Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பளையில் குண்டு வெடிப்பு – ஒருவர் காயம்
கிளிநொச்சி – பளை, இயக்கச்சியில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் 3, கரும்புலி நாளை குறிக்கும் பதாகை ஒன்றும், வெடிப் பொருட்கள்
சிலவும், முன்னாள் போராளி ஒருவரின் புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றுடன் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆசிரியையின் வீட்டில் கடந்த 3 ஆம் திகதி வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் அதில் ஆசிரியையின் கணவரே காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம்
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கிளிநொச்சி பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஆசிரியை 43 வயதானவர் எனவும் இவர் இயக்கச்சி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிப் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு வெடிப் பொருட்களை தயாரித்தார்கள் என்பது தொடர்பில் கண்டறிய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கும்
பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலைய வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் இன்று (06) முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி வர்த்தக நிலையங்கள் காலை 8.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த விமானப் பயணிகளுக்காக
மாத்திரம் சுங்க தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் முன், விமான நிலையத்தை தொடர்பு
கொண்டு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நபர்கள், தாம் தனிமைப்படுத்தப்பட்டமைக்காக நிலையங்கள் வழங்கிய சான்றிதழ்கள் அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டமைக்காக பொது சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமான நிலையத்தின் பணத்தை பரிமாற்றம் செய்ய சந்தர்ப்பம் தற்போது இல்லை என்பதால், பொருட்களை
கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர்களை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லை எனின், கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா – ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில், ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார ஊர்தி
ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் அதில் காயமடைந்த இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (06) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்நறுவையில் இருந்து நுவரெலியாவுக்கு அரிசி கொண்டு சென்று, மீண்டும் பொகவந்தலாவை பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் பார ஊர்தி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து பார ஊர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடு – சுமந்திரனால் இடிக்கப்படுகிறது
வீடு – சுமந்திரனால் இடிக்கப்படுகிறது
வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும்
பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப்
பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம்
போன்ற பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு, எம்.ஏ. சுமந்திரனால் இன்று இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இதன் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (05) கோண்டாவிலில்
இடம்பெற்றபோதே முதன்மை வேட்பாளரான பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தான், தங்களை உருவாக்கியதாக கூட்டமைப்பினரே சொல்லி வருகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதும்
கூட்டமைப்பு படிப்படியாகத் தன்னைப் புலி ஆதரவு நீக்கம் செய்ததோடு, தமிழ்த் தேசிய நீக்கத்தையும் செய்துவருகிறது.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது தமிழினப் படுகொலையே என்று உலக நாடுகளின் பல தலைவர்களும் கூறிவரும் நிலையில்,
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் இனப்படுகொலை நடைபெறவில்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி
இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவே செயற்பட்டார்.
இவர்களே போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையையே இல்லாமல் செய்கின்ற அரசாங்கத்தின் சூழ்ச்சி நிரலுக்கு அமைவாகத் தமிழ் மக்களின் உணர்வுகளைப்
புறந்தள்ளிக் கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்து அரசாங்கத்தைப் பிணை எடுத்தார்கள். இவையே கூட்டமைப்பின் கூடாரம் இன்று காலியாகிக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் ஆகும்.
இப்போது தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைத் தொடர்வதற்கு மீண்டும் தங்களுக்கு ஆணை வழங்குமாறு, கடந்த தேர்தல்களின் போது பாடிய அதே பல்லவியை
மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் ஆணை கேட்பது காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காகவோ அரசியல்
கைதிகளை விடுவிப்பதற்காகவேர் அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் வகித்து வந்த நிழல் அமைச்சர்கள் பதவிகளை
மீண்டும் பெறுவதற்காகவே ஆணை கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்கள் இந்தப் போலித்தேசியவாதிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது
போலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது
இலங்கையில் ஆளும் ஆட்சியின் அதிவிஷ்டா உத்தரவின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும்
முற்றுகை தேடுதல் நடவடிக்ககையில் சுமார் 502 பேர் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போதை வாஸ்து பாவனையில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
வெள்ளவத்தையில் பற்றி எரியும் கடை – குவிக்க படும் தீயணைப்பு படை
வெள்ளவத்தையில் பற்றி எரியும் கடை – குவிக்க படும் தீயணைப்பு படை
இலங்கை வெள்ளவத்தை பகுதியில் உள்ள கடை தொகுதி ஒன்றில் திடீரென பற்றி பிடித்த தீயினால் கடையொன்று பலமாக எரிந்த படி உள்ளது
சம்பவத்தை அறிந்த தீயணைப்பு படைஒயினர் விரைந்து வந்த வண்ணம் உள்ளனர்
இந்த தீயினால் ஏற்பட்ட முழுமையான செத்த விபரங்கள் உடனடியாக தெரியவர்வில்லை
இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – கொதிப்பில் மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் – கொதிப்பில் மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை
வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இழுபறி நிலை காணப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகொன்றை நிறுவி அதனூடாக சுற்றுலா, விருந்தோம்பல் முகாமைத்துவம்
கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான பாடத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வணிக, முகாமைத்துவ பீடச் சபை,
பல்கலைக்கழக மூதவை, பேரவை ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் உள்ளகத் தர நிர்ணய அலகின் பரிந்துரையுடன் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனால் 2019 ஆம்
ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அதன் 1023 ஆவது கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.
அதன்படி 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழகங்களில் 2019 / 2020 கல்வி ஆண்டுக்கு சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்
கற்கைநெறியைத் தொடர்வதற்கான விண்ணப்பமும் பல்கலைக்கழக அனுமதிகளுக்கான கையேட்டின் மூலம் கோரப்பட்டிருந்தது.
சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவ கற்கைநெறி சிறப்புப் பட்டமானது வியாபார நிருவாகமானி (சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம்) ஆக 4 ஆண்டுகள் கொண்ட முழுநேரக்
கற்கையாகவும், 4 வருட காலத்தில் முதலிரண்டு வருடங்களும் முகாமைத்துவ பீடக் கற்கைகளும், 3 ஆம் ஆண்டின் போது
பல்கலைக்கழக நடைமுறைகளுக்கமைவாக சிறப்புத் துறையை மாணவர்கள் தெரிவு செய்யப்படலாம் எனவும் வரையறை செய்யப்பட்டிருந்தது.
கற்றை நெறிக்கான கட்டடம் உட்பட்ட பௌதிக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக உயர்கல்வி அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு உட்பட்ட நிதியீட்டங்களும் பெறப்படக் கூடியதாக
இருந்தது. அத்துடன் சுற்றுலாத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவரும் கற்கைநெறியின் இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எனினும், பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தினுள் நிலவும் உள்ளக முரண்பாடுகளின் காரணமாக சுற்றுலாவும், விருந்தோம்பலும் கற்கைகள் அலகு ஆரம்பிக்கப்படாமல் இழுபறி
நிலை காணப்படுகிறது. இது தொடர்பில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. நிலமைகளை ஆராய்ந்து கற்றல்
நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்வதற்காக பேரவையினால் இரண்டு முன்னாள் துணை வேந்தர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு பீடத்தின் உள்ளக முரண்பாடுகளினால் எமது பகுதிக்கு வர வேண்டிய வளங்கள் வீணாய்ப் போகின்றன என்று வணிக
முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிவாஜிலிங்கம் பொலிஸாரால் திடீர் கைது
சிவாஜிலிங்கம் பொலிஸாரால் திடீர் கைது
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை பருத்தித்துறை நீதிமன்றில்
ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விசேட விமானத்தில் -இலங்கை வந்திறங்கிய துருக்கிய கடற்படையினர்
விசேட விமானத்தில் -இலங்கை வந்திறங்கிய துருக்கிய கடற்படையினர்
காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சேவையாற்றுவதற்காக
துருக்கியில் இருந்து 24 கடற்படையினர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
துருக்கியின் செடான் நகரில் இருந்து விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய வானிலை எச்சரிக்கை
இன்றைய வானிலை எச்சரிக்கை
மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று
காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிகக்கப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்
அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை
மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு
40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிகக்கப்பட்டுள்ளது.
போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது
போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது
போதைபொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்புகளைப் கொண’டிருந்ததாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்
11 அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளைப்பேணிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் போதைப்பொருள்
தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர், இரு சாஜன் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருமாகும்.
இவ்வாறு கைது செய்யப்பட 11 சந்தேகநபார்களில் ஒரு தொகை போதைப்பொருளை போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மீள
விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேலதிகவிசாரனைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு
திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குறித்த அதிகாரிகளை எதிர்வரும் (ஜூலை 08) புதன்கிழமை வரை
தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முககவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2000 பொலிஸார் விஷேட கடமையில்
முககவசங்களை அணியாதவர்களை கண்காணிக்க 2000 பொலிஸார் விஷேட கடமையில்
கொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள்
தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேல் மாகாணத்திற்குள் மாத்திரம் 2000 பொலிஸார் விஷேட கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சீருடைக்கு மேலதிகமாக சிவில் உடையிலும் புலனாய்வு அதிகாரிகளும் இந்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அசமந்த நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற
தகவல்களை அடுத்தே இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முககவசங்களை அணிந்த நிலையில் குற்றச் செயல்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் பொலிஸார் மேற்படி விஷேட பொலிஸ் குழுக்கள்
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்படி குழு மேற்கொண்டுள்ளன.
இவ்வாறு முககவசங்கள் அணியாத சட்டத்தை மதிக்காத சுமார் 2731 நபர்கள் தமது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின்
கண்காணிப்பின் கீழ் சுயதனிமைப்படுத்தலில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் முககவசம் இல்லாத நபர்களுக்கு பொலிஸாரின் உதவியுடன் சுமார் ஒரு இலட்சம் முககவசங்கள் இலவசமாக
விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்திலுள்ள சிறிய பாடசாலைகளுக்கு தேவையான முககவசங்கள் சமூக பொலிஸ்
பிரிவின் உதவியுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்
தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும்-நாரதர் சுமந்திரன் கூவல்
யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக வாக்களித்து தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னைய காலத்தில் நடந்த கேலிக்கூத்தான தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சிலர் தெரிவு செய்யப்பட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு நேற்று (03) வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாகும். இதில் மக்களுடைய தீர்ப்பு என்பது அவசியம். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நடந்த எந்த ஆட்சி முறைகளிலும் இல்லாத வித்தியாசமான ஆட்சிமுறை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதாவது இராணுவ ஆட்சி இன்று தலை தூக்கியுள்ளது. முன்னர் எப்போதும் இராணுவ ஆட்சி இருந்தது இல்லை. 2015 ஆண்டு நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த ஆட்சி முன்னேற முடியாமல் கவிழ்ந்து பழையபடி முன்னர் ராஜபக்ஷ ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது. ஆனால் பழையபடி ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது என்பதை சரியான விளக்கமாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளது.
அண்ணன் 24 வயதில் பாராளுமன்றத்திற்கு சென்றவர். இப்போது 50 வருட பாராளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில்தான் மஹிந்த பயிற்றப்பட்டனர். அவரை ஜனநாயகவாதி என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவருடைய பயிற்சி முழுவதும் பாராளுமன்றத்தில்தான் இருந்தது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயிற்சி முழுவதும் இராணுவத்துடன் தொடர்பட்டே இருந்தது.
இராணுவத்திலே கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, மாற்று கருத்துக்கு உரிமை கிடையாது, கலந்துரையாடலுக்கு உரித்து இருக்காது. கட்டளையிடுவதும் இடப்படும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியதுமே இராணுவத்தின் பயிற்சியில் உள்ளது.
இவ்வாறான பின்புலத்தில் இருந்து வந்தவர் இன்று நாட்டில் தலைவராக வந்துள்ளார். அதனால்தான் இன்றைய ஆட்சி முறை இராணுவமயப்பட்டதாக உள்ளது. குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் செயலணிகளுக்கும் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகள் நியமிக்கின்றார்.
இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியும் இப்போது இரண்டாக உடைந்து போயுள்ளது.
எனவே அரசை எதிர்க்க சக்தி இல்லாத எதிர்கட்சிதான் நாட்டில் உள்ளது. தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இதுவரை காலமும் ஒரே மாதிரியானதாகத்தான் இருந்து வருகின்றது.
56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஸ்டி தீர்வுக்கே வாக்களித்து வந்தார்கள். சமஸ்டி என்பது நீண்ட கால ஜனநாயக தீர்ப்பாகும். அதில் எந்தவித சலனமும் இடையில் ஏற்படவில்லை. 56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மட்டுமே ஆணைகொடுத்து வந்துள்ளார்கள்.
சமஸ்டி என்பதுதான் மக்கள் தந்த ஆணை. இருப்பினும் 77 ஆம் ஆண்டு தேர்தலின் போது தனிநாட்டுக்கான ஆணையையும் கொடுத்தார்கள். யுத்த காலத்தில் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாத பாரளுமன்றமும் இருந்திருக்கின்றது.
அல்லது கேலிக்கூத்தான் தேர்தல்களில் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தமது பிரதிநிதிகளை மக்கள் வாக்களித்து தெரிவு செய்யலாம் என்ற சூழ்நிலையில் எங்களுடைய ஒரே நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது அவசியமானது.
இப்போது மாற்று கட்சிகள் என்று சொல்லி பலர் முன்வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இதனால் மாற்று அணி ஒன்று வேண்டும் என்று கூறி வருகின்றவர்களின் எதிர்பார்ப்பு தமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்பது முழுமையான பொய்யான பிரச்சாரமாகும். விசேடமாக கடந்த 5 ஆண்டில் ஒரு அரசியல் தீர்வினை கொண்டுவருவதற்கு முயற்சித்தோம்.
அதிகாரப்பரவல் தொடர்பில் அனைத்து கட்சிகளும் இணங்கிய வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு நிறைவேறாவிட்டாலும், அது முக்கியமான மயில் கல்லாகும். மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு விடிவு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
குறிப்பாக இராணுவத்திடம் இருந்த ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் சில மாதங்களுக்குள்ளேயே 3 இல் 2 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
முழு நாட்டையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது மற்றைய பிரதேசங்களில் நிகழாத அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன. சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டது. பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு பலவிதமான அபிவிருத்திகள் இங்கு நடத்திருக்கின்றன.
பல விடயங்கள் இன்னும் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது என்பதும் உண்மை. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது முழுமையான பொய்யாகும். இனிவரும் காலத்தில் விசேடமாக ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
குறிப்பாக தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீட்சியாகும். மக்களுக்கு அரசியல் தீர்வு வரும் வரைக்கும் காத்திருக்காமல் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்.
இவ்வாறு வாழ வேண்டுமாக இருந்தால் மக்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தி நிற்கக் கூடாது. அப்படியான மாற்று பொருளாதார கட்டமைப்பை கொண்டு வருவதற்கு பல முன்னெடுப்புக்களை செய்துள்ளோம்.
தேர்தலுக்கு பின்னர் அத்திட்டங்களை அமுல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதில் முக்கியமான விடயமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.
இளைஞர்களுக்கு வேலை இல்லாதுவிட்டால் அவர்கள் வெளிநாட்டிற்குத்தான் போவார்கள். அரசியல் தீர்வை கவனிக்கும் போது சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காக வேலை செய்வோம்.
இவற்றை செய்ய வேண்டுமானால் நாங்கள் பலமான அணியாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். வேறு அணிகளுக்கு வாக்குகள் போகுமாக இருந்தால் அவை வீணாகவும், சிதைவடைந்து போகும் வாக்குகளாகும் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை 10 ஆசனங்களுக்கு அடக்கிவிட்டு ஏனைய கட்சிகளில் இருந்து ஒருவர் இருவர் பாராளுமன்றத்திற்கு சென்றால் அதைவிட பலவீனமான சூழல் என்று ஒன்று இருக்க முடியாது.
எனவேதான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டும். என்றார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆட்ட நிர்ணம் – போதிய சாட்சியங்கள் இல்லை
2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம்
இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட விஷேட பொலிஸ் விசாரணைப் பிரிவில்
நடைபெற்று வந்த விசாரணைகள் போதிய சாட்சியங்கள் இல்லாதினால் பூர்த்தியடைந்துள்ளன.
இதுதொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்தடி சில்வாவிடமும்
உலகக்கிண்ண போட்டியின் அப்போதைய அணித் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்காரவிடமும் பெறப்பட்ட
வாக்குமூலங்களின் பிரகாரம் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
இவ் விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நேற்று விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
இப் பிரிவில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,முன்னாள் தெரிவுக்குழு த அரவிந்த டி சில்வா மற்றும் குமார்
சங்கக்கார ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயால் – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக உயர்வு
கொரோனா நோயால் – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக உயர்வு
கொரோனா வைரசு தொற்றினால் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளது.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-07-04 09:31:59
2069
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
195
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
1863
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
11
இறப்பு எண்ணிக்கை
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா தோட்டத்தில்
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா தோட்டத்தில்
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா
தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முன்னால் அமைச்சரும்
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் கலந்துக் கொண்டனர்

வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் 


இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் சென்னைக்கு பயணம்
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் சென்னைக்கு பயணம்
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (யுஐ 0274) மூலம் இன்று 2020 ஜூலை 03 ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணமானார்கள்.
இதுதொடர்பாக . கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
ஊடக அறிக்கை
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0274) மூலமாக 2020 ஜூலை 03 ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்”
திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இலங்கையிலிருந்து இயக்கப்படவிருக்கும் அடுத்த விமானசேவைகள்;
AI 0282 – கொழும்பு – டில்லி 08 ஜூலை 2020
AI 0282 – கொழும்பு – டில்லி 18 ஜூலை 2020
- இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்
- அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில்
- தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு
- கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காகஇந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட
- செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
- கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
- வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29 , ஜூன் 15 மற்றும் ஜூன் 22
- ஆகிய மூன்று திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமானசேவைகள், ஏனைய பல விசேட விமான
- சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600க்கும் அதிகமான இந்திய பிரஜைகள்
- இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச்
- செல்லப்பட்டனர்.
- நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய
- தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline சகல இந்திய
- பிரஜைகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும்
- அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
மனிதஉரிமைகள்பேரவையின்44 வதுஅமர்வு நிகழ்ச்சிநிரல்2: உயர்ஸ்தானிகரின்வருடாந்தஅறிக்கைதொடர்பானஊடாடும்உரையாடல்
02 ஜூலை2020
இலங்கையின்அறிக்கை
தலைவர்அவர்களே,
மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகரினால்சமர்ப்பிக்கப்பட்ட2019 ஆம்ஆண்டிற்கானமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகத்தின்வருடாந்தஅறிக்கையைஇலங்கைவரவேற்கின்றது.
வேண்டுகோளின்பேரில்அரசுகளுக்குதொழில்நுட்பமற்றும்நிதிஉதவிகளைவழங்குவதற்காகஅலுவலகம்முன்னெடுத்துள்ளமுயற்சிகளைநாங்கள்பாராட்டும்அதேவேளையில்,
அலுவலகத்தில்சமமானபுவியியல்பிரதிநிதித்துவத்தின்அவசியத்தையும்எடுத்துக்காட்டுகின்றோம்.
ஆக்கபூர்வமானஈடுபாட்டிற்கானஎமதுஉறுதிப்பாட்டின்தொடர்ச்சியாக,2020
ஆம்ஆண்டில்உயர்ஸ்தானிகர்அலுவலகத்திற்குதன்னார்வபூர்மான5000 அமெரிக்கடொலர்பங்களிப்பைஇலங்கைவழங்கும்.
உலகில்கோவிட்-19 தொடர்பானமனிதஉரிமைகளின்தாக்கங்கள்குறித்துசெவ்வாயன்றுமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்இந்தசபைக்குவழங்கியவாய்வழி
ரீதியானபுதுப்பிக்கப்பட்டதகவல்கள்கள்குறித்தும்இலங்கைசுட்டிக்காட்டவிரும்புகின்றது. குறிப்பாகஎதிர்காலகோவிட்-19 தடுப்பூசியை’உலகளாவியபொதுநன்மை’
எனஅங்கீகரிப்பதற்கானஅவரதுஅழைப்பு, மற்றும்தொற்றுதொடர்பானநிவாரணங்களுக்குத்தடையாகஇருக்கும்பொருளாதாரத்தடைகளைதளர்த்துவதுஅல்லதுஇடைநிறுத்துவதற்
கானஅழைப்புபோன்றதொற்றுநோயிலிருந்துமீள்வதற்கானஅதிகமானசர்வதேசஒற்றுமைக்கானஉயர்ஸ்தானிகரின்வேண்டுகோளைநாங்கள்வரவேற்கின்றோம்.
1953 ஆம்ஆண்டுமுதல்அனைத்துமக்களுக்குமானஇலவசமானஉலகளாவியசுகாதாரத்திற்குஉத்தரவாதமளித்தஒருநாடுஎன்றவகையில், தனதுபிராந்தியத்தில்மிகவும்உயர்வானதனிநபர்சுகாதாரசெலவின
ங்களில்ஒன்றின்மூலமாக, சீரான, பல்துறைஅணுகுமுறையினூடாககோவிட்-19
தொற்றுநோயின்பரவலைஇலங்கையினால்வெற்றிகரமாகக்கட்டுப்படுத்தமுடிந்தது.
தேசியமட்டத்திலானவிரைவானதடுப்புநடவடிக்கைகள், நன்குவலையமைக்கப்பட்ட, பல்தரப்பட்டபங்குதாரர்களின்தொடர்புத்தடமறிதல்பொறிமுறைமற்றும்திரைப்பிரதியெடுத்தல் /
பரிசோதனைமற்றும்மருத்துவமனையில்அனுமதித்தல்ஆகியவற்றைநோக்கியவலுவானதொருசுகாதாரஅமைப்புஆகியனநாட்டில்கோவிட்-19 தொற்றின்சமூகப்பரவலை2020 மே01
முதல்பூஜ்ஜியஎண்ணிக்கையில்உறுதிப்படுத்துவதற்குஉதவியுள்ளன. கடைசியாக2020 ஜூன்01 ஆந்திகதிஇடம்பெற்றமரணத்துடன்11 பேர்மாத்திரமேமரணமடைந்துள்ளதுடன்,
இலங்கையில்இடம்பெற்றகோவிட்-19 நோயாளிகளின்இறப்புவிகிதம்0.54%மட்டுமேயாவதுடன், இதுஉலகளாவியமரணவிகிதமான4.85%ஐவிடவும்கணிசமாளஅளவுகுறைவாகும்அதேவேளையில்,
இலங்கையில்குணமடைந்தோரின்விகிதமான83.59%ஆனது, உலகளாவியகுணமடைந்தோர்விகிதமான54.77%ஐவிடமிகவும்அதிகமாகும்.
தலைவர்அவர்களே,
உலகசுகாதாரதாபனத்தினால்பாராட்டப்பட்டவகையிலானதொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதில்இலங்கைஅரசாங்கம்கடைப்பிடித்தஅணுகுமுறையானது,
தனதுமக்களுக்குமாத்திரமன்றிஅதன்ஆட்புலத்திலுள்ளவெளிநாட்டினரினதும்ஆரோக்கியம்மற்றும்பாதுகாப்பைபராமரிப்பதற்காகமுக்
கியத்துவமளிக்கும்அனைத்தையும் உள்ளடக்கியதும், பாகுபாடற்றதும்மற்றும்முழுமையானதுமாகும்.
வைரஸ்பரவுவதைத்தடுப்பதற்காகஅரசாங்கம்முன்னெடுத்துள்ளநடவடிக்கைகள்எச்சந்தர்ப்பத்திலும்அடிப்படைச்சுதந்திரங்களைப்பயன்படுத்துவதில்தடங்கல்களைத்தோற்றுவித்தமைக்கானஅவசரகால
நடவடிக்கைகளைஎடுப்பதற்குவழிவகுக்கவில்லை, மாறாகஇந்ததொற்றுநோயின்போதுசமூகத்தின்அனைத்துப்பிரிவினரினதும்உரிமைகளைநாடுமுழுவதும்பாதுகாக்கும்நோக்கத்துடன்
, சட்டத்தின்சரியானசெயன்முறைக்குஇணங்க, பொதுசுகாதாரத்தின்நலனுக்கானகுறைந்தபட்சமானதற்காலிகக்க
ட்டுப்பாடுகளுக்குகண்டிப்பாகமட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவை2020 ஜூன்28 ஆந்திகதிமுழுமையாகநீக்கப்பட்டன.
இந்தபொதுசுகாதாரநடவடிக்கைகள், தொற்றுநோய்க்குஆட்படாமல்இருக்கச்செய்யும்முகமாக, சமூகத்தில்குறிப்பாகபாதிக்கப்படக்கூடியபிரிவுகளானகுறைந்தவருமானம்கொண்டகுடும்பங்கள், வயதானவர்கள்,
மாற்றுத்திறனாளிகள், நாள்வருமானம்ஈட்டுபவர்கள், விவசாயிகள்மற்றும்தொழில்துறைகள்ஆகியவற்றின்பொருளாதார
மற்றும்சமூகஉரிமைகளைமேம்படுத்துவதைநோக்கமாகக்கொண்டதொடர்ச்சியானகொள்கைகளுக்குஅமைவாகஏற்படுத்தப்பட்டன.
இதுதொடர்பில், கோவிட்-19 தொற்றினால்ஏற்படும்முன்னோடியில்லாதவகையிலானபொருளாதாரமற்றும்கடன்தொடர்பானசவால்கள்மற்றும்அதன்விளைவாகவளர்ச்சியடைந்துவரும்நாடுகளுக்கானகடன்நிவாரணம்மற்றும்நிதி
சார்ந்தஊக்கமளிப்புஆகியவற்றின்தேவைகுறித்துஉலகத்தலைவர்களின்கவனத்தைஈர்த்தஅணிசேராஇயக்கத்தின்உச்சிமாநாட்டில்2020 மே4
ஆந்திகதிஇலங்கைஜனாதிபதிஆற்றியஉரையைநினைவுகூர்கின்றோம்.
தொற்றுநோய்க்குபிந்தையஉலகில்அபிவிருத்திசெய்வதற்கானஉரிமையைநிறைவேற்றுவதற்காககடன்நிவாரணம்மற்றும்நேரடிமுதலீடுகளுக்குஅழைப்புவிடுப்பதன்மூலம்,
உயர்ஸ்தானிகர்தனதுபுதுப்பிக்கப்பட்டதகவல்களில்இந்தத்தேவையைஎடுத்துரைத்துள்ளார்என்பதைநாங்கள்பாராட்டுகின்றோம்.
பிராந்தியமட்டத்தில், தொற்றுநோய்தொடர்பானசவால்களுக்குஉதவுவதற்காகபிராந்தியஒத்துழைப்புக்கானதெற்காசியசங்கத்தின்கோவிட்-19
அவசரநிதிக்குஇலங்கை5 மில்லியன்அமெரிக்கடொலர்களைவழங்கியுள்ளது.
தலைவர்அவர்களே,
கோவிட்-19 தொற்றுநோய்உலகில்ஒருபுவியியல்பகுதியிலிருந்துஇன்னொருஇடத்திற்குநகரும்போது, நமதுஉலகளாவியநிலப்பரப்பில்நிலவுகின்ற,
பெரும்பாலும்தொற்றுநோயின்விளைவுகளால்அதிகரிக்கும்தனிநிலையானஏற்றத்தாழ்வுகளைநாம்அதிகளவில்நினைவுபடுத்துகின்றோம்.
இந்தசபைஉட்படஐக்கியநாடுகள்தாபனம்இந்தஏற்றத்தாழ்வுகளைநிவர்த்திசெய்வதிலும், கோவிட்-19
நெருக்கடியைசமாளிப்பதற்கானஉலகளாவியமுயற்சிகளில்உண்மையில்எவரும்பின்வாங்காமலிருப்பதைஉறுதிசெய்வதிலும்முக்கியபங்குவகிக்கின்றது.
இந்தநோக்கத்தைஅடையசர்வதேசசமூகங்களிடையேஉண்மையானஉரையாடலும்ஒத்துழைப்பும்முக்கியம்எனஇலங்கைநம்பும்அதேவேளையில், இந்தமுடிவைநோக்கிதனதுஅனுபவங்களையும்,
சிறந்தநடைமுறைகளையும்பகிர்ந்துகொள்வதற்காகசகநாடுகளுடன்ஒற்றுமையுடன்செயற்படவும்நாம்தயாராகஇருக்கின்றோம்.
தலைவர்அவர்களே,
இலங்கைதொடர்பான30/1 தீர்மானம் (இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்குமசிடோனியாமற்றும்மொண்டினீக்ரோ) குறித்தமையக்குழுவினால்செவ்வாய்க்கிழமை (ஜூன்30)
வெளிப்படுத்தப்பட்டகருத்துக்கள்குறித்துகுறிப்பிடுகையில், 30/1 தீர்மானத்தின்இணைஅனுசரணையிலிருந்துவிலகியுள்ளபோதிலும், அரசாங்கத்தின்கொள்கைக்கட்டமைப்பிற்குஏற்ப,
இலங்கைஅரசியலமைப்பின்கட்டமைப்பிற்குள்நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்மற்றும்மனிதஉரிமைகள்ஆகியவற்றைஉள்நாட்டில்வடிவமைக்கப்பட்டமற்றும்செயற்படுத்தப்பட்டசெயன்முறையின்
மூலம்அடைந்துகொள்வதற்குஉறுதிபூண்டுள்ளதுஎன்பதைஇலங்கைஅரசாங்கம்தெளிவுபடுத்தியுள்ளது.
நான்கரைஆண்டுகளுக்கும்மேலாகஉண்மையானநல்லிணக்கத்தைவழங்கத்தவறியவெளிப்புறமாகஇயக்கப்படும்ஒருகட்டமைப்பைத்தொடரவிரும்புவதற்குபதிலாக,
மக்கள்ஆணையால்ஆதரிக்கப்படுவதும், இலங்கைமற்றும்அதன்மக்களின்நலனுக்கானதுமானநாட்டிலுள்ளயதார்த்தங்களைஅங்கீகரிக்குமாறும்,
நல்லிணக்கத்தைவழங்கக்கூடியநடவடிக்கைகளில்கவனம்செலுத்தும்இந்தஅணுகுமுறையைப்பாராட்டுமாறும்அனைத்துதரப்பினரையும்மீண்டும்கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதியாக, ஐ.நா. மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகம், ஐ.நா.
மனிதஉரிமைகள்பொறிமுறையுடன்இலங்கைஅரசாங்கம்தொடர்ந்தும்ஈடுபடுவதோடு,
உள்நாட்டுமுன்னுரிமைகள்மற்றும்கொள்கைகளுக்குஅமைய, பரஸ்பரம்ஒப்புக்கொள்ளப்பட்டபகுதிகளில்திறன்அபிவிருத்திமற்று
ம்தொழில்நுட்பஉதவிகளினூடாகசர்வதேசசமூகத்துடன்நெருக்கமானஒத்துழைப்புடன்செயற்படுகின்றது.
இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்
இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்
குடும்ப தகராறு காரணமாக கணவனால் அவரது மனைவி பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் பன்னல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெல்பல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) இடம்பெறவுள்ளது.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பன்னல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடவத்தை மங்கட வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மங்கடபார வயல் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலையினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி
மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி
மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடம் இருந்து வேளாண்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார
வேலியின் சிக்கி வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா, 7 பிள்ளைகளின் தந்தையான
51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சம்பவ தினமான நேற்று இரவு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வயல் பகுதியில் யானைக்காக சட்டவிரோதமாக மின்சார வேலியை வோளாண்மை உரிமையாளர்கள் அமைத்துள்ளனர்.
இந்த மின்சார வேலியில் சிக்குண்டு இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் பிரேத
பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.









