Tag: தலை
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

இணைந்து வாழ்வோம் இன்றே வா
இணைந்து வாழ்வோம் இன்றே வா
வென்றதாய் உலகில் ஏறியே நன்று
வெடி குண்டாய் முழங்கிறாய்
வென்றே தமிழர் ஆள்வார் நன்று
வெட்கியே தலை குனிவாய்
தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
தீர்த்திட மறுக்கிறாய்
தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
தீயிடை நீ மடிவாய்
ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
ஆள்கிறார் இன்று மறவாய்
முன்னைய வாதி தீவிரவாதி
முளைவிட்டான் இன்று பாராய்
வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
வெறியுடன் அலைகிறாய் -நாளை
வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
வெட்கியே தலை குனிவாய்
ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
ஒருகணம் திரும்பி பாராய்
கடாபி நிலை காலடி சுற்றும்
கதறியே நன்று மடிவாய்
இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
இன்றே உயிரை குடிப்பாய்
பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்








