Tag: அடி
நான் வாழ நீ வா ..!
நான் வாழ நீ வா ..!
இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்
நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்
நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா
சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்
எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021
உன்னால் மகிழ்கின்றேன் …!
உன்னால் மகிழ்கின்றேன் …!
கண் பார்க்கும் முன்னாலே
கை பேசியில் வந்தவளே
உன்னிடத்தில் சரணடைய
உச்சரித்தாய் எப்படியோ
ஆழ்கடலின் பேரலையில்
அகப்பட்ட என்னை
தேடி வந்து மீட்டெண்ணை
தேற்றினாய் எப்படியோ
முடியாதென்ற அலட்சியத்தை
முடிவுகட்டி அனுப்பி வைத்து
முடியும் என்ற இலட்சியத்தை
முன்னேற்றி வைத்தாயே
உன்னால் மட்டும் எப்படியோ
உயிர் கொடுக்க முடிகிறது
கண்டு பிடிப்புகளை எப்படியோ
கரையேற்ற முடிகிறது
நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
நிலம் செழிக்கும் உரமாய்
வீசிட எப்படித்தான்
விண்ணிலவே முடிகிறது
காலத்தை அளவிடும்
கலண்டராய் நீ இருக்க
என் மன கவலை எல்லாம்
ஏ மனமே ஓடி விடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-12-2021
யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்
யாழில் மனைவியுடன் கள்ள காதல் – காதலர்களை கட்டி வைத்து அடித்த கணவன்
யாழ்ப்பாணத்தில் தற்போது கள்ள காதல் சமாச்சாரம் அதிகரித்து வருகிறது
திருமணம் முடித்த பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் உறவுகள் அதிகரித்து செல்கிறது
இதனை கட்டு படுத்த முடியாத நிலையில் கணவன் ,மற்றும் பெற்றோர்கள் உள்ளனர் .
சம்பவ தினம் அன்று மனைவியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு பேசி வந்த வாலிபர்கள் ,தகாத உறவு அழைத்துள்ளனர்
கணவன் வீட்டில் இருந்துள்ளார் ,இதனை அறியாத வாலிபர்கள் வாலிபர்கள் வழமை போன்று பாலியல் உரையாடல்கள் அடங்கிய
பதிவுகளை அனுப்பினார் ,இதனை அவதானித்த கணவன் மேற்படி விடயம் தொடர்பாக மனைவியிடம் வினவிய பொழுது அவர் நடந்தவற்றை விபிரித்துள்ளார்
அதே மனைவியை கொண்டு அழைப்பை ஏற்படுத்திய கணவர் அவர்களை மறைவான இடம் ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளனர்
பெண்ணின் பேச்சை நம்பி இரு வாலிபர்களும் காரில் வந்துள்ளனர்
அவ்வளவு தான் அங்கு கணவன் ,மற்றும் அவர்கள் நண்பர்கள்
மறைந்து காத்திருந்தனர் .இருவரை பிடித்து கட்டி வைத்து அடித்து நையப்புடைத்து விரட்டியுள்ளனர்
ஆமா உங்க மனைவி ஒழுங்கா இருந்தா ஏன் இவங்க வர போறானுக இவ்வாறு சந்தியடி வம்பர்கள் கேள்வியையையும் எழுப்பிட தவறவில்லை







