Tag: பதில் சொல்
பதில் சொல்
பதில் சொல்
இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா
உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்
சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா
தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்
03-09-2022
பதில் சொல்
பதில் சொல்
இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா
உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்
சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா
தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்
03-09-2022
கடவுளே பதில் சொல் …!
கடவுளே பதில் சொல் …!
வாழ வழியில்ல
வயிற்று பசி தீரவில்ல ….
ஒரு சான் வயிற்றுக்கு
ஒருவேளை உணவு இல்ல …
என் வலியை நான் போக்க
ஏது செய்வேன் எனை தேக்க …?
தூங்கவே முடியவில்ல
துட்டுக்கு வழி ஏதுமில்ல …
என் உடலை நான் விற்க
எனக்கு வேறு வழியில்ல ..
என் குடும்பம் வாழ்ந்திடவே
எனக்கு வேறு தெரியவில்ல …
கண்டவனும் வந்தின்று
காசு வீசிறான் ….
கண்ணீர் காணா
கன்னி தின்று போகிறான் …
கவலையில நான் அழுது
கண் மூடி தினம் மடிய ,,,,,
எச்சத்தை அவன் முடித்து
ஏறிகின்ற பணம் பிடித்து …
ஒரு குடும்பம் வாழ்கிறது
ஒருத்தி உயிர் அழிகிறது …
பொல்லாத நோய் வாங்கி
பெருத்து உடல் கிழிகிறது ….
இல்லாத நிலை ஒன்றால்
இறப்பை நான் வாங்கி விட்டேன் …..
பொல்லாத ஆட்சிகளால்
பொன் வாழ்வை தொலைத்து விட்டேன் …
என் இறைவா என் இறைவா
எனக்கு மட்டும் ஏன் இறைவா …
இத்துயரை நீ திணித்தாய் ..?
இன்னுயிரை ஏன் பிழிந்தாய் …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -20/03/2019
பதில் சொல் ….!
பதில் சொல் ….!
கடல் மேலே மஞ்சத்தை
கண்ணே நான் கட்டிடவா ..?-நீ
கண்ணுறங்க , தாலாட்ட
கடல் அலையை தந்திடவா ..?
மழை மேக முகில் உரித்து
மங்கை உன்னை போத்திடவா …?
தங்கமே நான் மட்டும் – உனை
தாளமால் தழுவிடவா…?
வெள்ளி நிலா பேரழகில்
வெளியுலகை காட்டிடவா ..?- நீ
வேண்டும் வரங்களை தான்
விதம் விதமா தந்திடவா ..?
அழகு குலையாமல்
ஆயூள் எல்லாம் வைத்திடவா ..?
அடி வாங்கும் மத்தாளாம்
அதுவாகா காத்திடவா ..?
எதுவாக உனை தாங்க
எனக்கு நீ கூறாயோ ..?
ஏனோ நீ வெட்கி
ஏங்கி திரை போட்டாயோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் – 15-01-2018



































