இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை

கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை

கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம கம்பஹாவில் இரண்டு பேர் படுகொலை

கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் தகராறு நீண்டதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுஹக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

மிதிகம மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குழுவொன்றினால் உணவகம் ஒன்றின் முன்னால் வைத்து அதன் உரிமையாளர் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த 32 வயதுடைய நபர் உணவகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த போது வேனில் வந்த குழுவினர் டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அஹங்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

No posts found.
வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

இலங்கை பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No posts found.
சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்

கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்

நாம் சற்றேனும் நினைத்துப்பார்த்திராத பேரிழப்பாக நிகழ்ந்தேறியுள்ள தம்பி கஜீபரனின் அகாலமறைவு எமக்கு சொல்லொணாத் துன்பம் தருவதாக அமைந்துவிட்டது. மிகத் துடிப்புள்ள இளைஞனாக சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்ட கஜீபரன், இளவயதிலேயே தீவிரமான தமிழ்த்தேசியப் பற்றாளனாகவும் தன்னைப் பதியமிட்டிருந்தான்.


அதன்வழியே, எமது கட்சியின் வாலிபர் முன்னணி உறுப்பினராக இணைந்துகொண்ட கஜீபரன் மிகுந்த நேர்மையும், நெஞ்சுரமும், விசுவாசமும், விடாமுயற்சியும் மிக்க இளைஞன் என்பதை, அவனோடு நெருங்கிப் பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களில் நான் அறிந்துகொண்டேன்.


மிகக் குறுகிய காலம் எனது அலுவலகத்தில் அவன் பணியாற்றிய நாட்களில், அவனது கடின உழைப்பையும், தன்னார்வத்தையும், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவனது தீரத்தையும் நான் நேரிடையாகக் கண்டிருக்கிறேன்.

கஜீபரனின் அகாலமறைவுதுன்பம் தருகிறது -ஸ்ரீதரன் எம்பி உருக்கம்


தன் எதிர்காலம் குறித்த முழுமையான கனவுகளோடு பயணப்பட்ட ஒரு இளைய புதல்வனை இயற்கை தன்வசம் எடுத்திருப்பதை அன்பின்பாற்பட்டஎம் இதயங்கள் ஏற்க மறுக்கின்றன.


தான் பிறந்து, வளர்ந்த விசுவமடு மண்ணையும், தருமபுரம் மண்ணையும் முழுமூச்சாய் நேசித்த அவன், அந்த மக்களின் நலவாழ்வுக்காக தன்னாலான பல பணிகளை இக்குறுங்காலத்திலேயே ஆற்றிமுடித்திருக்கிறான்.


கட்சியின் எந்த நிகழ்வாயினும், மக்களின் எந்தத் துயராயினும் அதைத் தன் தோள்மேல் தானாய் ஏற்பதற்கு என்றுமே தயாராயிருந்த என் மனதிற்கு மிக நெருங்கிய தம்பி கஜீபரனின் ஆத்மா அமைதிபெறவும், இந்தப் பேரிழப்பால்

பெரிதும் கலங்கிநிற்கும் அவனது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவனது இழப்பை ஏற்கும் மனவலிமை வாய்க்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்.


சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி

No posts found.
தமிழக மீனவர்களை படகுகளை இடியுங்கள் டக்கிளஸ் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

நாடு விரைவில் மீளும்- கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை

நாடு விரைவில் மீளும்- கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை

நாடு ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முங்காவிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கி வைத்தார்.

இதற்குக் காரணமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

No posts found.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது

3 பெண்களை பலாத்காரம் இருவர் கைது

மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்களாவர்.

புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட பின் சந்தேக நபர்கள் இருவரும் தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

No posts found.
இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி செவணப்பிட்டி பகுதியில் கனரக வாகனமும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பட்டை பிரதான வீதி திருக்கோவிலைச் சேர்ந்த 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்று கனரக வாகனமும் இன்று (29) அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பிரயாணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையவல் அனுமதிக்கப்பட்டுள்ளர்

இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

No posts found.
க்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி

தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.

(அபு அலா)

No posts found.
இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்

விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்

இலங்கை கடந்தகால ஆட்சியாளர்களின் சுரண்டல் காரணமாக ,பொருளாதார வங்குரோத்துக்கு சென்றது .
அதன் பின்னர் வரலாறு காணாத அளவுக்கு இலங்கை பணவீக்கம் ஏற்பட்டது .

அதனை அடுத்து தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து,
நான்கு பில்லியன் டொலர் கடனாக பெறப்படுகிறது .

இவை மீள் செலுத்த வேண்டிய பணம் .மாதம் தோறும் வட்டியுடன் ,
மீள செலுத்த வேண்டிய காலம் ஏற்படும் பொழுது .
அதனை இலங்கையால் செலுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படும் வாய்ப்பு ,
உருவாகும் நிலை காணப்படுகிறது .

விற்பனையாகும் இலங்கை புதைகுழியில் மக்கள்

லஞ்ச ஊழலில் மூழ்கிய இலங்கை அரசியல் வாதிகளினால் ,
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்களை ஒன்று படுத்தி,
பயணிக்க முடியுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

அவ்வாறான நிலை தற்போது ஆளும் அரசில் காணப்படவில்லை ,
ஆகையால் சிங்கள பவுத்த தேசத்து சிந்தனையில் மாற்றம் ஏற்படா நிலையில்,
ஐந்து வருடஙக்ளின் பின்னர் இலங்கை சோமாலியாவாக மாற்றம் பெறும் நிலை,ஏற்பட போவதை ,தற்கால அரசியல் வாதிகளின் சிந்தனை போக்கு கட்டியம் இடுகிறது .

No posts found.
கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி

கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் தெரிவு இடம்பெற வேண்டும் என்கின்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன .

கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கி வரும், சுமந்திரன் தான்தோன்றி தனமான செயல் பாடு காரணமாக, தமிழர்களின் வெறுப்பிற்கு காரணமாக விளங்கிய,சுமந்திரனால் ,கூட்டமைப்பு பல துண்டுகளாக உடையும் நிலைக்கு சென்றுள்ளது

காலாவதியான சம்பந்தன்

வயதான காலத்தில் கட்சியை வழிநடத்தி செல்ல முடியா
படுக்கையில் முடங்கி போன சம்பந்தரின் செயலாற்ற நிலை
காரணமாக ,ஸ்ரீதரன் தலைவராகும் நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காண படுகிறது .

இலங்கை மற்றும் வெளிநாட்டு தமிழர்களின் மனங்களில் ,
ஆழமாக கால் ஊன்றியவர் ,கல்விமானாகவும் ,வாய்மை நிலை நாட்டும் பண்பாளனாக ,ஸ்ரீதரன் எம்பி
விளங்கி வருகிறார் .

அவ்வாறான ஸ்ரீதரன் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க பட்டால் ,இலங்கையின் அரசியலில் மட்டுமல்ல ,வீழ்ந்து கிடக்கும் இலங்கை பொருளாதாரத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது .

கூட்டமைப்பின் தலைவராகும் ஸ்ரீதரன் எம்பி

சுமந்திரன் தானே தலைவர் என போட்டிக்கு சென்றால் ,எதிர்த்து நிற்க அதனை எதிர்கொள்ள தயார் என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .அதில் ,ஸ்ரீதரன் மக்கள் வாக்கில் முதன்மை பெறும் நிலைக்கு செல்வார் என்பது வெளிப்படையாக உள்ளது .

சுமந்திரன் இரட்டை வேடம்

தமிழர்களின் பிரதிநிதிகள் என கோரியவாறு, இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் ,தமிழர்களை எவ்வாறு பிரதி நிதி படுத்த முடியும் என்கின்ற கேள்வி தமிழர்களினால்
வாதங்களுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .

ஸ்ரீதரன் எம்பியை போல வெளிப்படை தன்மையாகவும் ,உண்மை தன்மையாகவும் ,நட்பு நிலையோடும் ,சிறந்த தமிழர் பண்பாளனாக விளங்கும் நிலையில் கூட்டமைப்பில்
எவரும் இல்லை என்பதே மக்கள் கருத்தாக உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 17 சிறுமி ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலனும் அவனின் நண்பனும் வாள் மற்றும் கூரிய ஆயதங்களுடன் தொலைபேசி டிக் டொக் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து இருவரையும் சனிக்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள் மற்றம் பஞ்ச சக்கரம் கொண்ட கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட

காதலியின் தாய்க்கு வாள் காட்டிய காதலன் கைது

பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டொக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து; சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்

சிறுபோகத்துக்கு இலவச உரம் விநியோகம்

2023 சிறுபோக நெற் செய்கைக்கு இலவசமாக ரீ.எஸ்.பி உரம் கமநல சேவை மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக, பாலமுனை கமநல சேவை மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.

பாலமுனை கமநல சேவை மத்திய நிலைய பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புகளுக்கு கையளிக்கும் வைபவம், பாலமுனை உர களஞ்சிய சாலையில் நேற்று (27) நடைபெற்றது.

விவசாய அமைப்புகளினூடாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 22 கிலோகிராம் ரீ.எஸ்.பி உரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, கமத்தொழில் அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலவச ரீ.எஸ்.பி உர விநியோகம், அம்பாறை மாவட்டத்தில் சகல கமநல மத்திய நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக் பின்னர் அரசாங்கத்தால் ரீ.எஸ்.பி உரம் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் தத்தமது விவசாய அமைப்புகளினூடாக ரீ.எஸ்.பி.உரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

இம்முறை சிறுபோகத்தில் அம்பாறை மாவட்டத்தில் 01 இலட்சத்து 35,000 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது

No posts found.
செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அரசாங்கத்தால் எரிபொருள் விலைகளைக் குறைந்தது ரூ. 120 ஆல் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி (SUTUF) ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்தார்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் சில்லறை விலை குறைந்தது 125 ரூபாவால் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

ஒரு லீற்றர் நாப்தா (naptha) எண்ணெய், பெர்னெஸ் (furnace) மற்றும் மண்ணெண்னையின் விலைகளை இடையூறின்றி 110 ரூபாயால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஏப்ரல் முதலாம் திகதி செய்யப்படவுள்ள எரிபொருள் விலை சீர்திருத்தத்தின் மூலம் மக்கள் பயன்பெறக்கூடிய அளவு விலைகள் குறைக்கப்படலாம் என இதற்கு முன்னதாக எரிசக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் சாத்தியம்

ஒரு லிட்டர் டீசலின் சில்லறை விலை குறைக்கப்பட்டால் மின் கட்டணத்தில் கணிசமான குறைப்பு ஏற்படும். நாப்தா மற்றும் டீசல் எரிபொருள் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்களால் 100% சுத்திகரிக்கப்படுகிறது.

உலக சந்தையிலிருந்து மசகு எண்ணெய் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்படுகிறது. அதற்கேற்ப நாப்தா, பர்னேஸ் மற்றும் மண்ணெண்ணையின் விலைகளை சற்று அதிகளவில் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு அதிக நன்மையை வழங்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலையை 100 ரூபாயால் குறைக்க முடியும். மீதித் தொகையை உள்ளுர் சந்தையில் டீசலின் சில்லறை விலையைக் குறைக்க வழங்கலாம்.

வரி செலுத்திய பின், கடந்த மாதம் 9 பில்லியன் ரூபாய் இலாபத்தையும், ஜனவரி மாதம் 12 பில்லியன் ரூபாய் இலாபமும் ஈட்டியதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விற்பனை மூலம் தற்போது பெருமளவு இலாபமீட்டுவதாக பாலித்த மேலும் தெரிவித்தார்

No posts found.
காய்கறிகளின் விலையில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

காய்கறிகளின் விலையில் மாற்றம்

காய்கறிகளின் விலையில் மாற்றம்

காய்கறிகளின் விலையில் மாற்றம் அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்தாக பேலியகொட மனிங் பொதுச் சந்தை சங்கம் தெரிவித்துள்ளது.

மனிங் சந்தையில் அவரை, கரட், கத்தரிக்காய், தக்காளி, லீக்ஸ், உட்பட அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன

No posts found.
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவில் சின்ன புத்தர்-கடற்படை விளக்கம்

கச்சத்தீவில் சின்ன புத்தர்-கடற்படை விளக்கம்

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (27) விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்துக் கடற்படையினர் தெரிவித்ததாவது” கச்சத்தீவானது சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். இத்தீவின் பாதுகாப்புக் கருதி கடற்படைக் குழுவொன்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இக்கடற்படைக் குழுவினர் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தயும் பாதுகாத்து வருகின்றனர்.

இத்தேவாலயமானது வருடாந்தப் பெருவிழாவின் போது மாத்திரமல்லாது தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் கடற்படையினர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கச்சத்தீவில் சின்ன புத்தர்-கடற்படை விளக்கம்

இப்பகுதியில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகவே ஒரு சிறிய புத்தர் சிலையொன்று கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தேவாலயத்தைத் தவிர, இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் செய்ய முடியாது என்பதால் கடற்படையினர் தற்காலிகமாக கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, இத் தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை, எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது” இவ்வாறு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No posts found.
வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி

வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி

வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய பண்டிகைக் காலத்தில் அனுமதி .

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

காலியில் இடம்பெற்ற புதிய பேருந்துகளை கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற வீதிகளில் பொது போக்குவரத்தை வலுப்படுத்த 500 புதிய பேரூந்துகளை இயக்கும் திட்டத்தின் கீழ் இந்த பேரூந்துகள் நாட்டிலுள்ள

அனைத்து டிப்போக்களுக்கும் விநியோகிக்கப்படும். இதனடிப்படையில், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் டிப்போக்களுக்கு இந்த பேருந்துகளை கையளிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீதியில் இரு புறத்திலும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….

´நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று நிலைமை உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழ், சிங்களப் புத்தாண்டை வழமை போன்று கொண்டாடும் வாய்ப்பை எமது நாட்டு மக்கள் இழந்துள்ளனர்.

இதனால் அதிகளவான உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுயதொழில் செய்து வீட்டிலேயே சிறிய அளவில் உற்பத்தி செய்து வரும் தொழில் முயற்சியாளர்கள், தங்கள் பொருட்களை கட்டணம் ஏதுமின்றி வீதியோரங்களில் இருந்து விற்பனை செய்ய, பண்டிகை காலத்தில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிக அனுமதி வழங்க

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வீதி ஓரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில், அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் அனுமதி மற்றும்

மேற்பார்வையுடன், நிரந்தர கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய தற்காலிகமாக இந்த அனுமதியைப் பெறுகின்றனர்.

தற்போது மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் துணி மற்றும் ஆடைகள் விற்பனைக்காக இவ்வாறான விசேட இடங்களை ஒதுக்கியுள்ளோம்.

அதேபோன்று, நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை, ஏப்ரல் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக சுயதொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு

உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம்..´

இந்நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரள, வஜிர அபேவர்தன, உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

No posts found.
தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி
Posted in இலங்கை செய்திகள்

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

மூளைச்சாவு அடைந்த நோயாளர்களின் உடல் உறுப்புக்களை வேறு நோயாளர்களுக்கு பொருத்தும் வெற்றிகரமான சத்திர சிகிச்சைகள் வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

குருணாகல், அம்பன்பொல நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் விஹகனா ஆரியசிங்க இளைய பிள்ளையாவார்.

அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்த விஹங்கன குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் வணிக ரீதியில் உயர்தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வந்தவர் ஆவார்.

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி

இந் நிலையில் விஹகனா மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த நிலையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் மற்றுமொரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றும் கண்களின் சவ்வுகள் மேலும் மூன்று பேரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியுள்ளன.

விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் மொத்தம் 7 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் அறுவை சிகிச்சை இலங்கையின் சிறப்பு வைத்தியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக ஆபத்தான நிலையிலிருந்த ஒருவருக்கு இந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த உறுப்புகள் தனித்தனியாகப் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இலங்கையில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
யாழில் கோர விபத்து சாரதி பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கோர விபத்து சாரதி பலி

யாழில் கோர விபத்து சாரதி பலி

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

No posts found.