Posted in உலக செய்திகள்

மூதாட்டியை தாக்கி பணத்தை பறித்து செல்லும் திருடன்

மூதாட்டியை தாக்கி பணத்தை பறித்து செல்லும் திருடன்

பிரிட்டனில் குறுகிய சாலை வழியாக தனிமையில் பயணித்த மூதாட்டி ஒருவரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை திருடன் ஒருவன் பறித்து செல்லும் காட்சிகள் அங்கு பொரூ த்த பட்டிருந்த கமராவில் பதிவாகிய நிலையில் அதனை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் .

குறித்த நபர் விரைவில் கைது செய்ய படுவார் என நம்ப படுகிறது

வு குறிப்புகள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 168 பேர் ஒரே பகுதியில் லொத்தரியில் வென்றது எப்படி ..?

பிரிட்டனில் அதிகம் லொத்தரியில் வென்ற மாவட்டம் எது தெரியுமா .? உள்ளே விபரம்

பிரிட்டனில்; 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்க பட்ட லொத்தர் சபை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறது , இந்த லொத்தரியில் அதிகம் வென்ற மாவட்டமாக Birmingham பகுதி உள்ளது ,இங்கு சுமார் 168 பேர் வற்றி பெற்றுள்ளனர்

National Lottery.

இந்த தகவலில் லண்டன் பகுதியில் வென்றதாக காண்பிக்க படவில்லை ,வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீதே இவை திட்டமிடப்பட்டு வீழ்த்த பட்டு வருவதை இந்த புள்ளிவிபரங்கள் காண்பிப்பதை அவதானிக்க முடிகிறது

Posted in உலக செய்திகள்

லண்டன் M6 வீதியில் பற்றி எரிந்த லொறி – படம் உள்ளே

லண்டன் M6 வீதியில் பற்றி எரிந்த லொறி – படம் உள்ளே

பிரிட்டன் M6 வீதியில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,காலை மூன்று மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரு சாலை வழி போக்குவரத்தும் தடை பட்டதுடன் வானில் புகை மூட்டம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

குறித்த சம்பவம் எதனால் இடம்பெற்றது என உடனடியாக தெரியவரவில்லை

Posted in உலக செய்திகள்

ஐ எஸ் தலைவர் சகோதரியை சிறைபிடித்த துருக்கிய இராணுவம்

வடக்கு சிரியாவின் Syria’s Azaz. பகுதியில் நிலை கொண்டு வசித்து வந்த ஐ எஸ் படைகளின் தலைவர் சகோதரியை துருக்கிய இராணுவ சிறப்பு படைகள் திடீர் முற்றுகையிட்டு மடக்கி பிடித்துள்ளனர் ,குடும்பத்துடன் அள்ளி சென்றுள்ளனர் .

குறித்த அமைப்பின் தலைவர் அமெரிக்கா படைகளினால் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி தாக்குதல்

ஈராக் – நாட்டில் ஆளும் ஆட்சியாளருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,

இவர்களின் இந்த போராட்டத்தை அடக்கும் முகமாக அந்த மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூட்டை நடத்தியது ,இதில் சிலர் பலி யாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

இத்தாலியில் மலைப்பகுதியில் வாழ வீடு இலவசம்

இத்தாலி நாட்டின் நிலப்பரப்பில் அதிகளாவனவை மலைகளை சுற்றியுள்ள மேற்படி மலை பகுதியில் அதிகளவான வீடுகள் காலியாக காண படுகின்றன .

,மக்கள் அச்சத்தில் அந்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றனர் ,இதனை அறிந்த அரசு அந்த பகுதியில் மக்களை மீள் குடியேற்ற புதிய திட்டத்தையே அறிவித்துள்ளது .

குறித்த பகுதியில் வாழ விரும்பவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் வீடு இலவசம் ,மேலும் பணமும் போனஸாக வழங்க படுகிறது ,

அப்புறம் என்ன நீங்களும் ஓடி தப்புங்க ,மறக்காதீங்க குறித்த பகுதியில் எரிமலை மற்றும் நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிட தக்கது

ரோட்டுக்கடை காளான் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம்| Roadside kaalan masala|street food mushroom
Posted in உலக செய்திகள்

லொறியில் லண்டனுக்குள் புக முனைந்த 31 அகதிகள் சிக்கினார்

பிரான்சில் லாரியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் சிக்கினர்

இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸெக்ஸ் நகரில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து வியட்நாமை

சேர்ந்த 39 பேர் உடல்கள் மீட்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் அகதிகள் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு

லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் பதுங்கி இருப்பதை

கண்டனர். லாரியின் டிரைவர் கைது செய்யப்பட்டார். அகதிகள் அனைவரும் இத்தாலி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Posted in உலக செய்திகள்

ஐ எஸ் வெறி செயல் – 44 இராணுவம் சுட்டு கொலை

49 வீரர்களை பலிகொண்ட மாலி தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்புஐ எஸ் வெறி செயல்

மாலி நாட்டின் மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் ராணுவ சாவடியில் கடந்த 1-ந் தேதி பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டும்,

குண்டுகளை வெடித்தும் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 53 வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறின.

இந்த தாக்குதலில் 49 வீரர்கள் பலியானதாக இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில்

வெளியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அறிக்கையில், “மாலியில் இன்தெலிமானில் ராணுவ சாவடியில் நமது

போராளிகள் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக மாலி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை மந்திரி

புளோரன்ஸ் பார்லி, மாலிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.ஐ எஸ் வெறி செயல்

Posted in உலக செய்திகள்

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலர் சுட்டுக்கொலை

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ

குவாஜாஜாரா. அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்துகிற கும்பல்களை எதிர்த்து போராடுகிற வன பாதுகாவலர்கள் அமைப்பின் உறுப்பினராக இருந்து வந்தார்.

இவர் அங்குள்ள மரான்ஹாவோ மாகாணத்தில், அராரிபோயா காட்டுப்பகுதியில் கடந்த 1-ந் தேதி

வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பவுலோவின் படுகொலை, அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களுக்காக போராடி வருகிற லாப நோக்கற்ற சர்வைவல்

இன்டர்நேஷனல் அமைப்பு, இதற்கு முன்பும் கூட அமேசான் காடுகள் ஆர்வலர்கள் 3 பேர் தங்கள் உறவினர்களுடன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் டபாடிங்கா நகரில் பூர்வ குடிமக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டு வருகிற சம்பவங்கள், பிரேசில் அதிபர் ஜெயிர்

போல்சொனாரோவுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.

பவுலோ படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன்

நிறுத்துவோம் என்று பிரேசில் நீதித்துறை மந்திரி செர்கியோ மோரோ கூறி உள்ளார்.பிரேசில் நாட்டில் அமேசான் காடு