Tag: பலாலி
ஜனாதிபதி பலாலியில்காலை நடைப்பயணம்
ஜனாதிபதி பலாலியில் காலை நடைப்பயணம்
ஜனாதிபதி பலாலியில் காலை நடைப்பயணம் மேற்கொள்கிறார்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது பலாலியில் காலை நடைப்பயணம் மேற்கொள்வதைக் காண முடிந்தது.
ஜனாதிபதி ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதி
ஜனாதிபதி ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வட மாகாணத்தில் பல உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இரண்டு நாள் விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தின் போது, ”சொந்தமாக ஒரு இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தலைப்பிலான தேசிய வீட்டுவசதி திட்டத்தின்
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உள்ள வீரசிங்கம்
தொடக்க விழாவிற்கு அவர் தலைமை தாங்க உள்ளார். இந்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் உள்ள வீரசிங்கம் தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடைபெறும்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை வலுப்படுத்துவதையும், நாடு முழுவதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு
பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு
இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சாந்தி பகுதியில் அமைக்க பட்டுள்ள நல்லிணக்க மையம் இராணுவ தளபதியால் திறந்து வைக்க பட்டுள்ளது.
இலங்கை வாழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணி அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த புதிய பீடம் உதவும் என்கிறது இராணுவம்.
இராணுவத்தினரால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை , எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முதன்மையாக வைக்க படுகிறது .
தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டுள்ள இராணுவம், எவ்வாறு அங்கிருந்து விலகும் ,அதன் பின்னரே இவர்கள் கூறும் நல்லிணக்கம் சாத்தியம் என்கிறது தமிழர் தேசம்.
பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை
பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை
பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த
98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு
நேற்றைய தினம் (2020.04.15) கொரோனா வைரசு நோயாளிகளில் உறுதி செய்யப்பட்ட 5 நோயாளர்கள் பதிவானதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.
நேற்றைய தினம் பதிவான 5 நோயாளர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் ஆவதுடன் இவர்களில்
இருவர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளங் காணப்பட்டார்கள்.
மற்ற நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்
என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.









