தங்க கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தங்க கடத்தல் முறியடிப்பு

தங்க கடத்தல் முறியடிப்பு

தங்க கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்குள் கடத்தி வரப்பட்ட 21 மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கத்துடன் கடத்திவிடப்பட்ட இந்த தங்கங்கள் சுங்கப்பிரிவர் முயற்சியால் தடுக்கப்பட்டு அவை இப்பொழுது அரசு விடுமையாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 24 கரட் தங்கம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இந்த பத்து மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்திவரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூதனமான முறையில் இந்த தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.

அவர்கள் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலங்கையில் இவ்வாறு கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை கட்டுநாயக்க விமான தளம் ஊடாக நடத்தப்படும் கடத்தல் பல முறியடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு

பெரும் தங்கக் கடத்தல் முறியடிப்பு, கடல் வழியாக இலங்கையில் கடத்தி பெறப்பட்ட 13 தசமு மூன்று கிலோகிராம் இடையில் உள்ள தங்கம் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .

தமக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து குறித்த கடல் பகுதி திடீரென சுற்றி வளைக்கப்பட்டு விசேட தேர்தல் நடவடிக்கை மேற்கொண்ட பொழுதே இந்த தங்கம் சிக்கியுள்ளதாக கடலோர தெரிவிக்கின்றனர்.

சமீப காலங்களாக இலங்கைக்குள் கடல் வழியாக தங்கம் அதிகமாக கடத்தி வரப்பட்டுள்ளது .

உலகச் சந்தையில் தங்கத்தினுடைய விலை அதிகரித்து நிலையிலேயே இந்த தங்க கடத்தல் தற்பொழுது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

வீடியோ

கடல் வழியாக தங்கத்தை கடத்தி வர முற்பட்ட கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் .

இவ்வாறு கடத்தப்படும் தங்கம் அரச உடமையாக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கடல் வழியாக கடத்தி பெறப்படுகின்ற தங்கங்கள் போலீசாரால் அல்லது கடலோர காவல் படை ரால் கொடுக்கப்படுகின்ற பொழுது,

அவை அத்தனை தங்கமும் அரச உடமையாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு

மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி மீன் பிடி

உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சனிக்கிழமை (30) கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வாடி பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.குறித்த மீனவரின் வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த நபர் தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குறித்த மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்)

உள்ளடங்களாக அட்டை பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வாடியின் உரிமையாளர் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு

இந்த நிலையில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்கவின் பணிப்புரைக்கு

அமைவாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணுக்க விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொருட்களை திருடிய நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர் திருடி விற்பனை செய்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ

ஆயுத கடல்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

ஆயுத கடத்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு

ஆயுத கடத்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு

ஈரான் Kordestan மாகாணத்தில் எல்லை வழியாக நடத்தப்பட்ட பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

இந்த கடத்தலில் கை துப்பாக்கிகள் ,சொட்கண்கள்,மற்றும் ரொக்கட் செலுத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .

இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

தீவிரவாத குழுக்களுக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த ஆயுத கடத்தல் இடம்பெற்றதாக ,ஈரானிய படைத்துறை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ஈரான் எல்லைவழியாக பெருமளவு ஆயுதங்கள் ,போதைவஸ்துக்கள் கடத்த பட்ட வண்ணமுள்ளன .

இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .