எனக்கு அந்த நடிகை தான் வேணும் – அடம் பிடிக்கும் இயக்குனர்

Spread the love

எனக்கு அந்த நடிகை தான் வேணும் – அடம் பிடிக்கும் இயக்குனர்

நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் – பிரபல இயக்குனர்
நயன்தாரா


கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அறம் படத்தால் நயன்தாராவுக்கு நல்ல பெயர்

கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருவதாக கோபி நயினார் தெரிவித்தார்.

இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது.

அறம் படத்தில் நயன்தாரா

இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையாம். இந்த தகவலை

கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் அறம் 2 படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

      Leave a Reply