Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் கந்தக்காடு புனர்வாழ்வு

மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ

தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      இந்திய ரிசேர்வ் வங்கியினால், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

      இந்திய ரிசேர்வ் வங்கியினால், இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

      இலங்கை மத்திய வங்கிக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றலை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களில் இந்திய ரிசேர்வ் வங்கி கைச்சாத்திட்டுள்ளது.

      இந்த பரஸ்பர நாணய பரிமாற்றல் 2022 நவம்பர் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

      1. இந்த பரஸ்பர நாணய பரிமாற்றல் குறித்த தகவல்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு
      2. வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 14 ஆம் திகதி
      3. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்‌ஷ்மன் அவர்களுடன் பிரதி உயர் ஸ்தானிகர்
      4. வினோத் கே ஜேக்கப் அவர்கள் பரஸ்பர நாணய பரிமாற்றம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
      5. பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இலங்கையுடன்
      6. சுமூகமான இருதரப்பு பேச்சுக்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது. ஜூலை 22 ஆம் திகதி இலங்கையின் இருதரப்பு கடன் மீள்கொடுப்பனவினை ஒழுங்கமைக்கும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுக்களை
      7. இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த்து.
      8. கொவிட் 19 காரணமாக மேலெழும் சவால்களை முறியடித்தல், பொருளாதார விவகாரம் மற்றும் இலங்கை இந்திய நட்புறவின்
      9. பரஸ்பர நலன்கள் உள்ளிட்ட பரஸ்பரம் நன்மை தரும் விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்ற
      10. தலைமைத்துவங்களின் வினைத்திறன் மிக்க ஈடுபாடு அவசியம் என்பதை இந்த நேர்மறையான அபிவிருத்திகள் காண்பிக்கின்றன
          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு

          இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு

          இலங்கையில் கொரனோ எண்ணிக்கை நோயாளர்கள் தொற்று தற்போது அதிகரித்துள்ளது


          புதிதாக நால்வர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

          உலகில் இலங்கையில் மட்டுமே இதுவரை 11 பேர் மட்டும் பலியான சாதனை இடம் பெற்றுள்ளது

          சிங்கள இனவாத அரசு மக்கள் பலி எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் ,மக்கள் நோய் தொற்றை மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              ஆயுத தொழிற்சாலை முற்றுகை – ஆயுதங்கள் மீட்பு

              ஆயுத தொழிற்சாலை முற்றுகை – ஆயுதங்கள் மீட்பு

              இலங்கை ருவன்வெல்ல பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத தொழ்ற்சாலை ஒன்று முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

              இங்கு உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் தயாரிக்க பட்டு வந்துள்ளமை கண்டறிய பட்டுள்ளது


              மேற்படி ஆயுத தொழிற்சாலையில் ஆயுதம் தயாரித்த நபர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

              காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              ஆயுத தொழ்ற்சாலை முற்றுகை
              ஆயுத தொழ்ற்சாலை முற்றுகை
                  Posted in இலங்கை செய்திகள்

                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு

                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு

                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.

                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்
                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு

                  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு

                  தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின்

                  அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

                  இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த

                  இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட

                  வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.

                  இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.

                  இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

                  போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்
                  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்
                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் -முன்னாள் பெண் போராளிக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

                      யாழில் -முன்னாள் பெண் போராளிக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

                      யாழ் வல்லிபுர பகுதியில், சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட டுவுவுநு பயங்கரவாத அமைப்பின் மாலதி படைப் பிரிவின்

                      முன்னாள் போராளிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கு உதவியுள்ளது

                      யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவின் வழிக்காட்டலின் கீழ் நன்கொடையாளரான திரு

                      குமார வீரசூரியவின் நன்கொடை நிதியுதவியுடன் இந்த வீட்டின் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

                      முன்னாள் பெண் போராளியான திருமதி சிவரஞ்சன் நந்தனிக்கு வசிப்பதற்கு வீடில்லா குறையை அவதானித்து இவருக்கு உதவும்

                      முகமாக இராணுவத்தினரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                      55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேஹொடவின் வழிக்காட்டலின் கீழ் 551 ஆவது படைத்

                      தலைமையகத்தின் கண்காணிப்பின் கீழ் 16 ஆவது டுiபாவ ஐகெயவெசல (ளுடுடுஐ) காலாட் படையணியினால் இந்த வீட்டை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

                      இம்மாதம் (20) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் நன்கொடையாளரான திரு

                      குமார வீரசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் இந்த புதிய வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.


                      இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் படையினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

                      யாழில் -முன்னாள் பெண்
                      யாழில் -முன்னாள் பெண்
                          Posted in இலங்கை செய்திகள்

                          மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நபர் கண்டுபிடிப்பு

                          மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய நபர் கண்டுபிடிப்பு

                          முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

                          வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

                          பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அந்நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


                          திருகோணமலையைச் சேர்ந்த 41 வயதான இவர் இன்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

                          சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவரது நிழற்படம் மற்றும் தகவல்களை பொலிஸார் பகிரங்கப்படுத்தியிருந்தனர்.

                          இவர் கொழும்பு பிரதான வீதிக்கு எப்படி வந்தார் என்பது பற்றி தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திலிருந்து வெலிகந்த கொரோனா வைத்தியசாலைக்கு

                          கடந்த 9ஆம் திகதி அழைத்துவரப்பட்டார். அதன் பின்னர் 15ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

                          சந்தேகநபரை வைத்தியசாலைக்கு அருகில் அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை கந்தக்காடு தொற்றொதுக்கல் மத்திய நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வவுனியால் இளம் தமிழ் பெண் மாயம் – தேடும் குடும்பம்

                              வவுனியால் இளம் தமிழ் பெண் மாயம் – தேடும் குடும்பம்

                              வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர்

                              வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்

                              வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) 4 பிள்ளைகளின்

                              தாயான 31வயதுடைய கிரிதரன் வக்சலா (சுரேக்கா) கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

                              அன்றைய தினம் மாலையாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை அதனையடுத்து அவரின் கணவரினால்

                              மனைவியை காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                              தாயாரை காணாது அவரின் மூன்று பிள்ளைகளும் தவிர்த்து வருவதுடன் சாப்பாட்டினையும் தவிர்த்து சோகத்தில் நிற்கின்றனர்.

                              காணாமல் போன குறித்த பெண்ணின் இடது பக்க கண்ணத்தில் கருப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவரின் இறுதியாக

                              சென்ற சமயத்தில் நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற சுடிதார் காலும் அணிந்துள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

                              இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழேயுள்ள இலத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கவும்.

                              கிரிதரன் – 0775255861

                              மோகன் – 0766327556

                              முகிசன் – 0778899787

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளும் வெற்றி- இராணுவ தளபதி

                              கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள சகல நடவடிக்கைகளும் வெற்றி- இராணுவ தளபதி

                              கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி அளித்துள்ளதாக

                              இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிததார்.

                              நேற்றைய தினம் (24) கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியிலிருந்து ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற

                              கைது செய்யப்பட்டுள்ளார். இந் நபர் பயணித்த முச்சக்கர வண்டி சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

                              இதேவேளை, அயல் நாடுகளிலிருந்து எவருக்கும் கடல் வழி மூலமாக இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.

                              இவ்வாறான வருவோரை தடுப்பதற்காக கடற்படையும் இராணுவமும் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை

                              நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிததார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  திடீரென பற்றி எறிந்த பேரூந்து – பயணிகள் கதறல்

                                  திடீரென பற்றி எறிந்த பேரூந்து – பயணிகள் கதறல்

                                  கண்டி, தெல்தெனிய பகுதியில் அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

                                  நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் கண்டி மாநகர சபையின்

                                  தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.

                                  தீப்பரவல் காரணமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம்

                                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம்

                                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இன்று

                                      (25) காலை 8.30 மணியளவில் மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

                                      மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஜுன் மாதம் 7 ஆம் திகதி

                                      உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

                                      நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

                                      இந்த நிலையில் குறித்த பஸ் நிலையத்தில் அரச தனியார் பேருந்து சேவைகள் வைபவ ரீதியாக இடம் பெறும் வகையில் இன்றைய

                                      தினம் காலை 8.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் அவர்களினால் உத்தியோக பூர்வாமாக கையளிக்கப்பட்டது.

                                      குறித்த நிகழ்வில் தனியார் பேருந்து சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட போதும் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          கொழும்பில் நபர் தீக்குளித்து தற்கொலை – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                                          கொழும்பில் நபர் தீக்குளித்து தற்கொலை – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                                          இலங்கை வெலிக்கடை பகுதியில் இளம் நபர் ஒருவர் தனக்கு தானே தீமூட்டி

                                          தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
                                          எனினும்

                                          இது முறையான தற்கொலை தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது ,மேற்படி மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                          இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் இந்திய நபர் ஒருவர் வீட்டி,ல் தூக்கு

                                          மாட்டி தற்கொலை புரிந்துள்ளார் ,இதுவும் தற்கொலை என்றே கூறப்படுகிறது

                                          தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான மரணங்களின் பின்புலத்தில் மர்ம கொலையாளிகள் உள்ளதாக நம்ப படுகிறது

                                          கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவ்விதமான மர்ம கொலைகள் தொடராக இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்

                                              மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் – தேடும் பொலிஸ்

                                              இலங்கையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த

                                              கைதி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்

                                              போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் சிகிச்ச்சை பெற்று வந்த நபரே இவ்விதம் தப்பி ஓடியுள்ளதாக போலீசாரை தெரிவித்துள்ளனர்

                                              இவரை கண்ணுற்றால் தங்களுக்கு அறியத்தரும்படி போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

                                                  மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

                                                  ஜனாதிபதி அவர்களின் கைகளை பலப்படுத்துவதுடன், நாட்டை புதிய திசையில் முன்கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை

                                                  வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் உறுதியளித்தனர்.

                                                  பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் பிற்பகல் கம்பஹா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை

                                                  மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இம்முறை பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய தருணம்

                                                  என்பதால் பாராளுமன்றத்தில் பலமான சக்தியை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவது மக்களின் பொறுப்பு என கம்பஹா மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.

                                                  ராகம புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதம் நிறுத்தாமல் செல்வதால் அலுவலக ஊழியர்கள் பல இன்னல்களுக்கு

                                                  முகங்கொடுத்து வருகின்றனர் அது பற்றி அவதானம் செலுத்துமாறு ராகமை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அவர்களிடம் கூடியிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

                                                  வேட்பாளர் மதுமாதவ அரவிந்த ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். கடலரிப்பு உஸ்செட்டகெய்யாவ பிரதேசத்தின் நாளாந்த மீன்பிடி தொழிலுக்கு

                                                  பாரிய சவாலாக உள்ளது. மீன்பிடி இறங்குதுறை ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் அப்பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியுமென மீனவர்கள் சிலர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

                                                  வேட்பாளர் நிமல் லன்சா வத்தளை நாயகந்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். அனுமதியின்றி இடம்பெறும் மணல் அகழ்வினால் பிரதேசத்தின் மீனவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

                                                  வேட்பாளர் மெரலி பெரேரா ஜா எலயிலும் வேட்பாளர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கட்டான கே.சி.த சில்வா விவசாய மத்திய நிலையத்திற்கு முன்னாலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள், கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடினார்.

                                                  வேட்பாளர் இந்திக்க அனுருத்த திவுலபிட்டிய நகர மத்தியிலும் வேட்பாளர் கோகிலா ஹர்ஷனி மீரிகம பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள பொது விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு கூடியிருந்த மக்கள் அமோக வரவேற்பளித்தனர். மீரிகமை அபிவிருத்தித்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றை திருமதி. கோகிலா ஹர்ஷனி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

                                                  பாரம்பரிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களான தாம், ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை கொண்டிருப்பதால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சிலர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

                                                  மாபெரும் வெற்றியை
                                                  மாபெரும் வெற்றியை
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

                                                      வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

                                                      இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக இராணுவ மருத்துவ முதுமாணி கற்கை நெறிஆரம்பம்

                                                      நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தும்

                                                      செயற்பாடுகளிலும் இராணுவ மருத்துவ குழுக்கள் முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை

                                                      வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

                                                      நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (ஜூலைஇ23) இடம்பெற்ற இராணுவ மருத்துவக் கல்லூரியின் இராணுவ மருத்துவத்துறை

                                                      முதுமானி கற்கை நெறி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                                                      யுத்தத்தின் போது காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்கி அவர்களின் உயிர்களை பாதுகாத்தன் ஊடாக முப்படைகளின் மருத்துவ குழுக்கள் தமது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளனர்

                                                      என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளின் போது இராணுவத்தினரே முதலில் நின்று பணியாற்றுபவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                                      ‘அது ஒரு களப் போராகவே அல்லது எந்தவொரு அனர்த்தமாக இருந்தாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சேவையை வழங்குபவர்கள் இராணுவ மருத்துவர்கள்; இராணுவ வீரர்களோ

                                                      அல்லது சிவிலியனோ அது யாராக இருந்தாலும் சரி ஆரம்பம் முதல் இறுதிவரை தமது சேவையை வழங்குபவர்களாக இராணுவ மருத்துவ பிரிவினர் திகழ்கின்றனர் ‘ என்று அவர் கூறினார்.

                                                      இராணுவ மருத்துவர்களால் வழங்கப்படும் சேவையின் வகிபாகமானது அரச பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதுடன் இதன்மூலம்

                                                      எந்தவொரு வழக்கமான அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

                                                      இங்கு சிறப்புரையாற்றிய செயலாளர் ஐக்கிய நாடுகளின் பணிகளில் ஈடுபடுவதற்கு இராணுவ மருத்துவ பணியாளர்கள்

                                                      தேவை எனவும் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாட்டவர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை அது வழங்கும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

                                                      ‘அங்கீகாரம் கிடைத்தவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலிருந்து பங்கேற்பாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு பன்னாட்டு அமைப்பாக எமக்கு இதை மேம்படுத்த முடியும் எனவும் அவர்களின்

                                                      சேவைகள் தேவைப்படும் எந்தவொரு நிலையிலும் அவர்களுக்கு சேவை வழங்கும் அதே வேளை சிறந்த கல்விப் பின்னணியுடன் அவர்களை சேவையில் ஈடுபடுத்துவது அதன் தேவையாக உள்ளது.’

                                                      எனவும் தெரிவித்தார் மேலும் இராணுவ மருத்துவ துறையில் முதுமானி கற்கை நெறி திட்டத்தை அறிமுகப்படுத்தும் மருத்துவ கல்லூரியை இதன்போது பாராட்டினார்.

                                                      முப்படைகளை சேர்ந்த மருத்துவத் துறையின் இளம் தலைமுறையினர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதம் ஏந்தும் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள். தொற்றுநோய்கள் போன்ற முக்கியமான

                                                      சூழ்நிலைகளின் போது அதனை எதிர்த்துப் போராடுவதற்கான பரந்த அளவிலான அறிவை வளர்ப்பதற்கு இப்புதிய கற்கை நெறித்திட்டம் பங்களிப்பு வழங்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.

                                                      சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இக்கற்கைநெறி போர், மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்து ஆகியன முப்படை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதுடன், இராணுவ நெறிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், பேர் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இராணுவ உளவியல் போன்ற பாடநெறிகள் இலங்கை இராணுவத்தினாலும் விமான போக்குவரத்து பாடநெறி விமானப்படையினாலும், சுழியோடல் மற்றும் ஹைபர்பாரிக் மருத்துவம் பாடநெறிகள் கடற்படையினராலும் மேற்கொள்ளப்படும்.

                                                      இராணுவ மருத்துவ கற்கை நெறியை அறிமுகப்படுத்தியதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுமாணி மருத்துவ கற்கை நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

                                                      இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, உயர்கல்வி தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுரா திசாநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன, மருத்துவ முதுமாணி கற்கை நிலைய பணிப்பாளர் பேராசிரியர் செனக ராஜபக்ஷ, சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் மருத்துவ முதுமாணி கற்கை நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      வாகன விபத்துக்களை தடுப்பதற்கு மீண்டும் வாகன சாரதி புள்ளி முறை- புதிய நடைமுறை சட்டம்

                                                      வாகன விபத்துக்களை தடுப்பதற்கு மீண்டும் வாகன சாரதி புள்ளி முறை- புதிய நடைமுறை சட்டம்

                                                      நுகேகொடை மேம்பாலத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கவனம் செலுத்தும் பொழுது சமீப காலத்தில்

                                                      இடம்பெற்ற வீதி விபத்துக்கள் பெரும்பாலானவற்றுக்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம் என்பது தெரியவந்தது.

                                                      வீதி விபத்துக்களை தடுப்பதற்காக சட்டம் கடுமையாக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

                                                      இந்த விடயங்கள் தொடர்பில் நேற்றைய தினம் எரிபொருள் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது

                                                      போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்பாக தெரிவிக்கையில் பல

                                                      வருடங்களாக இது தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

                                                      வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை

                                                      மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

                                                      தினமும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின்

                                                      அனுமதிப்பத்திரங்களுக்கு பூச்சியத்திலிருந்து 24 வரை புள்ளிகளை வழங்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

                                                      இந்நடைமுறையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் 24 இலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த புள்ளிகள் குறைக்கப்படும்.

                                                      இம்முறையின் கீழ், புள்ளிகள் குறையும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும்

                                                      போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          புலிகளை தோற்கடிக்க உதவிய பாகிஸ்தான் – பாதுகாப்பு மந்திரி

                                                          புலிகளை தோற்கடிக்க உதவிய பாகிஸ்தான் – பாதுகாப்பு மந்திரி

                                                          இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு – இராணுவ உதவிகள் தொடர்பாக பேச்சு

                                                          இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் கல்வி, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டதன் காரணமாக இரு

                                                          நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு என்பன நாளுக்கு நாள் வலுவடைந்து செல்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

                                                          யுத்த சமயத்தில் இலங்கை முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின் போது பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட

                                                          ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டிய பாதுகப்பு செயலாளர், புலிகளை தோற்கடிக்கும் கடுமையான போர் நடவடிக்கையின் போதும் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் வலுவாக காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

                                                          நீண்ட தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக சுமத்திய சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பினை ஒருபோதும் மறக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

                                                          ‘ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்’ எனும் கூற்றுக்கு அமைய இலங்கை பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்த சமயத்தில் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட பங்களிப்பினை இலங்கையர்கள் என்ற வகையில் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்’ என அவர் வலியுறுத்தினார்.

                                                          இலங்கையும் பாகிஸ்தானும் தமது உறவுகளை மிகவும் ஆரோக்கியமாக பேணி வருவதாகவும் இந்த உறவுகள் அன்று முதல் இன்று வரை வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

                                                          பாகிஸ்தானின் குவெட்டா நகரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘நூற்றாண்டு பதக்கங்கள்’ வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                                          இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று காலை மாகொல, படலந்தவில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் இடம் பெற்றது.

                                                          இந்த நிகழ்வின் வரவேற்புரை, 2015 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் மாணவ அதிகாரியாக பயிற்சி பெற்றவரும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய பாதுகாப்பு ஆலோசகருமான கேர்ணல் சஜ்ஜாத் அலியினால் நிகழ்த்தப்பட்டது.

                                                          குவெட்டா நகரில் உள்ள பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்நிகழ்வின்போது ‘நூற்றாண்டு பதக்கங்கள்’ வழங்கிவைக்கப்பட்டன.

                                                          பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற இலங்கை பட்டதாரிகளில், 10 அதிகாரிகள் தற்போதும் சேவையில் உள்ளதுடன் ஏனைய 27 அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர்.

                                                          இந்த பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் பழைய மாணவ அதிகாரிகளில் ஒருவரான பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிற்கு பாக்கிஸ்தான் இஸ்லாமிய

                                                          குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக்கினால் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

                                                          2000 ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் குணரத்ன, பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கற்கை நெறியை தொடர்ந்த வேளையில்

                                                          தற்போதைய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் குவெட்டா பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் கட்டளை பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.

                                                          1960-2005 வரை பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியில் பட்டம் பெற்ற 37 இலங்கை அதிகாரிகளுக்கு இந்த பதக்கங்களை பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.

                                                          இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ள அதேசமயம், பதக்கங்கள் பெற்றவர்கள் சார்பில் இலங்கை அரசாங்கம், பாகிஸ்தான் அரசு,

                                                          பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மற்றும் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த உயர் ஸ்தானிகராலயம் அதிகாரிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.

                                                          1905 ஆம் ஆண்டில் குவெட்டாவில் ஸ்தாபிக்கப்பட்ட பாகிஸ்தான் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள் கல்லூரி பாகிஸ்தான் இராணுவத்தின் பழமைவாய்ந்ததும் பெருமைக்குரியதுமான ஒரு கல்லூரி ஆகும்.

                                                          பீல்ட் மார்ஷல்ஸ்களான ஆர்க்கி போல்ட் வேவல், பெர்னார்ட் மோண்ட்கோமெரி, சர் கிளாட் ஆச்சின்லெக் மற்றும் வில்லியம் ஸ்லிம் (இங்கிலாந்து), பிளார்னி (அவுஸ்திரேலியா), அயூப் கான்

                                                          (பாகிஸ்தான்) மற்றும் சாம் மானேக்ஷோ (இந்தியா) உள்ளிட்ட பல புகழ்பெற்ற இராணுவ இந்தக் கல்லூரியில் கற்று வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                          உலக இராணுவ மரபுகளுக்கு அமைய 1960 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்த கல்லூரியில் பயில சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

                                                          அன்றிலிருந்து இன்றுவரை குறித்த பாதுகாப்பு கல்லூரியில் பயின்ற இலங்கை மாணவர்கள் நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை நிறைவு

                                                          செய்ய தமது பங்களிப்பை வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

                                                          வருடாந்தம் வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு அமைய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு வந்ததாகவும் எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் உள்ள

                                                          பாதுகாப்பு கல்லூரிகளில் மேலும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

                                                          இந்த நிகழ்வில், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும், இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல்

                                                          சுமங்கல டயஸ், படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

                                                          புலிகளை தோற்கடிக்க
                                                          புலிகளை தோற்கடிக்க
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

                                                          இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா

                                                          இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                                                          ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே இவ்வாறு

                                                          கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

                                                          அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

                                                          அதன்படி, நாட்டின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2752 ஆக அதிகரித்துள்ளது.

                                                          இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2064 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

                                                          இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 677 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          தாய்லாந்தில் தொழில் வாய்ப்பு மோசடி செய்தவர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு

                                                          தாய்லாந்தில் தொழில் வாய்ப்பு மோசடி செய்தவர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு

                                                          தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக இணையத்தளத்தின் ஊடாக விளம்பரத்தை வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்டமை

                                                          தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

                                                          தாய்லாந்தில் பாதுகாப்பு சேவையில் உள்ள தொழில் வாய்ப்புக்காக நபர்களை தெரிவு செய்து அந்த தொழில் வாய்ப்புக்காக பணத்தை செலுத்திய பின்னர் குறிப்பிட்ட வகையில் தொழில்வாய்ப்பை

                                                          பெற்றுக்கொடுக்கவில்லை என்று சிலர் முறைப்பாடு செய்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

                                                          இது தொடர்பாக தாய்லாந்தில் இலங்கை தூதரகத்தில் விடயங்கள் கண்டறியப்பட்டன. இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் இவ்வாறான தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இல்லை என்று தூதரகத்தினால்

                                                          உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு

                                                          எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பணியகத்தினால் இந்த முறைப்பாடு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                                                          வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டு சில மோசடிகாரர்கள் நாட்டில் முக்கிய ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதுடன் அதற்காக பணத்தை செலுத்தி தொழில் வாய்ப்பு கிடைக்காதவர்கள்

                                                          தொடர்பான தகவல்கள் அடிக்கடி வெளியாகின்றன. இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு எதிராக பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இந்திய – இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நெருக்கம்

                                                          இந்திய – இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு நெருக்கம்

                                                          இலங்கை மற்றும் இந்திய நாடுகளிடையிலுமான நிரப்பு பொருளாதார பலத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பொருளாதார பாதுகாப்பினை சமநிலைப்படுத்தும் வகையில் எதிர்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய நிலை தோற்றுவித்திருப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

                                                          இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல்

                                                          “இந்தியா இலங்கை இடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல்” என்ற தலைப்பில் 2020 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் உரை நிகழ்த்தினார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கை நெறிகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையம் (LKIIRSS) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்க சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த மெய்நிகர் கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

                                                          1. வெளிவிவகார அமைச்சின் செயலர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் FICCI தலைவர் டாக்டர்.சங்கிதா ரெட்டி ஆகியோர் FICCI மற்றும் LKIIRSS ஆகிய நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகள் என்ற அடிப்படையில் கலந்துகொண்டிருந்த அதே சமயம் இலங்கை முதலீட்டுச் சபை, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம், மற்றும் நனோ தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.
                                                          2. இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பரந்த உறவு குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்த அதேசமயம் கொவிட் 19 நோய் காரணமாக முன்னொருபோதும் இல்லாதவகையில் ஏற்பட்டுள்ள சவால்களை வினைத்திறனுடனும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்கு தேவையான இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் விரிவாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளிடையிலுமான நிரப்பு பொருளாதார பலத்தினை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான பொருளாதார பாதுகாப்பினை சமநிலைப்படுத்தும் வகையில் எதிர்காலத்துக்கான கொள்கைகளை வகுக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய நிலை தோற்றுவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
                                                          3. உட்கட்டமைப்பு, சக்தி வலு, தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், உற்பத்தி, மருந்து துறை, சுற்றுலாத்துறை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சிறந்த முறையில் ஒத்துழைப்பினை மேற்கொள்ளமுடியும் எனவும் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் சுட்டிக்காட்டினார். இந்த துறைகளிலும் பரஸ்பரம் நன்மை தரக்கூடிய ஏனைய துறைகளிலும் ஸ்திரமான ஈடுபாடு எதிர்பார்க்கக்கூடியதும் உறுதியானதுமான கொள்கைத் தோற்றப்பாடுகளின் உந்துதலுடனான வளமான சூழலை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். அது மட்டுமல்லாமல் வர்த்தக ரீதியிலான வலுவான உறவைக் கொண்டிருக்கும் இரு நாடுகளிடையில் பரந்தளவிலான நீண்டகால உறவினை கட்டி எழுப்புவது ஆளுமை விருத்தி, வேலை வாய்ப்பு மேம்பாடு மற்றும் சிறப்பான எதிர்காலம் ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
                                                          4. கொவிட் 19 காரணமாக ஏற்பட்டிருக்கும் சகல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார மீட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக இங்கு கருத்துக்களை தெரிவித்திருந்த வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க, எதிர்காலத்தினை வடிவமைப்பதற்கான தற்போதைய ஒத்துழைப்புக்கள் மற்றும் கடந்தகால வெற்றிகளில் இரு தரப்பும் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் தொடர்பாகவும் சுட்டிக் காட்டினார்.
                                                          5. மருந்துத்துறை, விவசாயம், உற்பத்தி துறை, தொடர்பாடல், சுற்றுலாத்துறை மற்றும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆகிய துறைகளில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இரு தரப்பையும் சார்ந்த துறைசார் நிபுணர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தனர். அத்துடன் துறை சார் செயல் புள்ளிகள் உரிய முறையில் பின்பற்றப்படுமெனவும் இந்த கருத்தரங்கில் இணங்கப்பட்டது.