Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதா?இந்தி பட உலகை விளாசிய நடிகை
தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதா?இந்தி பட உலகை விளாசிய நடிகை
இந்தி பட உலகினர் தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரபல நடிகை பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதா?இந்தி பட உலகை விளாசிய நடிகை
பாயல் கோஷ்
தமிழில் ‘தேரோடும் வீதியிலே’ படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஓசரவல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடனும்
இந்தியில் ரிஷிகபூர், பரேஷ் ராவலுடன் ‘படேல் கி பஞ்சாபி சாதி‘ படத்திலும் நடித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: ‘தென்னிந்திய திரை உலகினர் நேர்மையானர்கள். நான் தேசிய விருது பெற்ற தென்னிந்திய
இயக்குனர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது
எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகைகளை தெய்வமாக பார்க்கிறார்கள். மரியாதை கொடுக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் சில நடிகைகளுக்கு கோவில் கட்டி வணங்கும் நிலையும் இருக்கிறது. நான் இந்தி படங்களில் வாய்ப்பு கேட்டபோது
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் மீது தவறான எண்ணம் இருக்கிறது என்றும் எனவே இந்தி திரையுலகினரிடம்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததாக சொல்லாதே என்றும் சிலர் கூறினர்.
பாயல் கோஷ்
தென்னிந்திய மொழி படங்களில் நடித்து எதிர்காலத்தை கெடுத்திக்கொள்ளாதே என்றும் தெரிவித்தனர். நிஜத்தில் இந்தி
சினிமா தென்னிந்திய படங்களைத்தான் நம்பி உள்ளன. அங்கிருந்துதான் பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். எனவே
தமிழ், தெலுங்கு நடிகைகளை இந்தி பட உலகினர் தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.“ இவ்வாறு கூறினார்.
ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ
ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ
சாத்தான் குளம் சம்பவத்தை ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு
பேசிய சுசித்ராவின் வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ
பாடகி சுசித்ரா
தமிழ் திரையில் மாறுபட்ட குரலால் பல பாடல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர் பாடகி சுசித்ரா. பிரபல
வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
அண்மைகாலமாக அவர் யோகா, சமையல் கலையில் ஆர்வம் காண்பித்து வந்த பாடகி சுசித்ரா, தற்போது தமிழக மக்களை
அதிகம் பேச வைத்துள்ள சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இறந்து போன ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரை பற்றி பேசி உள்ளார்.
பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்… குவியும் பாராட்டு
பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்… குவியும் பாராட்டு
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், பைக் ஓட்டி கீழே விழுந்த வீடியோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்… குவியும் பாராட்டு
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின் இவன் தந்திரன், விக்ரம்
வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார். சென்ற வருடம் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்து இருந்தார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை அவர் பைக் ஓட்ட பழகி கீழே
விழுகின்றார். வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே நடிகைகள் சமூக வலை தளங்களில் தங்களது சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தான் வெளியிட
விரும்புவார்கள். ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் பைக் ஓட்ட முயன்று கீழே விழுந்த வீடியோவை மிக தைரியமாக வெளியிட்டுள்ளது பலரும் பாராட்டியுள்ளனர்
1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா.
1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா.
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ரூ.1 லட்சம் கரண்ட் பில் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.
ரூ.1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா
கார்த்திகா நாயர்
கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இவர்
நடிகை ராதாவின் மகள். கோ படத்திற்கு பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. அதன் பின் போடப்பட்ட மின்
கட்டணம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் இது
தமிழ்நாட்டில் இல்லை மும்பையில். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது..
கார்த்திகா நாயர் ட்விட்,”என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜூன் மாத மின் கட்டணம் மட்டும்
ஒரு லட்சம்.. (அவர்களால் மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி) மும்பையில் இருக்கும் மற்ற
பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்” என கார்த்திகா நாயர் அந்த குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார்.
படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
ரோஹன் பெட்னேக்கர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், பல்வேறு
தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் சினிமா துறையும், சினிமா கலைஞர்களும் அடக்கம்.
இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிய வந்துள்ளது. மராத்தி நடிகரான
ரோஹன் பெட்னேக்கர் என்பவர், மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து பிரபலமானார்.
இவர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதால், கருவாடு விற்பனையில்
இறங்கியுள்ளார். மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை, என் அப்பா இந்த வேலையை செய்தார்.
அதனால் எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருக்கிறது. இந்த வேலையை எனக்கு எந்த அவமானமும் இல்லை” என தெரிவித்துள்ளார்

சுத்திட்டு திரிய கூடாது… இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்
சுத்திட்டு திரிய கூடாது… இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஒருவரை சமூக வலைத்தளத்தில் கலாய்த்திருக்கிறார்.
சுத்திட்டு திரிய கூடாது… இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், தனது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மீண்டும் போற போக்குல் ஒரு போட்டோ ஷூட் என்று தலைப்பிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் பதிவைப் பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், “போற போக்குல பண்ணதுக்கே இப்படின்னா, பிளான்
பண்ணி பண்ணிருந்தா வேற மாதிரி போலயே.. ஸ்டைலா இருக்கீங்களே என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சன் உடன் சிவகார்த்திகேயன்
நெல்சன் திலீப் குமாரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், “கமெண்ட போட்டோமா, ரெண்டு கலாய்
கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே. இன்ஸ்டாலயே சுத்திட்டு திரிய கூடாது” என்று நகைச்சுவையாக கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
எனக்கு அந்த நடிகை தான் வேணும் – அடம் பிடிக்கும் இயக்குனர்
எனக்கு அந்த நடிகை தான் வேணும் – அடம் பிடிக்கும் இயக்குனர்
நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் – பிரபல இயக்குனர்
நயன்தாரா
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அறம் படத்தால் நயன்தாராவுக்கு நல்ல பெயர்
கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருவதாக கோபி நயினார் தெரிவித்தார்.
இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது.
அறம் படத்தில் நயன்தாரா
இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையாம். இந்த தகவலை
கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் அறம் 2 படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்
ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்
பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார்.
ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்
அஜித்
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அஜித்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சோதனையாகவே இருந்தது. பல அவமானங்கள், துரோகங்கள், தோல்விகள் இப்படி
எல்லாவற்றையும், தன்னுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றால் அடித்து நொறுக்கி, இன்று தமிழ்
சினிமாவின் கிங் ஆஃப் பாக்ஸ் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா
திரையுலகினரையுமே அதிர்ச்சியடைய செய்தது என்று கூறலாம். அவர் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எந்த ஒரு
பின்புலமும் இல்லாமல் வந்த சுஷாந்தை பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கினர் எனவும், அதனால் அவர் பல அவமானங்களை
சந்தித்தார் எனவும், அந்த டிப்ரஷன்தான் அவர் உயிரை காவு வாங்கியுள்ளது எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
வாசுகி பாஸ்கர்
தமிழ் சினிமாவின் காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் இது பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பல சுஷாந்த் உள்ளனர். சிலர்
என்னிடம் வருத்தப்படுவார்கள், சிலர் அமைதியாக சிரித்து கொண்டே புறக்கணிப்பின் வலியை கடப்பார்கள். அவர்களுக்கு
ஒன்றை மட்டும் சொல்கிறேன், அவ்வப்போது தல அஜித் பட்ட போராட்டங்களை நினையுங்கள்’ என அஜித் ஆரம்ப காலத்தில்
ஒதுக்கப்பட்டதை குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்
எமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்
பிரபல நடிகையான எமி ஜாக்சன் வெளியிட்ட யோகா செய்யும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ் குறைந்து வருகிறது.
எமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்
எமி ஜாக்சன்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக
கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம், கடந்த ஞாயிறு அன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்
வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் எமி ஜாக்சன் யோகா செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எமி ஜாக்சன்,மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

நடிகைக்கு திருமணம் – குசியில் அம்மணி
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ரீது வர்மா காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.
காதல் திருமணம் செய்யும் ரீது வர்மா
ரீது வர்மா
தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்
நடிகை ரீது வர்மா. தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் ரீது வர்மா சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை
எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும், என பதிலளித்துள்ளார்.
எதிரி தமிழ்த் திரைப்படம்
எதிரி தமிழ்த் திரைப்படம்
எதிரி தமிழ்த் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சதா,
விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிரி தமிழ்த் திரைப்பட கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நடராஜன் ஐயர் (டெல்லி கணேஷ்) அந்தணராவார். அவர் வீட்டை வாடகைக்கு விடும்பொழுது அவ்வீட்டில் குடிவருபவர்களிடன் பல சட்டங்களைத் தெரிவித்தே பின்னர் அங்கு குடியமத்துவார்.
அச்சமயம் அங்கு வரும் காடயர்களான கல்லூரி மாணவர்கள் அவரிடன் நல்லவர்களாக நடித்து பின்னர் அவர் வீட்டில் வாடகைப் பகுதியில் குடியமர்கின்றனர்.
நல்லவர்களாக இருந்தவர்கள் சாராயம், புகை பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார்.
அவரும் பாட்டில் மணி என்ற காடையன் இருக்கின்றான். அவன் உங்களுக்கு உதவுவான் என்று பொய் கூறினார்.
அதன்படி பாட்டில் மணியாக தன் நண்பன் சுப்பிரமணியை (மாதவன்)ஏற்பாடு செய்கின்றார்.
இவர் சொல்கேட்டு பாட்டில் மணி போல் வந்து ஐயர் வீட்டிலிருப்பவர்களைப் பயமுறுத்துகின்றார்.
இதற்கிடையில் ஐயரின் மகளான காயத்ரி மீது காதல் நெருங்கிப் பழகுகின்றார். இவற்றைப்பார்த்து மனம் நொந்துகொள்ளும் அவர் பாட்டில் மணியை வெளியில் அனுப்புவதற்காகப் பலமுறை முயல்கின்றார்.
அச்சமயம் நண்பனின் காதலியென நினைத்து பிரியாவைக் (சதாவை) கடத்திச் செல்லும் சுப்பிரமணி பின்னர் பிரியா மீது காதல் கொள்கின்றார் எவ்வாறு பிரியாவை
காடையனான அவள் தந்தையிடமிருந்து காப்பாற்றி
ஒன்று சேருகின்றார் சுப்பிரமணி என்பதே எதிரி தமிழ்த் திரைப்பட திரைக்கதை முடிவு.
இந்த எதிரி தமிழ்த் திரைப்படத்தில் மாதவன் நடிப்பு அபாரமாக உள்ளது ,எதிரிக்கு ஏற்ப எதிரியின் நடிப்பில் அவர் பின்னி எடுத்துள்ளார் .
மாதவன் நடிப்பில் உருவானா எதிரி திரைப்படத்தை இயக்கியா கே எஸ் ரவிக்குமார் பல வெற்றி படங்களை தமிழுக்கு அளித்தவர் .
அவருடன் கூட்டணி சேரும் அனைவரும் வெற்றியின் பிரபலன்களாக கருத படுவர் எனது எதிரி திரைப்படம் எடுத்து காட்டியுள்ளது .
விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.
விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்
விஜய் – கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு
திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
விஜய்யும் கீர்த்தி சுரேஷும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்
சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்
அவதூறுகளை பொருட்படுத்தாமல் சுஷாந்த் சிங்கின் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் என நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்
சல்மான்கான், சுஷாந்த் சிங்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண்
ஜோகர் ஆகியோர் காரணம் என்று வழக்கும் தொடர்ந்துள்ளனர். சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி
சின்ஹா ஆகியோரை சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களும் குறைந்துள்ளனர்.
இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்று சாடிய கங்கனா ரணாவத்துக்கு இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 லட்சம்
ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பின் தொடர்ந்த 10 லட்சம் ரசிகர்கள் வெளியேறி விட்டனர். சோனம் கபூர்
2 லட்சத்து 50 ஆயிரம் பேரையும் அலியாபட்டை 5 லட்சம் பேரையும் இழந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பலரும் வசைபாடுகின்றனர்.
சல்மான் கானின் டுவிட்டர் பதிவு
இதையடுத்து சல்மான்கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி எனது அனைத்து ரசிகர்களையும்
வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் அவதூறு வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடுங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு வலி மிகுந்தது. எனவே அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவாக இருங்கள்” என்று கூறியுள்ளார்
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் – பிரபல நடிகர்
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் – பிரபல நடிகர்
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் என்று பிரபல நடிகர் ட்விட் செய்து வாழ்த்துக் கூறி இருக்கிறார்.
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணம் விஜய் தான் – பிரபல நடிகர்
விஜய்
விஜய்யின் பிறந்த நாளான இன்று ஜூன் 22ஆம் தேதியில் அதிகாலை 12 மணிமுதல் வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருவார்கள். அந்த
வகையில் நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ’நான்
சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவரே விஜய்தான்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
உதயநிதி ட்விட்
உதயநிதி ஸ்டாலின் தனது டுவீட்டில் மேலும் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில்
வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக
எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?
நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலை குறித்து பார்ப்போம்.
நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா?
விக்னேஷ் சிவன், நயன்தாரா
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் அதன்
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நோய் பரவல் அதிகமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா,
இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமையில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.
விக்னேஷ் சிவன், நயன்தாரா
இந்நிலையில், இந்த செய்திகள் உண்மையில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாங்கள் இருவரும்
நலமாக இருப்பதாக கூறியுள்ள அவர், தான் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், நயன்தாரா, உடற்பயிற்சி
உள்ளிட்ட அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எனக்கு திருமணம் -குஷியில் நடிகை
எனக்கு திருமணம் -குஷியில் நடிகை
விஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
‘என்னுடையவர்’… திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட ஹீரோயின்
வெங்கட சைதன்ய ஜோனாலகாடு, நிஹாரிகா
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக
அறிமுகமானவர் நிஹாரிகா. தற்போது அசோக் செலவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு,
ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள் தயாரித்தும் வருகிறார்.
இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் பிரபாசும்
காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும்
மறுத்தனர். நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார்.
நிஹாரிகா, வெங்கட சைதன்ய ஜோனாலகாடு
இந்த நிலையில் நிஹாரிகா திருமணம் முடிவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடக்க
போகும் தகவலை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். மாப்பிள்ளை முகம் தெரியாத வகையில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
தற்போது மணமகன் முகம் தெரியும் இன்னொரு படத்தை வெளியிட்டு, அதில் என்னுடையவர் என குறிப்பிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். மணமகன் பெயர் வெங்கட சைதன்ய
ஜோனாலகாடு. குண்டூரை சேர்ந்தவர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிஹாரிகாவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்
கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்
கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் விமர்சிக்கிறார்கள் என்று நடிகை ரியாசென் கோபமாக கூறியிருக்கிறார்.
கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்
ரியா சென்
பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்த தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும்
நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார்.
ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும் முத்தகாட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பதில் அளித்து ரியா சென் கூறியதாவது:-
ரியா சென்
“நான் குட்டை பாவாடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர். முத்தகாட்சியிலும் கவர்ச்சியாகவும் நடித்தால் துணிச்சலாக
செய்துள்ளார் என்கின்றனர். முன்னணி நடிகைகள் இதுபோல் உடை அணிந்தாலோ முத்த காட்சிகளில் நடித்தாலோ யாரும் கண்டு
கொள்வது இல்லை. என்னை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர். சினிமாவில் எனக்கு நண்பர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள்
உன்னை மட்டும் ஏன் தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்கின்றனர்.எனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் இந்த தாக்குதல் நடக்கிறது.“ இவ்வாறு அவர் கூறியுள்ளார்
நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு
நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு
நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவரான யாஷிகா ஆனந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு
யாஷிகா ஆனந்த்
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபல மானவர் யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் இரண்டாவது
சீசனிலும் போட்டியாளராக அவர் கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில்
பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில்
சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டானார்.
இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
காதலித்த பெண்ணை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்
காதலித்த பெண்ணை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்
கும்கி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அஸ்வின், காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்.
காதலித்த பெண்ணை கரம் பிடிக்கும் கும்கி அஸ்வின்
கும்கி அஸ்வின்
‘கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின். இவர், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ பட அதிபர்களில்
ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார். ‘பாஸ் என்ற பாஸ்கரன்,’ ‘ஈட்டி,’ ‘ஜாக்பாட்,’ ‘கணிதன்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இவருக்கும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யாஸ்ரீ, அமெரிக்காவில் படித்து, ‘எம்.எஸ்.’ பட்டம் பெற்றவர்.
அஸ்வின்
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ‘கும்கி’ அஸ்வின்-வித்யாஸ்ரீ இருவருக்கும்
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்கிறது.

இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது – சுஷாந்த் குறித்து சிம்பு உருக்கம்
இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது – சுஷாந்த் குறித்து சிம்பு உருக்கம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுஷாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது – சுஷாந்த் குறித்து சிம்பு உருக்கம்
சுஷாந்த், சிம்பு
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன.. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா,
சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.
சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா, இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.
இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத்
தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே
இருக்கும். இதேபோல் கொரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.
சிம்பு
கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் சுஷாந்த் சிங்
ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில்
வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய
திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே.” என சிம்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






