ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு

Spread the love

ஒரு நாள் என்னோடு வாழ்ந்து விடு

உடையாத சுவர் மேலே
உடல் உரசி முறைக்கிறாய்
உதடை விரித்தேன்
உள்ளத்தை அழைக்கிறாய்

இமை வெட்டா விழியாலே
இதயத்தை அளக்கிறாய்
இடை காட்டி இன்றேனோ
இரவொன்றை கேட்கிறாய்

ஐந்து விரல் பூச்சடித்து
ஐம்புலனை தூக்கிறாய்
ஐந்தடி கூந்தலிலே
ஐஸ் ஆக யொழிக்கிறாய்

தேங்காய் மார்பொன்றை
திறந்தேனோ காட்டுறாய்
தேக்குமர உடல் கட்டை
தெருவெங்கும் காட்டுறாய்

மஞ்சள் பல் அழகும்
மணிமேகலை உடல் அழகும்
எனை கட்டி போடுதடி
ஏக்கத்தில மனம் வாடுதடி

சிரிக்கும் பூவழகே – எனை
சிறை வைத்த பேரழகே
உனை தந்து போகாயா – எனை
உயிர் வாழா வைக்காயா ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-03-2022

    Leave a Reply