Tag: கோட்டை
15 மாதங்களில் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் இவ்வாறு காட்சி
15 மாதங்களில் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் இவ்வாறு காட்சி
15 மாதங்களில் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் இவ்வாறு காட்சியளிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை இரயில் நிலையம் 15 மாதங்களுக்குள் புனரமைக்கப்பட்டு முடிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்குப் பிறகு நிலையம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது குறித்த தனது தொலைநோக்குப் பார்வையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தொடர் படங்களுடன் கூடிய முகநூல் செய்தியில், புனரமைப்புக்கான அரசாங்கத்தின் திட்டங்களை
அமைச்சர் கோடிட்டுக் காட்டியதோடு, இந்த இலக்குத் திட்டத்தின் மீது தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நாட்டை அழகாகக் காண
“இந்த நாட்டை அழகாகக் காண, நீங்கள் அழகாகத் தோன்ற வேண்டும்…! குழப்பமடைய வேண்டாம், 15 மாதங்களில் கோட்டை இரயில் நிலையத்தை நாங்கள் இப்படித்தான் காண இலக்கு வைத்துள்ளோம்…!
அதுதான் நம்பிக்கை…!! ஒரு இலக்குத் திட்டம்…! மக்களுக்கு ஒரு அற்புதமான பெட்டியை வழங்கும் திட்டம், அது நிரப்பப்படாத பெட்டிகளை நிரப்பும்…!” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இத்திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த புகழ்பெற்ற இரயில் நிலையத்தை மாற்றுவதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ,கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணி
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களது பயணப் பொதிகள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கியூ வீதியில் வசிப்பவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மட்டுமே அந்த வீதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைச்சாலை வைத்தியசாலை
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவப் பரிந்துரையின்
பேரில் மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐந்து விசேட வைத்தியர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வருகிறது.
அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்து அந்தக் குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா ,என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது..
துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்..
பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய்…
ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள்…
காலம் சதி செய்தது …..
நரிகள் சதி செய்தது…
எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்… அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது துடித்துப் போய் இருக்கும் அல்லவா..
எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்..
அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள்…
ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது…
அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்….
அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல.
அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா?
முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..
எல்லாரும் துரோகிகள் என்றார்கள்…
அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை..
எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்..
அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது..
நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை..
கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா..
இப்படிக்கு அர்ச்சுனா.
இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

ஹமாஸ் கோட்டைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்திற்கு பெரும் அடி
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் .
ஆரம்பம் ,ஈரான் இந்த திடீர் ஏவுகணை போர்
அரங்க திறப்பால் அலறும் எதிரி கோட்டைகள் ,
எவ்வேளையும் போர் வெடிக்கலாம் .
இன்றே இறந்து விடு ….!
இன்றே இறந்து விடு ….!
குண்டு வீசி குருதி குடித்தாய்
குரல் வளை நடுங்கிறதா – உன்
குலமே அழிகிறதா
கூண்டு சிரிக்கிறதா
பயந்தார் என்றே
பகிடிகள் செய்தாய்
பழிகள் துரத்திறதா – இன்று
பகமை விரட்டிறதா
கெஞ்சி அழுதார்
கேளிக்கை செய்தாய்
கேடு தெரிகிறதா – இன்று
கோட்டை சரிகிறதா
ஆடிய காவடி
அத்தனை மாறினர்
அடடா இரத்தம் கொதிக்கிறதா – இன்று
அடக்க முடியலையா
வாலை ஆட்டியே
வாசல் வந்தவர்
வாயில் மிதிக்கிறதா – அட
வார்த்தை தெறிக்கிறதா
கொள்ளை அடித்தவர்
கோட்டை பிடித்தவர்
அரியணை சாய்கிறதே
அவலம் தெரிகிறதே
இதுவரை விதைத்த
இன்னல் துரத்திட
இன்றேன் அழுகின்றாய் – ஏன்
இறந்திட மறுக்கிறாய் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2022


















