Posted in சினிமா

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு

நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்புவின் டுவிட்டர் கணக்கை விஷமிகள் சிலர் முடக்கி இருந்தார்கள்.

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
குஷ்பு


தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி

வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார்.

குஷ்பு
முடக்கம் செய்யப்பட்ட போது இருந்த டுவிட்டர் பக்கம்

இந்நிலையில், இன்று காலை நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அவர் பதிவிட்டிருந்த அனைத்து

பதிவுகளும் அழித்து ஹேக்கர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். மேலும் டுவிட்டர் பக்கத்தில் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

குஷ்பு
மீட்கப்பட்ட நிலையில் இருக்கும் டுவிட்டர் பக்கம்

இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை குஷ்பு பதிவு செய்திருந்த அனைத்து பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளது.

Posted in சினிமா

வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்

வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அமலாபாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்
அமலாபால்


தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு,

மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா

    கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா

    தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் படங்களில் நடித்த பத்மபிரியா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

    மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா
    பத்மபிரியா


    சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், உள்ளிட்ட படங்களில்

    நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

    பத்மபிரியா

    தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் பத்மபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா, மலையாளத்தில்

    பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் பல படங்களில் நடிக்க பத்மபிரியா ஆர்வம் காண்பித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

      Posted in சினிமா

      போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்

      போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்

      தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார்.

      போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்… வைரலாகும் வீடியோ
      ரித்திகா சிங்


      சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய

      குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.

      இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.

      இந்நிலையில், ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.

      ரித்திகா சிங்

      அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள

      பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல்

        அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல்

        தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன.

        அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல் அகர்வால்
        காஜல் அகர்வால்


        இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் குயீன். இப்படத்தை தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் நடிகை காஜல்

        அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த

        2018-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீசாகவில்லை.

        இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலிடம், இப்படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த காஜல், “பாரிஸ் பாரிஸ்

        திரைப்படம் எப்போது வரும் என்று எனக்கும் கூடத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

          Posted in சினிமா

          காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன்

          காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன்

          நடிகை சுருதிஹாசன், தனது காதலன் சாந்தனுவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

          காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன் – வைரலாகும் புகைப்படம்
          சுருதிஹாசன்


          நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு

          ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும்

          கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் சுருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பரவி வருகிறது.

          அந்தவகையில், சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் சுருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி

          புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

          நடிகை சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு
          நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்

          சுருதிஹாசன் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

          சுருதியின் காதலன் சாந்தனு ஹசாரிகா ராப் பாடகர் ஆவார். இதுதவிர டூடுல் கலைஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

            Posted in சினிமா

            சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா

            சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா

            தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

            சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா
            ராஷ்மிகா


            கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம்

            ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

            சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த்

            மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

            இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள்

            எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், சுருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.

              Posted in சினிமா

              நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்

              நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்

              தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் நிவேதா பெத்துராஜ், பார்ட்டி, பொன் மாணிக்கவேல், விராட பருவம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

              பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்
              நிவேதா பெத்துராஜ்


              ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில்

              நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

              அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம்

              ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

              ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.

              இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

                Posted in சினிமா

                மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி

                மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி

                நடிகர் விஜயகுமாரின் மகளும், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த பிரபல நடிகையுமான ஸ்ரீதேவி, தனது மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டிருக்கிறார்.

                மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி
                ஶ்ரீதேவி


                1992ம் ஆண்டு வெளியான ரிக்சா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

                படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

                இந்நிலையில் குடும்பத்துடன் வசித்து வரும் ஸ்ரீதேவி, தனது மகளின் 5வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

                ஶ்ரீதேவி

                அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

                  Posted in சினிமா

                  வெப் தொடரில் நயன்தாரா

                  வெப் தொடரில் நயன்தாரா

                  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

                  பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா?
                  நயன்தாரா


                  தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர்.

                  இந்த நிலையில் பாகுபலி 3-ம் பாகம் வெப் தொடராக தயாராக உள்ளது. பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த

                  தொடர் தயாராக உள்ளது என்றும், பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

                  நயன்தாரா

                  இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. அந்த வகையில், இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்

                  நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை பிடித்துள்ளதால் நயன்தாரா நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

                  படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது

                  . காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                    Posted in சினிமா

                    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

                    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

                    தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

                    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
                    சோனு சூட்


                    தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். கள்ளழகர், மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

                    சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது 6

                    மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

                    சோனு

                    இதை எதிர்த்து சோனுசூட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஓட்டலாக மாற்றிய கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் அடுக்குமாடி

                    குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

                    Posted in சினிமா

                    இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

                    இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

                    சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

                    இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா… காரணம் தெரியுமா?
                    சூர்யா


                    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

                    சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூன் 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.

                    டிரெண்டிங்

                    இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி – யை இன்று வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

                    மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

                      Posted in சினிமா

                      நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

                      நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

                      வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி நட்ராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

                      நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்
                      நட்டி நட்ராஜ்


                      ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

                      இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

                      நட்டி நட்ராஜ்
                      படக்குழுவினருடன் நட்டி நட்ராஜ்

                      கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

                        Posted in சினிமா

                        நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்

                        நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்

                        முன்னணி நடிகைகளான ஐந்து பேர், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

                        முன்னணி நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்
                        கருங்காப்பியம் படத்தில் நடிக்கும் நடிகைகள்


                        ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இந்த படத்தில் நடிகைகள்

                        காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான்

                        விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

                        இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ்,

                        பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

                        இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                          Posted in சினிமா

                          ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

                          ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

                          தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

                          ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு
                          விஜய்


                          நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை

                          எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

                          இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய

                          கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு

                          செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

                          விஜய்

                          இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

                            Posted in சினிமா

                            புதிய அவதாரம் எடுத்த டாப்சி

                            புதிய அவதாரம் எடுத்த டாப்சி

                            தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை டாப்சி, தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

                            புதிய அவதாரம் எடுத்த டாப்சி
                            டாப்சி


                            தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி

                            நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம்

                            உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் ‘சபாஷ் மிது’, ‘ராஷ்மி ராக்கெட்’, ‘டூபாரா’, ‘லூப் லபேடா’ உள்ளிட்ட படங்கள் உள்ளன.

                            இந்நிலையில், நடிகை டாப்சி புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ என பெயரிட்டுள்ளார்.

                            டாப்சி

                            இதுகுறித்து நடிகை டாப்சி கூறியதாவது: “சினிமா மீதான எனது அன்பை வெளிப்படுத்துவதற்காக, நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன். எனது 11 வருட சினிமா வாழ்க்கையில்

                            ரசிகர்கள் எனக்கு நிறைய அன்பையும், ஆதரவையும் அளித்துள்ளனர். என்னைப்போல் எந்த

                            பின்னணியும் இன்றி வந்து சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு எனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

                              Posted in சினிமா

                              பிரபுதேவா படத்தில் நடிக்கும் 2 கதாநாயகிகள்

                              பிரபுதேவா படத்தில் நடிக்கும் 2 கதாநாயகிகள்

                              பிரபுதேவா நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.

                              பிரபுதேவா படத்தில் நடிக்கும் 2 கதாநாயகிகள்
                              பிரபுதேவா


                              ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இவர் அடுத்ததாக இயக்கும்

                              திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

                              பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில்

                              தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார்.

                              வரலட்சுமி
                              ரைசா – வரலட்சுமி சரத்குமார்

                              இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

                                Posted in சினிமா

                                ரஜினி பட வாய்ப்பை தவறவிட்டேன் – வருத்தப்படும் நடிகை

                                ரஜினி பட வாய்ப்பை தவறவிட்டேன் – வருத்தப்படும் நடிகை

                                தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.

                                ரஜினி பட வாய்ப்பை தவறவிட்டேன் – வருத்தப்படும் நடிகை
                                ரஜினி


                                விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் அறிமுகமான கிரண், தொடர்ந்து அஜித் நடித்த வில்லன், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

                                முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் சகுனி, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

                                தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

                                இதுகுறித்து கூறிய கிரண், பாபா படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டேன். அந்த சமயத்தில் நான் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால்

                                ப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும் நடனத்திலும் அவரை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன் என்றார்.

                                  Posted in சினிமா

                                  கரீனா கபூர் மீது போலீசில் புகார்

                                  கரீனா கபூர் மீது போலீசில் புகார்

                                  பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் மீது மதநம்பிக்கையை புண்படுத்தியதாக சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

                                  நடிகை கரீனா கபூர் மீது போலீசில் புகார்
                                  கரீனா கபூர்


                                  பிரபல இந்தி நடிகை கரீனா கபூருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து கரீனா கபூர் புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்டார்.

                                  “பிரக்னன்சி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தை அவர் தனது 3-வது குழந்தை என குறிப்பிட்டு இருந்தார். இந்த புத்தகத்தின் தலைப்பில் உள்ள “பைபிள்” என்ற வாசகம் கிறிஸ்தவ மத

                                  நம்பிக்கையை புண்படுத்துவது போல அமைந்துள்ளதாக ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங் என்ற அமைப்பு மராட்டிய மாநிலம் பீட்டில் உள்ள சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.

                                  கரீனா கபூர்

                                  இதுகுறித்து சிவாஜிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்நாத் தோம்ரே கூறுகையில், “நாங்கள் புகாரை பெற்றுக்கொண்டோம். இருப்பினும் சம்பவம் இங்கு நடக்காததால் இதுகுறித்து

                                  வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மும்பை சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.

                                    Posted in சினிமா

                                    விருதுகளை வென்று குவிக்கும் நயன்தாரா படம்

                                    விருதுகளை வென்று குவிக்கும் நயன்தாரா படம்

                                    நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது.

                                    சர்வதேச விருதுகளை வென்று குவிக்கும் நயன்தாரா படம்
                                    நயன்தாரா


                                    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

                                    இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை

                                    வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.

                                    ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது.

                                    இந்த நிலையில் தற்போது கூழாங்கல் படம் இத்தாலியில் நடந்த சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது. இதற்காக நயன்தாரா

                                    உள்ளிட்ட கூழாங்கல் படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கூழாங்கல் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.