Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இரு குழு மோதலில் – ஒருவர் பலி
இரு குழு மோதலில் – ஒருவர் பலி
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிவிதிகல – கிரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில் நேற்று (11) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒருவரைத் தள்ளும் போது தவறி விழுந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கீழ் நிவித்திகல, கிரிமடுவ லைம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற
வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர்
இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
வெலிக்கடை சிறைச்சாலை மோதல்
வெலிக்கடை சிறைச்சாலை மோதல்
கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற
துப்பாக்கிச்சூட்டில் கைதிகள்உயிரிழந்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(12) அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 6ஆம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில், இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன
ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
இந்தப் சம்பவம் தொடர்பில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ்
பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.
பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு
பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு
இலங்கை பொரளை Borella All Saints’ Church premises தேவாலய பகுதியில் கைவிட ப்பட்ட நிலையில்
கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த குண்டை வெடிக்க செய்திடும் முகமாக நபர் ஒருவர் அங்கு எடுத்து வந்திருந்ததாக
இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
கைது செய்வ பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கைக்குள் நுழைந்த மர்ம நபர் கைது
இலங்கைக்குள் நுழைந்த மர்ம நபர் கைது
பிரான்சில் இருந்து இலங்கைக்குள் அபுதாபிவழியாக போலி கடவுசீட்டில் நுழைந்த நபர் ஒருவர்
இலங்கை பண்டாரநாயக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுளளார்
இவ்விதம் நுழைந்தகவர் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண்
மாடியில் இருந்து குதித்த பெண்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
46 வயதுடைய பெண் ஒருவரே இன்று(11) அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் எச்சரிக்கை
அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் எச்சரிக்கை
அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்கள், நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களுக்கு
கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய அரசியல்வாதிகள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த
அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.
எனவே, அரசியல்வாதிகள் மக்களை ஒன்று கூட்டுவரை தவிர்த்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல்வாதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அநாவசியமான அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு
பாதிப்பு ஏற்படுத்தாக ஒன்று கூடல்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி
.ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி
ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளன..
இதன்படி, எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளிலும் காலை 8.30 முதல் மாலை 3.30 வரை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்
அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
சந்தையில் போதுமான அரிசியின் தேவையை உறுதி செய்யும் வகையில் அரிசி இறக்குமதி
செய்யப்படுகின்றது என்று தெரிவித்த அமைச்சர், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இதுதொடர்பான அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு: வருமாறு:
- நியாயமான விலையில் அரிசியை விநியோகிப்பதற்காக அரிசி இறக்குமதி செய்தல்
திறந்த சந்தையில் போதுமானளவு அரிசித் தொகை பேணுவதை உறுதி செய்வதற்காக 200,000 மெட்ரிக்தொன் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிகளுக்கு பதிலீடாக புசு GR Short Grain Rice வகை
அரிசி 100,000 மெட்ரிக் தொன்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்
அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி
தொடர்பான விடயங்களை பார்வையிடுவதற்காக இன்று (10) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
உயர்ஸ்தானிகர் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்பான அபிவிருத்தி விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்ததுடன் புராதன சுற்றுலாத் தளமாகிய டச்சுக் கோட்டையினையும் பார்வையிட்டார்.
டச்சுக் கோட்டையின் 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் ளு4ஐபு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும்
மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் பொது நூலகத்தின் மேல் தளத்தில் இலத்திரனியல்
வாசிகசாலை ஒன்றை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அரசாங்க அதிபர் உயரிஸ்தானிகரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்
கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்
முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்
தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்
தமிழர் தாயாக பகுதிகளை இலக்கு வைத்து சீன நிறுவனம் நிறுவ படுகிறது ,இந்த நிறுவனம்
தமிழர்கள் வாழ் வாதாரத்தை பெருக்குவதாக கூறி கொண்டு அங்கு தனது அகல கால் பாதிப்பை நிலை நாட்டை முயல்கிறது
இதற்கு ,கோட்டா ,மகிந்தாவுக்கு பல கோடி லஞ்சமாக வழங்க பட்டுள்ளதாக செய்திகளும் கசிகிறது
நாட்டில் விலைவாசிகளை உயர்த்தியும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடக
இந்த நிறுவனங்களை அங்கு அகல கால் ஊன்ற வைக்கும் நகர்வு முன்னெடுக்க பட்டுள்ளது
கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது
கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது
தினமும் மதுபோதையில் வந்து தகராறை ஏற்படுத்தும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக் கொன்ற சந்தேகநபர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவியும் மாமியாருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
35 வயதுடைய நபரே இவ்வாறு அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.
இதன்போதே, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றியுள்ளதுடன், தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று (9) இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்
பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து
ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி
விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
இலங்கை வந்தடைந்துள்ள சீனாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இலங்கை அதிபர்
கோட்டாபாயாவும் சந்தித்து பேசியுள்ளார்
இந்த சந்திப்பின் பொழுது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பபு அபிவிருத்தி தொட்ரபில்
கலந்துரையாட பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது
முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்
முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில்
கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில்
புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து
முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு
இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கணவனை வெட்டி கொன்ற மனைவி
கணவனை வெட்டி கொன்ற மனைவி
மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி
இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி
இலங்கை ஒரு கிலோ அசிசி தற்போது 160 முதல் 180 ரூபா வரை விற்க படுகிறது ,இதனால் மக்கள்
மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென அதிஅக்ரித நிலையில் ஆளும்
ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடு கோபத்தில் உறைந்துள்ளனர்
சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு
சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு
இலங்கை வந்தடைந்த சீன வெளிநாட்டது அமைச்சர் பிரதமர் மகிந்தவுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார்
இரு நாடுகளின் பாதுகாப்பபு மாற்று பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இந்த பேச்சு
இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 13 பேர்
பலியாகியுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இவர்கள் வெளியிடும் இழப்புக்களை விட அதிக மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக
சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன














