கை செய்திகள்
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 24/09/2023
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு
இந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இறுதியாக நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.
தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தைby நிருபர் காவலன்
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்by நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளதுby நிருபர் காவலன்
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணைby நிருபர் காவலன்
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்by நிருபர் காவலன்












