ஒரு நாள் வெல்வேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஒரு நாள் வெல்வேன்

ஒரு நாள் வெல்வேன்

பிச்சைக்காரன் என்றென்னை
பிடரி அடித்தார் பிடரி விழும்
பிரளயம் அதிரும் செய்தி வரும்
பின் தங்கினார் மூளை விழும்

இத்தனை நாள் இழி நிலைகள்
இந்த ஆண்டு ஓடி விடும்
இத்தகை உயர்வு நிலை கண்டு
இழிந்த நா பதறி விடும்

அத்தகை வேலை நடக்கிறது
அகிலம் வியக்க முளைக்கிறது
எத்திசை மாந்தரும் எழுந்து வரும்
எப்படி என்றே எழுதி தள்ளும்

முத்தி இதுவென்று முன் பகரும்
முத்திய சாதனை இது வென்றும்
கத்திய வாய் எல்லாம் கதையளக்கும்
கத்தி கத்தியே செயல் இழக்கும்

எழுதி வைத்து எழுகின்றேன்
எழும் திங்கள் இதனை காட்டிடுவேன்
எழு கதிர் என்றே எனை உரைப்பேன்
எப்படி இப்படி என வியந்தேன் ..!

ஆக்கம் -25-06-2025

வன்னி மைந்தன்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு

ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு

உடையாத சுவர் மேலே
உடல் உரசி முறைக்கிறாய்
உதடை விரித்தேன்
உள்ளத்தை அழைக்கிறாய்

இமை வெட்டா விழியாலே
இதயத்தை அளக்கிறாய்
இடை காட்டி இன்றேனோ
இரவொன்றை கேட்கிறாய்

ஐந்து விரல் பூச்சடித்து
ஐம்புலனை தூக்கிறாய்
ஐந்தடி கூந்தலிலே
ஐஸ் ஆக யொழிக்கிறாய்

தேங்காய் மார்பொன்றை
திறந்தேனோ காட்டுறாய்
தேக்குமர உடல் கட்டை
தெருவெங்கும் காட்டுறாய்

மஞ்சள் பல் அழகும்
மணிமேகலை உடல் அழகும்
எனை கட்டி போடுதடி
ஏக்கத்தில மனம் வாடுதடி

சிரிக்கும் பூவழகே – எனை
சிறை வைத்த பேரழகே
உனை தந்து போகாயா – எனை
உயிர் வாழா வைக்காயா ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-03-2022