Posted in சினிமா

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து

கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக

இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை

ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள

எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

Posted in சினிமா

விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து – மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு

விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து – மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு

நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வரும் மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்து கலாம் இயக்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து – மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் பற்றி பல

விமர்சனங்களை வைத்திருந்தார். இதைக் கண்டித்து நடிகர்கள் சூர்யா, விஜய்யின் ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு எதிராக சூர்யா, விஜய்யின் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ

வெளியிட்டார். இதனை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

மீரா மிதுன்

இந்த புகாரை மீரா மிதுன் கேலி செய்து பதிவு செய்ததாக, மீரா மிதுனின் உருவ பொம்மைகளை எரித்து, புதுச்சேரி கலாம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் சூர்யா பற்றி சர்ச்சை கருத்து
விஜய் சூர்யா பற்றி சர்ச்சை கருத்து
    Posted in சினிமா

    சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : காதலி குற்றச்சாட்டு

    சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : காதலி குற்றச்சாட்டு

    சுஷாந்தின் தங்கை தன்னிடம் தவறாக நடக்க முயன்றாதாக நடிகை ரியா சக்ரபோர்தி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    சுஷாந்தின் தங்கை என்னிடம் தவறாக நடக்க முயன்றார் : ரியா பரபரப்பு குற்றச்சாட்டு
    சுஷாந்த் சிங் ராஜ்புட், பிரியங்கா சிங், ரியா சக்ரபோர்தி


    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (வயது 34) மும்பையில் உள்ள குடியிருப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல, கொலையாக

    இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    மேற்கொண்டு வந்தனர். இதனிடையே நேற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி சுஷாந்தின் தங்கை பிரியங்கா மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

    இதுகுறித்து ரியாவின் வக்கீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரியாவும் சுஷாந்தும் பழக ஆரம்பித்த சில

    நாட்களில் அவ்வப்போது ஒருவர் வீட்டுக்கு இன்னொருவர் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த சமயத்தில்

    சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங்கும் அவரது கணவரும் சுஷாந்த் வீட்டில் இருந்துள்ளனர்.

    ரியா சக்ரபோர்தி

    ஒருமுறை பார்ட்டிக்கு சென்றிருந்தபோது சுஷாந்தின் தங்கை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் ஆண், பெண் என வித்தியாசமின்றி வரம்பு மீறி நடந்துகொள்ள ஆரம்பித்தாராம்.

    பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததும், சுஷாந்தும் அவரது தங்கையும் மீண்டும் மது அருந்த ஆரம்பிக்க, ரியாவோ சுஷாந்தின் அறைக்கு சென்று தூங்கிவிட்டாராம்.

    திடீரென நள்ளிரவில் விழிப்பு வந்து எழுந்து பார்த்தபோது சுஷாந்தின் தங்கை பிரியங்கா தன்னை கட்டிப்பிடித்தபடி தன்னருகில் படுத்திருந்ததையும், தன்னிடம் அத்துமீறி

    நடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்த ரியா, மறுநாள் சுஷாந்திடம் இதுபற்றி கூறிவிட்டு கோபத்துடன் தனது வீட்டுக்கு சென்றாராம்.

    இதுகுறித்து சுஷாந்த் தனது தங்கையை திட்டியதாகவும், பின்னர் வந்த நாட்களில் சுஷாந்தின் குடும்பத்தினர் ரியாவிடம் பேசுவதை

    தவிர்த்தார்களாம். அதனால் தான் சுஷாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் பட்டியலில் ரியாவின் பெயரை வேண்டுமென்றே சேர்க்கவில்லை” என்று ரியாவின் வக்கீல் கூறியுள்ளார் .

    Posted in சினிமா

    அதைபண்ண காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

    அதைபண்ண காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ்

    சிவனும் பரிகார பூஜைக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    பரிகார பூஜைக்காக காத்திருக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
    விக்னேஷ் சிவன் – நயன்தாரா


    நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

    ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம்

    அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.

    நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில்

    நடித்து வருகிறார். இந்த படங்கள் முடியவதற்குள் அடுத்த 2021ம்

    ஆண்டும் முடிந்துவிடும் அப்படியென்றால் திருமணம் எப்போது

    என்று மறுபடியும் ஒரு கேள்வியுடன் ஜோதிடரை குடும்பத்தினர்

    அணுகிக் கேட்ட போது ஒருமுறை நயன்தாரா, விக்னேஷ் சிவன்

    ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வந்தால் திருமணம் நிச்சயம் என்று கூறி உள்ளனர்.

    நயன்தாரா – விக்னேஷ் சிவன்

    கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்தபின் அவர்கள்

    தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்பிறகு திருமண அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

        Posted in சினிமா

        பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்

        பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்

        தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

        பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் – ராஷி கண்ணா
        ராஷி கண்ணா


        தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம்

        வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய

        வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல்

        தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

        அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு

        பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். அதே நேரம் கதை பிடித்து இருந்தால்

        தயாரிப்பாளர் எவ்வளவு குறைவாக சம்பளம் தருவதாக சொன்னாலும் ஒப்புக்கொண்டு நடித்து விடுவேன்.

        ராஷி கண்ணா

        நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை. நான் பணத்துக்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். கதை

        தேர்வில் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் உங்களுக்கு ஏன் தோல்விகள் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். சில கதைகள் கேட்கும்போது மிகவும் நன்றாக இருக்கும்.

        இது பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் நடிப்போம். ஆனால் அது திரையில் வரும்போது வேறுமாதிரி மாறிப்போய்

        விடுகிறது. வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. ஆனாலும் கதை தேர்வு செய்வதை மட்டும் நம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.

            Posted in சினிமா

            எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்

            எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்

            பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், தனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததாகவும் அதை மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

            எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்
            கங்கனா ரணாவத்


            தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம்

            வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

            இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறமையாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டு

            இருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. பா.ஜனதா கட்சியில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பேசினர்.

            கங்கனா ரணாவத்

            இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், ‘எனக்கு பா.ஜனதா கட்சி எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முன்வந்தது. நான்

            ஏற்கவில்லை. எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். பா.ஜனதா கட்சியில்

            சேரப்போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. நடிப்பின்

            மீதுதான் ஆர்வம். ஆனாலும் எனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார்

            Posted in சினிமா

            காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

            காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

            தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

            ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்…. விரைவில் தொழிலதிபரை மணக்கும் காஜல்?
            காஜல் அகர்வால்


            2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி

            கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ்

            பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக

            உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார்.

            தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது திருமண வதந்திகள் வந்துள்ளன.

            இதற்கு அவர் பல முறை மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அவருக்கு திருமண நிச்சயதார்த்தம்

            நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று கூறிய காஜல் அகர்வால்,

            விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

            காஜல் அகர்வால்

            இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவில் தெலுங்கு தயாரிப்பாளரான

            பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர்

            தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

            Posted in சினிமா

            யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்

            யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்

            முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அலி கூறியுள்ளார்.

            யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்
            யோகிபாபு


            ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தௌலத்’. இந்த

            திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர்

            செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

            இதுபற்றி தயாரிப்பாளர் முகம்மது அலி கூறும்போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத்

            திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சியில் யோகிபாபுவைத் தான் நடிக்க வைக்க

            வேண்டுமென்று தீர்மானித்து தான் நடிக்க வைத்தோம். அவரும் நல்லபடியாக நடித்துக் கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர்

            நடித்த பல படங்கள் வரிசையாக வெற்றி பெற்று பரபரப்பான நடிகராக மாறினார்.

            தௌலத் தயாரிப்பாளர்

            அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமலும் இழுத்தடித்தார். நானும் அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். அதன்பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்து

            இருந்தால் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம். அவர் குறித்த நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது.

            ஆனால், அதையும் விட நடித்துவிட்டு இப்போது நான் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திடம் விலைபேசி இப்படத்தை வெளியிட

            திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த செய்தி என்னை இடிபோல் தாக்கிவிட்டது. மேலும், அவர் கூறியது போல் அவர் புகைப்படத்தை மட்டும் போஸ்டரில் போட்டு நாங்கள் விளம்பரம் செய்து

            சம்பாதிக்க நினைக்கவில்லை. அப்படி செய்யவும் மாட்டோம். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த ஒரு நடிகர் தன்னை விளம்பரம்

            செய்யக்கூடாது என்று கூறுவது சரியா? தர்மமா? நியாயமா? யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்துள்ளார். யோகி

            பாபு மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. எந்த நடிகரும் இதுபோல் எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம்’ என்றார்.

                Posted in சினிமா

                சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் வில்லன் நடிகர்

                சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் வில்லன் நடிகர்

                கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் உதவி கேட்டிருக்கிறார்.

                சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் வில்லன் நடிகர்
                சூர்யகாந்த்


                கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து

                செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக

                பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள்

                வேலையில்லாமல் இருக்கும் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினார்கள்.

                படப்பிடிப்புகளுக்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் துணை நடிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

                இந்நிலையில் பாக்யராஜின் ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூரியகாந்த் சாப்பாட்டுக்கே

                வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

                சூர்யகாந்த்

                இதுகுறித்து சூர்யாகாந்த் கூறுகையில், பாக்யராஜ் தான் என்னை ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார்.

                பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக

                கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.

                தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை. அதனால் பொருளாதார

                ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு மருந்து மாத்திரை

                வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டுக்க வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

                    Posted in உலக செய்திகள் சினிமா

                    ஆபத்தான நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

                    ஆபத்தான நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

                    கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர்

                    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்தது; ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

                    இதேவேளை அவரது மகன் எஸ்.பி.பி.சரண், உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார்

                    என்று மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.. தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா

                    தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

                    இதேவேளை நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல்

                    தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

                    தமிழகத்தை பொறுத்தவரையில் 31 எம்.எல்.ஏக்கள், 4 எம்.பிக்கள், ஆளுநர் என பல முக்கிய பிரமுகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                    அந்த வகையில் சினிமா உலகின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

                    இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

                    இதனிடையே நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளதாகவும்

                    அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


                    தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    74 வயதாகும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

                    சிறந்த பின்னணிப்பாடகருக்காக 6 முறை தேசிய விருதும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                    Posted in சினிமா

                    பிகினி உடையில் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்

                    பிகினி உடையில் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்

                    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

                    பிகினி உடையில் மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்
                    மாளவிகா மோகனன்


                    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின்

                    மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ்

                    இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள

                    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

                    மாளவிகா மோகனன்

                    கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா

                    மோகனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவேற்றி

                    வருகிறார். அந்த வகையில், பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

                    சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன

                    Posted in உலக செய்திகள் சினிமா

                    நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

                    நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

                    நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                    நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று
                    நிக்கி கல்ராணி


                    கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

                    இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது
                    டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

                    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு

                    கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன்.

                    எனது கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும்,
                    முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி

                    தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு


                    எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

                    Posted in சினிமா

                    நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா… வைரலாகும் புகைப்படம்

                    நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா… வைரலாகும் புகைப்படம்

                    இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக இருக்கும் மனோபாலா, நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கி இருக்கிறார்.

                    நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா… வைரலாகும் புகைப்படம்
                    மனோபாலா


                    “புதிய வார்ப்புகள்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோபாலா. இந்த படத்தில் பாரதிராஜாவின்

                    உதவி இயக்குநராகவும் இவர் அறிமுகமானார். 1982ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார் மனோபாலா.

                    கார்த்திக், விஜயகாந்த் மற்றும் மோகன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். ரஜினியை

                    வைத்து ‘ஊர் காவலன்’ என்ற வெற்றி படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்தரம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

                    மனோபாலா

                    தற்போது இவர் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். இளம் நடிகர்கள், நடிகைகள் போட்டோஷூட் எடுத்து சமூக

                    வலைத்தளத்தில் வெளியிடுவது போல், மனோபாலாவும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டிருக்கிறார். இளமை நாயகன்

                    என்ற டைட்டிலுடன் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                    நடிகர்கள் நடிகைகளுக்கு
                    நடிகர்கள் நடிகைகளுக்கு
                    Posted in சினிமா

                    சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா

                    சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா

                    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

                    சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா
                    நயன்தாரா


                    நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி

                    கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

                    இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின்

                    தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது.

                    இதில் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை

                    நடந்ததாகவும் அவர் ரூ.4 கோடி சம்பளம் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தில் நடிக்க நயன்தாரா

                    மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம் என்பதால் நடிக்க

                    மறுத்து விட்டதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

                    நயன்தாரா

                    நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இந்த படம் திரைக்கு

                    வருகிறது. நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

                    Posted in சினிமா

                    பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா

                    பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா

                    லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது அடையாளங்களில்

                    ஒன்றான கண் கண்ணாடியை ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார்.

                    தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா
                    மியா காலிஃபா

                    கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த

                    அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                    கட்டடத்தைச் சுற்றி 10 கி.மீ வரை இருந்த அனைத்து கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. வெடிவிபத்துக்கு அரசின் அலட்சியமே

                    காரணம் என மக்கள் வீதியில் திரள, ஒட்டுமொத்த அரசும் ராஜிமானா செய்தது.

                    லெபனானை பூர்வீகமாக கொண்ட ஆபாசப்பட முன்னாள் நடிகை மியா காலிஃபா, வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி

                    திரட்டுவதற்காக தனது அடையாளங்களில் ஒன்றாக கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார்.

                    தற்போது வரை கண்ணாடியை வாங்குவதற்கான தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. “Anything for my country?” என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

                      Posted in சினிமா

                      என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? – அமிதாப்பச்சன் காட்டம்

                      என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? – அமிதாப்பச்சன் காட்டம்

                      65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

                      என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? – அமிதாப்பச்சன் காட்டம்
                      அமிதாப்பச்சன்


                      கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில

                      அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்து வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65

                      வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

                      இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: “65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற

                      அரசின் நிபந்தனை எனது மனதை மிகவும் பாதித்தது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல கூடாது.

                      அவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று அரசு நிர்வாகம் முடிவு செய்தது.

                      அமிதாப்பச்சன்

                      அப்படியென்றால் என்னைபோன்ற 78 வயதுக்காரர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? இது மிகவும் கஷ்டமான முடிவு. இந்த

                      தடையை திரைப்பட சங்கம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்ப்பின் மூலம் நீக்கியதால் பிரச்சினை தீர்ந்து விட்டது.

                      ஆனால் கோர்ட்டு தடையை நீக்குவதற்கு முன்னால் என்னை போன்றவர்கள் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்?

                      நாங்கள் சினிமாதான் தொழில் என்று இருக்கிறோம். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்வதற்கு ஏதாவது வழி இருந்தால்

                      ஆலோசனை சொல்லுங்கள்.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

                        Posted in சினிமா

                        விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

                        விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

                        நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

                        விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்
                        விஜய் – சூர்யா


                        பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ்

                        நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது நடவடிக்கையால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

                        அண்மையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிசத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக

                        விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக

                        விமர்சித்தனர். விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்.

                        மீரா மிதுனும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

                        இந்நிலையில் நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

                        பாரதிராஜா

                        இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:-

                        நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.

                        அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும்

                        பணியை சூர்யா செய்து வருகிறார். மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் விஜய். பல்வேறு

                        அடித்தளங்கள் அமைத்து விஜய்யும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர்.

                        இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

                        Posted in சினிமா

                        கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்

                        கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்

                        பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான வி.சாமிநாதன், கொரோனா தொற்றால் இன்று மதியம் காலமானார்.

                        கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்
                        தயாரிப்பாளர் சாமிநாதன்


                        லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவர் வி.சாமிநாதன் (67). இவர் இன்று

                        (திங்கட்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும்.

                        இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை

                        காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து,

                        உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக,

                        உன்னைத்தேடி, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி

                        ஐந்துக்கும் மேல் பிரமாண்டமன படங்களை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

                        இவர் கடந்த பத்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு லட்சுமி என்ற

                        மனைவி மற்றும் அசோக், அஸ்வின் (கும்கி) ஆகிய மகன்களும் உள்ளனர். அன்னாரது மறைவுக்கு திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

                          Posted in சினிமா

                          அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

                          அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

                          தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் பிரியா ஆனந்த், அவர்கள் காதலர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

                          அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்
                          பிரியா ஆனந்த்


                          பிரியா ஆனந்துக்கும், அதர்வாவுக்கும் காதல்… இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும், பிரியா ஆனந்துக்கும்,

                          கவுதம் கார்த்திக்கும் காதல்… இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

                          அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் சொல்கிறார்:-

                          கவுதம் கார்த்திக் – அதர்வா

                          “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என் நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல. இதை நாங்கள் மூன்று பேருமே

                          தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே

                          விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன்’’ என்றார்.

                          Posted in சினிமா

                          முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா.

                          முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா.

                          தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெனிலியா, தன்னுடைய முதல் பட நாயகனுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து இருக்கிறார்.

                          முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
                          ஜெனிலியா


                          சங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

                          இந்தப் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இதில் சித்தார்த் –

                          ஜெனிலியா ஜோடியின் நடிப்பு அதிகளவில் பேசப்பட்டது. இந்த ஜோடி தமிழில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில்

                          பல படங்களில் நடித்தார்கள். அதில் ஒரு திரைப்படம் தான் ‘பொம்மரிலு’. இந்த படம் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற

                          பெயரில் ரீமேக் ஆனது. ஆனால், இதில் ஜெயம் ரவி-ஜெனிலியா நடித்து இருந்தார்கள்.