Tag: டாப்சி
புதிய அவதாரம் எடுத்த டாப்சி
புதிய அவதாரம் எடுத்த டாப்சி
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை டாப்சி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
புதிய அவதாரம் எடுத்த டாப்சி
டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி
நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம்
உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் ‘சபாஷ் மிது’, ‘ராஷ்மி ராக்கெட்’, ‘டூபாரா’, ‘லூப் லபேடா’ உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இந்நிலையில், நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார்.
டாப்சி
இதுகுறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது 11 வருட சினிமா வாழ்க்கையில்
ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் அளித்துள்ளனர். என்னைப்போல் எந்த
பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு எனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு நடிகை டாப்சி
திருமணத்துக்கு நடிகை டாப்சி
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் டாப்சி, திருமணத்துக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளாராம்.
திருமணத்துக்கு நடிகை டாப்சி நிபந்தனை
டாப்சி
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது அதிக இந்தி படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் மற்றும் திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: “எல்லா
துறைகளையும் போல் சினிமாவும் போட்டி நிறைந்த துறையாக உள்ளது. இதனால் கேமராவுக்கு முன்னால் நிற்கும் நடிகர், நடிகைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ரசிகர்கள் தரும் ஆதரவுக்கு
நாங்கள் கொடுக்கும் விலையாகவே போட்டி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொள்கிறோம்.
போட்டி நிறைந்த எல்லா துறைகளிலுமே சங்கடங்கள் உள்ளன. போட்டியும், மன அழுத்தமும் இல்லாத துறை எதுவும் இல்லை. எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள
கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். காதல் என்பது பொழுதுபோக்கு இல்லை.
டாப்சி
எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து
கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்ற வருத்தம் அவர்களுக்கு உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் டாப்சி, நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
டாப்சி
இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து
வருகிறது. அவர்கள் இருவருக்கும் போட்டியாக, தற்போது நடிகை டாப்சியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் நடித்த 6 இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார்.
இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம். அவர் நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்து
அடுத்து வெளிவர இருக்கும் இந்தி படம், ‘ரேஷ்மி ராக்கெட்.’ இது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதை, இது.
டாப்சி
இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர், தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தா பெரியசாமி. ஆகார்ஷ் குரானா இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரேணி ஸ்குருவாலா
தயாரித்துள்ளார். இந்த படம் டாப்சியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு, ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் தமிழ்,
தெலுங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி
கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்சி தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
டாப்சி அளித்த பேட்டி வருமாறு: சினிமாவுக்கு வந்த புதிதில் மளமளவென பட வாய்ப்புகளை ஒப்புக்கொண்டேன். அதனால் என்மீது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரை விழுந்தது.
கவர்ச்சியாக கதாநாயகனுடன் சேர்ந்து ஆடுவது, பாடுவது, செடியையும், மரத்தையும் சுற்றி ஓடுவது என்று இருந்தால் வளர முடியாது என்பதையும், எனக்கு இருக்கிற திறமைக்கு இப்படி நடிப்பது சரியல்ல என்றும் புரிந்தேன்.
ஆனாலும் கண்ணை முடி திறப்பதற்குள் மூன்று வருடங்கள் அதுமாதிரி நடித்து விட்டேன். அப்படி நடிப்பது பிடிக்கவில்லை.
கதாநாயகி என்பதை விட நடிகையாக ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தென்னிந்திய பட உலகில் எனது கனவு நிறைவேறவில்லை. அதனால் இந்தியில் முயற்சிகளை தொடங்கினேன்.
டாப்சி
இப்போது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரையை அழித்து விட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய நடிகையாக பெயர் வாங்கி விட்டேன்.
கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.
என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்
என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்
தகுதி இல்லாத நடிகை என விமர்சித்த ரசிகர்கருக்கு நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
என்னை தகுதியற்ற நடிகை என்பதா? – நடிகை டாப்சி ஆவேசம்
டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்சி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சர்ச்சை
கருத்துகளை துணிச்சலாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில்
நடித்தபோது, படத்தின் கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்காமல் போனதால் படத்தில் இருந்தே நீக்கி விட்டனர் என்றார்.
இந்தி பட உலகில் நிலவும் போதை பொருள் விவகாரம், வாரிசு அரசியல் போன்றவற்றை விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கங்கனாவின் ரசிகர்கள் டாப்சியை விமர்சித்தனர்.
டாப்சி
இந்த நிலையில் டாப்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர், நீங்கள் தகுதி இல்லாத நடிகை, சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டி பதிவிட்டு இருந்தார்.
இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த பதிவை டாப்சி ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, என்னை தகுதியாக்க என்ன செய்ய வேண்டும்.
நான் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். அது உங்கள் கண்களுக்கு தெரியாத தகுதியைத்தான். உங்கள் கருத்தை இன்னும்
நான்கைந்து முறை பகிருங்கள். அது எனக்கு புரிகிறதா என்று பார்க்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என நடிகை டாப்சி டுவிட் செய்துள்ளார்.
உயிரோடு இருந்திருந்தால்… இந்நேரம் சுஷாந்த் தான் ஜெயில்ல இருந்திருப்பார் – டாப்சியின் டுவிட்டால் சர்ச்சை
டாப்சி, சுஷாந்த் சிங்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் மரண வழக்கு
தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி இருக்கிறது. நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோவிக்
போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட
விசாரணையை தொடர்ந்து நேற்று நடிகை ரியாவும் கைது செய்யப்பட்டார்.
டாப்சியின் டுவிட்டர் பதிவு
ரியாவின் கைது பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை டாப்சி போட்ட டுவிட்
சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப் பொருளை, தேனீரியில் கலந்து கொடுத்தார்
என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும்
உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதனால் சுஷாந்த்தின் ரசிகர்கள் பலரும் டாப்சியை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.






