Category: சமையல்
சமையல் வாய்க்கு சுவையான தரமான சமையல் ,கடை உணவுகள் ,
இந்தியா உணவுகள் ,இலங்கை உணவுகள் ,வீதி கடை சாப்பாடு ,
வீதியோர உணவகங்கள் ,Village Cooking,Village food,grandpa cookin,indian food recipies,amma samayal,
srilankan food cooking,indian stayle cooking ,jaffnacooking,sri lanka food recipies,
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
கருவேப்பில்லை கார தொக்கு இப்படி வீட்டில செஞ்சு பாருங்க .இட்லீ, தோசைக்கு ,செம கூட்டு ,சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .கடை சுவையில் அம்புட்டு தரமா இருக்கும். இந்த கருவேப்பிலை கார தொக்கு .
சுவையான கருவேப்பிலை கார தொக்கு செய்வது எப்படி .
மிக இலகுவான முறையில் இப்படி வீட்டில் செஞ்சு பாருங்க ,வாங்க இப்போ
செய்முறைக்கு போகலாம் .
இந்த கருவேப்பிலை கார தொக்கு ,செய்திட தேவையான பொருட்கள் .
மூன்று கப்பு ,கருவேப்பிலை ,ஒன்றை கரண்டி மிளகு ,சின்ன எலுமிச்சம் பழ அளவுக்கு புளி ,15 காய்ந்த மிளகாய் ,இப்போ இது ஓட தேவையான தண்ணீர் சேர்த்து,மிக்சியில் போட்டு சட்னி போல அரைத்து எடுத்து கொள்ளுங்க .
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
செய்முறை இரண்டு
அப்புறம் அடுப்பில கடயா வைத்து ,நல்லெண்ணெய் சேர்த்து ,எண்ணெய் ,சூடானதும் அரை கரண்டி கடுகு ,ஒரு கப் உளுத்தம் பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி தேங்காய் பூ பவுடர் ,சேர்த்து நொறுங்கி பொரிந்து வந்ததும் ,அரைத்து வைத்த கருவேப்பிலை சட்னியை ,இதுல ஊற்றி கலக்கி விடுங்க .

அப்புறம் இது கூடவே தேவையான அளவு மஞ்சள் தூள் ,வறுத்து அரைத்த வெந்தய பொடி ,போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்க ,இடை இடையே திறந்து ,நன்றாக கலக்கி விடுங்க .நன்றாக வதங்கி வரும் பொழுது ,தேவையான உப்பு ,அப்புறம் ஒரு கரண்டி வெல்லம் ,போடு நன்றாக சுருங்கி வரும் வரை கலக்கி விடுங்க .
நன்றாக எண்ணெய் வற்றி உதிரி உதிரியாக வந்ததும் ,அடுப்பை நிப்பாட்டி விடுங்க ,அம்புட்டு தாங்க இப்போ வாய்க்கு சுவையான கருவேப்பில்லை கார தொக்கு ரெடியாகிடுச்சு .

இந்த கருவேப்பிலை கார தொக்கு ,சாதம் ,இட்லீ ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் இந்த மாதிரி செய்து பாருங்க ,செம சுவையாக இருக்கும் .
அடுத்த தெரு மணக்கும் அம்புட்டு சுவையாக, இந்த பருப்பு இல்லாத சாம்பார் இருக்கும் மக்களே .
மிகவும் இலகுவான முறையில் ,
ஐந்து நிமிடத்தில் செய்த்திடலாம் வாங்க .
பருப்பு இல்லாத சாம்பார் செய்வது எப்படி ..?
அடுப்பில கடாய வைத்து ,இரண்டு தக்காளி மூன்று பச்சை மிளகாய் ,பாதி பெரிய வெங்காயம் ,மஞ்சள்,சாம்பார் பொடி , ,பூண்டு
தேவையான உப்பு ,கூடவே தண்ணர் விட்டு குக்கரில் வைத்து எடுங்க .

இப்போ நன்றாக வேகி வந்ததும் ,தக்காளி தோலை உரித்து எடுத்திடுங்க .
இப்போ இதை மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க ,இல்லை
அப்டி இல்லைண்ணா கடைந்து எடுங்க .
பருப்பு இல்லா சாம்பார் செய்முறை இரண்டு
இந்த சாம்பாருக்கு பொடி செய்திட ,அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,
இரண்டு கரண்டி கொத்தமல்லி ,ஐந்து வறுமிளகாய் ,ஒரு கரண்டி சீரகம் ,
ஒரு கரண்டி வெந்தயம் ,சேர்த்து மிதமான தீயில வறுத்து எடுங்க .
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி

வறுத்து எடுத்ததும் ஆறவைத்து ,மிக்சியில போட்டு பொடியாக அரைத்து எடுத்திடுங்க
இப்போ சாம்பார் செய்வதுக்கு ,அடுப்பில கடையா வைத்து ,
ஒரு கரண்டி எண்ணெய் ,எண்ணெய் சூடானதும் கடுகு ,வெந்தயம் ,
சீரகம் ,பெருங்காய பொடி ,10 சின்ன வெங்காயம் ,கருவேப்பிலை ,
போட்டு நன்றாக கண்ணாடி பதம் வரும் வரைக்கும் வதக்கி கொள்ளுங்க .
அப்புறமா இது கூட அரைத்து வைத்த தக்காளி கலவை கூட்டை
இது கூட சேர்த்திடுங்க .நனறாக கொதித்து வரும் பொழுது
இரண்டு கரண்டி கடலை மாவு தண்ணி விட்டு கரைத்து விடுங்க .
அப்புறமா அரைத்து வைத்த பொடியில, ஒரு கரண்டி இதில் சேர்த்திடுங்க ,
கடலை மாவை இது கூட சேர்த்து கலக்கி விடுங்க ,
இப்போ தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வைத்திடுங்க .
இறுதியிலே கொத்த மல்லி இலை போட்டு இறக்கிடுங்க .

இப்போ சப்பாத்தி ,சாதம் பரோட்டா ,இட்லீ ,கூட பருப்பு இல்லாத ,சாம்பாரை ஊற்றி பிசைந்து ,ஒரு புடி புடிங்க மக்களே
அம்புட்டு தாங்க வேல .பருப்பு இல்லாத சாம்பார் ரெடியாடிச்சு .
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
பருப்பு போளி செய்வது எப்படி செய்வது என்கின்ற கவலையை விடுங்க மக்களே .சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க வீடே மணக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவங்க வரை ,கேட்டு வாங்கி உன்பாங்க .
வாங்க இப்போ பருப்பு போலி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
சுவையான பருப்பு போளி செய்முறை
பாத்திரம் ஒன்று எடுத்து அதற்குள் ,ஒரு கப் அளவுக்கு பருப்பு எடுத்து
,தேவையான தண்ணீர் விட்டு ,மூன்று தடவை நன்றாக கழுவி எடுங்க .
நனறாக கழுவி எடுத்த பின்னர் ,
புதிய தண்ணி விட்டு ஒருமணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .
கடை சுவையில் பருப்பு போளி செய்திட தேவையான பொருட்கள்
இப்போ மேல் மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்து அதற்குள்ள ,
ஒன்றை கப் அளவுக்கு மைதா மா ,எடுத்திடுங்க .
அது கூடவே அரை கப் அளவுக்கு, கோதுமை மா ,தேவையான உப்பு ,
சிறிய அளவு மஞ்சள் ,ஒன்றை தேனீர் கரண்டி எண்ணெய் ,
சேர்த்து நன்றாக சேர்த்து மாவை பிசைந்து எடுங்க .
அப்புறம் தேவையான தண்ணீர் சேர்ந்து நன்றாக
சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுங்க .
இரண்டு மணி நேரம் அந்த மாவை ஊற வைத்திடுங்க
இப்போ பருப்பு போலி செய்முறை இரண்டு
ஊறவைத்த கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி எடுத்து,
குக்கரில் போட்டு ,நெய் ,மஞ்சள் சேர்த்து குக்கரிலில் மூடி
வேக வைத்திடுங்க .
அப்புறம் அதை எடுத்து நனறாக ஒரு கரண்டியால நன்றாக மசித்து எடுங்க கீழே உள்ளது போல .
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

இப்போ கடாய வைத்து அதில ஒன்றரை கப் வெள்ளம் ,தேவையான தண்ணி விட்டு கரைஞ்சு வரும் வரை விடுங்க .
வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க ,அப்புறம் வேகா வைத்தி மசித்து வாய்த்த கடலை பருப்பை

இது கூட கொட்டி கலந்திடுங்க .இது கூடவே பாதி தேங்காய் துருவல் சேர்த்திடுங்க உப்பு ,ஏலக்காய் ,போட்டு கலந்து திக் ஆகும் வரை எடுத்திடுங்க
ஆறியதும் அதை உருண்டையுங்க பிடித்து எடுத்திடுங்க ,

அப்புறம் ஊற வாய்த்த மாவை எடுத்து அதையும் சப்பாத்திக்கு போல
உருண்டையாக மாவு பிடித்து வைங்க ,
அப்புறம் மாவு தட்டியதுக்க, உருண்டை பூரணத்தை உள்ள வைத்து
முழுவதுமாக மூடி விடுங்க -மோதகம் போல .

அப்புறம் அதை ,திருப்பி வைத்து பர்ரோட்டோ மாதிரி பூரணம் வெளியில் வராத மாதிரி அழுத்தி தட்டி எடுங்க .
இப்போ பருப்பு போளி இறுதி செய்முறை மூன்று
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து நன்றாக பாராட்டோ போல ,
சுட்டு எடுங்க ,இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுங்க .
கோல்டன் கலருக்கு வந்ததும் எடுத்திடுங்க .இப்போ டீ கூட இந்த அருமையான ,சுவையான பருப்பு போளி ,சாப்பிட்டு பாருங்க .
செமையாக இருக்கும் ,கடை பருப்பு போளி போல பஞ்சு போல சாப்டா இருக்கும் .அவ்வளவு தாங்க மக்களே .
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
சிக்கன் பிரியாணி நம்ம வீட்டில் மிக சுவையாக கடை சுவையில் செய்வது எப்படிஎன்பதை வாங்க இதில் பார்க்கலாம் .
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி உண்ணும் ,சிக்கன் பிரியாணி வாங்க செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
சிக்கன் பிரியாணி செய்முறை ஒன்று
அடுப்பை சூடாக்கி பாத்திரம் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ,நெய் விட்டு சூடானதும் ,மூணு பிரியாணி இலை ,நான்கு பட்டை ,மூன்று ஸ்டார் பூ ,ஏலக்காய் ,கராம்பு நான்கு ,பொடியாக்கி வெட்டிய மூன்று பெரிய வெங்காயம் ,போட்டு நன்றாக பொன்னிறமா வரும் வரை வதக்கிடுங்க .

அப்புறமா பொடியாக வெட்டிய தக்காளி ,ஐந்து பச்சை மிளகாய் ,இணைத்து நன்றாக வதக்கி வாங்க ,அப்புறம் ஐந்து கரண்டி இஞ்சி பூண்டு அரைச்சு சேர்த்திடுங்க ,கூடவே இக்காயளவு புதினா ,வதக்கிய பின்னர் துண்டுகளாக வெட்டிய சிக்கன் சேர்த்து இது கூட பிரட்டி விடுங்க .
சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
இப்பொழுது இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,
கரம் மசாலா இரண்டு கரண்டி ,சேர்த்து நனறாக வதங்கிய பின்னர் கொஞ்ச நீர் ஊற்றிஒரு நிமிடம் வேக விடுங்க .
அப்புறம் தேவையான தயிர் ,சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு ,தண்ணி சேர்த்து ,கூடவே தேவையான உப்பு ,அரை கரண்டி தேசிக்காய் ,சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடுங்க .
அப்புறம் கழுவி வைத்த பசுமதி அரிசி எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி ,கொஞ்சம் புதினா ,கொத்த மல்லி ,போட்டு பத்து நிமிடம் மூடி வைங்க .
வேகி வந்ததும் ஒரு கரண்டி எண்ணெய் எடுத்து மேலே, ஊற்றி கிளறி விடுங்க .
அடுப்பு தீயை குறைத்து மேலும் 10 நிமிடம் வேக வைத்திடுங்க .

இப்போ கடை சுவையில் செம்மையான சிக்கன் பிரியாணி ரெடியாகிடுச்சு .இது போல பிரியாணி நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க மக்களே .
சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
வீட்டில் அம்மா செய்திடும் சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க வீட மணக்கும் ,சொல்லேவே வேணாம் அம்புட்டு சுவைங்க .
மிக இலகுவான முறையில் இன்றே செய்து பாருங்க .யாவரும் விரும்பி உண்ணும் முட்டை கிரேவி ,
முட்டை கிரேவி எனறால் இப்படி இருக்கனும் .
சாதம் ,சப்பாத்தி ,கூட சேர்த்து சாப்பிடலாம் ,இதில கொத்து பரோட்டோ போடலாம் என்றால் பாருங்க .
அப்படியான முட்டை தொக்கு கிரேவி பார்க்கலாம் வாங்க .
சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
வீடே மணக்கும் அளவுக்கு இந்த சாப்பாடு ரெம்ப சுவையாக இருக்கும் .
நீங்களும் ஒருமுறை செஞ்சு பாருங்க .
நாளாந்தம் நம்ம சமையல் செய்வனவற்றில் கொஞ்சம் வித்தியாசமா சின்ன ஒரு மாற்றம் அவ்வளவு தாங்க .
முட்டை ,தயிர் ,குழம்பு ,சாதம் ,சைடீஸ் என்பனவற்றுடன் பிசைந்து சாப்பிட்ட பிரியாணி போல செமையாக இருக்கும் .
வாங்க எப்படி இந்த டிபன் செய்வது என்பதை பார்க்கலாம் .
செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry
செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry
செட்டிநாடு சிக்கன் சுக்கா இந்த மாதிரி வீட்டில செஞ்சு சாப்பிடுங்க மக்களே ,
அதிக சுவை தரமான உணவு ,வாரத்தில் அஒருமுறை இது போல செஞ்சு .சாப்டிங்க
குலந்திகள்முதல் பெரியவர்கள் வரை யாவருக்கும் பிடிக்கும்
இந்த செட்டிநாடு சிக்கன் சுக்கா .
வாங்க செட்டிநாடு சிக்கன் சுக்கா செய்வது காணொளியில் பார்க்கலாம்.
வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes
வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes
வீட்ல காய்கறி இல்லையா? அப்ப உடனே இப்படி செஞ்சு பாருங்க ,சாப்பிட்டே
அசத்து போவீங்க .|
இந்த டிபன் செய்திட ஐந்து நிமிடம் போதும் ,ரோடு கடை சுவையில் இதுபோல
செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
வாங்க காணொளி பார்க்கலாம்.
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.
இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .
இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .
ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .
அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .
செய்முறை இரண்டு .
இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .
தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .
அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .
இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .
அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .
மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
நம்ம வீட்டில் மொறு மொறு அடை தோசை .மிக சுவையாக தரமாக செய்து சாப்பிடலாம் வாங்க .
அடை தோசை செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
இந்த அடை தோசை செய்வதற்கு சட்டி டுத்து ,
ஒரு க்ளாஸ் வெள்ளை அரசி ,அரை கப் கடலை பருப்பு ,
அரை கப் பாசி பருப்பு ,அரை கப் துவரம் பருப்பு ,எடுத்திட்டு அதில தேவையான தண்ணி ஊற்றி நன்றாக
கழுவி எடுங்க .
நன்றாக் கழுவி எடுத்த பின்னர் புதிய தண்ணி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .
மூன்று மணி நேரம் கழித்து நீரை வடித்து எடுத்து மிக்சியில போட்டு
கூடவே சின்ன துண்டு பட்டை ,3 கராம்பு ,சோம்பு ,பூண்டு ,8 வறுமிளகாய் ,சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க .
அப்புறமா பெரிய வெங்காயம் தேங்காய் பல்லு ,
கொத்தமல்லி இலைகளை பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
கூடவே உப்பு சேர்த்து நன்றாக கலந்திடுங்க .
மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
அதற்கு அப்புறம் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றிட்டு தோசை மாதிரி ஊற்றுங்க,அப்புறம் தோசை மேல குழி வெட்டி போடுங்க .வெந்து வர அதற்கு அபப்டி பண்ணுங்க .
நன்றாக வெந்து வரும் வரை தோசை சுட்டு எடுத்திடுங்க .
செய்முறை ரெண்டு
தொட்டு சாப்பிட பூண்டு சட்னி செய்யலாம் வாங்க .
கடாய வைத்து பூண்டு பூட்டு வெந்து வரு பொழுது தேவையான மிளகாய் ,
சின்ன வெங்காயம் ,சின்ன துண்டு புளி சேர்த்து வறுத்தெடுங்க .
நன்றாக கலர் மாறி வந்ததும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான தண்ணி சேர்த்து அரைத்து எடுங்க .
அப்புறம் கடாயில் எண்ணெய் பூட்டு தாளித்து எடுங்க .
அரைத்த சட்னியை இதில போட்டு கருவேப்பிலை போட்டு, வேக வைத்து எடுங்க .ஐந்து நிமிடம் முடிந்ததும் சட்னியை எடுத்திடுங்க .
அப்புறம் மொறு மொறு தோசையுடன் பூண்டு மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க.
அவ்வளவு தாங்க .இதுபோல நன்றாக நாள்தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .இப்போ சொல்லுங்க சுவை எப்புடி இருக்கு மக்களே .
மொறு மொறு அடை தோசை| பூண்டு சட்னி| Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney Breakfast Recipe | Healthy Recipe | Dosa Recipe|
Breakfast Recipe|
Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
Spicy Paneer Gravy Recipe தோசை ,சாதம் மற்றும் ப்ரோட்டா ,இட்லீ கூட எல்லாம் சேர்த்து சாப்பிட மிக சுவையாக
இருக்கும் .அப்படியான பனீர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
பனீர் செய்வது எப்படி .?
பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
அடுப்பில கடாய் வைத்து கொள்ளுங்க அதில் எண்ணெய் விட்டு சூடானதும் ,இரண்டு பிரியாணி இலை ,காய்ந்த மிளகாய் ,ஏலக்காய் ,பட்டை ,கொத்து கருவேப்பிலை ,மூன்று சின்ன வெங்காயம் சின்னதா பொடியாக்கி வெட்டி ,அதனை எல்லாம் ஒன்றாக போட்டு கலக்கி எடுங்க .
அப்புறம் இஞ்சி பூண்டு ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வாங்க ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,மல்லித்தூள்,கூடவே மிளகாய் தூள் சேர்த்து கலக்கிடுங்க .
அப்புறம் இரண்டு தக்காளி பொடியாக வெட்டி அரைத்து எடுத்து அதனை சேர்த்திடுங்க .
Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
இப்போ தண்ணி ஊற்றி இதனை 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .
அப்புறம் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் மிக்சியில் அரை கரண்டி சோம்பு ,சீரகம் ,
ஒருகரண்டி மிளகு சேர்த்து நனறாக அரைத்து எடுத்து ,அதனை சேர்த்து கலக்கிடுங்க ,வாசம் தூக்கலாக இருக்கும் .
இப்போ குழம்பு ரெடியானதும், பிறகு பன்னீர் சேர்த்திடுங்க ,
சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்திடுங்க .அதன் பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து வைத்து உறைப்பான பன்னீர் கிரேவியை இறக்கிடுங்க .
அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான உறைப்பான பன்னீர் ரெடியாடிச்சு.இப்படி நாள் தோறும் பனீர் செய்து சாப்பிடுங்க மக்களே .
ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe
ஒரு முறை lunchக்கு இத செய்ங்க கொஞ்சம் கூட மிஞ்சாது| Ghee Rice | Chicken Kulambu | Lunch Combo Recipe
ஒருமுறை சாப்பிட்டாலும் அதை தரமாக சுவையாக சுவைத்து சாப்பிடணும் .அப்படி சாப்பிட செய்திடும் உணவு தரமாக இருக்கனும் .
அப்படியான ஒரு உணவு தான இப்போ செய்து அசத்த போகிறோம் வாங்க .
இப்படி செஞ்சு நாம் ஒரு புடி புடிக்கலாம் வாங்க மக்களே .
அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி கத்தரிக்காய்
வீட்டில் இலகுவாக நம்ம வாய் சுவையாக உண்ணும் வகையில் அட்டகாசமான சுவையில் குஸ்கா பிரியாணி செய்து அசத்தலாம் .
குஸ்கா கத்தரிகையா பிரியாணி இலகுவாக செய்வது எப்படி என்பதையும் ,அத்தகு தேவையான பொருட்கள் என்ன என்பதை ,வாங்க காணொளி பார்த்துகிட்டே செஞ்சு அசத்தலாம் .
இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
இந்த சட்னி இருந்தா 20 இட்லீ சாப்பிடலாம்
வீட்டில நாம் கடை சுவையில் இவ்வாறு சட்னி செஞ்சா ,இருபது இட்லீ சாப்பிடலாம் .
இவ்வாறு கடை சுவையில் தரமான உணவாயு வீட்டில் செஞ்சு அசத்துங்க மக்களே .
வாங்க இப்போ இந்த சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை பார்ப்போம் .
இட்லி சட்னி செய்வது எப்படி ..?செய்முறை ஒன்று
தக்காளி கொத்தமல்லி சட்னி செய்திட அடுப்பில ஒரு சட்டி வைத்து கொள்ளுங்க.,அதில தேவையான எண்ணெய் ஊற்றி ஒன்றரை கரண்டி கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு சேர்த்து ,இரண்டையும் நன்றாக வறுத்திடுஙக .
அப்புறம் கூடவே ஐந்து வறுமிளகாய் .இஞ்சி ,சீரகம் ,பூண்டு ,வெங்காயாம் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்திடுங்க .
அப்புறம் பழுத்த தக்காளி நன்றாக வெட்டி சேர்த்திடுங்க .கூடவே உப்பு சேர்த்து வதக்கிடுங்க .இப்போ இதுகூட புளி சேர்த்திடுங்க .
இது கூடவே கடையாசியாக கொத்தமல்லி சேர்த்திடுங்க .அதையும் நன்றாக கலக்கி வதக்கி விடுங்க.
நம்ம சட்னி ரெடியாடிச்சு ,இப்போ அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .
சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு ,தண்ணி சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .கருவேப்பிலை ,அரைக்கரண்டி, உழுத்தம் பருப்பு ,கடுகு பொரித்து தாளித்து கொட்டிடுங்க
இப்போ இட்லீ கூட சேர்த்து சாப்பிடுங்க செம சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க வேலை மக்களே .
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்படி செஞ்சு அசத்துங்க. காரசாரமான பூண்டு சட்னி பத்து நிமிடத்தில் ,இலகுவாக இப்படி செய்திடலாம் வாங்க .
பூண்டு மிளகாய் சட்னி செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து நன்றாக சூடாக்கி கொள்ளுங்க ,சூடானதும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொள்ளுங்க .
தமிழ் சமையல்
அதன் பிறகு அரை கப் அளவுக்கு பூண்டு சேர்த்து கொள்ளுங்க .நன்றாக வெந்து வரும் பொழுது 12 மிளகாய் சேர்த்து கொள்ளுங்க .
பூண்டு மிளகாய் சட்னி இட்லி தோசை கூட சாப்பிட இப்டி செய்ங்க செம்ம ருசி
அதன் பின்னர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்க .சின்ன வெங்காயம் அரை கப் ,மற்றும் புளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
கலர் மாறியது அதை எடுத்து ஆற வைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் மிக்சரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் போட்டு அரைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் கடாயில எண்ணெய் விட்டு சூடானதும் ,ஒரு கரண்டி கடுகு ,அரை கரண்டி உளுந்து ,ஒரு கொத்து கருவேப்பிலை ,சேர்த்திதூங்க .
அதன் பின்னர் அரைத்து வைத்த சட்னியை போட்டு ,கூடவே தேவையான உப்பு போட்டு நனறாக கலந்து வாங்க .
ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கிடுங்க .
இப்போ செம்ம பூண்டு மிளகாய் சட்னி ரெடியாடிச்சு .இதனை .தோசை இட்லி ,சாதம் கூட சேர்த்து சாப்பிட்ட செமையாக இருக்கும் .
மிகவும் இலகுவான முறையில் ருசியான பூண்டு மிளகாய் சட்னி ரெடியாடிச்சு .
இதுபோலவே நீங்களும் செஞ்சு அசத்துங்க மக்களே .
ஆளை கொல்லும் பொரித்த உணவுகள்
ஆளை கொல்லும் பொரித்த உணவுகள்
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை ‘ஓவர் டைம்’ வேலை செய்ய வைக்கிறது.
இன்று காலத்தில் வறுத்த உணவுகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை அவர்கள் சிந்திப்பதில்லை.
இதுமட்டுமின்றி பீட்சா மற்றும் துரித உணவு வகைகளை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுவை தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த உணவுகளில் அளவுக்கு
அதிகமாக எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நாக்கின் சுவையை மட்டும் மதித்து தொடர்ந்து இதனையே பழக்கமாக்கி விடுகின்றனர்.
சுவையான உணவு சாப்பிட தூண்டும், சந்தோஷம் கொடுக்கும் என்பதால் அனைவரும் அதனையே நாடுகிறோம். உணவில் எண்ணெய் பயன்பாடு அதிகமானால் ஆபத்தை நீங்களே வரவேற்பதாக
ஆளை கொல்லும் பொரித்த உணவுகள்
அர்த்தம். உணவுகளை வறுத்து தயார் செய்ய தொடங்கும் போதே உடல் வருந்த தொடங்கி விடும். உணவுகளை தீயில் அதிக நேரம் சூடாக்கி எண்ணெய் சேர்த்து மசாலா பொருட்களை
அள்ளித்தெளிக்கும் போது நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். கண்டிப்பாக சுவையும் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வகை உணவுகளை தேவைக்கு அதிகமாகவே வயிற்றுக்குள் சேர்த்து வைப்பார்கள்.
வறுத்த உணவுகளே ஒரு சுமை என்றால், அதிக அளவில் சாப்பிடுவது இன்னொரு சுமையாகி உறுப்புகளை ‘ஓவர் டைம்’ வேலை செய்ய வைக்கிறது
. அதன் பிறகு நோய்கள் எந்தெந்த வகையில் எல்லாம் தோன்ற முடியுமோ? அப்படியெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடுகிறது.





































































