Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது
பண மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்த சந்தேக நபர்கள் ஐந்து
பேரை நேற்று முன்தினம் (ஜூலை 26) கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சலுகை வட்டியில் கடன் வழங்குவதாக கூறி தொலைபேசி மூலம் வங்கிக் கணக்கின் விபரங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர்கள்
வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடி செய்ததாக பெண் ஒருவரினால் கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பிடபெத்த, வெல்லம்பிட்டிய மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய
பிரதேசங்களை சேர்ந்த 30, 39 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் போலியான ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் பயன்படுத்திய மடிக்கணினிகள், வங்கிஅட்டைகள், லேமிண்டிங் மெஷின், ஓட்டுனர்
அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகள், போலி ஓட்டுனர் அனுமதிப்பத்திரம், ரப்பர் ஸ்டாம்ப், சர்வதேச ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சம்பவம் தொடர்பான
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடராக மோதி சிதறிய வாகனங்கள் – மூவர் பலி
தொடராக மோதி சிதறிய வாகனங்கள் – மூவர் பலி
பேராதெனிய – கம்பளை பிரதான வீதியின் கெலிஓய, கரமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதினர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (27) மாலை 6.50 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெலிஓய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதையில் விழுந்த பாதசாரியின் மீது பின்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று
மோதி பின்னர் குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்கள் இருவர் கம்பளை
வைத்தியசாலையிலும், பாதசாரி மற்றும் முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றமொரு நபரும் கண்டி
வைத்தியசாலையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேராதெனிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வெலம்பொட பகுதியை சேர்ந்த 54 மற்றும் 53 வயதான தம்பதினர் மற்றும் கெலிஓய பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பாதசாரி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
கொரோனா தொற்று காரணமாக ஜோர்தானில் வேலைவாய்பை இழந்த இலங்கையர்கள் குழுவினரினால் ஏற்பட்ட பதற்றமான
சூழ்நிலையை கட்டுப்படுத்த அந்நாட்டு பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ஜோர்தானின் அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் சேவையாற்றிய இலங்கையர்களினால்
முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதோ இவ்வாறு கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 5 மாதங்களாக குறித்த இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்ததை அடுத்து அது தொடர்பில் விசாரணை
செய்வதற்காக நேற்று (27) ஜோர்தானில் உள்ள இலங்கை தூதராக அதிகாரிகள் தொழில் பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது சுமார் 340 பேர் கொண்ட குழுவினர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை
அடுத்து அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு
குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரிவழக்கு
குருணாகல் அரசவை கட்டிடம் என கருதப்படும் புவனேக ஹோட்டல்
நடத்திச் செல்லப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டமை தொடர்பில்
குருணாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை- மகிந்த உறுமல்
விடுதலை புலிகள் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை- மகிந்த உறுமல்
இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் வீதிகள் தோறும் கொலை செய்யப்பட்ட யுகமொன்று மீண்டும் ஏற்படாதிருப்பதற்கு இம்முறை
தேர்தலில் தெளிவான தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தம்பதெனிய, நாரம்மல திவிநெகும சந்தை வளாகத்தில் இன்று (2020.07.27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர்
, அன்றைய பயங்கரவாத யுகத்தில் நாட்டில் சுமார் 60 ஆயிரம் படித்த, புத்திசாதுர்யம் மிக்க இளைஞர்களை நாடு இழக்க நேரிட்டதாக குறிப்பிட்டார்.
பாரியளவிலான பட்டதாரிகள் இந்த பயங்கரவாதத்தின் போது கொலை செய்யப்பட்டதுடன், அதில் 4 ஆயிரத்து 210 பேர் குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அன்று நாட்டில் நிலவிய நிலை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்வதற்கும், சாட்சி வழங்குவதற்கும் தான் உள்ளிட்ட குழுவினர் முன்வந்ததாக
சுட்டிக்காட்டிய பிரதமர் தமது அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
பின்னர் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வடக்கு கிழக்கை பிரித்துக் கொண்டு தனி அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு
முயற்சித்தாலும் அந்த முயற்சியை தோற்கடிக்க எமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று.
அன்று யுத்தம் காரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை இன்று ஜனநாயகத்தின் முகத்தை காட்டி பெற்றுக் கொள்வதற்கு
தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்தாலும் பிரபாகரன் கேட்டதை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
பயங்கரவாதம், யுத்தம் என்பவற்றுக்கு மாறாக இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும்
தொழில் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து அவர்களது
எதிர்காலத்தை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது- தேர்தல் ஆணையம்
நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது- தேர்தல் ஆணையம்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக ஜுலை மாதம் 30 ஆம் திகதி
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள
முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை
திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு
பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் இம்முறை சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெல் அறுவடையில் 200,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு
செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு தேவையான 10,400 மில்லியன் ரூபாவை அரச வங்கிகள் ஊடாக நெல் சந்தைப்படுத்தும்
சபைக்கு வழங்குவதற்கு திறைசேரியினால் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக புதிய
அரசாங்கத்தினால் கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட 50 ரூபா
விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன் இம்முறை சிறுபோகத்தில் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை
கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதிலும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
முன்னைய வருட சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் சம்பா அரிசி நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.
புதிய அரசாங்கம் நெல்லை கொள்வனவுசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நெல்லுக்காக 50 ரூபா உறுதி
செய்யப்பட்ட விலையின் கீழ் மொத்த அறுவடையையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
யாழ். அராலி ஓடைக்கரைகுள தடுப்புச் சுவர் கட்டுமானம் – மகிந்த தலையீட்டுடன் தீர்வு
யாழ். அராலி ஓடைக்கரைகுள தடுப்புச் சுவர் கட்டுமானம் – பிரதமரின் தலையீட்டுடன் தீர்வு
அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், யாழ்.வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி, பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த பிரதமர் அவர்கள், கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய அராலி ஓடைக்கரை குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 6.705 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் 2020 ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் 5073 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
இதுவரையில் 5073 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
2020.07.24 ஆம் திகதி பி.ப 4:00 மணி முதல் 2020.07.25 ஆம் திகதி பி.ப
4:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள்
அறிக்கையிடப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு..
11 ஆம், 12ஆம், 13ஆம் தர வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
11 ஆம், 12ஆம், 13ஆம் தர வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
அரச பாடசாலைகளில் தரம் 11ஆம், 12ஆம், 13ஆம்
வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று அரம்பமாகி
காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் நாளை முதல் (28) எதிர்வரும்
வெள்ளிக்கிழமை (31) வரை தத்தமது பாடசாலைகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில், உதவித் தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு
பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்- தொடரும் விசாரணை
ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்- தொடரும் விசாரணை
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம்
வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் வவுனியா CID கிளையில் ஆஜர்
ரிஷாட் பதியுதீன் வவுனியா CID கிளையில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசாரணை ஒன்றிற்காக வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராகியிருந்தார்.
அவரை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட்,
ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி இந்த அழைப்பாணையை விடுத்திருந்தார்.
அவரது தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைக்கு
அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் எழுத்துமூலம்
அறிவித்திருந்த நிலையிலும், இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த விசாரணையை வவுனியாவில் முன்னெடுக்குமாறு ரிஷாட் தரப்பு தனது சட்டத்தரணிகளூடாக கோட்டை நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை
ஆராய்ந்த கோட்டை நீதவான், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள குற்றவியல் விசாரணை
திணைக்களத்தின் பிரிவில் இன்று ஆயாராகி வாக்குமூலம் வழங்குமாறு பணித்திருந்தார்.
அதற்கமைய இன்றயதினம் காலை 10 மணிக்கு ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் ஆஜராகியிருந்தார்.
ரிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்காகவும், அவரது வெற்றியை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர் தலைமையிலான கட்சியின்
பாராளுமன்ற ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறன திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் கப்பல்களில் வேலைசெய்த இலங்கையர் நாடு திரும்பினார்
வெளிநாடுகளில் கப்பல்களில் வேலைசெய்த இலங்கையர் நாடு திரும்பினார்
வெளிநாட்டு கப்பல்களில் சேவையாற்றியவர்கள் உட்பட 55 இலங்கையர்கள் இன்று (27) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த குழுவினர் கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்
பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூக்கில் தொங்கிய நிலையில் – நபர் சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் – நபர் சடலமாக மீட்பு
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர்
தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
76/1, பேராறு, கந்தளாய் பகுதியைச் 36 வயதுடைய ஏ.றுமைஸ் என்பவரே இவ்வாறு வீட்டுக்குள் கயிற்றினை கட்டி தூக்கில் தொங்கி
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் மன நோய்க்குட்பட்டு இருந்த நிலையிலே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டு
அறைக்குள் சென்று கயிற்றினால் கட்டி தூங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்
ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சேதனப் பசளையை ஊக்குவிப்போம் – பிரதமர் மகிந்தா
சேதனப் பசளையை ஊக்குவிப்போம் – பிரதமர் மகிந்தா
சேதனப் பசளை பாவனையை ஊக்குவித்து சேதனப் பசளை உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை
தயாரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
விதை மற்றும் தாவரக் கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு உள்நாட்டு விதைகளுக்கான கொள்கையொன்றை
அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இன்று (2020.07.26) நுவரெலியா சினிசிட்டா மணடபத்தில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களின் விவசாய பீடம், அரச விவசாய ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
நுவரெலியா விவசாய பெருமக்களின் பிரதான கோரிக்கையான மரக்கறிகளை களஞ்சியப்படுத்தும் வசதி கொண்ட களஞ்சிய
வளாகமொன்றை உருவாக்கி மேலதிக மரக்கறி உற்பத்திகளை முகாமைத்துவம் செய்வது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொறுப்பாக கருதப்படுகின்றது.
நாட்டின் மொத்த மரக்கறி தேவையின் 35 வீதமானவற்றை உற்பத்தி செய்யும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை 80 வீதமான விவசாய உர
மானியம் அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள
விவசாயத்துறையை ஊக்குவிக்கும் திட்டம் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ,வேட்பாளர்களான
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்- மனோ
முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்
– பிரசார கூட்டங்களில் மனோ கணேசனின் முதன்மை கருத்து
ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்க கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும்,
துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்து கூறக்கூடிய வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களின் கட்சி
சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்
என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
சஜித் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கவே நாம் போராடுகிறோம். அந்த நம்பிக்கை எமக்கு நாளுக்கு நாள் வலுக்கின்றது. யூஎன்பி கட்சியை கைப்பற்றுவது
யூஎன்பிகாரர்களின் நோக்கமாக இருக்கலாம். கூட்டணிகாரர்களான எமக்கு அதுவல்ல, நோக்கம். எமது நோக்கம், அலரி மாளிகையை கைப்பற்றுவதாகும். அங்கே பிரதமர்
ஆசனத்தில் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவை அமர செய்வதாகும்.
எது எப்படி இருந்தாலும், ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, இந்த நாட்டில் ஜனநாயகரீதியாக சண்டைபோட வேண்டிய இடத்தில், சண்டையிட்டு, அழுத்தம் திருத்தமாக எமது மக்களின்
அபிலாசைகளுக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்க கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தெரிவு செய்ய வேண்டியது தமிழ், முஸ்லிம் மக்களின் கடமை.
நேர்மை உள்ள, தூரப்பார்வை உள்ள, அர்ப்பணிப்பு உள்ள, துணிச்சல் உள்ள, பன்மொழி அறிவு உள்ள, விலை போகாத வரலாறு உள்ள, சொந்த இனப்பற்று உள்ள, சகோதர இன, மதங்களின் மீது
மரியாதை உள்ள, உண்மையான தேசப்பற்றுள்ள வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறியுங்கள். இதை கண்டறிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் முன் வரும் வேட்பாளர்களை
கொஞ்சம் கவனமாக ஒவ்வொருவராக அவதானித்து பார்த்தால், உண்மை அடையாளத்தை அறியலாம். எக்காரணம் கொண்டும்
இதை கண்டறிய தவறிவிட்டீர்கள் என்றால், அடுத்து ஐந்து வருடங்கள் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகி விடும்.
இதை நான் இன்று எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரம் கூறவில்லை. நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க தமிழ், முஸ்லிம்
மக்களுக்கும் சொல்கிறேன். ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பிறகு இதை செய்ய முடியாது. இப்போதே உங்கள் தீர்மானங்களை எடுங்கள்.
மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்
மலையக பணியாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மகிந்த அடித்து கூறல்
இலங்கை மலையக பகுதியில் தோட்டங்களில் பணி புரியும் மக்களுக்கு
நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க படும் என ஆளும் பிரதமர் மகிந்தா தெரிவித்துள்ளார்
எமது ஆட்சியில் மக்களுக்கு நல்லதை செய்வோம் என அவர் அடித்து கூறி வருகிறார்
தேர்தலில் வென்றிட இவ்வாறான ஆசை வார்த்தைகளை மகிந்த அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது
காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது
இலங்கை மேல்மாகாணத்தில் கடந்த இருபத்தி நமக்கு
மணித்தியாலத்தில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை சோதனையின்
பொழுது 364 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்,கைதானவர்களில் சிலர்
பல்வேறு பட்ட குற்றங்கள் புரிந்து தப்பி சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
கோட்டா ஆட்சி நீடித்தால் – மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவார் – ரணில்
கோட்டா ஆட்சி நீடித்தால் – மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவார் – ரணில்
தோட்டப் புறங்களை நகர் புறமாக மாற்றி அமைத்தது எமது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (25) மாலை ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மலையகத்தை தோட்டப் புறங்கள் என கூற
முடியாது. அதனை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். மலையக மக்களை பாதுகாத்து கொள்வதும் ஐக்கிய தேசிய கட்சி.
மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று வெவ்வேறு இடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள
கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் விழ்ச்சி அடைந்துள்ளது.
கொரோனா தொற்றை அரசாங்கம் பாதுகாப்பதில்லை. நாள் ஒன்று 5000 ஆம் பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் இன்று இல்லை. சிறந்த பாதுகாப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொண்டால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால்
தோசை கூட சாப்பிட முடியாது. எவ்வித இலாபமும் இருக்காது. வாழ்க்கையினை கொண்டுசெல்ல கஷ்டம். கொரோனா தொற்று
மலையக பகுதிகளுக்கு பரவினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற பகுதிகளில் தான் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.
நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மற்றுமொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்து கொள்ளுபவர்கள் டெங்கு
நோயினால் உயிரிழக்க நேரிடும். ஆகையால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒரு நிலமை தான் தற்பொழுது கணப்படுகிறது. அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இங்கு எவ்வித தயார் நிலைகளும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினை பொருத்த வரையில் வெளிநாடுகளோடு எமக்கு சிறந்த தொடர்புகள் இருக்கின்றன. நாம் மீண்டும் 6 ஆயிரம் டொலர்களை
நாம் தேடிகொள்ளுவோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக சுமார் 10 இலட்சம் பேர் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு எமது
அரசாங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவோம். சிலர் எம்மை விமர்சனம் செய்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள்
எங்கள் காரியாலயத்தை கைபற்ற வேண்டுமென கூறுகிறார்கள். திருட்டு கும்பல்களுக்கு யார் வாக்களிக்க போவது. இந்த வீட்டை
இரண்டாக பிளவுபட செய்தவருக்கா அல்லது அந்த வீட்டை பிளவுபட செய்த மனிதருக்கா?
சிலர் கூறுகிறார்கள் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி என கூறுகிறார்கள். இறுதியில் என்னை நீதிமன்றுக்கும் அழைத்தார்கள். சட்டம் என்பது எங்கு சென்றாலும் ஒன்று தான். நான் ஒன்றை
கூறுகிறேன். இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் மாத்திரமல்ல சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தீர்பு ஒன்று தான். எனது
காரியாலயத்தையோ அல்லது கட்சியின் காரியாலயத்தையோ யாராவது கைபற்ற நினைத்தால் நான் பொலிஸாருக்கு
அறிவிப்பேன் கைது செய்யுமாறு. அதன் பிறகு பொலிஸ் சிறையில் இருக்க கூடும். அதற்கு பிறகு நீதவான் முன்னிலையில் முன்னிலையாக நேரிடும்.
என்னை கூறுகிறார்கள் அரசாங்கத்தோடு டில் வைத்து கொண்டுள்ளதாக. ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்களுக்கு
ஒன்று கூறுகிறேன். எமது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் நாட்டை பாதுக்க முடியும். வீட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும்.
கைகளுக்கு பணம் வழங்க முடியும் அனைத்துக்கும். ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என குறிப்பிட்டார்.
நாளை (27) முதல் பாடசாலைகள் ஆரம்பம்
நாளை (27) முதல் பாடசாலைகள் ஆரம்பம்
நாளை (27) முதல் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக மாத்திரம்
பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது..
அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல்
3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது
தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர்
மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில்
தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு
பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி
தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது..







