Tag: பஞ்சம்
கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்
கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல்
கசாமக்கள் பஞ்சம் ஆயுதமாகும் இஸ்ரேல் ,ஒரு ஆயுதமாக பஞ்சம் இஸ்ரேல் காசாவை எவ்வாறு மௌனமாக்குகிறது
காசாவின் துன்பம் இவ்வளவு நீட்டிக்கப்பட்டதில்லை, இவ்வளவு வேண்டுமென்றே. வான்வழித் தாக்குதல்கள்
தருணங்களில் உயிர்களைக் கொல்கின்றன; பசி மெதுவாக, ஒலி இல்லாமல் அவற்றை அழிக்கிறது.
இன்று, காசாவின் சுகாதார அமைச்சகம் 98 குழந்தைகள் உட்பட பட்டினியால் 212 இறப்புகளை உறுதிப்படுத்தியது.
இது மழை பொய்த்ததன் விளைவு அல்ல, ஆனால் இது ஒரு திட்டமிட்ட கொள்கையின் விளைவாகும்.
சமீபத்திய போரின் தொடக்கத்திலிருந்தே, இஸ்ரேலின் தலைவர்கள் தங்கள் நோக்கங்களை தெளிவுபடுத்தினர். அக்டோபர் 9, 2023 அன்று, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் காசாவை “முழுமையான முற்றுகை” என்று
அறிவித்தார்: “மின்சாரம் இல்லை, உணவு இல்லை, எரிபொருள் இல்லை – எல்லாம் மூடப்பட்டுள்ளது.” அப்போதைய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மனிதாபிமான விநியோகங்களை “முக்கிய அழுத்த நெம்புகோல்களில் ஒன்று”
என்று விவரித்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் வெளிப்படையாகக் கூறினார்: “தானியம் இல்லை, மருந்துகள் இல்லை, கருணை இல்லை.”
இப்போது வெளிவரும் பஞ்சம் 2.3 மில்லியன் மக்களை உணவு, மருந்து மற்றும் எரிபொருளிலிருந்து மூடுவதன் எதிர்பார்க்கக்கூடிய விளைவாகும். ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு, 470,000
பாலஸ்தீனியர்கள் ‘பேரழிவு’ நிலைமைகளில் (IPC கட்டம் 5) இருப்பதாகக் கூறுகிறது – இது வெகுஜன மரணத்திற்கு முந்தைய இறுதி கட்டமாகும். காசா நகரில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து
குறைபாடு இரண்டு மாதங்களில் நான்கு மடங்கு அதிகரித்து 16.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக UNICEF கூறுகிறது. ஜூலை மாதத்தில் மட்டும், ஐந்து
வயதுக்குட்பட்ட 24 குழந்தைகள் உட்பட 74 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தனர்.
இஸ்ரேல் பசியை அந்நியச் செலாவணியாகப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. 2000 களின் பிற்பகுதியில்,
பாலஸ்தீனியர்களுக்கான தினசரி கலோரி வரம்புகளைக் கணக்கிடுவதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை
உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது
உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன
இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது
ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது
உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது
முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்
உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன
உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை
ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்
உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது
அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது
உணவு பஞ்சம்
இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது
குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது
உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்
அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .
- வன்னி மைந்தன் –
- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
- ஈரான் மீதான புதிய வியூகம்
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை
ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்
செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது
தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
என எதிர் பார்க்க படுகிறது
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
குப்பையில மிதக்குதடா குளிர் பானம்
குளிரூட்டி இல்லாது இவை காணம்
குசினியில சமையலது பெண் பாவம்
குழாயில காஸ்இல்லா அவை சாபம்
விறகெரிந்த காலமது மறந்தாச்சு – இன்று
வீடெல்லாம் மீள இவை வந்தாச்சு
ஆடம்பர வீடெல்லாம் அவிழ்ந்தாச்சு
அவை சேர்த்த பொருள் எல்லாம் வீணாச்சு
கோட்டையிலே ஆண்டவரும் வீழ்ந்தாச்சு
கொடும்பாவி எரியும் நிலை வாந்தாச்சு
வீதியில மக்கள் எல்லாம் கூடியாச்சு
விதி மறந்தார் சதிக்குள்ளே வீழ்ந்தாச்சு
வாசல் படி கூட்டுமாறு வந்தாச்சு
வாய்க்கரிசி போட வந்தான் சொன்னாச்சு
தன் பலத்தில் வாழ்வேன் என்றார் என்னாச்சு
தமிழர் பலம் வேண்டும் நிலை என்றாச்சு
நாறடித்தான் ஆட்சி இவன் என்றாச்சு
நாட்டை விட்டு ஓடும் நிலை என்றாச்சு
நம் நாட்டை நாம் காக்க தீர்வு வேண்டும்
நாம் தமிழர் வந்தால் மட்டும் நாடு எழும்
நீர் மூலம் ஆக்கினாய் தமிழரைத் தான்
நிர்வாணமாய் ஆனாய் நீ கேவலம் தான்
சிங்களவர் தமிழர் எல்லாம் ஓர் இனம் தான்
சிறை வைத்தான் ஆட்ச்சியாளன் கொடியவன்தான்
ஏறி அன்று ஆட்டம் போட்டாய் ஏன் ராசா – இன்று
எமன் வந்தான் வாசலிலே ஏன் ராசா
நாடு விற்றாய் சீனாவிடம் ஏன் ராசா
நாட்டை விட்டு ஓட வைப்பான் பார் ராசா
பிரபாகரன் ஆண்ட காலம் பொற்காலம்
பிடரி பட சொல்லுதடா இக்காலம்
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
பட்டியணியால் சாக வேண்டாம் நாங்க தாங்க ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-03-2022
இலங்கையில் பெரும் பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கிறார் வெடிகுண்டு அமைச்சர்
இலங்கையில் பெரும் பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கிறார் வெடிகுண்டு அமைச்சர்
உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கொடுக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று (30) தெரிவித்தார்.
92 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ சீனியை 220 ரூபாய்க்கு விற்க அனுமதித்ததற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இராஜினாமா செய்யாமல், பொய்யான அறிக்கைகளைத் தொடர்ந்தால், அமைச்சர் அந்த மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.
ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்கள், வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சம்பிக்க எம்.பி தெரிவித்தார்.

















