Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

அண்டை நாட்டு கொண்டையில
ஆடுதடா இந்த லங்கா …..
மண்டையிலே எதுமில்லா
மாமனாகி போன லங்கா …

வல்லவனாம் சீனா வாலு
வாடி போயு பிடித்த ஆளு ….
துள்ளி இன்று பேசிறாங்க
தூர கணை கொண்டவராம் …..

பண்டை நாட்டு புத்தனவன்
பாரதத்தை கொண்டவனாம் …..
அந்த நாட்டு மடி தடவி
ஆகா நல்லா பாடுதடா ……..

சிங்கபூரா சிங்கள நாடு - சிரிக்குது வாய்
சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

சிங்க பூரா ஆக்குவாராம்
சிரிக்குதடா வாய்கள் எல்லாம் ….
வண்டி போகும் சாலை கண்டா
வலியெடுக்கும் உடல்கள் எல்லாம் ….

இந்த லங்கா எண்ணத்தில
இருக்கு லஞ்சம் உள்ளத்தில …
நாட்டை கொள்ளை அடிப்பவர்கள்
நடு வாரா சிங்க பூரா …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உனக்காக காத்திருக்கிறேன் வா

    உனக்காக காத்திருக்கிறேன் வா

    உன்னை தேடுது என் மனமே
    என்னை தேடுது உன் மனமோ ..?
    பாடும் தென்றலே கூறிடுவாய் – இந்த
    பால் நிலவை வென்றிடுவாய் ….

    வானிலே உனக்கொரு வீடு கட்டி
    வைத்தேன் அதிலே ஊஞ்சல் கட்டி ….
    ஆடிட வந்தால் போதுமடி
    அகிலம் எந்தன் கையிலடி …..

    புல்லை மேயும் பனி துளியே
    பூவை சுமக்கும் அழகிடையே ….
    வெள்ளை ரோயா வாசமதை
    வெறி ஏற்ற தருவாயா ..?

    அன்பு கலந்த தேனமுதே
    அழகாய் சுரக்கும் தேம்ஸ் நதியே …
    எவரெஸ்ட் சிகரம் ஏறிடுவோம்
    எந்தன் அன்பே வந்திடுவாய் …..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் -18/11/2017

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இது தான் என் காதல்

      இது தான் என் காதல்

      உன் மேலே எனக்கென்ன கோபம்..? – நிலை
      உணராமல் நீ செய்தாய் பாவம் …
      தடை போட்டு விடை பெற்றாய் நன்றோ ..?- நீ
      தண்டனை தருகின்ற மன்றோ …?

      பாடடி குயிலே நீ பாடு – நான்
      பைத்திய காரன் தான் கூவு ….
      ஏதடி செய்வேன் யான் கூறு …?
      என் கேள்வியில் இருக்கு விடை நூறு ….

      பாம்பாகி உன்னை யான் கொத்தவோ – அடி
      பாசத்தை இடையில் யான் விற்கவோ ..?
      சிந்திக்க ஓர் நொடி மறந்தாயே
      சீர் கெட்டு வலியினை தந்தாயே ….

      கந்தன் மடம் கொண்ட வீடோ
      கை கூப்பி கும்பிட்டால் வருமோ …?
      ஈர் வள்ளி கொண்டான் நிலையோ
      இதனாலே கோவண ஆண்டியோ …?

      கன ..டா வாய் பேசுமோ …?
      கன..வில் உரு வருமோ ..?
      நிலை குறி செயல் புரியுமோ ..?
      நிலை பெற்று உயிர் புகுமோ …?

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் -10/11/2017

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னை தேடி வருவேன் காத்திரு

        உன்னை தேடி வருவேன் காத்திரு

        விழுந்து விழுந்து நீ பேசும்
        விடயங்களை இரசிக்கிறேன் …
        விடலையில நான் தொலைத்த
        விடயங்களை ருசிக்கிறேன்….

        மூச்சு வாங்கி பேசும் உந்தன்
        முன்னழகு பிடிச்சிருக்கே …
        காற்று வந்து ஆடை விலக்கி
        காட்டும் மேனி பிடிச்சிருக்கே ….

        தடக்கி விழும் வார்த்தைகளின்
        தடையங்களை முகர்கிறேன்
        தனிமையதை தேடும் உந்தன்
        தாகமதால் துடிக்கிறேன் ….

        மேனி களைத்து உடல் வேர்த்து
        மோகத்தாலே துடிக்கிறாய் ..
        வெள்ளி நிலா ஓடிவர
        வேகம் பிடிக்க நினைக்கிறாய் ….

        தேகம் வேர்க்கும் வேலை வரும்
        தேவதையே பொறுத்திருப்பாய்
        தேடி வந்த பணி முடித்து
        தேடி வருவேன் காத்திருப்பாய் ….!

        வன்னி மைந்தன் (ஜெகன் )
        ஆக்கம் -25,08,2017

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          காரை நகர்

          காரை நகர்

          அலை வந்து தாலாட்டும்
          அழியாத ஊரு ….
          அதன் உள்ளே ஆடுதடா
          ஆக்கினைகள் நூறு …..

          சிங்களத்து வால் பிடிகள்
          சிரிக்கின்ற கூடு – இங்கே
          சிந்தை தமிழ் வாழ வைத்தார்
          சிலர் உள்ள வீடு ….

          முந்தை தமிழ் சாதிகளால்
          மூழ்கின்ற ஊரு …..
          முனேற்றம் காணாது
          மூட்டும் சண்டை பாரு ….

          உப்பு மண் போலான
          உள்ளங்கள் பாரு –
          உதவாத சிந்தையால்
          உதிர்கின்ற காடு ….

          கரை காண முடியாத
          காரை மா நகரு …..
          காலம் இக்கால
          களியாட்ட பேரு ……

          வன்னி மைந்தன் ( ஜெகன் )
          ஆக்கம் -21/09/2017

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            நிலவே வா உன்னை நான் தாங்குவேன்

            நிலவே வா உன்னை நான் தாங்குவேன்

            பூவை தாங்கி பூவும் ஒன்று
            புழுவாய் நெளிகிறதே – இந்த
            பூவை வாட வைத்தார் இந்த
            புவியில் இருக்கிறதே ….

            கலைந்த கூந்தல் கவலை சொல்ல
            கண்கள் சிவக்கிறதே – இவள்
            காய்ந்த வயிறு குளிரத்தானே
            கை சுமை குறைக்காரோ …?

            வாழும் போதே வாடும் பூவை
            வழியோர் காணலையோ …?
            வறுமை கூடி வாடும் மலரை
            வாடிட விடுவாரோ ….?

            சின்ன பூவே சின்ன பூவே
            சிரிப்பை தொலைத்தாயே – உன்
            சிந்தை குறைக்க கண் முன்னே
            சிலர் தான் உள்ளாரோ …?

            நிலவே வா உன்னை நான் தாங்குவேன்
            நிலவே வா உன்னை நான் தாங்குவேன்

            கசங்கி போனாய் என்று தானோ
            காணா செல்கின்றார் …?
            கண்ணே உன்னை கண்ணில் காட்டு
            கவலைகள் யான் துடைப்பேன் ….

            விண்ணை தொட்டு நீயும் ஆழ
            விசாலம் யான் இடுவேன் ….
            விழுந்து ஓடும் கண்ணீர் துளிக்கு
            விடுதலை நான் தருவேன் ….

            உன்னை போல பெண்ணை எல்லாம்
            உற்று பார்க்காரே ….
            உலகம் அறிந்தாய் நீ என்றால்
            உன்னை படர்வாரே….

            காற்று வந்து நண்பன் ஆனான்
            கண்ணீர் துடைக்குதடி ….
            இயற்கை கொண்ட பாசம் கூட
            இங்கு மனிதர்க்கு இல்லையடி …!

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் -21/09/2017

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              உலகம் வாழ உன்னை தா …!

              உலகம் வாழ உன்னை தா …!

              பிள்ளை இல்லா தாய் ஒன்றில்
              பிரியம் வைப்பாரோ …?
              மலடாய் மண்ணும் போனாலே
              மண்ணை தொடுவாரோ …?

              காட்டை அழித்து வீடு கட்டி
              கண்ணா சிரிக்கின்றாய் …
              குலவும் காற்று இறந்து விட்டால்
              கூடாய் நீ கிடப்பாய் …

              மரங்கள் உந்தன் உயிர் மூச்சு
              மரங்கள் நீ காப்பாய் ….
              இல்லம் தோறும் நீ தானே
              இன்று மரம் நடுவாய் ….

              நஞ்சை விதைத்து மண்ணை கொல்லும்
              நரகம் நீ கழிவாய்….
              மண்ணை காத்து விண்ணும் குளிரும்
              மாற்றம் நீ விதைப்பாய் …..

              உன்னை போல பிள்ளை வாழும்
              உலகம் நீ தருவாய் …..
              நல்லறம் நாட்டி இல்லறம் வாழும்
              நாளினை நீ தொடுப்பாய்….!

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் -21/09/2017

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                நீ மறந்தால் … நான் இறப்பேன் ….!

                நீ மறந்தால் நான் இறப்பேன் ….!

                உன்னால் இதயம் வலிக்குதடி
                உலகே உன்னால் துடிக்குதடி ….
                ஒருமுறை உந்தன் இதயம் தா
                ஓராயிரம் ஆண்டு நான் வாழ்வேன் …

                ஆசை வைத்தேதன் பூங்குயிலே
                அழகாய் உரசு என் மயிலே …
                தேடுது உன்னை என் மனது
                தேகம் வந்து மோதி விடு …..

                நினைவுகள் உன்னை நீட்டையிலே
                நித்தம் நித்தம் தவிக்கின்றேன் ….
                ஆசை வந்து தாலாட்ட
                அந்தோ காற்றாய் அலைகின்றேன் ….

                கூடு வந்து நீ உறைந்தால்
                குலவி குலவி யான் மகிழ்வேன் ….
                மணிகள் ஒவ்வொன்றும் நாளாக
                மரண வலியால் தவிக்கின்றேன் ….

                எந்தன் உயிரே வந்து விடு
                எனக்கு நீ தான் வாழ்வு கொடு ….
                நினைத்தேன் உன்னை மறக்கவில்லை
                நினைவே இழந்தால் இறந்திடுவேன் …!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் -21/09/2017

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

                தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

                பதை பதைக்க வதை வதைத்து
                பாவையவள் கொன்றாய்- அட
                பால் நிலவு தேவைதையை
                பல் இழித்து தின்றாய் ….

                கூட்டம் வைத்து கூடி நின்று
                கூவி கூவி தின்றாய் …
                கூவுதடா உலக தமிழ்
                கூண்டில் தூக்கில் போடாய் ….

                வேடர்களை காத்திட தான்
                வேட்டிகளும் துணையோ …?
                பாடு பட்டு வாதடா
                பைந்தமிழும் துணையோ ..?

                கோட்டு போட்டு வாதிட்டால்
                கோட்டும் அதிருமோ ..?- அட
                நோட்டு வாங்கி வாயாட்ட
                நேர்மை செழி விடுமோ …?

                மனு நீதி செழியனவன்
                மன்றம் நீதி தருமே – இந்த
                மறை கழன்றார் நிலையழிய
                மரண உடை இடுமே …!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் -13/09/2017
                வித்தியா கொலை வழக்கு இறுதி முடிவுற்று நீதிக்காய்
                காத்திருக்கும் இவ்வேளை ….!

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  எனக்காய் பிறந்தாள் இவள்

                  எனக்காய் பிறந்தாள் இவள்

                  மயக்கும் இரவில் மாளிகை ஒன்றில்
                  மணக்க வந்த குயிலே – அடி
                  உயிர் கசங்கா நெஞ்சில் உன்னை சுமந்தேன்
                  உள்ளம் நீயே மகிழ்வாய் …..

                  இத்தரு திங்கள் உன்னை ஈர்ந்தார்
                  இதயம் மகிழ நன்றி ……
                  பத்தொரு திங்கள் பாடாய் சுமந்தார்
                  பலனை தின்றேன் நன்றாய் …..

                  வைத்தொரு பேரை சூடியுன்னை
                  வளர்த்தே நின்றார் கண்ணாய்…..
                  இடையில் வந்தா னொருவன் – உனை
                  இதயம் வைத்தான் பேறாய்……

                  விதியின் விளைச்சல் இது தானென்றே
                  விலகி நின்றார் பாராய் …..
                  அகிலம் படைத்த ஆண்டான் செயலின்
                  அழகை இதிலே காண்பாய் …..

                  ஈர் உடல் ஒன்றாய் நீயும் தானே
                  இணைந்து போனாய் வாழ்வில் …..
                  முத்தாய் இரண்டை முன்னே தந்தாய்
                  முத்தே உனக்கு நன்றி ……

                  எனக்காய் பிறந்தாள் இவள்

                  இடையில் சில நாள் இதயம் மாறி
                  இடரை தந்தேன் நன்றாய் ….
                  இருந்தும் நீயே இதனை மறந்து
                  இதயம் காத்தாய் பண்பாய்…..

                  கருவரை பிளந்து கண்ணை திறந்த
                  கண்ணே இந்த நாளாம்-
                  நெஞ்ச மலரால் நினைவை தூவி
                  நினைந்தேன் உன்னை நானாம் ….

                  பேறாய் உன்னை பெற்றது எண்ணி
                  பெருமை கொண்ட நாளாம்…..
                  கட்டியே தழுவி உன்னை இன்று
                  கத்தியே பாடுது நன்றாம் …

                  என்ன தந்தால் நீயும் சிரிப்பாய்
                  எனக்கு புரியவில்லை – என்
                  எண்ணம் தந்தேன் பரிசாய் தானே
                  எடுத்தே நீயும் இரசிப்பாய் ….

                  கன்னம் இரண்டில் காயம் வைப்பேன்
                  கண்ணே கொஞ்சம் வாராய் – என்
                  கடமை தன்னை முடிக்க தானே
                  கண்ணே நீயும் தாராய்……

                  எனக்காய் பிறந்தாள் இவள்
                  எனக்காய் பிறந்தாள் இவள்

                  பணத்தை தந்தேன் இது நாள் வரையில்
                  பாதியில் தொலைத்து நின்றாய் -உன்னை
                  பாடி வைத்தேன் இன்று தானே
                  பாவி எங்கோ தொலைப்பாய்….?

                  விண்ணை கட்டி நூலால் இழுப்பேன்
                  வித்தகி இருந்தால் போதும் – நீ
                  பிறந்த நாளில் உன்னைபாடி
                  பிரியம் தந்தேன் பாராய் ….!

                  ன்னி மைந்தன் ( ஜெகன் )
                  ஆக்கம் -13/09/2017

                  இதயம் நுழைந்து இனிதே இனைந்தஇவளது பிறந்த நாளில்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!

                    என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!

                    கூண்டில் அடைத்து சிரிக்கும் மனிதா
                    கூண்டை திறந்து மகிழ்வாய் …
                    வாழும் எந்தன் வாழ்வை ஏனோ
                    வாடும் சிறையில் அடைத்தாய் ….?

                    நீதி பேசும் மாந்தன் என்றால்
                    நீதி கூறி நிற்பாய் ..?
                    நீ பெற்ற பிள்ளை ஒன்றை
                    நீயா வைப்பாய் கூண்டில் ..?

                    சிறகை வெட்டி வைத்தால் நானும்
                    சிரித்தே உலவி திரிவேன் ….
                    சிறகு அடிக்க முடியா கூண்டில்
                    சிறையில் வைத்தாய் பாவம் …

                    நாளும் வடியும் எந்த கண்ணீர்
                    நல்ல வாழ்வு தருமா ..?
                    பிள்ளை என்று பிரியம் கொட்டும்
                    பிரியமானீர் சொல்வீரோ …?

                    இறந்த பின்னர் என்னை எண்ணி
                    இதயம் கலங்கி அழுகாதே …
                    இதயம் இல்லா நீவீர் எல்லாம்
                    இருந்தா அழுவீர் மறக்காதே ….!

                    வண்ணை மைந்தன் (ஜெகன் )
                    ஆக்கம்-03/09/2017
                    அன்பு தோழி ரேணுகா வீட்டில் கிளி ஒன்று சிறை பட்ட போது….

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்

                    மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்

                    மதவெறியால் இனம் ஒன்று
                    மரணம் விதைக்குதே – உலக
                    மன்றுகளும் இதனை கண்டு
                    மகிழ்வாய் சிரிக்குதே ….

                    உயிர் ஒன்றை குடிப்பாரை
                    உதைக்க மறுக்குதே – இந்த
                    உலக நீதி இதுவாச்சோ
                    உள்ளம் துடிக்குதே …..

                    குஞ்சோடே மறைந்து கிடந்தார்
                    குரலை வெட்டினான் …..
                    குருதி குடித்து வெறி ஏப்பம் இட்டே
                    குளறி சுற்றினான் …..

                    வாரம் ஒன்று கடக்கும் முன்னே
                    வழி மூவாயிரம் வீசினான் ….
                    வரலாற்று இன படுகொலையாய்
                    வாழ்வில் எழுதினான் …..

                    மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்
                    மிதக்கும் மனித உடல்கள்- சிரிக்கும் உலகம்

                    நீதி உள்ள மாந்தர் எல்லாம
                    நிரையாய் எழுகவே – நாளை
                    நீள விரியும் கொலைகள் தடுக்க
                    நிமிர்ந்தே வருகவே ………

                    அறம் இன்றி ஆளும் அரசின்
                    ஆட்சி குலையடா …..
                    அவலத்தோடே இறந்தார் ஆத்மா
                    அமைதியாக நிமிரடா …..!

                    வன்னி மைந்தன் (ஜெகன் )
                    ஆக்கம் -02/09/2017
                    கடந்த ஒருவாரமாக மியன்மாரில் புத்த வாதிகளால் நடந்த முஸ்லீம் படுகொலைகள்
                    கண்டபோது…

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      சிதைந்த கனவால் சிதறிய குயில் ….!

                      சிதைந்த கனவால் சிதறிய குயில் ….!

                      கல்வி கூடம் ஏற இங்கே
                      காசு கேட்குமோ ..?- அட
                      காமராஜர் கட்டி வளர்த்த
                      கல்வி சாகுமோ ?

                      நீதி மன்றமே நீதி இல்லையா
                      நீசர் கொல்லாயோ …?
                      ஆசை குயில்கள் பாடிட இங்கே
                      அடுக்கு தடைகள் போடுமோ …?

                      மனிதம் வாழத்தானே இங்கே
                      மன்றில் ஆட்சி நடக்குதோ ..?
                      மரணம் குடித்து கல்வி வாழின்
                      மனிதம் வாழுமோ …?

                      ஏழை ஒருவன் எழுந்தே வந்தால்
                      ஏற்க மறுக்குமோ ..?
                      மக்கள் காக்கும் சட்டம் இங்கே
                      மரணம் கேட்குமோ …….?

                      சாவின் மூலம் தானே இங்கே
                      சாதனை நடக்குமோ ..? – அட
                      வாழும் மனிதா நீயும் தானே
                      வாய்மை கொள்ளடா …..

                      ஆசையோடு பறந்த பறவை
                      அந்தோ வீழ்ந்ததே
                      அப்பன் ,ஆத்தா விழி கண்ணீர் ஓட
                      அரசு வைத்ததே ….!

                      வன்னி மைந்தன் (ஜெகன் -லண்டன் )
                      ஆக்கம் -02/09/2017
                      தமிழகத்தில் 01,09,2017அப்பாவி மாணவி அனித்தா மருத்துவ அனுதி இன்றி
                      தூக்கில் தொங்கி உயிர் விட்ட பேரதிர்ச்சி அறிந்த போது….

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        வழியின்றி கதறும் வயோதிபம்

                        வழியின்றி கதறும் வயோதிபம் ஒன்று

                        தடு மாறும் மனதொன்று தள்ளாடுது
                        தடம் மாறி வழி ஒன்றை தடி தேடுது …..
                        உயிர் வாழ ஊன்று கோள் ஒன்றானது
                        உலவும் காலத்தில் நிலையானது ….

                        வயதாகும் வேளையில் வந்தானது
                        வழி காட்டும் துணையாகி உயிரானது …
                        இடரோடு எனை தாங்கும் துணையானது
                        இடறாது வழி தாங்கும் நிழலானது ….

                        ஒருபோதும் மனம் நோக கண்ணானது
                        ஒன்றாகி என்னோடு உயிர் வாழுது ….
                        வந்ததும் ,பெற்றதும் வழி விட்டது
                        வாயுக்கு சோறு இது இட்டது …..

                        வழியின்றி கதறும்  வயோதிபம்
                        வழியின்றி கதறும் வயோதிபம் in

                        நிலை மாறும் உலகில் புதிதானது
                        நீர் விழி தூங்கையில் ஓய்வானது ……
                        இன்றிந்த வாழ்வு எனக்கானது
                        இது போல நாளை உனக்கானது ……

                        துள்ளிடும் இளமையில் துணிவு கொண்டேன்
                        துணிந்தவன் என்று எண்ணி நின்றேன் ….
                        வாடையில் எண்ணியே வருந்தி கொண்டேன்
                        சாவுக்கு இடையிலே நானே நொந்தேன் …

                        வன்னி மைந்தன் ( ஜெகன் )
                        ஆக்கம் -31/08/2017

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          முடியாது என்றால் மறந்து விடு

                          முடியாது என்றால் மறந்து விடு

                          விடியாத காலை ஒன்றில்
                          விழியோரம் நீயும் வந்து …
                          ஏதோ செய்கின்றாய் – நெஞ்சே
                          ஏதோ சொல்கின்றாய் …..

                          மழை போல நினைவு துள்ள
                          மனதோடு என்னை அள்ள….
                          விளையாடும் பூவே நீயோ – நெஞ்சில்
                          விதையாக முளைத்தாய் ….

                          அசைந்தாடும் காற்றே ஆகி
                          அன்றாடம் தேகம் தழுவி ….
                          விளையாடும் வெள்ளி நிலவே
                          விவாகம் என்றோ சொல்லு …?

                          முடியாத காதல் ஒன்றாய்
                          முளையோடு கருகும் என்றால் ….
                          விழியோடு நீயும் வேண்டாம்
                          விரைவாக சென்று விடு ….

                          விழியோடு நீரை சுமந்து – காற்று
                          விளையாடும் சருகே ஆகி …..
                          நடை போடும் சாலையாகி
                          நானோடி வாழ வேண்டாம் ….!

                          வன்னி மைந்தன் ( ஜெகன் )
                          ஆக்கம் -31/08/2017

                          வன்னி மைந்தன் கவிதைகள்

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            புரிந்து கொள் மனிதா

                            புரிந்து கொள் மனிதா

                            இடையில கத்தி இடையில செருகி
                            இடி விழும் வானம் தொடுவான் …
                            முடியது தென்னை முலையதை திருகி
                            முழு நிலா கள்ளை கொய்வான் …

                            மரமது ஏறி உடலது வாடி
                            வலியுடன் வாசல் வருவான் …..
                            உடனடி கள்ளை உறிஞ்சிட கூட்டம்
                            உறைவிடம் தன்னில் உறைந்தார் …

                            கடுகதி எழுந்து காசை நீட்டி
                            கனிந்தே உறிஞ்சி சுவைப்பார் ….
                            வெறியதை ஏற்றி வெளியில் நடந்து
                            வெள்ளான் புத்தியில் குலைப்பார் ….

                            பருகிட பாலதை பணிவுடன் தந்தார்
                            பள்ளன் என்றே அறைவார் …
                            கூன் உடல் வீழ்ந்து .. குலமது இழிந்து
                            குறை சாதியாய் இகழ்வார் …

                            புரிந்து கொள் மனிதா
                            புரிந்து கொள் மனிதா

                            வேண்டிடும் கள்ளை வேளையில் ஏறி
                            வேண்டியே நக்கி போனாய் …
                            உன் உளம் மகிழ உனக் உணவிட்டான்
                            ஊனமாய் ஏனடா போனான் ???

                            சாதியும் மதமும் செய்தவன் மனிதன் – அட
                            சாதி தமிழரே புரிந்திடு ….
                            அறமது நாட்டி அன்பை பருகி
                            அகிலம் வாழ்ந்திட பழகு ….!

                            வன்னி மைந்தன் (ஜெகன் )
                            ஆக்கம் -30/08/2017

                            வன்னி மைந்தன் கவிதைகள்

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              துயர் கண்டு சோராதே

                              துயர் கண்டு சோராதே

                              இடர் கண்டு ஓரு நாளும் இடியாதே
                              இதயம் ஒடிந்து உயிர் மாயாதே ….
                              வருகின்ற தடை எல்லாம் வளமாக்கு
                              வருங்காலம் முடியும் தலை தூக்கு ..,,

                              அறியாமை உனை பற்ற அழுகின்றாய்
                              அதனாலே உயிர் விட முனைகின்றாய் ….
                              ஏதொரு பொழுதிலும் எழுந்தாடு
                              எமனோடும் நின்று போராடு …

                              உனக்குள்ளே வலிமையை உள்ளேற்று
                              உரமாகி எழுவாய் உனை நம்பு ….
                              மாற்று சிந்தையில் மடம் கட்டு
                              மலர்ச்சியை உந்தன் கை ஊட்டு .,.

                              சிந்தையில் புதிதாக கொடி கட்டு
                              சீக்கிரம் வெற்றிகள் உன் தோள்தட்டு …
                              ஆக்கினை கூடிட என் செய்வாய் ?
                              அழுவதால் என்ன நீ கண்டாய்..?

                              தேற்றியே உன்னை நீ எழுப்பு .
                              தேடிடும் உலகு உன் விருப்பு …,,
                              ஏசிய உதடெல்லாம் உனை பாடும் -நீ
                              எங்களின் உதராணம் என கூவும் ….!

                              வன்னி மைந்தன் ( ஜெகன் )
                              ஆக்கம் -29/08/2017
                              அதிகரிக்கும் தமிழர்கள் தற்கொலைகளை எண்ணிய போது…..

                              வன்னி மைந்தன் கவிதைகள்

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                இறந்தும் வாழ்ந்திட முனை …!

                                இறந்தும் வாழ்ந்திட முனை …!

                                வாழ்வே ஒரு சிறு கூடு
                                வாழ்ந்தே நீ விழி மூடு ….
                                நாளை உன் வரலாறை
                                நாள் காட்டும் நாள்காட்டி …..

                                பேசும் வாய் புகழாரம்
                                பெருகும் உன் செயல் வீரம் …
                                வீசும் மணம் திசை எங்கும்
                                விளைவாய் நீ உயிர் எங்கும் ….

                                மூசும் அலை கடலெங்கும்
                                முகில் முட்டும் வானெங்கும் ….
                                நினைவாய் நீ கிடந்தது
                                நியமாய் நீ நடப்பாய் ….

                                பூமி உடல் விட்டு
                                புறப்பட்டு போனாலும் ….
                                வாழ்வாய் நீ வையம் – அவ்
                                வாழ்வை நீ தேடு …..!

                                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                                ஆக்கம் -29/08/2017

                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                கண்ணீர் தந்த கடலே அழிக

                                கண்ணீர் தந்த கடலே அழிக

                                மண்டை தீவு கடல் இன்று
                                மரண கடல் ஆனதோ …?
                                உயிர் குடிக்கும் கடலாகி
                                உலவும் மனிதம் விரட்டுமோ …?

                                ஆடி படகில் ஏறி வந்தார்
                                ஆவியை தான் குடிக்குமோ ..?
                                ஆருமிங்கு உலவிடாது
                                அடங்கும் கடலாகுமோ …?

                                தேன் சுரக்கும் தோழர்களின்
                                தேகம் ஏனோ தின்றாய் …?
                                தேம்பி அழும் அவலம் ஒன்றை
                                தேடி ஏனோ தந்தாய் …?

                                நீர் பருக்கி மூச்சடக்கி
                                நினைவுகளை தின்றாய் ….
                                நீ எங்கள் கடல்தாயோ
                                நீ யழிந்து போவாய் ….

                                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                                ஆக்கம் -28/08/2017
                                28/08/2017 இன்று மண்டை தீவு கடலில் படகு கவிழ்ந்து
                                இறந்த தோழர்கள் துயர் அறிந்து ….
                                கண்ணீரால் குளிக்கிறது என் பேனா …!..!

                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  தொலைந்து போன வசந்த வாழ்வு

                                  தொலைந்து போன வசந்த வாழ்வு

                                  பள்ளி கூட வாழ்வு போல ஒண்ணு வருமா ?
                                  பள்ளியில படித்தார் கண்டால் கண்ணு தாங்குமா ..?
                                  ஒண்ணாக படித்தாருடன் ஒண்ணா பேசல ..
                                  ஓயாத அலையாக அவரு நம்ம நினைவில ,…

                                  காலம் பல கடந்தாலும் கண்டா போதுமே …
                                  கட்டி தழுவி கண்ணுதானே கலசம் பேசுமே …,
                                  வெள்ள மனசில் என்றும் தானே கள்ளம் இல்லையே …
                                  வெருளி சிந்தை நெஞ்சு ஓட ஒண்ணும் இல்லையே …

                                  பிரிந்த போது தானே பிரியம் பிறந்ததே
                                  பிரிய முன்ன வந்திருந்தா சொந்த மாகுமே ….
                                  மனதின் ஓரம் வாழும் காதல் சொல்ல முடியுமோ ..? ..
                                  மணம் முடித்த பின்னர் கண்டால் நெஞ்சு ஆறுமோ ..?

                                  தொலைந்து போன வசந்த வாழ்வு
                                  தொலைந்து போன வசந்த வாழ்வு

                                  நம்ம மனசில் உள்ளதை நாம சொல்லல -அஞ்சி
                                  நாம் நடந்த காலம் எண்ணி வாழ்வு சிரிக்குதே …
                                  புத்தி இல்லா காலத்திலே புதுசா திரிந்தோம் – இன்று
                                  புத்தி தெரிஞ்சு தெளிஞ்ச போது புண்ணாய் மனசு வலிக்குதே …

                                  ஆராரோ என்று தானே அன்று திரிந்தோமே
                                  அறிவு பிறந்த போது அழுது தொலைத்தோமே …..
                                  இது தானோ நமக்கு வாழ்வாய் ஆச்சுதோ ?
                                  இதை எண்ணி இதயம் தானே சோகம் ஆச்சுதே …

                                  வன்னி மைந்தன் ( ஜெகன் )
                                  ஆக்கம்24,08,2017
                                  நமது பள்ளி வாழ்வை எண்ணியபோது …..!

                                  வன்னி மைந்தன் கவிதைகள்