இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்
ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் என்று நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளதாகவும், ஊழல் மோசடிகள் மூலம் வங்குரோத்து நாட்டை அழிக்கும் திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிழலில் இருந்து
செயற்படுத்தப்படுவதாகவும், நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் இந்த ஊழல் மற்றும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில தலைவர்கள் கோப்புகளை தூக்கிக் கொண்டு கூட்டங்களுக்கு வந்து ஊழல் பேரங்கள் குறித்து பேசி ஆட்சிக்கு வந்ததும் தண்டிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இந்நாட்டை வங்குரோத்தாக்கிய
இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்
ராஜபக்ச குடும்பத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது நாட்டை வங்குரோத்தாக்கியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்ற தீர்ப்பைப் பெற நடவடிக்கை எடுத்ததாகவும், இவை அனைத்தும் ஆட்சிக்கு
வருவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி கோப்புகளை காட்டி பொய்யான நடவடிக்கைகளை
நடத்துவதில்லை என்றும், ஊழலுக்கு எதிராக முன்நிற்கிறோம் என்று கூறும் சில தரப்பின் பொய்யை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்
உண்மையாகவும் தூய்மையாகவும் ஐக்கிய மக்கள் சக்தியானது திருடர்களுடன் எந்த டீல்களையும் மேற்கொள்ளவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களை பிடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளதாகவும், உயர்
நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை வெளிக்கொணர முடிந்ததாகவும், தற்போது கிராமம், நகரம், என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் பணி நடந்து
வருவதாகவும், இந்த மனுவின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கிய 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குடியுரிமைகளை
இல்லாதொழிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பல்வேறு தடங்களை ஏற்படுத்தி தாம் கையில் வைத்திருந்த பத்திரங்களை கூட பறித்தெடுத்தனர் என்றும்,
தனது உயிரைப் பறித்தாலும் இந்த திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
மினுவாங்கொடை நகரில் நேற்று (03) இடம்பெற்ற மினுவாங்கொட ஜனபவுர மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
















