Tag: கெஹெலிய
கெஹெலியவின் ஊழல் வழக்கு மீண்டும் விசாரணை
கெஹெலியவின் ஊழல் வழக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, அவரது மகள் அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களது.
வீட்டு உதவியாளர் நிபுனி
வீட்டு உதவியாளர் நிபுனி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கை பிப்ரவரி 13 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இன்று உத்தரவிட்டார்.
அமைச்சராக பணியாற்றும் போது தனிப்பட்ட ஊழியர்களில்
செய்யப்பட்ட சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதிபதி, பிப்ரவரி 13 ஆம் தேதி மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார்.
அமைச்சராக பணியாற்றும் போது தனிப்பட்ட ஊழியர்களில் வெளி நபர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்கு செலுத்த வேண்டிய சம்பளம் மற்றும்
கொடுப்பனவுகளை அவர்களின் சொந்த வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும்,
அதற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் ,தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (26) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
குற்றப் பத்திரிகை
தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 13 குற்றச்சாட்டுகள் உள்ளன.
2022 ஆம் ஆண்டில், நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில், சுகாதாரத் துறையின் ஏற்கனவே இருந்த கொள்முதல் நடைமுறைகளை
மாற்றி, மருந்துகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்து புதிய மருந்துகளை கொள்வனவு செய்தது.
இவ்வாறு கொள்வனவு செய்த மருந்துகளில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகள் காணப்பட்டதோடு, அதனை செலுத்திக்கொண்ட கண்டி,
மாத்தளை மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் மூவர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாகக் கிடைத்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்தது.
நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு
பின்னர், அந்த விசாரணை தொடர்பாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த சுதத் ஜனக பெர்னாண்டோ, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின்
முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திர குப்தா மற்றும் சுகாதாரத் துறையில் உயர் அதிகாரிகள் குழு ஆகியோர் இதில் அடங்குவர்.
இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், தரமற்ற
தடுப்பூசிகளை விநியோகம் செய்த முதல் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு இறுதியாக விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிட்டு தெரிவிக்கையில், தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் ஒரு வருடம், 8 மாதங்கள் மற்றும் 6 நாட்களாக நடத்திய விசாரணைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.
அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன், முன்னாள் சுகாதார
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான மஹேன் வீரமன், அமாலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையின்படி, 350 சாட்சிகளும் சுமார் 300 ஆவணங்களும் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹெலிய பிணையில் விடுதலை
கெஹெலியவும் பிணையில் விடுதலை
கெஹெலிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
விளக்க மறியல் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல தற்பொழுது நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு இணைந்து முன்வைத்த வாதங்களை, பரிசீலித்த பின்னர் இந்த பிணை வழங்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சராக இருக்கின்ற பொழுது பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டார் என குற்றச் சுகத்தப்பட்டுள்ளது.
பிணையில் அமைச்சர் விடுதலை
அந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தற்பொழுது பிணையில் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் என்பது , உலக இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை செய்ய நீதிமன்றம் ஏன் அனுமதி அளித்தது என்பதுதான் மக்கள் கேள்வியாக உள்ளது.
நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்ட இவ்வாறானவர்கள் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளது தவறு என்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக காரணமாக இருந்த அமைச்சர் எப்படி விடுதலை ஆனார் .இது தான கேள்வியாகிறது .
கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை
கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை
கெஹெலிய மீண்டும் சி ஐ டி யில் முன்னிலை ,முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையானார்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த கெஹெலிய.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த கெஹெலிய.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07) நடைபெறும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பாராளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம்
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம்
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டின் சுகாதாரத்துறையின் நெருக்கடி நிலைக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
by நிருபர் காவலன் - தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
by நிருபர் காவலன் - குற்றவாளிக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
by நிருபர் காவலன் - இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
by நிருபர் காவலன்
















