Posted in சினிமா

கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்

கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக நடிகர் விஷால் களமிறங்கி

இருக்கிறார்.கங்கனா – விஷால்நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகை கங்கனா ரணாவத் மும்பையைப் பற்றியும்,

மகாராஷ்டிரா மாநிலம் குறித்தும் அவதூறாகப் பேசி கருத்துத் தெரிவித்தார். இதனால் நடிகை கங்கனா ரணாவத்துக்கும்,

சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.
மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனா

ரணாவத் வீட்டில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின்

வீட்டை இடித்தது. கங்கனாவும் மும்பை வந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. தொடர்ச்சியாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே

மீது குற்றம் சாட்டியும், சவால் விடுத்தும் வருகிறார் கங்கனா ரணாவத்.


இந்நிலையில், கங்கனாவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.

Posted in சினிமா

வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
வடிவேல் பாலாஜி – விஜய் சேதுபதி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.

வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதையடுத்து அவரை

அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி

மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதி உதவியும் அளித்தார்

Posted in சினிமா

உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை

உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை

சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி டுவிட் செய்துள்ளார்.

உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
டாப்சி, சுஷாந்த் சிங்


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் மரண வழக்கு

தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி இருக்கிறது. நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக்

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட

விசாரணையை தொடர்ந்து நேற்று நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார்.

டாப்சியின் டுவிட்டர் பதிவு

ரியாவின் கைது பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை டாப்சி போட்ட டுவிட்

சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப் பொருளை, தேனீரியில் கலந்து கொடுத்தார்

என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும்

உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் சுஷாந்த்தின் ரசிகர்கள் பலரும் டாப்சியை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Posted in சினிமா

காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை

காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தனது காதலனுடன் ஏர்போர்ட்டில் ஜாலியாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கொரோனா குணமானதும் காதலனுடன் கிளம்பிய பிரபல நடிகை
நிக்கி கல்ராணி, ஆதி
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும்

காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக

காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இந்த செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.

ஆதி, நிக்கி கல்ராணி

இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஐதராபாத் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு ஒன்றாக செல்லும்

புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர்கள்

இருவரும், ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும்

காதலிப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

Posted in சினிமா

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.

தனுஷ் பட நடிகை ஒருவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை…. திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்
சாரா அலிகான்


பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்- நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி

படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது

திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்

வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டு புத்தகம் படித்தபடி அந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் சாரா அலிகான்.

சாரா அலிகான்

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கும் அத்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அக்‌ஷய்குமாரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Posted in சினிமா

முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி

முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்- சமீரா ரெட்டி

பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க சிலர் வற்புறுத்தியதாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்ததால் மிரட்டினார்கள்-
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல்

, வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ்,

தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க

வேண்டும் என்றார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.

சமீரா ரெட்டி

நீங்க ஏற்கனவே முசாபிர் படத்தில் அவ்வாறு நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில்

செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள்.

மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, உங்களுடன் நடிப்பது போர் அடிக்கிறது, நீங்கள் ஜாலியாக

இருப்பதில்லை என சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது எனவும் கூறினார். அதன் பின்னர் நான் அவருடன் நடிக்கவே இல்லை” என கூறியுள்ளார்.

Posted in சினிமா

போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது

போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ் பட நடிகை ராகிணி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரபரக்கும் போதைப்பொருள் விவகாரம்… தமிழ் பட நடிகை திடீர் கைது
ராகிணி திவேதி


ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகிணி திவேதி. ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அர்ஜுன் ஜோடியாக மெய்காண் படத்தில் நடித்தார். இந்த படம்

வெளியாகவில்லை. கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி

நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ராகிணி தற்போது போதை பொருள் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உள்பட 3 பேரை போலீசார் கைது

செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷும் கன்னட சினிமாவில் போதை பொருள் பழக்கம் இருப்பது உண்மைதான் என்றார்.

போதை பொருள் பயன்படுத்தும் 16 பேரின் பட்டியலையும் போலீசில் ஒப்படைத்தார்.

ராகிணி திவேதி

இந்த நிலையில் நடிகை ராகிணியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே நடிகை ராகிணி தரப்பில் ஆஜரான வக்கீல், சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி

நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பட நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடைபெறுகிறது. வீட்டில்

சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ராகினியை கைது செய்துள்ளனர். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Posted in சினிமா

பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்

பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்

பார்க்கில் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியதாக கோமாளி நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பார்க்கில் அரைகுறை ஆடையில் நடனம்… கோமாளி நடிகையை தாக்க முயன்ற பொதுமக்கள்
சம்யுக்தா ஹெக்டே


ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை

பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருவார். இதற்கென்று தனி

ரசிகர்கள் உண்டு. ஆனால், இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை மூலம் பகிர்ந்த தகவல் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சம்யுக்தா ஹெக்டே

ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து

அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார்.

Posted in சினிமா

திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்

திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்

திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா…. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்
சூர்யா
மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. விஜய்யின்

திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என போஸ்டர், என தினமும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல் அஜித் ரசிகர்களும், வலிமை திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் எந்த தளத்திலும்

காண மாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அதை போஸ்டராக அடித்து ஒட்டினர். இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சூர்யா போஸ்டர்

செப்டம்பர் 5 ஆம் தேதி சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து

‘திரையுலகை ஆண்டது போதும்… தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…!’ என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன், தமிழக

சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Posted in சினிமா

தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?

தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

தளபதி 65 அப்டேட் – ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா
விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஊரடங்கு காரணமாக

இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த

படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

விஜய்

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவெனில், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான ‘தளபதி’

படத்தின் தலைப்பை இந்த படத்துக்கு வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் குறித்து

இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை

வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், தன்னுடைய வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்திருக்கிறார்.

வீட்டுக்குள் வந்த பாம்பை துணிச்சலாக பிடித்த நடிகை… வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது

சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ’தும்பா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான கீர்த்தி, தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி பாண்டியன் விவசாய பணிகளை செய்து அதை தனது

சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. தற்போது தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு

ஆளாக துணிச்சலாக பிடித்த கீர்த்தி பாண்டியன், அதை அடிக்காமல் பக்கெட்டில் போட்டு வெளியே கொண்டு விட்டுள்ளார்.

கீர்த்தி பாண்டியன்

அதை வீடியோ பதிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கீர்த்தி

பாண்டியனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த இளம் நடிகையின் வீர செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு

விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

விஜய் ஆண்டனி எடுத்த திடீர் முடிவு… குவியும் பாராட்டு
விஜய் ஆண்டனி
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தமிழ்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் ‘தமிழரசன்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘காக்கி’, உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

கொரோனா பிரச்னையால் பொருளாதார ரீதியாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தனது

சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

விஜய் ஆண்டனி

தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதால் நடிகர் விஜய் ஆண்டனி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என்

தயாரிப்பாளர்களுக்காகவும், என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் பெப்சி தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான

பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்” என்று கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள்.

Posted in சினிமா

மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள்

மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகளை பார்த்ததும் மகிழ்ச்சி… எஸ்.பி.பி. எழுதி காட்டிய 3 வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது
எஸ்.பி. பாலசுப்ரமணியம் எழுதிய 3 வார்த்தைகள்


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு

மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான

அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியுள்ளார்.

சரண், எஸ்.பி. பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பி உடல்நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95 சதவீத சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற் போது

சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில வி‌ஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் பேனா,

பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார்.

லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்சுகள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள்

என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார். இவரின் இந்த எழுத்து குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்

பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்

நடிகை பூர்ணிமா பாக்யராஜின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்
பூர்ணிமா பாக்யராஜின் தாயார்


தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா என புகழ்பெற்றவர் பாக்யராஜ். கடந்த 1984 -ம் ஆண்டு

பிரபல நடிகையான பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவின் தாயார் சுப்புலட்சுமி ஜெயராம். இவருக்கு வயது 85.

பூர்ணிமாவின் தாயார்

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சுப்புலட்சுமி ஜெயராமின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Posted in சினிமா

பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை.

பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை.

விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 – பிரபல நடிகையிடம் அதிக தொகைக்கு பேச்சுவார்த்தை
பிக்பாஸ் சீசன் 4


வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும்

ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.

தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக

இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

ஷில்பா மஞ்சுநாத்

இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ‘இஸ்பேட்

ராஜாவும் இதயராணியும்’ பட கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் ஷில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்வதற்கு சம்பளமாக ரூ.1 கோடி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

    Posted in இணைய தளங்கள்2000 சினிமா

    நடிகைகள் மோதல் – -கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி

    நடிகைகள் மோதல் – -கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி

    சீரியல் நடிகைகளான சித்ரா மற்றும் ஷிவானி இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நடிகைகள் மோதல் – கமெண்ட் அடித்த சித்ரா…. கடுப்பாகி கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி
    சித்ரா, ஷிவானி


    பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார்

    . இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான சித்ராவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை

    வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் கவர்ச்சி புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்றார்.

    அதற்கு பதிலளித்த சித்ரா அதுபோன்ற படங்களை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்றால்

    2000-ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழே ஒரு ரசிகர்

    நடிகை ஷிவானியைத் தானே சொல்கிறீர்கள் என்று கேட்டார். இது சர்ச்சையானது. ஷிவானியும் சித்ரா மீது கோபமானார்.

    சித்ராவின் கமெண்ட், சிவானியின் இன்ஸ்டாகிராம் பதிவு

    சித்ராவுக்கு பதில் அளிக்கும் வகையில் “என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது

    ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்று பகிர்ந்து சித்ராவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்

    . கெட்ட வார்த்தையிலும் திட்டினார். இதுபோல் இருவரின் ரசிகர்களும் பதிவுகளை வெளியிட்டு அவர்களின் மோதலை பெரிதாக்கினர்

      Posted in சினிமா

      நடிகை வித்யூலேகாவிற்கு விரைவில் டும்டும்டும்

      நடிகை வித்யூலேகாவிற்கு விரைவில் டும்டும்டும்

      பிரபல நகைச்சுவை நடிகையான வித்யூலேகாவிற்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.

      நடிகை வித்யூலேகாவிற்கு விரைவில் டும்டும்டும்…. நிச்சயதார்த்தம் முடிந்தது
      சஞ்சய், வித்யூலேகா


      கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக

      அறிமுகமானவர் வித்யூலேகா. இதையடுத்து தீயா வேலசெய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்து

      பிரபலமானார். இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார்.

      வித்யூலேகா, சஞ்சய்

      நடிகை வித்யூலேகா, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அனைவருக்கு அதிர்ச்சி அளித்தார்

      . இந்நிலையில், நடிகை வித்யூலேகாவிற்கு, சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த

      மாதம் 26-ந் தேதி நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்

        Posted in சினிமா

        பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்

        பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்

        பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளார்.

        பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சல்மான்கான்
        சல்மான்கான்
        தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட

        மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்க உள்ளது.

        இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை நடிகர்

        சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர்.

        ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். ஒரு நாள் படப்பிடிப்பில் 2 எபிசோடுகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். பிக்பாஸ் 4-வது சீசன்

        முதல் 6-வது சீசன் வரை ஒரு நாள் சம்பளமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வாங்கினார். 7-வது சீசனில் இது ரூ.5 கோடி ஆனது. 2015-ல் எட்டு கோடியாகவும் பின்னர் ரூ.11 கோடியாகவும் உயர்த்தினார்.

        சல்மான்கான்

        தற்போது ஒரு நாள் சம்பளம் ரூ.20 கோடியே 50 லட்சமாக உயர்த்தி உள்ளார். கொரோனா ஊரடங்கில் திரையுலகம் முடங்கிய நிலையிலும் சல்மான்கான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்க

        ஆரம்பித்துள்ளார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை வாங்குகிறார். படத்தின் வசூலிலும் அவருக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.

          Posted in சினிமா

          காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?

          காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?

          நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

          காதலருடன் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா – எங்கு சென்றார்கள் தெரியுமா?
          விக்னேஷ் சிவன், நயன்தாரா


          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக

          வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

          இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக சென்னையில்

          இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

          நயன்தாரா, விக்னேஷ் சிவன்

          கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு

          விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

          காதலருடன் தனி விமானத்தில்
          காதலருடன் தனி விமானத்தில்
          Posted in சினிமா

          முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

          முதலில் அம்மா… நேற்று அப்பா.. என்று நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

          முதலில் அம்மா… நேற்று அப்பா.. அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகை நிலா
          நிலா என்கிற மீரா சோப்ரா


          இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் கொரோனாவில் இருந்து வெகு விரைவில் மீள்வது

          மகிழ்ச்சியளித்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

          இந்நிலையில் அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா தனது

          சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், என் நண்பர் ஒருவர் கொரோனாவினால் தனது பெற்றோரை இழந்து விட்டார்.

          மீரா சோப்ரா வின் பதிவு

          முதலில் அம்மா, நேற்று அப்பா. சில விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. தேவை

          இருந்தால் மட்டுமே வெளியே செல்லுங்கள். மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.