Tag: தொற்று
கிளிநொச்சி கிணறுகளில் மலத்தொற்று
கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று
கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்ளின் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ
இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து
கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது
இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்
தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு
செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
மழைக் காலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும்- மக்களுக்கு எச்சரிக்கை
மழைக் காலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும்- மக்களுக்கு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் மழைக்காலத்தில் மீண்டும் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்குக்கு மத்தியிலும் இந்தியாவில் பரவி வருகிறது. தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின்
பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கொரோனா வைரசின் முதல் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில்
அடுத்த தாக்குதல் பற்றியும் விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கி விட்டார்கள். கொரோனா வைரசின் இரண்டாவது அலைகள் ஜூலை
மாத கடைசியில் அல்லது ஆகஸ்டு மாதம் மழைக்காலத்தில் வந்து தாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள் இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி நகரத்தில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர்
சமித் பட்டாச்சாரியா இதுதொடர்பாக தெரிவிக்கையில் , தினமும் புதிது புதிதாக பலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வந்து, ஒரு
உச்சத்தை எட்டியுள்ளது. இது இனி சரிவடையும். ஆனாலும் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் கூட அது மீண்டும் வந்து
தாக்கும். இரண்டாவது அலை என்பது ஜூலை மாதத்தின் இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதத்தில் மழைக்காலத்தில் திரும்பி வரலாம்.
அதன் தாக்குதல் என்பது நாம் எந்தளவுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுகிறோமோ, அதைப்பொறுத்துத்தான் அமையும் என்று
தெரிவித்துள்ள அவர்,கடந்த சில நாட்களில் புதிய நிகழ்வுகளைப் பார்க்கிறபோது, இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது புதிதாக
கொரோனா வைரஸ் தொற்று பரவுவது சற்றே மெதுவாகத்தான் நடக்கிறது. இது நாம் உச்சத்தைத் தொட்டு வந்து விட்டோம் என்பதை காட்டுவதாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
சீனாவிலும், ஐரோப்பாவிலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை
மீண்டும் தாக்கக்கூடும் என்று காட்டுகின்றன. எனவே முந்தைய நோய்த்தொற்றானது, இரண்டாவது நோய்த்தொற்றுக்கு எதிராக
எதிர்ப்புச்சக்தியைப் பெற உதவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (அதாவது ஒரு முறை கொரோனா வைரஸ் தொற்று நோய்
தாக்கியவர்களுக்கு மீண்டும் தாக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.)
எனவே ஒட்டுமொத்த மக்களும் இரண்டாவது அலைக்கு ஓரளவு பாதிக்கக்கூடும். சந்தையில் தடுப்பூசி வருகிறவரையில், நாம்
விழிப்புணர்வுடன் இருந்தாக வேண்டும். நாட்டில் அங்கும் இங்குமாய் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்குகிறபோது, அந்த
பகுதியை, உள்ளூர் அளவில் நாம் தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சமூக இடைவெளியை பின்பற்ற செய்ய வேண்டும். மேலும்,
அடையாளம் காண சோதனைகளை செய்ய வேண்டும். அறிகுறிகளை பார்க்காமல் சோதனைகளை செய்ய வேண்டும்
என்று உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி நகரத்தில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல்துறை பேராசிரியர் சமித் பட்டாச்சாரியா கூறினார்.
இந்தக் கருத்தை பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி. என்னும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனும் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனு தெரிவிக்கையில்
நாம் இயல்பான வாழ்க்கை முறைக்கு திரும்புகிறபோது,
கொரோனா வைரஸ் தொற்று நோய்தாக்குதல் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது. பயணக்கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு
தளர்த்தியபின்னர் சீனா இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
தற்போது நாம் ஊரடங்கு காலகட்டத்தில் இருக்கிறோம். இது நமக்கு
உரிய கால அவகாசத்தை தந்துள்ளது. இந்த நேரத்தில் நாம் சோதனைகளை செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளானவர்களை
கண்டுபிடிக்க வேண்டும். தனிமைப்படுத்த வேண்டும். சிறப்பான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியை கண்டுபிடிக்க
வேண்டும். நாம் எப்படியும் இவற்றை செய்தாக வேண்டும். இவை செய்யப்படுகின்றன.
எப்போது, எப்படி ஊரடங்கை விலக்கிக்கொள்ளப்போகிறோம் என்பது கடினமான முடிவாக அமையும். இது பல கட்டங்களாக
அமையப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பொது சுகாதாரத்தை மதிப்பிடுவதற்கு முடிவு எடுப்பவர்களுக்கு உதவுகிற
கருவிகளை கொண்டு வருவதில், எங்கள் குழு கவனம் செலுத்துகிறது. மழைக்காலத்தில், நமது நாட்டில் பல இடங்களில்
காய்ச்சல் பரவும். எனவே காய்ச்சல் அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது.
அறிகுறிகளைப் பற்றி கவலைப்படாமல், தீவிரமாக பரவிய இடங்களில் நாம் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
பாதிப்புக்குள்ளானோரை அடையாளம் காண வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை
கட்டுப்படுத்த முடியும். இப்போது குறிப்பிடத்தக்க வகையில் கொரோனா வைரஸ் பரவலை கண்டுபிடிக்க சோதனைகள் நடந்து
கொண்டிருக்கலாம். மக்கள் தங்கள் சுகாதாரம் குறித்துஇ மிகவும் கவனமாக இருப்பதால் நடத்தை மாற்றங்கள் இருக்கலாம். முக
கவசங்கள் அணிவது பொதுவானதாகி விடலாம். இதெல்லாம் இரண்டாவது அலை தாக்குகிறபோது அதை கட்டுப்படுத்த உதவலாம் என்றார்.
பேராசிரியர் ராஜேஷ் சுந்தரேசனை ஒருவராக கொண்டுள்ளஇ பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும்இ மும்பை டாடா
அடிப்படை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்துஇ மும்பை மற்றும் பெங்களூருவை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்பட்ட
ஆராய்ச்சியில்இ ‘கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது; கொரோனா வைரஸ்
தொற்றுநோயை தீவிரமாக கண்டுபிடிப்பதற்கும்இ உள்ளூர் மயமாக்குவதற்கும்இ பாதித்தவர்களை
தனிமைப்படுத்துவதற்கும்இ புதிய தொற்றுகளை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்காதபட்சத்தில் பொது சுகாதார அச்சுறுத்தல் தொடரும் என்பது தெளிவாகி உள்ளது.
கட்டுப்பாடுகளை தளர்த்தும் நேரத்தில்இ ஒவ்வொரு நகரத்திலும்இ கொரோனா வைரஸ் பரவல் அளவைப் பொறுத்துஇ பொது சுகாதார
தேவைகள் ஏற்படும் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ
நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்
என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை
திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது
கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்








