Tag: பதற்றம்
யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்
யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம்
யாழ்.பேரணியை தடுத்ததால் பதற்றம் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் தற்போது பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார்
பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸார் தடுத்த போதும் போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றுள்ள நிலையில் தற்போது இடை மறுக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தற்போது பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பேரணிக்கு நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெறும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என அறியப்படுகிறது.
நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்
பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம்
பாராளுமன்றத்துக்கு அருகில் பதற்றம் ,வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதிக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, மேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் வௌ்ளிக்கிழமை (21) ஈடுபட்டனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் பட்டதாரிகள் பலர் கண்ணீர் மல்கினர்.
இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம் ,ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கும் பல ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அரசு அச்சுத் திணைக்களத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்கள் உணவகத்தில் சாப்பிட மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்க வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் தொடங்கியது.
தகராறின் போது, பாதுகாப்பு அதிகாரி காவலர் அறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து ஊழியர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம்
பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம்
பொலிஸ் நிலையம் முன்பாக பதற்றம் ,மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதேசத்தில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டதாகக் கூறி, மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 100இற்கும் மேற்பட்டோர் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரித்த போது,
மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதனால், அவர்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை மக்கள் குழுவொன்று தடுத்துள்ளது.
இதன்போது, இரு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும், கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மொரட்டுவை பொலிஸ் நிலைய வளாகத்திற்கு வருகைதந்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அருட்தந்தை சிரில் காமினி உட்பட பல பாதிரியார்களும் வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
கண்டி குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெற வந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தூர இடங்களில் இருந்து வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்களாக காத்திருந்த ஒரு குழுவிற்கும் இன்று காலை அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது.
கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
இதற்கிடையில், வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக அங்கு வந்திருந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆயிரத்தெட்டு இன்னல்களுக்கு மத்தியில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் இந்த மக்களுக்கு குறைந்தபட்ச சேவையையேனும் வழங்க குடிவரவு அதிகாரிகள் கண் திறப்பார்களா?
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (04) அதிகாலை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 34 கைதிகளை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் உணவுப் பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய (15) மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட "விமான நிலைய கூட்டு தொழிற்சங்கம்" இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்
இந்தப் போராட்டத்தின் பின்னர் பேசிய விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ, “எங்களின் இந்தப் புதிய தொழிற்சங்கத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பேணி வருகின்றார்.
எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல.
எங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே இன்று இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை” என்றார்.
“எனவே, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அங்கு குறிப்பிட வேண்டும்.
இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
இன்று குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களையே இந்த போராட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்றும், விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அஜித் கல்கெட்டியவிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது
- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்
- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது
- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்
- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி
- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு
- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்
பாராளுமன்றுக்கு அருகில் பதற்றம்
பாராளுமன்றுக்கு அருகில் பதற்றம்
பாராளுமன்றத்துக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள சுற்றுவட்டத்தில், ஜே.வி.பியின் மகளிர் அணியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்து கலைத்துள்ளனர்.
இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றுக்கு அருகில் பதற்றம்
பொல்துவ சந்தியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பெண்கள் அணியினர் மீதே இவ்வாறு தண்ணீரை பீச்சியடித்து கலைத்துள்ளனர்.
இதனால் கலைந்து சென்ற ஒருசிலர், மீண்டும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது
- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்
- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது
- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்
- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி
களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
பயங்கரவாத தடைச் சட்டத்தை கிழித்தெறியும் சமூக ஊடக அடக்குமுறைச் சட்டத்தை நீக்கும் நோக்கில் களுத்துறை நகரில் திங்கட்கிழமை (09)
ஆரம்பிக்கப்படவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். .
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பொலிஸ் நிலையங்களில் இருந்து கலவர எதிர்ப்பு குழுக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.
களுத்துறையில் பதற்றம் படையினர் களமிறக்கம்
தலவ்வ, போதி வளாகம் மற்றும் இரண்டு களுத்துறை பாலங்களுக்கு இடையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமை உட்பட பல இடங்களில் பொலிஸ்
குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவப் படையினர் களுத்துறை நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை
- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது
- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்
- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது
- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்
- நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி
- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி


































