Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பறி போன மனசு

பறி போன மனசு

தங்க தேகம் கொண்டவளே – விழி
தடவி உன்னை பார்க்குதடி …..
அங்கம் காட்டும் உன் அழகோ
ஆளை தினம் மயக்குதடி ……

கஞ்ச தனம் கொண்டவளே – நீ
கட்டும் உடை என்ன விலை ….?
பல்லை காட்டும் வாய்போல
பஞ்சு தேகம் காட்டிறியே……

மஞ்ச ,மஞ்சள் புழு போல
மடியும் உந்தன் மடி தசைகள் …..
கிள்ளி விட துடிக்குதடி
கிளியே கொத்தி விடவாடி …..

தங்க பூ தடாகத்தில்
தாழாம நீந்திடவா ….?
வைகையறை பொக்கிசமே
வாடாமா திருடிடவா …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -19/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்