ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு
உடையாத சுவர் மேலே
உடல் உரசி முறைக்கிறாய்
உதடை விரித்தேன்
உள்ளத்தை அழைக்கிறாய்
இமை வெட்டா விழியாலே
இதயத்தை அளக்கிறாய்
இடை காட்டி இன்றேனோ
இரவொன்றை கேட்கிறாய்
ஐந்து விரல் பூச்சடித்து
ஐம்புலனை தூக்கிறாய்
ஐந்தடி கூந்தலிலே
ஐஸ் ஆக யொழிக்கிறாய்
தேங்காய் மார்பொன்றை
திறந்தேனோ காட்டுறாய்
தேக்குமர உடல் கட்டை
தெருவெங்கும் காட்டுறாய்
மஞ்சள் பல் அழகும்
மணிமேகலை உடல் அழகும்
எனை கட்டி போடுதடி
ஏக்கத்தில மனம் வாடுதடி
சிரிக்கும் பூவழகே – எனை
சிறை வைத்த பேரழகே
உனை தந்து போகாயா – எனை
உயிர் வாழா வைக்காயா ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-03-2022