Posted in இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன்,
சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்க படும் விமல் கூவல்

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் அவசர கூட்டத்தின் பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருது!

இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருது!

பைஷல் இஸ்மாயில் –

மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனை பிரதேசத்தைக் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் 2019 – 2020

இற்கான தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருது நேற்று (22) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விருது துறைசார்ந்த விஷேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ நேர்காணல் தொகுப்புக்கள், மூலிகையின் மருத்துவப் பயன்கள் பற்றி பத்திரிகையில் எழுதி

வந்தமைக்காகவே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பதவி விலகும் அமைச்சர்கள்

.இலங்கையில் நிகழ் கலா அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கோட்டாவுக்கு இடையிலான முறுகளை அடுத்து

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என அறியமுடிகின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

    எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

    இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண

    சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்

      இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்

      இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்.

      இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ஊடாக 11 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

      கொழும்பு துறைமுக நகரத்துக்கு 1.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீடு கிடைத்திருப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.

      உத்தேச அம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

      இலங்கைக்கு ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் சீனத் தூதுவர் கூறினார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுதொடர்பாக சீன தூதுவர் மேலும் தெரிவிக்கையில்.இலங்கைக்கு சீனா மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.இது கடன் அடிப்படையில் வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.

      2020 ஆம் ஆண்டு தொடக்கம் சீனாவினால் இதுவரையில் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய பரிமாற்றல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டவையாகும்.இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமையை பயன்படுத்தி பயனடைவதற்கு சீனா எந்த வகையிலும் தயார் இல்லை என்றும் குறிப்பிட்டார்

      இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி ஏற்பட பிரதான காரணம் கொவிட் தொற்றும் உலக நாடுகளில் நிலவும் யுத்த முரண்பாடும் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடு செய்யுமாறு தமது நாட்டு முதலீட்டாளர்களுக்கு சீன அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீன முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீட்டு வாய்ப்புக்கள் துணை புரியும். இதற்காக சீன அரசாங்கம் நேரடியாகத் தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

      கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சீனாவில் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் சீனா செல்லும் போது எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீனத் தூதுவர், தமது நேரடி மத்தியஸ்தத்தின் கீழ், இதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

      கொரோனா வைரஸ் பரவலினால் சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பினார்கள் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

      இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

      பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

      இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

      இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

      ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார

      அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்

        Posted in இலங்கை செய்திகள்

        அமெரிக்கா முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்

        அமெரிக்கா முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்

        அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா

        நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ


        விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விபத்து – ஒருவர் மரணம் -22 பேர் காயம்

          முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விபத்து – ஒருவர் மரணம் -22 பேர் காயம்

          .யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து

          விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

          முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை, பின்னால்

          சென்ற தனியார் பஸ் முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

          இந்த பஸ்ஸில் 23 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் அறியமுடிகிறது.

          இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ஆலோசனை

            ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ஆலோசனை

            ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ரயில் தொழிற்சங்கங்களுக்கும்,

            விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

            பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவரது இந்த

            யோசனைக்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

            நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அவதியுறும் வேளையில் ரயில் கட்டண உயர்வை மேற்கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

            ரயில் கட்டணத்தை அதிகரிக்காமல் மாற்று முறைகளின் மூலம் திணைக்களத்துக்கு

            ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் என நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

            அத்துடன், இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேற காரணிகள் தொடர்பில் இன்றைய

            கலந்துரையாடலில் கலந்துரையாடப்படவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கத்தியால் குத்தி ஒருவர் கொலை

              கத்தியால் குத்தி ஒருவர் கொலை

              நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில்

              ஏற்பட்ட சண்டை காரணமாக கத்தி குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

              இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

              முச்சக்கரவண்டி சாரதிக்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையில் ஏற்பட்ட

              வாய்த்தர்க்கமே இந்த கத்தி குத்துக்கான காரணம் என பொலிஸார் கூறுகின்றனர்.

              சம்பவத்தில் 29 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார்.

              இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு உபரணங்கள் வழங்கி வைப்பு!

                கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு உபரணங்கள் வழங்கி வைப்பு!

                பைஷல் இஸ்மாயில் –

                கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (18) கல்முனை பிராந்திய ஆயுள்வேத

                இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில்
                இடம்பெற்றது.

                இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பிரதம அதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஆர்.எம்.தெளபீக், கல்முனை பிராந்திய

                சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயக்கொடியின் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி இணைப்பு அதிகாரி வைத்தியர் ஏ.சி.டில்சாத், கிழக்கு மாகாண

                சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் சுலைமாலெப்பை நாசிறூன் ஆகியோர் கெளரவ அதிகளாக கலந்துகொண்டனர்.

                கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, நிந்தவூர் மற்றும் கல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, திருக்கோவில் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை,

                முகம்மதியாபுரம் மருந்து உற்பத்தி நிலையம், காரைதீவு, மருதமுனை மத்திய மருந்தகம் போன்ற இடங்களுக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் தளபாடப்

                பொருட்களை குறித்த நிறுவனத்தின் வைத்திய பொறுப்பதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.

                இதன்போது கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நோயாளிகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள

                மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பார்வையிட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

                Posted in இலங்கை செய்திகள்

                நாங்கள் உங்களை கப்பபோம் – யாழில் மகிந்தா பேச்சு

                நாங்கள் உங்களை கப்பபோம் – யாழில் மகிந்தா பேச்சு

                யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

                விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

                இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

                சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

                யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் சந்தோஷம் என தமிழில் உரையாற்றினார்.

                யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக்கும் கொழும்பு மக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிங்கள முதலாளிமார் இருந்தார்கள்.

                இங்கிருந்த பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கொழும்பில் இருந்தனர். இன்றும் அப்படித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலிலே கொழும்பு வந்துசென்றனர்.

                கொழும்பில் பணிபுரியும் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் ஏறி காலையில் யாழ்ப்பாணத்தை சென்றடைவர். அது ஒரு காலம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம்.

                அந்த சகாப்தம் 1980க்குப் பின்னர் திடீரென மறைந்தது. யாழ்ப்பாணம் செல்லும் ரயில் பாதையை உடைத்தனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் செல்ல வேண்டிய யாழ்தேவி நின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக யாழ்தேவியைப் பார்க்கிறேன்.

                வடக்கு மக்கள் சுதந்திரத்தை இழக்க ஆரம்பித்தனர். வடக்கில் விவசாயி நெல் வயலுக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. வடக்கு பதுங்கு குழியாக மாறியது.

                சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்தனர். எந்த நேரத்திலும் தமது சொந்த வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

                வடக்கில் உள்ள மக்கள் அகதிகளாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும் சென்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்கு தாயகம் இருந்தாலும் அங்கு சுதந்திரமாக வாழமுடியாமல், தெரியாத பிரதேசங்களிலும், நாடுகளிலும் அகதிகளாக வாழ வேண்டியதாயிற்று.

                30 ஆண்டுகளாக அந்த இருண்ட சகாப்தம் இருந்தது. அந்த இருண்ட காலத்தில் வடக்கு மக்களின் வாழ்வுரிமையும் அபிவிருத்தியும் பறிக்கப்பட்டன. மே 19, 2019 அன்று அந்த இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வடக்கு மக்கள் இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

                யுத்தம் முடிவடையும் போது இன்று வடக்கில் உள்ள எதையும் அன்று காணமுடியவில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட கட்டிடங்கள், உடைந்த சாலைகள், வீடற்ற மக்கள். ஆனால் ஓரிரு வருடங்களில் அனைத்தையும் திருப்பிக் கொடுத்தோம். சாலைகள் அமைக்கப்பட்டன, தண்ணீர் வழங்கப்பட்டன, நூறாயிரக்கணக்கான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன. மின்னல் வேகத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டது என்று சொல்வதே சரியாக இருக்கும். பாடசாலைகள், மருத்துவமனைகள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன.

                அன்று வடக்கு மக்கள் சாப்பிடுவதற்கும், பல் துலக்குவதற்கும் மட்டுமே வாய் திறக்கிறார்கள் என்ற கதை காணப்பட்டது. அந்த மக்களை நாம் விடுவித்தோம். பல ஆண்டுகள் கழித்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. வடக்கும் தெற்கும் யாழ்தேவியால் இணைக்கப்பட்டன. வடக்கில் மாகாண சபை மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது.

                ஆனால் அந்த சகாப்தத்திற்கு 2015 இல் இடையூறு ஏற்பட்டது. 2015இன் பின்னர் நாங்கள் நாங்கள் செய்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டன. நல்லிணக்கம் என்ற திட்டம் வந்தது.

                அவசரகாலச் சட்டங்களை நீக்கி நாம் ஏற்படுத்திய மாகாண சபை நல்லாட்சியுடன் கலைக்கப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை. நாட்டிற்கும் கிடைக்கவில்லை.

                புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண மக்கள் இன்று இருளில் மூழ்கியிருக்க மாட்டார்கள்.

                ஆனால் அந்த நல்லிணக்கத் திட்டத்திற்காக பில்லியன்கள் செலவிடப்பட்டன.

                சமாதானம் பற்றிய பாடலுக்கு பில்லியன்கள் செலவழிக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படவில்லை.

                நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. நாம் அதை மீண்டும் தொடங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம்.

                ஆனால் திடீரென்று கொவிட் தொற்று ஏற்பட்டது. அந்த நேரத்தில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் எமது மக்களைப் பாதுகாக்கவே விரும்பினோம். நாம் அதை செய்தோம்.

                வடக்கு மக்களைப் போன்று தென்னிலங்கை மக்களையும் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடிந்தது.

                உங்கள் மாகாணங்களில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்போம் என உறுதியளிக்கின்றோம். உங்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

                தொடர்ந்து நாம் உங்களை மறக்கமாட்டோம். கைவிடமாட்டோம் என தமிழில் உரையாற்றினார்.

                Posted in இலங்கை செய்திகள்

                120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்

                120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்

                இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட நபரொருவரை ஆர்மர் வீதி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

                குறித்த தங்கத்தை கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு எடுத்து செல்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுசெல்லும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றுமொருவர் இன்று யாழ்ப்பாணம் மாதகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

                  காஸ் சிலிண்டர்
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் ஒரு காஸ் சிலிண்டர் 4,199 ரூபாவாக அதிகரிப்பு

                  இலங்கையில் ஒரு காஸ் சிலிண்டர் 4,199 ரூபாவாக அதிகரிப்பு

                  இலங்கையில் 12.5kg domestic LP gas cylinder ஒன்றின் விழி 4,199 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது


                  தொடர்ந்து எரிவாயுவுக்கு தட்டு பாடு நிலவுவதால் மக்கள் சொல்லென்னா துயரில் சிக்கி தவித்து வருகின்றனர்

                  இலங்கை வாழ் மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் வாழ்வது எப்படி என தெரியாது தவித்து வருகின்றனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தல்

                    புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தல்

                    புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வெள்ளைவானில் கடத்தி

                    செல்ல பட்டுளளார் , கடத்தி செல்ல பட்ட இவர் அந்த வானில் இருந்து தப்பித்து வந்துள்ளார்

                    இவரை கடத்திய அதே வானில் இருவர் கடத்த பட்டு கால்கள் கட்டப்பட்டு ,வாய்க்கு

                    பிலஸ்ட்ரார் ஓட்ட பட்டு இருந்துள்ளதாக தப்பி வந்த மாணவர் தெரிவித்துள்ளார்

                    பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான இவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
                    குறித்த கடத்தல் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் ஒரு கப் தேநீர் 100 ரூபா

                      இலங்கையில் ஒரு கப் தேநீர் 100 ரூபா

                      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாள்தோறும்

                      பொருட்களின் விலை ஏற்ற பட்டு வருகிறது

                      இதறகு அமைய ஒரு கப் தேநீர் நூறு ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது

                      அத்துடன் பால்மா விலை எரிபொருள் விலை மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்

                        மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்

                        கண்டி வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதானவர், மண்ணெண்ணெய்

                        வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த போது, மயங்கி விழுந்து நேற்று (19) உயிரிழந்திருந்தார்.

                        மாகொலையைச் சேர்ந்த ஓட்டோ சாரதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மயங்கி

                        விழுந்தவர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்

                        மரணமடைந்துவிட்டார் என கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

                        இந்நிலையில், கடவத்தையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில்

                        காத்திருந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து இன்று ( 20) உயிரிழந்துள்ளார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          குப்பைகளினால் நாறும் கொழும்பு

                          குப்பைகளினால் நாறும் கொழும்பு

                          எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் குப்பை

                          சேகரிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) மூத்த உறுப்பினர் மகேந்திர டி சில்வா இன்று தெரிவித்தார்.

                          கங்காராம பிரதேசம், நாரஹேன்பிட்டி, பொரளை மற்றும் தெமட்டகொட

                          பிரதேசங்களில் குப்பைகளை சேகரிக்கும் பாரவூர்திகளில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் குப்பை சேகரிப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

                          கழிவுகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட மற்ற

                          பகுதிகளில் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும், எனினும், மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் குப்பை சேகரிப்பு CMC மூலம் செய்யப்படுகிறது.

                          தனியார் ஒப்பந்ததாரர் லொரிகளுக்கு தேவையான எரிபொருளை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

                          எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படுவது மார்ச் முதல் வாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

                            யாழில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

                            யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன ஓட்டுநர் பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

                            யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று திறந்து வைக்கவுள்ளார்.

                            இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

                            அதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு

                            அருகில் வழிமறித்த பொலிஸார், வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாதவாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில் ஓட்டுநரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

                            இதேவேளை, பொலிஸாரின் காவலையும் மீறி பஸ்ஸில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில்

                            ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

                            இதேவேளை, மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.