Tag: பிரசவம்
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.
உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில
மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும்
பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:
ஊட்டச்சத்துள்ள உணவு:
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்
ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள
வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.
உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
மருத்துவ ஆலோசனை:
கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் சர்க்கரை அதனால் ஏற்படும் தாக்குதல் தொடர்பான மருத்துவ ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க
வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.
சர்க்கரை நோயும்… மருத்துவ ஆலோசனையும்.
உடற்பயிற்சி கட்டாயம்:
கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை
கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5
நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.
ஜெர்மனியில் வீதியில் பிள்ளை பெற்ற – வீடற்ற இளம் பெண்
ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்
ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்
இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்
பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி
பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்
மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய
தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்
பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழ்ப்பாண போதனா வைசத்திய சாலையில் இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார்
இவ்வாறு குழந்தைகளை பிரசவித்த பெண் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் தற்போது தாயும் சேயும் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த சிசுக்களை
பார்வையிட குறித்த பெண்ணின் வீட்டை அந்த கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளதுடன் ,
அவர்களுக்கான அன்பளிப்புக்களும் குவிந்த வண்ணம் உள்ளது
ஒரு குடும்பத்தில் பிறந்த இந்த சிசுக்களினாலே அந்த கிராமமே மகிழ்ச்சியில் உறைந்துள்ளது







