துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள் ,கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காலமான மாவை சேனாதிராஜா
Posted in இலங்கை செய்திகள்

காலமான மாவை சேனாதிராஜா

காலமான மாவை சேனாதிராஜா

காலமான மாவை சேனாதிராஜா ,யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த கால பகுதியில், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் வரை சிறையில் தனது வாழ் நாட்களை கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா தமன உறவுமுறை ‘பவானி’ என்பவரை திருமணம் செய்தார்.

மேலும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டு முதல் அவரின் இறப்பு வரையில் சுமார் 63 வருடங்கள் கட்சிக்காகவே வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மூத்த தலைவரான சேனாதிராஜா, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (29) காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

உயிரிழக்கும் போது மாவை சேனாதிராஜாவுக்கு வயது 82.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிறு அன்று மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் என்று அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற பிரவேசம்…

மாவை சேனாதிராஜா 1989 பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13 வதாக இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இதோபோல் 1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், த.வி.கூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001 தேர்தலில் த.தே.கூ சார்பாக யாழ். மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றம் சென்றார்.

அதேபோல் 2004, 2010, 2015 நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பர் இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1989 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ) – 2,820 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.
2000 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (தவிகூ ) – 10,965 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2001 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (தவிகூ) – 33,831 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2004 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் – (ததேகூ) – 38,783 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2010 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,501 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2015 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம் (ததேகூ) – 58,782 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்பட்டார்.
2020 பாராளுமன்றத் தேர்தல் – யாழ். மாவட்டம்- (ததேகூ) – 20,358 விருப்பு வாக்குகள் – தெரிவு செய்யப்படவில்லை.

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை

ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நாளை இடம்பெற உள்ளது.

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதன் தற்போது போலீசாரால் கைது .செய்யப்பட்டுள்ளார் .

இவர் அனுராதபுரம் பகுதியில் அவசரகால ஒலியை எழுப்பிய படி பயணித்தன காரணமாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

பெயர் மாற்றத்துடன் ஆள்மாறட்டம் செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

சாவகச்சேரியில் வைத்து கைது செய்ய பட்ட ,இவரது கைது ஒரு அரசியல் நாடகம் என்பதாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

எதிர் வரும் சித்திரை மாதம் இடம்பெறவுள்ள தேர்தலை மையப்படுத்திய ஒரு அனுதாப அலையை தேடவே இந்த ஒரு கைது நாடகம் அமைந்துள்ளது .

,இதில் இவர் மீதே பிழைகள் உள்ளது ,அவ்வாறான நிலையில் வெளிநாட்டு மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் நடவடிகையின் ஒன்றாக இவை காணப்படுகிறது .

இன்று வன்னி மைந்தன் டிக் டாக் பக்கத்தில் இது தொடர்பாக பல விடயங்கள் பேச படும் .வாருங்கள் கேளும் இவர்கள் நாடகங்களை கேளுங்கள் மக்களே .

தமிழர்கள் ஏமாற்ற பாடுவது தவிர்க்க பட வேண்டும் வசூல் ராஜாவின் வசூல் தடுக்க பட வேண்டும் என்பதே மக்கள் ஆவலாக உள்ளது குறிப்பிட தக்கது .

சிறைக்குள் ஐயா மாமியார் வீடு கொத்துரொட்டி சாப்பாட்டு கூலாக இருந்துவிட்டு யாலியாக வருவார் .

அழுகை ஒன்று அழுவார் ,அனுராவை திட்டுவார் பாருங்க ,திரைக்கதை வசனம் நடிப்பு பயிற்சி எல்லாம் கறுப்பு ஆடுகள் தான் …சாமியே சரணம் ஐயப்பா சரணம் …

இனி தங்கம் குலுங்கி குலுங்கி அழுவார் ,,பாருங்கோ ..சீரியல் கிளைமாக்ஸ் நடக்கும் .சீரியஸாக மக்கள் இருப்பினும் .கால கொடுமை சரவணா .

ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா
Posted in இலங்கை செய்திகள் வன்னி மைந்தன் உதவி

ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா

ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா

ஏழை குடும்பத்திற்கு புதிய மலச கூடம்| மகிழ்ச்சியில் குடும்பம் |நன்றி ரஞ்சன் அண்ணா, மட்டக்களப்பில் உள்ள வருகை காட்டுக்குள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு பிரான்சில் வசிக்கும் ரஞ்சன் அவர்கள் மலசல கூடம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளார் .

அதன் காணொளி காட்சிகள் கீழே .
உதவிய பிரான்ஸ் ரஞ்சன் அண்ணா அத்தொடர்பில் அந்த குடும்பம் என்ன சொல்லிறார்கள் என்பதை மக்களே பாருங்கள்.

video

மத்திய வங்கி விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

மத்திய வங்கி விசேட அறிவிப்பு,இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (OPR) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
Posted in இலங்கை செய்திகள்

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்


கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் ,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்று (28) இரவு ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நேற்று(28) அதிகாலை இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி இயங்கியதால் இருவர் காயமடைந்தனர்

காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது.

கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக

கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது,

கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம் ,தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய

மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,

“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.”

“இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.”

“அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க

தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.” என்றார்.

யாழில் ஐவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஐவர் கைது

யாழில் ஐவர் கைது

யாழில் ஐவர் கைது ,40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு

பணவாட்டம் குறித்து மத்திய வங்கி வௌியிட்ட அறிவிப்பு ,2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில்

ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல், பணவீக்கம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நேர்மறையாக மாறக்கூடும் எனவும் நடுத்தர காலத்தில் 5 சதவீத இலக்கை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை

சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக எமது யாழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி இவர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றம் இன்று (28) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இந்தப் புதிய அலுவலகத்திலிருந்தே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், அலுவலக திறப்பு விழா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்
Posted in இலங்கை செய்திகள்

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்

321 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் ,சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது

கேகாலை உப பொலிஸ் பரிசோதகர் கைது ,பொலிஸ் கெப் வண்டியை முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் நேற்று (27) வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேகநபர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கேகாலை மொலகொட பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆவார், இவர் கேகாலை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வருகிறார்.

சந்தேகநபர் கேகாலை பொலிஸ் நிலையத்திலிருந்து அம்பேபுஸ்ஸவுக்கு அலுவலக வேலைக்காக கேகாலை பொலிஸுக்கு சொந்தமான கெப் வண்டியில் பயணம் செய்திருந்தார்.

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கலிகமுவ, கொப்பேவல பகுதியில் இவ்வாறு பயணித்த பொலிஸ் பரிசோதகர் எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு, உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல நோக்கி வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்தில் சிக்கிய நபரும் சம்பவ இடத்தில் இருந்த சிலரும் வரகாபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலங்கமுவ பகுதி வரை கெப் வண்டியை வண்டியைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

பின்னர், வரகாபொல பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வரகாபொல பொலிஸ் அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரை கெப் வண்டியுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோகதர் பின்னர் வரகாபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)யின் அறிவுறுத்தலின் பேரில் வரகாபொல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரிடம் முற்படுத்தப்பட்ட போது அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல பொலிஸாரால் கேகாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பேரீச்சம்பழத்திற்கான வரி குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேரீச்சம்பழத்திற்கான வரி குறைப்பு

பேரீச்சம்பழத்திற்கான வரி குறைப்பு

பேரீச்சம்பழத்திற்கான வரி குறைப்பு பேரீச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது
வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

அதன்படி, பேரீச்சம் பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31 வரை கிலோவிற்கு ஒரு ரூபாவாக ஆகக் குறைத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் ரணில்

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் ரணில்

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம் ரணில் ,சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய்களின் விலை உயர்வு குறித்து காலியில் நேற்று மக்கள் வினவிய போது பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.

காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று காலை சென்றிருந்த விக்கிரமசிங்க, மறைந்த ஊடகவியலாளர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விக்டர் ஐவனின் மறைவு பாரிய இழப்பாகும் எனவும், அவர் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த ஊடகவியலாளரின் வீட்டில், குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூடிய போது, சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை குறித்து கேள்விகளை எழுப்பினர், சிலர் ஒரு தேங்காய் ரூ. 200 க்கு விற்கப்படுவதாகவும் கடந்த முறை 10 கிலோ சிவப்பு அரிசியை வழங்கியவர் ரணில் விக்கிரமசிங்க என்றும் கூறினர்.

“சேர், நீங்கள் தான் எங்கள் நம்பிக்கை, எங்களுக்கு நீங்கள் தேவை” என்று அம்மக்கள் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இன்று (27) நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் நேற்று (26) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், இருவர் காலி – கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மோதலில் காயமடைந்த ஏனைய இரண்டு கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹுங்கல்ல ‘லொக்கு பெட்டி’ மற்றும் ‘கரந்தெனிய சுத்தா’ ஆகிய பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கணவனை குத்தி கொன்ற மனைவி
Posted in இலங்கை செய்திகள்

கணவனை குத்தி கொன்ற மனைவி

கணவனை குத்தி கொன்ற மனைவி

கணவனை குத்தி கொன்ற மனைவி ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலை 19 வயது இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், 31 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், வீரசேகரகம பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறியதாகவும், உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலை நடத்திய இளம் பெண், ஹல்தமுல்லவில் உள்ள சொரகுனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், வெல்லவாய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்தார்.

கைது செய்யப்பட்ட இளம் பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.