Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை கூட உன்னை மாற்று

என்னை கூட உன்னை மாற்று

ஒரு நாள் பிறந்தோம் ஒரு நாள் இறப்போம்
ஓடும் மனிதா புரிவாய் ….
ஓலம் விதைக்க முன்னே கொஞ்சம்
ஒன்றி நீயும் நடப்பாய் ….

இறப்பை தெரியா இடரை புரிந்தாய்
இது தான் உந்தன் மதியோ ..?
இறந்த பின்னே உன்னை சுமந்தார்
இது தான் உந்தன் விதியோ ..?

ஆறாம் அறிவை தட்டி பார்த்தால்
அன்பே நெஞ்சில் ஓங்கும் …
அறியா மாந்தார் அறிவை தேடின்
அகில போரும் மடியும் …

பிறக்கும் போதே நல்லான் என்றே
பிறப்பை எழுதி வைத்தாய் …
இறக்கும் போதே ஏனோ நீயும்
இரக்கமில்லா மடிந்தாய் ..?

இது நாள் வரையில் புரிந்த தவறை
இன்றே நீயும் எறிவாய்….
இனியும் எங்கள் வாழ்வு விடிய
இன்றே திருந்தி செழிப்பாய்….!

  • வன்னி மைந்தன் -( ஜெகன் )
    ஆக்கம் – 28/01/2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    மன்னித்து விடு

    மன்னித்து விடு

    உன்னை அழைத்தேன் எந்தன் நாளில்
    உன்னை காணவில்லை ..
    உள்ளம் தேடி அழைத்த உந்தன்
    உருகும் மன்றில் நானில்லை …..

    எதையோ எண்ணி வரவை தொலைத்தாய் ..?
    எனக்கு தெரியவில்லை – என்
    எண்ணத்தில வலிகள் படர
    எறிந்தேன் உன்னை தொடர …

    அழைத்த குரலில் ஆமே என்றாய்
    அட டா இது தான் பண்போ ..? – மன்றில்
    ஆளை காண தேடி நின்றேன்
    ஆழி பேரலை இதுவோ ..?

    முன்னே புரிந்த உந்தன் ஊழி
    முன்னே வைத்தேன் ஓடி ….
    முன்னே தேடி கூட வந்தாய்
    மூச்சிழந்தேன் வாடி ….

    போலி ஊடல் வேண்டாம் வேண்டாம்
    போயிடு போயிடு நன்றே ….
    தேடி வந்தும் உறவு தேறா
    தேட வேண்டாம் மண்ணே ….!

    • வன்னி மைந்தன் -(ஜெகன்)
      ஆக்கம் -27/01/2018
    • வன்னி மைந்தன் கவிதைகள்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    எம் அவலம் யார் புரிவார்

    எம் அவலம் யார் புரிவார்

    ஆளை வாட்டும் குளிருக்குள்ளே
    ஆயுள் மெல்ல கரைகிறதே ….
    ஆடை மாற்றி ஓடும் வாழ்வை
    அல்லும் ,பகலும் இடுகிறதே ….

    மஞ்சள் வெயில் உடல் தழுவும்
    மாசம் மனது தேடுறதே ..- நாள்
    மங்கும் ஒளியின் காலத்தையே
    மனது இன்று வெறுக்கிறதே …..

    ஆடை கட்டிய வெங்காயம்
    அது போல் உடலும் ஆகிறதே …
    உயிரை கொல்லும் குளிரை அடக்க
    உடலில் சுமையை குவிக்கிறதே ….

    மறைக்க உடலை மறந்தாலே
    மரணம் உயிரை தின்றிடுமே ….
    கொடும் பனியில் நனையும் வாழ்வதனை
    கொஞ்சும் உறவுகள் அறிந்திடுமோ ..?

    • வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -22-01-2018
    • வன்னி மைந்தன் கவிதைகள்
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள்

      நூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள்

      விண் பாடும் பேரழகே
      வித்தக தமிழ் அழகே ….
      முத்தாகி உனை ஈன்றாள்
      மூழ்கித்த மகிழ் வழகே..

      இத் திங்கள் கருவுடைத்த
      இந்நாளின் பிறப்பழகே….
      முந்தி தமிழ் அவை ஆழ
      முந்தி விதை இட்டவரே ….

      வெள்ளையர் மா நகரம்
      வெறி கொண்ட எழில் அழகா …
      கை கட்டி அவர் நிற்க – பொங்கும்
      கரகோஷ அதிர்வழகா

      பைந்தமிழ் உயர் வழகா
      பாரில் பொது மொழியழகா …
      பா உனை பாடாது
      பா முனை தூங்குமோ ..?

      நூறாண்டு நீ ஆண்டு
      நூலாகி விழ வேண்டும் …
      ஆறாகும் விழி நீரில்
      ஐயா நீ வாழ்வாய் காண்…!

      -வன்னி மைந்தன் -(ஜெகன் )
      ஆக்கம் -18-01-2018
      லண்டன் – கரோ கவுன்சிலை
      ஆளும் ஈழ தமிழன் லண்டன் பாபாவின்
      பிறந்த நாளில் ,,என் மகிழ்வு பொங்கல் ..!

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        பதில் சொல் ….!

        பதில் சொல் ….!

        கடல் மேலே மஞ்சத்தை
        கண்ணே நான் கட்டிடவா ..?-நீ
        கண்ணுறங்க , தாலாட்ட
        கடல் அலையை தந்திடவா ..?

        மழை மேக முகில் உரித்து
        மங்கை உன்னை போத்திடவா …?
        தங்கமே நான் மட்டும் – உனை
        தாளமால் தழுவிடவா…?

        வெள்ளி நிலா பேரழகில்
        வெளியுலகை காட்டிடவா ..?- நீ
        வேண்டும் வரங்களை தான்
        விதம் விதமா தந்திடவா ..?

        அழகு குலையாமல்
        ஆயூள் எல்லாம் வைத்திடவா ..?
        அடி வாங்கும் மத்தாளாம்
        அதுவாகா காத்திடவா ..?

        எதுவாக உனை தாங்க
        எனக்கு நீ கூறாயோ ..?
        ஏனோ நீ வெட்கி
        ஏங்கி திரை போட்டாயோ ..?

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் – 15-01-2018

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        மறக்க முடியா அந்த நாட்கள்

        மறக்க முடியா அந்த நாட்கள்

        கதிர் அறுத்து நெல்லுடைத்து
        கலர் கலராய் பொங்கலிட்டு
        ஊர் கூடி மகிழ்ந்த நாட்கள்
        உள்ளத்தில மறையவில்லை ….

        மூசு பனி வீசி வந்து
        முழு உடலை நடுங்க வைக்க ….
        வேகமாக புதிர் அறுத்து
        வேக வைத்த பொங்கல் பானை …

        நினைவுகளில் வந்தாட
        நீர் உடைக்குது விழிகள் இன்று …
        போட்டியிட்டு வெடி கொளுத்தி
        பொங்கலிட்ட நாளதுவும் …

        வேட்டி சட்டை புதுசு மாட்டி
        வேகமாக சுற்றியதும் …..
        காலையில உடல் கழுவ
        கள்ளமிட்டு ஒளிந்ததுவும் ….

        மனதில் இன்னும் மறையவில்லை -அந்த
        மகிழ்வு இன்று கூடவில்லை …
        தை பிறந்த நாளில் அன்று
        தையல்களை தைத்ததுவும் ….

        வெட்கத்தில வெண் பணிகள்
        வெருண்டு வானம் ஒளிந்ததுவும்
        இன்று அதை நினைத்தாலும்
        இதயத்தில புது சுகம் தான் ….!

        • வன்னி மைந்தன் (ஜெகன் )
          ஆக்கம் -14-01-2018
          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          இது போல் வாழ்ந்தால் கடவுள் ஆவாய்

          இது போல் வாழ்ந்தால் கடவுள் ஆவாய்

          அஞ்சி தமிழன் அகதியாகும்
          அவல நிலை கலைவாய்….
          கெஞ்சி பகைவர் காலில் விழும்
          செழி நிலை ஆட்சி தாராய்….

          முந்தி உலகு முன்னே பேசும்
          முழு நிலை செழிப்பை தாராய் – உனை
          விஞ்சி ஆளும் நிலையில்லா நிலையை
          வீசி வீசி தருவாய் …

          ஞ்சமில்லா வாழும் வாழ்வை
          பரம்பரை பரம்பரை தாராய் – நெஞ்சம்
          கொஞ்சி உன்னை குலவும் நிலையை
          கொட்டி கொட்டி தாராய் …

          கன்றும் ,மாடும் களமும் புலமும்
          கை தொழும் மன்னவன் ஆவாய் ….
          சான்று தட்டி சாதனை பேசும்
          சரித்திரமாகி மடிவாய் ….

          இது போலாகி என்றும் நிறைந்தால்
          இதயத்தில் கடவுள் ஆவாய் …..
          அது போலாகி ஆட்சி புரிந்தே
          அழகாய் நீயும் மறைவாய் …!

          • வன்னிமைந்தன் -(ஜெகன் )
            ஆக்கம் -31/01/2018
          • வன்னி மைந்தன் கவிதைகள்
            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            இது தான் காதலா ..? …!

            இது தான் காதலா ..? …!

            உள்ளாடை அவிழ்க்கையில
            உன்னை நீ மறந்தவளே …
            வெள்ளாடை போன பின்னே
            வெருண்டு நீ அழுததென்ன…?

            கண்ணாடி உடை மாட்டி
            கலர் காட்டி சென்றவளே
            பின்னாடி ஒன்றோடி
            பிரியம் வைத்ததென்ன …?

            தள்ளாடி மனம் மயங்கி
            தங்கமே வீழ்ந்தாய் …
            தங்க தேர் அழகே
            தவறொன்றை ஏன் புரிந்தாய் …?

            முந்திக்க முன்னே அவன்
            முழு நிலை புரியவில்லை …
            சிந்திக்க மறந்தவளே
            சிசு தாங்கி அழுததென்ன …?

            உயிர் தந்து உடல் வளர
            ஊதி பெருத்த வண்டி ….
            ஊர் காண மறுத்து நீ
            ஊர் ஒழிந்த நிலை என்ன …?

            சின்ன இடி இடித்து
            சிறு நிலா,விளையாட
            மெல்லிய இடி அதிர்வில்
            மெலிந்ததா உன் மகிழ்வு …?

            தாயாகி உடல் சுமந்து
            தரணியிலே நின்றவளே ….
            பேயாகி நீ ஏனோ
            பெற்று பிள்ளாய் எறிந்தாய் …?

            நாயாகி உனை இன்று
            நக்கி ஊர் திரிய…..
            பேச்சின்றி உறைந்தவளே – உன்
            பேரின்பம் இன்றெங்கே …?

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் -08/01/2018
            இலங்கையில் 19 வயது இளம் பெண் பிள்ளை ஒன்றை பெற்று காட்டில் வீசி சென்ற செய்தி கேட்டு
            வாடியபோது …!

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            காற்றுள்ள போதே தூற்று

            காற்றுள்ள போதே தூற்று

            நாளை என்ற நாள் மறந்து
            நாடி வா இன்றெழுந்து …
            ஊர் எழுந்து ஆட முன்னே
            ஊர் புகுவோம் ஓடிவா ….

            மஞ்சள் வெயில் உடல் தழுவ
            மார்கழி போல் உறங்குவோம் ….
            மணித்துளிகள் ஒவ்வொன்றிலும்
            மயக்கும் இன்பம் ஏற்றுவோம் …

            காலங்களை வீணடித்து
            கழிக்கின்ற காலம் எல்லாம் …..
            நாளையதில் மீண்டுமது
            நாடி வர எண்ணி விடு ….

            உள்ளமதில் வலியில்லா
            உடல் பலம் உள்ளவரை …..
            வேண்டியதை புரியவேண்டும்
            வேளை இதில் கூட வேண்டும் ….

            நோயுடலில் ஆசை வந்து
            நொந்து மனம் சாவதுவோ …?
            முந்தி வரும் நோயின் முன்னே
            முடித்து விடு வேண்டுதலை …!

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் -08/01/2018

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு

              புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு

              பிறந்த ஆண்டே பிறந்த ஆண்டே – நீ
              பிறந்த மனை எதுவோ ..?
              பிறந்த ஊரை சொல்ல முடியா
              பிழைப்பு ஏன் உனக்கோ …?

              வெல்ல முடியா சொல்லுக்குள்ளே
              வெந்து போனவரே – நாளை
              நல்ல வாழ்வு தருவாய் என்று
              நம்பி நாம் வரவோ ..?

              வீணாய் கரைந்து விரையம் ஆகி
              வீழ்ந்த நாளில் எல்லாம் ….
              சுகத்தை பறித்து சுமையை ஏற்றி
              சுட்டாய் நீ எனலாம் ……

              புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு
              புத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு

              நாளை கடத்தி ஆண்டை விழுங்கி
              நாயாய் அலைய வைத்தாய் – இன்று
              நல்ல வாழ்வு தருவாய் என்றே – ஏன்
              நாடி ஓடி வந்தாய் …?

              பொல்லால் தாக்கி நெஞ்சை கிழிக்கும்
              போர்களை நீ தந்தாய்….
              வெல்ல முடியா வறுமை தந்து
              வேகி சாக வைத்தாய் ……

              இனியும் உன்னை நம்பிடவோ
              இந்த ஆண்டே நீ பிறந்தாய் …?
              கொஞ்சு தமிழா கொஞ்சம் எழடா – இந்த
              கொடிய ஆண்டை விரட்டி விடடா….!

              வன்னி மைந்தன் ( ஜெகன் )
              ஆக்கம் -01/01/2018

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

                வருடம் பிறந்த முதல் நாளில்
                வாழ்த்தி பாடிடலாம் – உள்ள
                வலிகள் குறைக்கும் நிலை இருந்தால்
                வாழ்வு கூடிடலாம் ….

                தினம் போடும் நச்சரிப்பால்
                திருத்தம் ஏதும் இல்லை
                தினமும் கேட்டு மனமும் சலிக்க
                வாழ்வே பிடிக்கவில்லை ….

                தப்பே இல்லா நீதிக்கு
                தண்டனை ஏன் சொல்லு …?
                தவறி புரிந்த தவறென்ன
                தகுமா பதில் சொல்லு …?

                புரியா நிலையில் புண்கள் விதைத்தால்
                புன்னகை மலர்ந்திடுமா …?
                பூட்டிய சிறைக்குள் வாழும் வாழ்வை
                பூலோகோம் ஏற்றிடுமா …?

                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று
                தளம்பி பேசும் தற்கொலை ஒன்று

                அழுது புலம்பி களைத்தேன் நானும்
                ஆயூள் முடித்திடவா …?- நாளை
                ஆழ போகும் நாளில் உனக்கு – எந்தன்
                அருமை உணரத்திடவா …?

                வீணாய் மூட்டும் சந்தேகம் – உன்னை
                விதவை ஆக்கிடுமே
                விரைவில் உணர மறந்தால் – நிலை
                விரைவில் கூடிடுமே ……!

                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                ஆக்கம் -01/01/2018

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  இது தான் வாழ்வு புரிந்து விடு

                  இது தான் வாழ்வு புரிந்து விடு

                  தேடி தேடி பேச வந்தேன்
                  தேடா நீ நின்றாய் – இன்று
                  தேவை கூடி வரவோ என்னை
                  தேடி ஓடி வந்தாய் …?

                  மனதை உடைத்து வலிகள் தந்து
                  மாயம் மறைந்தாயே ..?- நீ
                  பறந்த பின்னே மனிதன் ஆனேன்
                  பாவை அறிவாயோ …..?

                  வலிகள் தந்த அவமானம்
                  வாழ்வு தந்ததடி- நான்
                  வளர உதவி புரிந்தாய்
                  உனக்கு மன்றில் நன்றியடி ….

                  சொத்து ,பத்து, இல்லை என்றே
                  சோடனை புரிந்தாயோ..? – இன்று
                  சோழ காற்றாய் நானும் வீச
                  சோகம் கொண்டாயோ …?

                  வலிகள் சூடி வழியில் விட்டே
                  வள்ளி நீ சென்றாய் – நிலை
                  மாற்றி நானும் வையம் நிமிர்ந்தேன்
                  மங்கை ஏன் வியந்தாய் ..?

                  பழகும் போதே ஒருவர் சிந்தை
                  பாதியில் அறிந்து விடு – அது
                  பாய போகும் ஏவுகணையா
                  பைந்தமிழ் பிடித்து விடு …..

                  இது தான் வாழ்வு புரிந்து விடு

                  உறவில் ஒன்று உணர மறந்தால்
                  உறவு நிலைக்காது ….
                  எதிர் காலம் ஒன்றை தொலைத்த வாழ்வின்
                  ஏக்கம் தணியாது …..

                  அழகை வைத்து ஆடி பார்த்தாய்
                  ஆட்டம் என்னாச்சு ..? – உந்தன்
                  அழகு செத்து உடலும் நலிய
                  அழுகிறாய் என்னாச்சு …?

                  வன்னி மைந்தன் ( ஜெகன் )
                  ஆக்கம் -01/01/2018

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    ஏன் என்னை மறந்தாய்

                    ஏன் என்னை மறந்தாய்

                    உறவை தந்தால் உயிரை தருவேன்
                    உயிரே உயிரே நினைத்து விடு …..
                    அழைக்கும் மரணம் அதனை விரட்டி
                    அன்பே காப்பேன் புரிந்து விடு ….

                    எரியும் தீயில் உருகும் மெழுகாய்
                    எரிகிறேன் தினமும் புரிந்து விடு …
                    ஒற்றை சொல்லை உரைக்க மறுத்து
                    ஒளிகிறாய் ஏனோ மொழிந்து விடு ….?

                    கஞ்சல் உடையில் கசங்கிய உடலை
                    காண மறந்து சென்றாயா ..?
                    அழகிய உள்ளம் அதற்குள் உள்ளதை
                    அறிய மறந்து பறந்தாயா….?

                    ஒளியை வீசும் கதிரவன் ஒளியில்
                    ஓசியில் வாழ்ந்து செல்பவரே ….
                    ஏழை என்றே ஏனோ என்னை
                    எறிந்து நீயும் சென்றாயோ …?

                    ஆடம்பரங்கள் தேடி அலையும்
                    அழகே கொஞ்சம் நிற்பாய்….
                    தேடிய இன்பம் தேறா பொழுதில்
                    தேம்பி தேம்பி எனக்காய் அழுவாய் …!

                    வன்னி மைந்தன் -(ஜெகன் )
                    ஆக்கம் – 1-01-2018

                    வன்னி மைந்தன் கவிதைகள்

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      பிரிய முன்னர் அழும் விவாகரத்து

                      பிரிய முன்னர் அழும் விவாகரத்து

                      தாலி தந்தான் கேவல மாக்கி
                      தாரங்கள் உலவுவதோ ..?- வரும்
                      காலங்கள் கூடியே மகிழ்வு ஏறியே
                      காலங்கள் கழிந்திடுமோ …?

                      வாடியே கிடந்த வாழ்வினில் வந்தான்
                      வழியெங்கும் தூற்றுவதோ ..?- கொடும்
                      கேடுகள் தூவியே ஆடிடும் பெண்ணே – தாலி
                      கேள்வியே ஆகும் நன்றே ….

                      இணைந்தவர் பிரிதல் இதயத்தில் வலிகள்
                      இன்றே புரிந்து விடு – நாளை
                      கூடியே வந்தவர் கூவியே திரிவர்
                      குற்றங்கள் குழி தோண்டும்

                      ஆறாம் அறிவால் ஆள் மனம் ஒன்றை
                      ஆர தழுவி எழு – தவறும்
                      கால பிழையால் கசங்கும் வாழ்வில்
                      கண்ணீர் சுமையாகும் ….

                      ஆடவர் கூட கணவனும் ஓட
                      ஆக்கினை புரிகின்றீர் – ஊடல்
                      தெரிந்தும் மறைத்து தெரியா நடிக்கும்
                      தெளிந்தவன் கணவனடி……

                      பிரிய முன்னர் அழும் விவாகரத்து
                      பிரிய முன்னர் அழும் விவாகரத்து

                      ஊரின் பழிக்கு உன்னை அழைக்கும்
                      ஊனம் கலைந்து விடு ….
                      வாழ்வு தேறின் வழியை விட்டு
                      வாழ பழகி விடு …..!

                      வன்னி மைந்தன் ( ஜெகன் )
                      ஆக்கம் -30/12/2017

                      வன்னி மைந்தன் கவிதைகள்

                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        வெல்வாய் ஒரு நாள் ஓடு

                        வெல்வாய் ஒரு நாள் ஓடு

                        பல நாள் இருளும் ஒரு நாள் மறையும்
                        பல முறை பலமுறை முயற்சிப்பாய் ..
                        வரும் வழி நகைப்பார் வலிகளை இடுவார்
                        வாடா நீயும் எழுவாய் ….

                        இருளும் ஒளியும் ஒருநேர் ஒரு நேர்
                        ஒன்றிடா இந்த உலகில் ….
                        ஒடிந்தே அழுதிடா ஓர்மம் கொள்வாய்
                        ஒன்றே வெற்றியில் நிற்பாய் ….

                        சிகரம் தொட்டவர் எல்லாம் இங்கே
                        சிரித்தா எழுந்தார் சொல்வாய் …?
                        வலிகளை கண்டு அஞ்சின் – இந்த
                        வாழ்வில் உயராய் காணாய்….

                        வெல்வாய் ஒரு நாள் ஓடு
                        வெல்வாய் ஒரு நாள் ஓடு

                        பக்குவம் நாட்டி பாரில் உயர்வாய்
                        பாதை காட்டும் உன்னை ….
                        காறி உமிழ்ந்தான் கூட உந்தன்
                        காலடி பணிவான் நாளை…

                        இது தான் வாழ்வு இது தான் வாழ்வு
                        இன்றே எண்ணி கொள்ளு …
                        இடர்கள் எல்லாம் உன்னை செதுக்கும்
                        இரும்பு பலமே எண்ணு….

                        நாளை மலரும் நாளில் ஒன்று
                        நாடும் உலகம் உன்னை ….
                        வாடா நின்று வாடா நின்று
                        வழிகளை தேடி ஓடு …!

                        வன்னி மைந்தன் ( ஜெகன் )
                        ஆக்கம் -29/12/2017

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          உன்னை மறந்தது பிழை தானோ

                          உன்னை மறந்தது பிழை தானோ

                          இறைவா இறைவா நீ இருந்தால்
                          இன்றே எனக்கொரு பதிலிடுவாய்….
                          எதுவரை என்னை நீ வதைப்பாய்
                          என் கேள்விக்கு என்ன பதலிடுவாய்…?

                          ஒருமுறை நீயொரு வர மிடுவாய்
                          ஓராயிரம் ஆண்டுகள் நான் வாழ்வேன் …
                          இறப்பும் பிறப்பும் ஒருமுறை தான்
                          இதை எழுதி வைத்தவன் நீயே தான் …

                          எழுதி வைத்து படைத்தவனே
                          என் இன்னல் துடைப்பாய் என்று தான் ..?
                          கல்லாய் உள்ளாய் கடவுள் என்றால்
                          கரங்கள் நீட்டி பயனில்லை ….

                          மூவேளை வணங்கும் படி நிலையால்
                          முட்டாளாகி போனேன் யான் …
                          இறைவன் இல்லை என்றே தான்
                          இறைவா உன்னை மறந்து விட்டேன் …!

                          வன்னி மைந்தன் ( ஜெகன் )
                          ஆக்கம் -25/12/2017

                          வன்னி மைந்தன் கவிதைகள்

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            அண்ணனுக்கு அகவை 63

                            அண்ணனுக்கு அகவை 63

                            எரிமலை வெடிக்கின்ற விழியடா – இவன்
                            எழுகின்ற திசை எங்கும் நெருப்படா ..
                            பணியாத பகை கொண்ட உளமடா- இவன்
                            பாய்கின்ற புலியணி தலைவண்டா……

                            தளராத குணம் கொண்ட புலியடா எந்த
                            தடை வந்தும் குலையாத புனிதண்டா ….
                            விலை போகா எங்கள் வீரண்டா-
                            விசாலமாய் படை கட்டி ஆண்டாண்டா …..

                            இவன் போலதலைவன் யாருண்டோ ..?
                            இனியேனும் யாரும் வருவாரோ …?
                            உறவாகி உள்ளத்தில் உறைந்தவன்
                            உணர்விலே கடவுளாய் நின்றவன் ……

                            இன்று நீ எழுச்சி கொண்ட நாள்
                            இல்லத்தில் எரிகின்ற பிறந்த நாள் …
                            வீரத்தின் உருவை வணங்குவோம்
                            விரைவிலே தருவான் ஈழம் நம்புவோம் …

                            ஆராரோ பாடும் அன்னையே – நீ
                            ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய்….
                            இந்த நாள் உந்தன் இனிய நாள்
                            இரு கரம் கூப்பியே வாழ்த்தினோம் …!

                            வன்னி மைந்தன்– ( ஜெகன் )
                            -ஆக்கம் -26/11/2017

                            வன்னி மைந்தன் கவிதைகள்

                              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                              அழுதிட வைத்தெங்கே நீ போனாய்

                              அழுதிட வைத்தெங்கே நீ போனாய்

                              நேற்ரெங்கள் நிழலாகி நின்றாய்
                              இன்றேன் எம் விழியில் நீர் தந்தாய்…?
                              காற்றாகி நீ இன்று போய் விட்டாய்
                              கண்ணீரால் தவிக்கின்றோம் பாராய் ….

                              ஊற்றானாள் உன் முன்னே வீழ்ந்ததினால்
                              உடல் விட்டு நீயும் பறந்தாயோ …?
                              தேற்றுவார் இன்றி உன் உற்றாள்
                              தேய்கிறாள் இவளை யார் கப்பார் …?

                              கூற்றுவா ஏனின்று இவன் அழைத்தாய்
                              கூடு விட்டேனோ நீ பிரித்தாய் …?
                              பார் எங்கும் ஒளி வீசும் பிர சன்னா – நீ
                              பாதியில் போனது துயர் அண்ணா …

                              விழியிலே உந்தன் நிழல் உருத் தான்
                              விளையாடுது இன்றும் எம் நண்பா ….
                              பாசத்தை ஊற்றியே பழகியவா
                              பாதியில் இழந்துன்னை தவிக்கின்றோம் …!

                              • வன்னி மைந்தன்– ( ஜெகன் )
                                -ஆக்கம் -25/11/2017
                                நண்பன் – பிரசன்னா அவனது தாயார் இறந்த நாளில்
                                விழி மூடிய துயர் அறிந்த போது ….
                                எம் கண்ணீர் அஞ்சலி …
                                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                பறி போன மனசு

                                பறி போன மனசு

                                தங்க தேகம் கொண்டவளே – விழி
                                தடவி உன்னை பார்க்குதடி …..
                                அங்கம் காட்டும் உன் அழகோ
                                ஆளை தினம் மயக்குதடி ……

                                கஞ்ச தனம் கொண்டவளே – நீ
                                கட்டும் உடை என்ன விலை ….?
                                பல்லை காட்டும் வாய்போல
                                பஞ்சு தேகம் காட்டிறியே……

                                மஞ்ச ,மஞ்சள் புழு போல
                                மடியும் உந்தன் மடி தசைகள் …..
                                கிள்ளி விட துடிக்குதடி
                                கிளியே கொத்தி விடவாடி …..

                                தங்க பூ தடாகத்தில்
                                தாழாம நீந்திடவா ….?
                                வைகையறை பொக்கிசமே
                                வாடாமா திருடிடவா …?

                                வன்னி மைந்தன் ( ஜெகன் )
                                ஆக்கம் -19/11/2017

                                வன்னி மைந்தன் கவிதைகள்

                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                  மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

                                  மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

                                  தேறவில்லை கல்வியென்று
                                  தெருவெறிந்து போனவளே …
                                  ஓடி வந்து பாடுகிறாய்
                                  ஒரு தலையாய் தேடுகிறாய் …..

                                  ஊரெல்லாம் உன் பேச்சால்
                                  உருண்ட தொரு காலத்தில் – நீ
                                  காணாமல் போன போது
                                  காரிருள் படர்ந்ததடி ….

                                  என் எழுத்தாணி தலை குனிய
                                  ஏதறிந்து நான் எழுத …?
                                  வார்த்தைகளை தேடுகிறேன்
                                  வாயுக்குள் சிக்குதடி ……

                                  மீண்டும் ஏன் என்னை தேடுகின்றாய்

                                  விடை பெற்று போனவளே – என்
                                  விடுதிக்கு வந்ததென்ன …?
                                  ஏதெடுத்து யான் வழங்க
                                  என் மனதை தேடுகின்றாய் …?

                                  கடந்து வந்த காலங்களில்
                                  நடந்து வந்த நினைவுகளை …
                                  மீள் உனக்கு தருவேனா …?
                                  மீளா துயில் கொள்வேனா …?

                                  வன வாசம் போகாமல்
                                  மண வாசம் பற்றியதால் …
                                  உன்னை யான் மறப்பது தான்
                                  உலகத்தின் விதியாம் …?

                                  ஈடு வைக்க என்னிடத்தில்
                                  ஏதுமில்லை அறிந்திடுவாய் …
                                  ஏதெடுத்து நான் வழங்க
                                  என்னை ஏன் தேடி வந்தாய் ..?

                                  கூடு விட்டு போனவளே
                                  கூடு தேடி வந்து விட்டாய் ….
                                  நீ அழுது பயனில்லை – என்
                                  நினைவுகளில் நீயில்லை ……

                                  கந்தனவன் கோவணத்தை
                                  கை பிடிக்க போவதில்லை …
                                  விட்டு விடை பெற்றுவிட்டேன்
                                  விடயங்கள் புரிந்து விடு …

                                  கை மாறி போன பின்னே – நான்
                                  காரிகையை கரம் பிடித்தேன்
                                  கூடி வந்து வாழும் அவள்
                                  கூண்டை விட்டு போவதுவோ …?

                                  தேடி வந்த வாழ்கையில
                                  தேற்றங்களை தந்தவளை…
                                  வீசி விட்டு போவதுவோ …?- நான்
                                  விடை பெற்று செல்வதுவோ …?

                                  வன்னி மைந்தன் ( ஜெகன் )
                                  ஆக்கம் -18/11/2017

                                  வன்னி மைந்தன் கவிதைகள்