Tag: ஊரடங்கு
கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு
கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு
கொள்ளையைத் தடுக்க ஊரடங்கு ,லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டங்கள்: ‘கொள்ளையைத் தடுக்க’ மேயர் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளார், போலீசார் 197 பேரை கைது செய்துள்ளனர்
“நாசவேலையைத் தடுத்து, கொள்ளையடிப்பதை நிறுத்த” அதிகாரிகள் முயற்சிப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நகரின் நகர மையப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் – மேலும் வரும் நாட்களில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று கரேன் பாஸ் கூறுகிறார்.
திங்கட்கிழமை இரவு 23 வணிகங்கள் சூறையாடப்பட்டதால், “நாங்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துவிட்டோம்” என்று உள்ளூர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
போராட்டங்களின் விளைவாக சொத்துக்களுக்கு “குறிப்பிடத்தக்க சேதம்” ஏற்பட்டுள்ளதாக திருமதி பாஸ் கூறினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் தலைவர் ஜிம் மெக்டோனல், கடந்த சில நாட்களாக “சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடத்தை” அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவை “உயிர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை” என்று விவரித்தார்.
செவ்வாய்க்கிழமை மட்டும், 197 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் சரியான காரணமின்றி ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
குடியிருப்பாளர்கள், வீடற்றவர்கள், வேலைக்குச் சென்று வருபவர்கள், ஊடகங்கள் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் என அனைவருக்கும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று திரு. மெக்டோனல் கூறினார்.
வெள்ளிக்கிழமை முதல் போராட்டங்கள் நடந்த பகுதியை உள்ளடக்கிய LA நகர மையத்தின் ஒரு சதுர மைல் (2.59 சதுர கிலோமீட்டர்) பகுதியை ஊரடங்கு உத்தரவு உள்ளடக்கியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சுமார் 500 சதுர மைல்கள் (2,295 சதுர கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க நிறுவனம் (ICE) நடத்திய சோதனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.
கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் ஆட்சேபனைகளை மீறி, LA இல் சோதனைகளை மேற்கொள்ளும் ICE அதிகாரிகளைப் பாதுகாக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 4,000 தேசிய காவல்படை துருப்புக்களை –
கூட்டாட்சி ரிசர்வ் படையை – செயல்படுத்தியுள்ளார். அமெரிக்க வடக்கு கட்டளைப் பிரிவின்படி, புதன்கிழமை LA பகுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் 700 கடற்படையினரையும் திரு. டிரம்ப் அனுப்பினார்.
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது .
இந்த ஊரடங்கு சட்டமானது மதியம் 12.00 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் கொந்தளிப்பு மற்றும் கலவரங்கள் நீடிக்கலாம் என்கின்ற காரணத்தால் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னரே .அடுத்து இலங்கையில் நடக்கும் போகும் அதிரடி நகர்வுகள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

- கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது

இலங்கையில் ஊரடங்கு அமூல்
இலங்கையில் ஊரடங்கு அமூல்
இலங்கையில் இன்று மதியம் இரண்டு மணிமுதல் நாளை காலை ஆறுமணிவரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது
மக்கள் மீளவும் போராட்டத்தில் குதித்துவிடுவார்கள்
என்ற நிலையில் இந்த ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா
மக்களை அடக்க ஊரடங்கு அமூல் – இராணுவத்தை ஏவி தாக்கிட தயாராகும் கோட்டா
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்.
தற்பொழுது நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது
இதன் மூலம் மக்களின் போராட்டங்களை அடக்கவும் ,அத்துமீறி வருபவர்கள் மீது சூட்டு
தாக்குதலை மேற்கொள்ள இராணுவத்தை ஆளும் அரசு ஏவியுள்ளது,இந்த ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளது .
வரும் நாட்களில் நாடெங்கும் போராட்டங்கள் அதிகமாக வெடித்து பறக்கும் என எதிர் பாராக்க படுகிறது.
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்து முஸ்லீம் மோதல் – ராஜஸ்தானில் ஊரடங்கு
இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு
ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது ,மேலும் இணையம்,தொலைத் தொடர்புகள் துண்டிக்க பட்டுள்ளன
இரு மதங்களுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட மதவாத போர் திட்டமிட்ட அரசியல்
நடவடிக்கை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
இந்த மத மோதலினால் ஜோடபூர் பகுதி இயல்பு வாழ்வு முடங்கியுள்ளது
ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கம்
ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கம்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) நீக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு
இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்கு மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து அல்லது புகையிரத சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் இரவு பத்து மணி முதல்
அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமூல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
எதிர்வரும் மதம் முதலாம் திகதி முதல் இவை நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு – மக்கள் அவதி
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிப்பு – மக்கள் அவதி
கொவிட் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா?
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா?
அண்மையில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அரசாங்கம் கூறுகிறது.
ஆகையால், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த வாரம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொரோனா ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்த பிறகு இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சிறு வணிகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே டாக்டர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றார்.
இந்த மாத இறுதிக்குள் நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நிகழ்வை அடுத்து பலத்த தடைகள் நடைமுறை படுத்த பட்டுள்ளன
அத தடைகளை மீறி செயல்பட்ட 669 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடந்து தடைகள் விதிக்க பட்டுள்ளது
ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு
ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இந்த சட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது
பள்ளி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.
- பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.
- பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை
- மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.
பேருந்துகள்
- புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை.
- சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
- பார்கள் எனப்படும் அனைத்து மதுபான கூடங்களுக்கான தடை தொடர்கிறது.
- தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி.
- திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி.
- பொழுது போக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு
- பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்
- பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
- கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு
வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை
அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
• தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.
• உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி
• காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
• அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொலண்டில் ஊரடங்கு சட்டம் சித்திரை 20 வரை நீடிப்பு
கொலண்டில் ஊரடங்கு சட்டம் சித்திரை 20 வரை நீடிப்பு
கொலண்டில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருவதால் ,தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டுள்ளது
இந்த ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் சித்திரை மாதம் இருபதாம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,
வேகமாக நோயானது பரவி வருவதால் அதில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த தடைகள் பிறப்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
பிரான்சில் ஆபிரிக்காவில் கணடறிய ப்பட்ட புதியவகை கொரனோ ஒத்த நோயானது பரவி வருவதால் தற்போது ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது ,
எனினும் பலசரக்கு கடைகளில் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் எனவும்
,குடும்பத்தில் ஒருவர் கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்திட முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
15 நகரங்களுக்கு இந்த விசேட ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அம்பாறை மாவட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு
அம்பாறை மாவட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ளவர்கள் விஷேட தொலைபேசி இலக்கங்ளை
தொடர்பு கொண்டு இலகுவான முறையில் மருந்துப் பொதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு
பைஷல் இஸ்மாயில் –
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ளவர்கள் விஷேட தொலைபேசி இலக்கங்ளை தொடர்பு கொண்டு இலகுவான முறையில் மருந்துப் பொதிகளை பெற்றுக்கொள்ள சகல
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல்
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள
அதேவேளை நோயாளர்களுக்கான மருந்துகளை பொதி செய்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விஷேட வைத்திய சேவைக்காக, 075 9966441, 067 2052080 ஆகிய விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்பு கொண்டு
உங்களின் நோய் தொடர்பில் வைத்தியருடன் கலந்துரையாடி நோய்க்கான மருந்துப் பொதிகளை நீங்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சையை பெற்றுவந்த நோயாளர்களும் தங்களுக்கான மருந்துப் பொதிகளை குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொர்பு கொண்டு
பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக கிளினிக் நோயாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கிளினிக் பதிவு இலக்கத்தை
தெரியப்படுத்தி தங்களுக்கான மருந்துகளை பொதி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சேவை ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும்,
சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு
பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு
பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து உள்ளார்.
பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு
பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ந்தேதி பொது முடக்கம் அறிவித்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில்
கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.
இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த
வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின்
எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ஊரடங்கு இல்லை
தீபாவளியை முன்னிட்டு ஊரடங்கு இல்லை
நாட்டில் தற்பொழுது பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகும்.
இவர்களுள் நேரடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்று கொவிட் – 19 வைரஸ் தொற்று
பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய மரணங்கள் ஏற்பட்டுள்ளமை தொற்றா நோய் நிலைமை அதிகரித்தமையே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில்
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்; அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும்
இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய
நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முடக்கல் நிலையில் இருக்கும்போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள்
நிறுவியுள்ளோம். நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவசிகிச்சை பெற வேண்டும்
உலக நாடுகளில் தற்போதைய வைரஸ் காரணமாக பலர் தொற்றக்குள்ளாகியதுடன் பலர் உயிரிழந்தும் உள்ளனர். நமது நாட்டில் இடம் பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்ட வகையில் நேரடியான பாதிப்பில் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாம் பொதுமக்களிடம் வேண்டிக்கொள்வது என்னவெனில், வரலாற்றிலிருந்து இலங்கையில் உன்னதமான சுகாதார சேவை இருந்து வருகிறது. தற்பொழுது இந்த சுகாதாரதுறை அதிலிருந்து
மிகவும் மேம்பட்ட நிலையில் செயற்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றை வெற்றிக்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 4 தினங்களுக்கு மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். விசேடமாக மேல் மாகாணத்தில் உள்ள
மக்கள் முடிந்தவரையில் பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்திற்குள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதே போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும்; உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். அந்த பகுதிக்குள் மாத்திரம் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.









