நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் அவர் வத்துபிட்டியல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா
Posted in இலங்கை செய்திகள்

நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா

நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா

நாளை (07) புனித வெள்ளி தினம் அரச விடுமுறை தினம் என்ற போதும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் நிலையங்களும் திறந்திருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானக் நிலையங்கள் மூடப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்

காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்

கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.

அவர் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்

இவர்கள் இருவரும் நேற்று வரகாபொல உடுவக்க நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்று, பின்னர் வீடு திரும்பும் போது பட்டலிய கஜுகம என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காதலன் கடைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பெண் மோட்டார் சைக்கிள் அருகே இருந்த போது, அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த இளம்பெண்ணை மோதிய நிலையில் பேருந்து அருகில் இருந்த வடிகாலில் விழுந்து நின்றுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த பஸ் இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டதுடன் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in

உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in


உக்ரைனை அலற விட்ட, ரஷ்யா ஜனாதிபதி ,விளாதிமீர் புதின் ,
ரஷ்யா இராணுவம் தோல்வியில் ,உள்ளதாக பரப்புரை புரிந்த ,உக்ரைன் ,
இன்று ,தோல்வி ,நிலையில் சிக்கியுள்ளது .

நாவீன ஆயுதங்களை தந்து உதவுமாறு , வேண்டுதல் ,விடுத்து வருகிறார் ,
யுக்கிரேன் ,கிழக்கு பகுதி,பக்மூட் ,மத்திய பகுதி ,ரஸ்யா ,வாடகை , இராணுவம்
கைப்பற்றியுள்ளது .

ரஷ்யா போர் ,கள நிலவரம் ,இன்று ,குண்டுகளினால் ,அதிர்ந்த வண்ணம் உள்ளது .இஸ்ரேலை சுற்றி லட்சம், ஏவுகணைகள் குவிப்பு ,ஈரான் ,ஹிஸ்புல்லா ,கமாஸ் ,என்பன ,இஸ்ரேலை ,தாக்க , முற்றுகை ,போர், பதட்டம் நிலவுகிறது .

இலங்கை ,வன்னி ,புலியொம்பகனை நாகதம்பிரான் ,ஆலய திருவிழா,இன்று இடம்பெறுகிறது ,புலியொம்பகனை, நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்கு ,பண்டம் செல்லும் மாட்டு வண்டில் ,காட்சிகள் இவை ,புலியொம்பகனை நாகதம்பிரான் video ,உள்ளே ,

பேரனின் தாக்குதலில் தாத்தாவும் பாட்டியும் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பேரனின் தாக்குதலில் தாத்தாவும் பாட்டியும் மரணம்

பேரனின் தாக்குதலில் தாத்தாவும் பாட்டியும் மரணம்

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் நேற்று இரவு பேரனின் தாக்குதலுக்கு இலக்காகிய 80 வயதுடைய தாத்தாவும், 70 வயதுடைய பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், 70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் சந்தேகநபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
பாலை குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

பாலை குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில்

பாலை குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில்

குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் 13 சிறார்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் விடுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும், பரிசோதனைக்காக பொரளையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

வெல்லவாய, நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது.

வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் (44 வயது) அவரது மனைவி (42 வயது) மற்றும் அவருடைய தந்தை (70 வயது) ஆகியோரே அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 12 வயது சிறுவன் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைப்பு

தேனீர், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் குறைப்பு

எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதன் காரணமாக இன்று (05) நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேனீர் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தேனீர் ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேனீர் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

வரி வருமானம் பாரிய அளவில் அதிகரிப்பு

வரி வருமானம் பாரிய அளவில் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன் ரூபாவும் வசூலித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மார்ச் மாதத்தில் 11,930 மில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரி வருமானத்தில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு
Posted in இலங்கை செய்திகள்

பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு இன்று தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி.சிவகுமார் உள்ளிட்ட

வைத்தியர்களும், திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு

இதன்போது, சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் வைத்தியர் சி.சிவகுமார் ஆகியோரினால் பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் வைத்திய முறைகளை எவ்வாறு

கடைப்பிடித்துச் செல்லல்வேண்டும் என்ற விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாரிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Error: View 9293b2au4w may not exist
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை

அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை

2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்திற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆக இருந்தது.

மார்ச் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையின் முதல் மூன்று நாடுகளாக ரஷ்யா,
இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தோன்றியுள்ளதாக சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.

தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி

தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு 180 சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இன்று (03) கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு முன்னாள் வடமாகாண சபை துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்க முடியாது எனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களான கெக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச் செய்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்குப் போகவும் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதித் தமிழ் மக்களும், ரவிகரனும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் பூர்வீக எல்லைக் கிராமமான கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளை ஆக்கிரமிப்புச் செய்து அங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது முனைப்புப் பெற்றுள்ளன.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலயத்தைச் சூழவுள்ள, தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து அங்கு 180சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் இங்கு இடம்பெறுவதாக அறிகின்றோம்.

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான கீர்த்தி தென்னக்கேன் என்னும் நபருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையே இந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழர் காணிகளில்180 சிங்களக் குடும்பங்களை குடியேற்ற முயற்சி

இந்தப் பகுதிகளிலுள்ள காணிகள் அனைத்திலும் எமது தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் கடந்த 1973மற்றும், 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உத்தரவுப் பத்திரங்கள் அவர்களுடைய கைகளிலே இருக்கின்றன.

இந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி எனப்படுகின்ற இந்த எல்லைக் கிராமங்கள், பூர்வீக பழந்தமிழ் கிராமங்களாகும்.

இங்கு வாழ்ந்த மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்தப் பகுதிகளிலிருந்து சிங்கள இனவெறி இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்டபின்னர் இங்குள்ள தமிள் மக்கள் நெற்பயிற்செய்கைக்காக பயன்படுத்திய நீர்ப்பாசனக்குளங்கள் அவற்றின் கீழான வயல் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிலையில் தமிழ் மக்கள் 1984 ஆம் ஆண்டுக்குமுன்னர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்திய உந்திராயன் குளம், மறிச்சுக்கட்டிக்குளம், ஆமையன்குளம் ஆகிய குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும் தற்போது சிங்களவர்களே பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதுதவிர தமிழ் மக்களுடைய மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றது.

அத்தோடு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ்மக்கள் தமது மானாவாரி விவசாய நிலங்களில் பயிற்செய்கை நடவடிக்கை செய்யும்போது மகாவலி அபிவிருத்தி அதிகிரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சிங்கள மக்களாலும் கூட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது.

எமது எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்படுவதும், தமிழர்ளுடைய கால்நடைகள் திருடப்படுகின்ற சம்பவங்கள் கூட ஒருபுறம் இடம்பெறுகின்றன.

இவ்வாறாக எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பலவித அழுத்தங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளில் கூட சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் ஊடாக, இங்கு வாழும் ஆதிக்குடிகளான தமிழ் மக்களை முற்றுமுழுதாக அப்புறப்படுத்திவிட்டு, தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவேண்டும் என்ற நோக்குடனேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. எமது தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களை பாதுகாப்பதற்கு நாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளோம் என்றார்.

எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு

எரிவாயு விலை பாரிய அளவில் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,728 ரூபாவாகும்.

அத்துடன் 5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,502 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 700 ரூபாவாகும்.

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை
Posted in இலங்கை செய்திகள்

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை

புல்மோட்டையிலுள்ள சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் இந்நிலையில், புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியர் எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றத்தால் பாடரீதியான பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்களும், அப்பிரதேச மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு தகுந்த நடவடிக்கை எட்டப்படும்வரை எங்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என அப்பிரதேச மக்களும், பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் உடனடி நடவடிக்கையினை எடுக்கக்கோரிய கடிதத்தினை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் இன்று (03) ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்,

கல்வி அமைச்சர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறைகேடான ஆசிரியர் இடமாற்றம் புறக்கணிக்கப்படும் புல்மோட்டை பாடசாலை

அனுப்பி வைக்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறவிருக்கின்ற இந்நிலையில், புல்மோட்டையில் காணப்படும் சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடம் காணப்படும் நிலையில்,

புல்மோட்டை ஜின்னா வித்தியாலயத்தில் கடமையாற்றும் விஞ்ஞானப்பாட ஆசிரியரான எஸ்.எம்.லத்தீபின் இடமாற்றம் மூலம், பாடரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான இடமாற்ற நடவடிக்கைகளில் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றம் உதவிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல் பிரிவு) மேகனேந்திரனின் திட்டமிட்ட இன ரீதியான மற்றும் பிரதேச ரீதியான இடமாற்றங்களை செய்வருவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள

முடியாது. அவரின் இவ்வாறான செயற்பாடுகளின் ஆவனங்களை எங்களால் நிருபிக்கக்கூடியதாக இருக்கின்றது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலயக்கல்வி அலுவலகம் ஓர் பழிவாங்கள் அலுவலகமாக திகழ்ந்து வருவதை, பெற்றோர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்விடயங்களைப் பார்க்கின்றபோது பெரும் கவலையளிக்கின்றது.

அச்செயற்பாட்டை நாங்கள் மிக வன்மையாகவும் கண்டிக்கின்றோம். எனவே, இவ்வாறான திட்டமிட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்துச் செய்வதுடன், அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் இருப்பதற்கு தகுந்த

நடவடிக்கையினை ஜனாதிபதி உள்ளிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

(அபு அலா)

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (01) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்மாதம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம்.

எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.

இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில்

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.

குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.

அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.

அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள்

தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில்

அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்பாடுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும்.

நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம்

ஆகவே, ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு

போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 180 மாணவிகள் சேர்ப்பு

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது.

மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும்படி கூறவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மோசடி செயற்பாடு 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாகாண கல்வி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தணிக்கை விசாரணையின் போது குறித்த மோசடி செயல் வெளி வந்துள்ளது.

பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு

பொருட்களின் விலைகள் 10 வீதத்தால் குறைப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்த பொருட்களிலும், தட்டுப்பாடு இதுவரை ஏற்படவில்லை எனவும் பண்டிகைக்காலத்தில் அனைத்து பொருட்களும், தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை

வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.