Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இறந்தும் வாழ்ந்திட முனை …!

இறந்தும் வாழ்ந்திட முனை …!

வாழ்வே ஒரு சிறு கூடு
வாழ்ந்தே நீ விழி மூடு ….
நாளை உன் வரலாறை
நாள் காட்டும் நாள்காட்டி …..

பேசும் வாய் புகழாரம்
பெருகும் உன் செயல் வீரம் …
வீசும் மணம் திசை எங்கும்
விளைவாய் நீ உயிர் எங்கும் ….

மூசும் அலை கடலெங்கும்
முகில் முட்டும் வானெங்கும் ….
நினைவாய் நீ கிடந்தது
நியமாய் நீ நடப்பாய் ….

பூமி உடல் விட்டு
புறப்பட்டு போனாலும் ….
வாழ்வாய் நீ வையம் – அவ்
வாழ்வை நீ தேடு …..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -29/08/2017

Home » வாழ்ந்திட முனை