Tag: எரிபொருள்
எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்
எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அரசாங்கத்தால் எரிபொருள் விலைகளைக் குறைந்தது ரூ. 120 ஆல் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி (SUTUF) ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்தார்.
ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் சில்லறை விலை குறைந்தது 125 ரூபாவால் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.
ஒரு லீற்றர் நாப்தா (naptha) எண்ணெய், பெர்னெஸ் (furnace) மற்றும் மண்ணெண்னையின் விலைகளை இடையூறின்றி 110 ரூபாயால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஏப்ரல் முதலாம் திகதி செய்யப்படவுள்ள எரிபொருள் விலை சீர்திருத்தத்தின் மூலம் மக்கள் பயன்பெறக்கூடிய அளவு விலைகள் குறைக்கப்படலாம் என இதற்கு முன்னதாக எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்
ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விலை குறைக்கப்பட்டால் மின் கட்டணத்தில் கணிசமான குறைப்பு ஏற்படும். நாப்தா மற்றும் டீசல் எரிபொருள் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களால் 100% சுத்திகரிக்கப்படுகிறது.
உலக சந்தையிலிருந்து மசகு எண்ணெய் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்படுகிறது. அதற்கேற்ப நாப்தா, பர்னேஸ் மற்றும் மண்ணெண்ணையின் விலைகளை சற்று அதிகளவில் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு அதிக நன்மையை வழங்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலையை 100 ரூபாயால் குறைக்க முடியும். மீதித் தொகையை உள்ளுர் சந்தையில் டீசலின் சில்லறை விலையைக் குறைக்க வழங்கலாம்.
வரி செலுத்திய பின், கடந்த மாதம் 9 பில்லியன் ரூபாய் இலாபத்தையும், ஜனவரி மாதம் 12 பில்லியன் ரூபாய் இலாபமும் ஈட்டியதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விற்பனை மூலம் தற்போது பெருமளவு இலாபமீட்டுவதாக பாலித்த மேலும் தெரிவித்தார்
சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
ஒரு ஹெக்டெயருக்கு குறைவான நிலத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் ஒவ்வொரு விவசாயிக்கும், சீனாவினால் வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு கிடைத்த 10.06 மில்லியன்
லீற்றர் எரிபொருள் மானியத்தில் இருந்து 6.98 மில்லியன் லீற்றர் எரிபொருளை இலங்கையின் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிவாரணமாக
சீன எரிபொருள் மானியத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
வழங்க தீர்மானித்துள்ளதாக விவசாயம், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு கிடைக்கப்பெற்ற எரிபொருள் மானியத்தின் மிகுதியை, நாட்டின் மீன்பிடித்துறைக்கு வழங்கப்பட உள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை
இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை
இலங்கையில் உள்ள 700 எரிபொருள் நிலையங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை செய்கிறது.
இவ்வாறான கோரல்கள் வெளிநாடுகளினால் வேண்ட பட்ட நிலையில் ,இந்த எரிபொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு, விறகும் நிலையில் விண்ணப்பங்கள் கோர பட்டுள்ளன.
இந்தியா ,சீனா ,கனடா பிரிட்டன், போன்ற நாடுகள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.
சீனாவே இந்த நிறுவனங்களை கட்டு படுத்த தீவிரம் காண்பித்து வருவதால் ,அதிக நிறுவனங்களை, சீனா தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.
அவ்வாறு சீனா பெற்று கொண்டால் இலங்கை மேலும் பேராபத்தை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
எரிபொருள் வாங்கிட காத்திருந்தவர் மரணம்
எரிபொருள் வாங்கிட காத்திருந்தவர் மரணம்
இலங்கை புத்தளம் பகுதியில் எரிபொருள் வாங்கிட காத்திருந்த ஒருவர் மரணமாகியுள்ளார்.
நேற்று முதல் புத்தளம் பகுதியில் எரிபொருள் பெற்றிட லொறியில் காத்திருந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமாகியுள்ளார் .
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துள்ளனர் .
எரிபொருள் இல்லாமையால் சமூக வாழ்வாதாரம் பாதிக்க பட்டுள்ளது.
இவ்வாறான புற நிலைகளினால் எழும் அழுத்தம் வறுமை பிரச்சனைகளை தீர்க்க முடியாத மன அழுத்தம் ,அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம் காரணமாக இந்த மரணங்கள் பதிவாகி வருகிறது.
இலங்கையில் எரிபொருள் பெற்றுக் கொள்ள காத்திருந்து மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளமை கவலை தருகிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்
இலங்கை ; யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரி பொருள் வாங்கிட வரிசையில் காத்து நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
எரிபொருள் பெற்றிட காத்திருக்கும் மக்களுக்குள் இடையில் புகுந்திட மேற்கொள்ளும் செயல்பாடுகளினால்
மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது.
பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே
பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே
பிரிட்டன் Dorset. பகுதியில் உள்ள மொரேசியன் எரிபொருள் நிலையம் ஒன்றில் கேரவன் வான் ஒன்று தீ பிடித்து கொண்டது .
அமெரிக்கா மாடல் தயாரிப்பான குறித்த கேரவன் வான் மொரேசியன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ பற்றலினால் அந்த கேரவன் வான் எரிந்து நாசமானது .
மேலும் எரிபொருள் நிலையத்தின் கூரை என்பன எரிந்துள்ளன .

எனினும் இந்த தீ சம்பவத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாத நிலையில் எரிபொருள் நிலையத்தின் எண்ணெய் கிடங்கு தப்பித்து கொண்டது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்தினை தீயணைப்பு வீரர்கள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பிரித்தானிய செய்திகள் மேலும் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

தற்போது இந்த எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு
எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி சூடு
இலங்கை ,கொழும்பு ; பதுளை- பசறை பகுதியில் உள்ள பிரதான எரிபொருள் நிலையம் ஒன்றில் .
எரிபொருளை பெற்று கொள்ள வந்தவருக்கும் எரிபொருள் நிலைய முகாமையாளருக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் பொழுது எரிபொருள் பெற்று கொள்ள வந்த நபர் கைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார் .
இதனால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டதுடன் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் ஒருவருடத்திற்கு எரிபொருள் நெருக்கடி தொடரும்
இலங்கையில் ஒருவருடத்திற்கு எரிபொருள் நெருக்கடி தொடரும்
இலங்கை , கொழும்பு ; இலங்கையில் ஏற்ப்டடுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்வரும் ஒருவருடத்திற்கு எரிபொருள் நெருக்கடி தொடரும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் இயல்பு வாழ்வியல் பாதிக்க பட்டு வாழ்வாதாரம் முடக்க பட்டுள்ளது .
இவ்வாறான சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எரிபொருள் வழங்க கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .அதுவே ஜனாதிபதி கோட்டபாயாவை நாட்டை விட்டு துரத்தியடித்துள்ளது குறிப்பிட தக்கது .
எரிபொருள் வாங்கிட நிரையில் நின்றவர் மரணம்
எரிபொருள் வாங்கிட நிரையில் நின்றவர் மரணம்
இலங்கை ,மாத்தளை ; இலங்கையில் எரிபொருள் வாங்கிட இரு நாட்களாக நிரையில் நின்ற நபர் பலியாகியுள்ளார்.
இரண்டு நாட்களாக எரிபொருளை பெற்றிட நிரையில் நின்ற அறுபத்தி மூன்று வயது நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் .
எரிபொருள் பெற்றிட காத்திருந்து மரணமாணவர் இலங்கை மாத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இலங்கையில் எரிபொருள் வாங்கிட நிரையில் நின்று இறப்பவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை கவலை தருகிறது .
எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு
எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு
இலங்கை ,கொழும்பு ; நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடுமுழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து
டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23)
இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்றொழில், சுற்றுலாத்துறை , உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும்
முன்னைய முறைப்படி இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மற்றும்
நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவைகள் யாவும் முடக்க பட்டுள்ளது .இதனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியால் தவித்து வருகின்றனர் .
மோசமான எரிபொருள் தட்டுப்பாடு
ஆட்டோ டாக்சி டிலிவரி செய்து பிழைத்து வந்த மக்கள் தமது தொழில் துறையை முற்றாக இழந்துள்ளனர் .
எரிபொருள் தட்டுப்பாட்டால் சீற்றத்தில் உள்ள மக்கள் ஆளும் அரசு மற்றும் அந்த அரச இயந்திரமாக செயல் பட்டு வரும் பொலிஸ் மக்களுக்குள் இடம்பெறும் மோதல் சம்பவம் பெரும் ஆபத்தான நிலையில் பயணிக்கிறது .
காவல்துறை இராணுவத்திற்கு எரிபொருள்
காவல்துறையினர் இராணுவத்தினர் தமது வாகனங்களில் சென்று எரிபொருளை நிரப்பி சென்ற வண்ணம் உள்ளனர் .

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி அரசு
ஆனால் மக்கள் நாள்கணக்காய் காத்துக்கிடந்தும் அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை .
எமக்கு வேண்டும் எரிபொருள்
இதனை எதிர்த்து கேள்வி கேட்ட சிங்கள மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளதுடன் அவர்கள் வண்டிகளும் சேதமாக்க பட்டுள்ளன .
தொடர்ந்து இந்த காவல்துறை இராணுவத்தின் அடக்குமுறைகள் நீடித்து சென்றால் அதுவே ஆளும் கோட்டபாய ரணில் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
மக்கள் அரச சொத்துக்கள் வங்கிகளை கொள்ளையடிக்கும் நிலை உருவாக்கம் பெறும் மிக பெரும் ஆபத்தான நிலைக்கு இலங்கைசென்ற வண்ணம் உள்ளது.
திட்டமிடப்படும் படுகொலைகள்
எரிபொருள் பெறும் காவல்துறை இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அது வன்முறையாக மாற்றம் பெறும் நிலை ஏற்பட்டால்,அங்கே துப்பாக்கி சூட்டு தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடலாம் .
இதன் பொழுது அப்பவி மக்கள் பலியாகும் நிலை ஏற்பட போகிறது.இந்த படுகொலை களம் திறக்க படவுள்ளது என்பதை அடித்து கூறுகிறோம் .
முதன் முதலாக சிங்கள மக்களை நேரடியா சிங்கள காவல்துறை இராணுவம் தாக்கும் சம்பவங்கள் இன்று அரங்கேற்ற பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ,மீளவும் கோட்டாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தள்ளாடும் கோட்டா ஆட்சி
இவ்வேளை தமிழர்கள் மிக பொறுமையுடன் செயல் படுவது அவசியம் .அவ்வாறு தவறின் அப்பாவி தமிழர்கள் இதே சிங்கள இனவாத இராணுவத்தினரால் படுகொலை செய்ய படும் நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்க பட்டுள்ளன .
அசைந்து செல்லும் களமுனை அதன் திட்டமிடல் நிகழ்வு செயல்பாடுகள் தற்போது எதிர்வு கூறியவாறு செல்கிறது.
தயராகும் எரிபொருள் வன்முறை
எதிர்வரு சில நாட்களில் இதன் உக்கிரத்தை இலங்கை சந்திக்க போகிறது .நாம் முன்னர் கூறியது போன்று இலங்கை ஒரு மியான்மாராக மாற்றம் பெறப்போகிறது .
,இனவாத சிங்களத்தினால் தமிழர்கள் படு கொலை செய்ய படும் நிலையும் அவர்கள் சொத்துக்களும் சூறையாட படும் நிலையும் உருவாக்கம் பெற போகிறது.
இதனை புரிந்து கொண்டு தமிழர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.தமிழர்களே உங்கள் வீடுகளை தேடி இனவாத காடையர்கள் உள்நுழைவர்கள் அதனை எதிர்கொள்ள தயராக இருங்கள் .
- களமுனை ஆய்வு – வன்னி மைந்தன் –
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்
இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்த பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் வரிசையில் காத்திருக்க பொலிசார் இராணுவம் தமது வாகனங்களில் வருகை தனது பெற்றோல் டீசல் பெற்று செல்லும் நிலை மக்கள் மத்தியில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
அதே சிங்கள மக்களை பொலிசார் ஆடு மாடுகள் போல விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது .
இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்கலாம்.

அத்துடன் அரச உடைமைகள் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் எரிக்க படும் நிலையும் தோற்றம் பெற போகிறது .
மாத்தளையில் இடம்பெற்ற இந்த போலீஸ் மக்கள் மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் பொலிசுக்கு மட்டும் எனும் சிங்கள ஆளும் அரசின் செயல் பாடு மக்கள் பெரும் போருக்கு தயாராகும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு
ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு
எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெட்ரோல் 50 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 470 ரூபாவாகவும்
டீசல் ஓரி லீட்டர் 60 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 460 ஆகவும்
ஓக்கேடான ஒரு லீற்றர் 100 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 550 ரூபாவான் விலை அதிகரிக்க பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் இந்த விலை அதிகரிப்பு செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
பட்ட கொடை; இலங்கை பட்ட கொடை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்திட லொறியில் காத்திருந்த ஒருவர் அந்த லொறிக்குள் மரணம் அடைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்.
இவ்வாறு லொறிக்குள் சடலமாக மீட்க பட்ட நபர் அறுபத்து மூன்றுவயதுடைய ரப்பர் தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவரோடு உரையாடி விட்டு இரவு 11 மணியளவில் நாம் உறங்க சென்றோம் எனவும் அதன் பின்னர் இருமல் சத்தம் ஒன்று கேட்டது ,வந்து பார்த்த பொழுது அவர் லொறிக்குள் இறந்த நிலையில் காணப்பட்டார் என அவரது சகா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள நிரையில் காத்திருந்தவர்களில் பதினொரு பேர் இதுவரை இறந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
நாட்டையும் நட்டு மக்களையும் பிச்சை எடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார் ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே.
லொறிக்குள் இருந்து மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .
தொடரும் இவ்வாறான மரணங்கள் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருளை மலேசியா மற்றும் ஓமானில்
இருந்து இலங்கை கொள்வனவு செய்து வருகிறது
அவை தற்போது நிறுத்த பட்ட நிலையில் இலங்கை விமான பயணங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன
விரைவில் இலங்கை விமான பயணங்கள் இரத்தாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
உணவகங்களில் சாப்பாடுகள் 10 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது
உணவகங்களின் விற்பனையாகும் உணவு பொருட்களின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க படுகிறது
எரிபொருள் உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவையும் அதிகரிக்க படுகிறது ,
பாண் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரித்துள்ளது
விலை இவ்விதம் அதிகரித்து செல்லும் பொழுது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
நாட்டில் எகிறிய எரிபொருள் விலை – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலை 30 முதல் 50 ரூபாவினள மேலும் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை உயர்வினால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
நாட்டில் நிலவி வரு பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது
இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது
இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்
வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது
இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
எரிபொருள் வாங்க வரிசையில் நின்றவர் மரணம்
எரிபொருள் வாங்க வரிசையில் நின்றவர் மரணம்
இலங்கை களுத்துறை தொட்டுபல சந்தியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில்
எரிபொருள் வாங்கிட நிரையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழித்து மரணமாகியுள்ளார்
இவரது மரணத்துடன் இதுவரை இவ்விதம் நால்வர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது















