Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
சாமி தரிசனம் செய்த யோகி பாபு
சாமி தரிசனம் செய்த யோகி பாபு
கடவுள் பக்தி அதிகம் கொண்ட நடிகர் யோகி பாபு, சிவன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு தரிசனம் செய்து இருக்கிறார்.
சுருட்டப்பள்ளி கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு
கோவிலில் யோகி பாபு
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் யோகி பாபு, கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். இந்நிலையில் இவர் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கிறார்.
யோகி பாபு
அங்கு சிறப்பு தரிசனம் செய்த யோகி பாபுக்கு, கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி நிர்வாக அதிகாரிகள் கவுரவித்தனர்.
சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்த பிரபலமான மிருதுளா விஜய், சின்னத்திரை நடிகரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
சின்னத்திரை நடிகரை மணந்தார் மிருதுளா விஜய்
கணவருடன் மிருதுளா விஜய்
பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் இவர் நடித்த பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.
இவருக்கும் மலையாள டிவி நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது.
மிருதுளா விஜய்
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை
அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை
முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பாணியில் பிரபல நடிகை ஒருவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
அஜித் பாணியில் அசத்தும் பிரபல நடிகை… குவியும் வாழ்த்துகள்
அஜித் – நிவேதா பெத்துராஜ்
’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
நிவேதா
நிவேதா பெத்துராஜ்
கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் கார் ஓட்டியது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.
நிவேதா
இந்த நிலையில் தற்போது ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அஜித் பாணியில் நிவேதா கார் ரேஸில் இறங்கிவிட்டார் என்று பாராட்டி வருகின்றனர்.
பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாட்ஷா ஸ்டைலில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ரஜினி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று பாட்ஷா. இந்த படத்தில் வில்லன்களுடன் அமர்ந்து பேசும்போது ரஜினியின் பக்கத்தில் நாய் ஒன்று இருக்கும்.
ரஜினி
அதேபோல் அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் ரசிகர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினியின்
பக்கத்தில் நாய் ஒன்று உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே பாட்ஷா படக்காட்சியை பார்ப்பது போலவே இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா
புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன் என்று வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புருஷன் யாருனு கேட்கிறாங்க… வனிதா வருத்தம்
வனிதா
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வனிதா அளித்த பேட்டியில், “தனியார் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை
சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின்
மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.
மாதர் சங்கம் எந்தப் பெண்ணிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன். எந்தவொரு
மாதர் சங்கமும் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரத்துக்காக சப்போர்ட் செய்கிறார்கள்.
வனிதா
சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட
விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள் என்றார்.
சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்
சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்
சூப்பர்மேன் பட இயக்குனர் ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சூப்பர்மேன் பட இயக்குனர் மரணம்
சூப்பர்மேன்
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர். இவர் 1978-ல் வெளியான சூப்பர்மேன் படத்தை இயக்கி பிரபலமானார். சூப்பர் மேன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த
படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது. தற்போதைய அனைத்து சூப்பர்மேன் படங்களுக்கும் இவை முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன
இவர் லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை உருவாக்கினார். இதுதவிர த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். ரிச்சர்ட் டோனருக்கு திடீர்
உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்தியில் ரீமேக் ஆகும் சமந்தா படம்
இந்தியில் ரீமேக் ஆகும் சமந்தா படம்
நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
இந்தியில் ரீமேக் ஆகும் சமந்தா படம்
சமந்தா
தமிழில் வெற்றி பெற்ற படங்களுக்கு தற்போது இந்தியில் மவுசு அதிகரித்துள்ளது. அதன்படி மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, அந்நியன், மாநகரம், கோலமாவு கோகிலா, ஜிகர்தண்டா,
துருவங்கள் பதினாறு, ஆரண்ய காண்டம் ஆகிய படங்கள் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘யூ டர்ன்’ படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
யூ டர்ன் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதன் இந்தி ரீமேக்கில் சமந்தா
கதாபாத்திரத்தில் நடிகை அலயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்
இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தி நடிகர் திலீப்குமார் காலமானார்
திலீப்குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு
காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே
சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன்
நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
நோ கமெண்ட்ஸ்… வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் கருத்து
ரம்யா கிருஷ்ணன் – வனிதா
பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு வனிதா அறிக்கை வெளியிட்டார்.
அதில் சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்று கூறப்பட்டது.
வனிதா – ரம்யா
இந்நிலையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை
. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் ‘நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என்று ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது
சனம் ஷெட்டி
அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.
சனம் ஷெட்டி
இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்து திருவான்மியூர் காவல்
நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி…
பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகரை நேரில் சந்தித்த ஷிவானி… வைரலாகும் புகைப்படம்
ஷிவானி நாராயணன்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்
ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் இன்று விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷிவானி
ஷிவானி நாராயணன் – விஜய் சேதுபதி
அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஷிவானி
நாராயணன் நடிக்க போகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் -தீபிகா படுகோனே
எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் -தீபிகா படுகோனே
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, இதுவரை எந்த நடிகையும் நடித்திராத கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.
புராண கதைகளில் தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே
2 வருடங்களுக்கு முன்பே மகாபாரதம் கதையை படமாக்கும் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாததால் படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது.
இதற்கிடையே இந்த படத்தை தயாரிக்கும் மது மந்தனா தற்போது அளித்துள்ள பேட்டியில்,
“மகாபாரதம் கதையை படமாக்கும் நேரம் வந்து விட்டது. இந்த படத்தின் கதை தீபிகா படுகோனேவுக்கு பிடித்துபோனதால் திரவுபதியாக நடிக்க முன்வந்துள்ளார்.
புராணங்களை படமாக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கடும் முயற்சிகள் எடுத்து எல்லா தகவல்களையும் சேகரித்தோம். இப்போது மகாபாரதம் கதையை படமாக்கும்
அனைத்து தகவல்களும் எங்களிடம் இருக்கிறது. இந்த படத்தை எடுக்க கொஞ்சகாலம் ஆகும். அதற்குள் ராமாயணத்தை படமாக்கும் வேலையை தொடங்க இருக்கிறோம்’’ என்றார்.
தீபிகா படுகோனே
ராமாயணம் படத்திலும் சீதையாக நடிக்க தீபிகா படுகோனேவை தேர்வு செய்துள்ளனர்.
சீதையாகவும், திரவுபதியாகவும் நடிக்கும் பெருமை தீபிகா படுகோனேவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எந்த நடிகையும் 2 கதாபாத்திரங்களிலும் நடிக்கவில்லை.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி
தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, வடகறி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் சுவாதி
சுவாதி
தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள்
இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடலில் சுவாதியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். சில
மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பிய சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
சுவாதி
படப்பிடிப்பில் சுவாதி
இந்தநிலையில் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு
தற்போது தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.
இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா
இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வடிவேலு பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா?
நயன்தாரா
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.
அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல
ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
நயன்தாரா
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தமிழில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி, வடிவேலு நடித்த
தெனாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய யுவராஜ், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
நடிப்பது உண்மையா? – நடிகை மீனா அளித்த பதில்
நடிப்பது உண்மையா? – நடிகை மீனா அளித்த பதில்
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
பாபநாசம் 2-வில் நடிப்பது உண்மையா? – நடிகை மீனா அளித்த பதில்
மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.
நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
இதுதவிர பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக
கலந்துரையாடிய நடிகை மீனாவிடம், ரசிகர் ஒருவர் ‘பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், அதை நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
கொலை மிரட்டல் – 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
கொலை மிரட்டல் – 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
நடிகை ராதா தனது இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கிறார்… 2-வது கணவர் மீது நடிகை ராதா மீண்டும் புகார்
நடிகை ராதா
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ள நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில்
சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், கணவர் வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராதா, பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக புகாரை வாபஸ் பெற்றார்.
ராதா, வசந்தராஜா
ராதா, வசந்தராஜா
இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ராதா.
அந்த புகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக வசந்தராஜா கூறியதாகவும், போலீசில் புகார் கொடுத்து
என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாகவும், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர்
மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு
கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு
முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு… குவியும் லைக்குகள்
யோகி பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரும் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜனும் நண்பர்கள்.
சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை பார்த்து நடராஜன் பாராட்டி இருந்தார்.
யோகி பாபு
யார்க்கர் கிங் நடராஜன் – யோகி பாபு
இந்த நிலையில் யோகி பாபு, நடராஜனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் மற்றும் யோகி பாபு இருவரும் தனது சமூக
வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்
மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது…. மனைவியை விவாகரத்து செய்யும் அமீர்கான்
மனைவியுடன் அமீர்கான்
நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது.
எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க
விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம்.
சில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம்.
எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம்.
அமீர்கான்
இந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் புரிந்து கொண்டதற்கும் நன்றி. எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள்
கேட்டுக்கொள்வது என்னவெனில் எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்களும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை
3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை
தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார்.
நிச்சயதார்த்தமான 3 மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை
மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
மெஹ்ரீன் பிர்சாடா, பவ்யா பிஷ்னோய்
தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும்
திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு
தொடர்பு இல்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்
இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இமான் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்…. பாராட்டும் ரசிகர்கள்
இமான்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழுவினர் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்கள்.
இந்த போஸ்டரில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க இசையமைப்பாளர் இமான் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இமான்
ரசிகர்களும் இமானுக்கு டேக் செய்து, உங்கள் பெயர் போஸ்டரில் இல்லை, எனினும் போஸ்டரை பகிர்ந்திருப்பது உங்களின் பெருந்தன்மை என பலரும் பாராட்டி உள்ளனர்.











