Tag: இலங்கை
பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி
பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில்
கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டை கையளித்ததாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் உணவு உண்ணவும், விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடவும் முடிந்தது என்று தெரிவித்த அவர், சில பிரச்சினைகள் இருந்தபோதிலும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றார்.
அரசாங்கத்தை குறை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதற்கு இந்தத் தருணமே பொருத்தமானது என சுட்டிக்காட்டினார்.
54 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவர் எனவும் குறிப்பிட்டார்.
உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவ சிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ
உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவசிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் இராணுவ தாக்குதலில் சில பலநூறு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
ரசியா படைகளிற்கு எதிராக மக்களும் போராடிய வண்ணம் உள்ளனர் ,இவ்வாறான
நிலையில் ரஷியா படைகள் பயணித்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அதில்
உள்ள சிப்பாய்களை மக்கள் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்
தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்
இலங்கை குருவிட்ட பகுதியில் குப்பை பகுதியில் இறந்த நிலையி கண்டெடுக்க பட்ட
தந்தையின் சடலம் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ,குறித்த நபரை
தாக்கி கொன்று குப்பையில் வீசிய குற்ற சாட்டில் அவரது மகன் கைது செய்ய பட்டுள்ளார்
தனது கணவரின் மரணத்தில் சநதேகம் உள்ளதாக மனைவி தெரிவித்த நிலையில்
போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே இந்த விடயம் ஆரம்பிக்க பட்டுள்ளது
எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு
எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு
இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் நாட்டு மக்கள் மீது வரி சுமைகள் மற்றும்
,விலைவாசிகள் அதிகரிக்க பட்டதினால் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும்
பேக்கரிக்கு உற்பத்திகள் பாதிக்க பட்டுள்ளது
இதுபோலவே போக்குவரத்து சேவையும் பாதிக்க படும் நிலை ஏற்பட்டுள்ளது
சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம் – வெடித்தது சர்ச்சை
கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற
தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 32 வருடங்ஙகளாக கிளிநொச்சி நிர்வாக சேவை பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம் கல்வி சுகாதாரம் போக்குவரத்து சமூக சேவைகள் அனைத்தும் கிளிநொச்சி
நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு
செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து காணப்பட்டனர். குறித்த குழப்பங்களை
இனங்கண்டு தீர்வு காண வழிகாட்டும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை மக்கள் அழைத்து கலந்துரையாடினர்.
இதன் போது குறித்த அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பதற்கும் பாராளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதற்கும் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா கட்சியின் அமைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி
நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி
இலங்கையில் நாளை முதல் ஐந்து மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று
இலங்கை மின்சார வாரியம் அறிவித்துள்ளது
இதனால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கையின் பல பாகங்கள் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்
எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் எரிபொருள் தட்டு பட்டது ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டீசல்
கிடைக்காவிடின் நாளை முதல் பயணிகள் பேரூந்துகள் போக்குவரத்து தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் அரசின் ஆட்சி காலத்தில் இலங்கை வரலாறுயுகாணாத பெரும் சீழிவை
சந்தித்து வருகிறது ,இதனால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்
இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்
இலங்கையோ உதைபந்தாட்ட வீரரான டக்சன் புஸ்லாஸ் அவரது வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இதுவரை இவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை
அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு
அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு
இலங்கை Norton Bridge. தேயிலை தோட்ட பகுதியில் அடிகாயங்களுடன் பாதிக்க பட்டு இறந்த நிலையில் புலியின் சடலம் ஒன்று மீட்க பட்டுளள்து
குறித்த புலியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
இலங்கை தலை மன்னார் கடல்பகுதியில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டனர் என்ற
குற்ற சாட்டில் தமிழகத்தை சேர்ந்த
எட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது
இவர்கள் வைத்திருந்த மீன்களையும் இராணுவம் சுருட்டி சென்றுள்ளது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது
1,084 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்து 556 பேரும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 352 பேரும் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி
மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி
“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிபொருளில் புஸ்ஸல்லாவ குளோபல் நிறுவனத்தினால் 20.02.2022 ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டதின் ஊடாக மலையகத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்குதலில்
முதல் கணணியினை புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2017 கலை பிரிவில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைகழகத்தில் “கல்வியியல் சிறப்பு கற்கைநெறிக்கு” தெரிவாகி கல்வி பயிலும் பட்டப்பயில் மாணவி பெருந்தோட்ட தொழிலாழியின்
பி;ள்ளை விஜயன் கௌசல்யா அவர்களுக்கு அதன் ஏற்பாட்டாளர் ஊடகவியளாளர் பா.திருஞானம் அவர்களினால் இன்று (27) வழங்கி வைக்கபட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உப செயலாளர் பி.சிறிகாந் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்த வர்த்தகர்
எஸ்.சுரேஷ் அவர்கள் ஒரு கணணியையும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு கணணியையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
இந்த இரு கணணிகளில் ஒரு கணணி மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றயது புஸ்ஸல்லாவை இலக்கம் 460/8/1 அமைந்துள்ள குளோபல் நிறுவனத்தில் பல்கலைகழக மாணவர்கள் பாவிக்க கூடிய வகையில் பிரின்டர் உட்பட இன்டர்நெட்
வசதியடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பல்கலைகழக மாணவர்கள் இலவசமாக நேரில் வந்து விடுமுறை காலங்களில் பாவிக்கலாம்.
மேலும் இந்த செயற்திட்டத்தில் இணைந்து மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு மடிக்கணணிகளை வழங்கி உதவ கூடியவர்கள் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்ளபடுவதோடு. மடிக்கணிகள் தேவையான மலையகத்தை சேர்ந்த பல்கலைகழக
பெருந்தோட்ட பட்டப்பயில் மாணவர்கள் “குளோபல்” இல 460/8/1 நுவரெலியா வீதி புஸ்ஸல்லாவ என்ற விலாசத்திற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். எமக்கு கணணிகள் கிடைப்பதற்கு ஏற்பவும் மாணவர்களின் பாட அவசியப்பாட்டுக்கு அமைய வழங்கப்படும்.
குறிப்பாக மலையத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள பட்டப்பயில் மாணவர்களில் பலர் பொருளாதா சிக்கல்கள் காரணமாக பலர் தங்கள் கல்வியினை இடை நிருத்தி வருகின்றனர். மலையகத்தின் சனத்தொகைக்கு ஏற்ப 1750 மாணவர்கள்
பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இருந்தும் தற்போது சுமார் 450 மாணவர்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவர்களிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக யாரும் இடை விலகள் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
உக்கிரேணுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ரசிய படைகள் இழப்புக்களை சந்தித்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
இதில் ஒரு பகுதி வழியாக முன்னேறிய ரசியா படைகள் மீது உக்கிரேன் படைகள் கடும்
தாக்குதலை மேற்கொண்டன இந்த தாக்குதலில் சிக்கி இரண்டு இராணுவத்தினரை
உக்கிரேன் இராணுவம் கைது செய்துள்ளது
கைதான முதலாவது போர் கைதிகள் மீதுவிசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
ரசியாவின் 14 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் -1000 இராணுவம் பலி
உக்கிரேன் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதற்கு
பதிலடி தரும் வகையில் உக்கிரேனும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது
இரு தரப்பு மோதல்களில் ரசியாவை சேர்ந்த ஆயிரம் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்
மேலும் ஏழு விமானங்கள் மற்றும் 8 உலங்குவானூர்திகள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது
மனைவி இறந்த துயரில் கணவனும் மரணம்
மனைவி இறந்த துயரில் கணவனும் மரணம்
மனைவி இறந்து 18வது நாள் அவரது கணவரும் உயிரிழந்த விடயமானது அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றிரவு (25) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
செல்வரத்தினம் பரமேஸ்வரி என்பவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ்.
போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2022.02.07 அன்று உயிரிழந்தார்.
பின்னர் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்தோடு இருந்த அவரது கணவர், மகளிடம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு கதிரையில் உட்கார்ந்திருந்தவாறு உயிரிழந்துள்ளார்.
சிற்றம்பலம் செல்வரத்தினம் என்பவரே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் திடீரென ஏற்பட்ட இவ் இரண்டு மரணங்களும் அக் குடும்பத்தையும் அப்பகுதி மக்களையும் மீளா துயருக்குள் தள்ளியுள்ளது.
ரயிலுடன் மோதி வாலிபன் மரணம்
ரயிலுடன் மோதி வாலிபன் மரணம்
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட
போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடலையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது கடுகதி புகையிரதம் இளைஞரை மோதி தள்ளியுள்ளது.
உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் விறகு கட்டிக்கொண்டு சென்றதாகவும், இளைஞர் யார் என்று அடையாளம் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்
லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்
திருகோணமலை – கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு திங்கட்கிழமை (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் (03) உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்று ஜெனிவாவுக்கு சென்றுள்ளது.
மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்
கோடரியால் தலையில் அடித்து கொலை
கோடரியால் தலையில் அடித்து கொலை
மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச்
சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கெமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தமை பதிவாகி இருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நேற்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.
மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார்.
எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.
அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.
அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.
இலங்கை ரஷியா தூதரத்திற்கு முன் உக்கிரேனியர்கள் போராட்டம்
இலங்கை ரஷியா தூதரத்திற்கு முன் உக்கிரேனியர்கள் போராட்டம்
இலங்கையில் உள்ள ரசியா தூதரகம் முன்பாக உக்கிரேனியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
ரசியா மக்கள் போரை விரும்பவில்லை எனவும் புட்டீன் இந்த போர் வெறியில் உள்ளதாக ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்
மேலும் உடனடியாக போரினை நிறுத்தும் படி கண்ணீர் மல்க அவர்கள் முழக்கம் இட்டனர்







