Posted in இலங்கை செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு

பிரான்ஸ் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு

இன்று சற்று முன்னர் பிரான்ஸ் Henry Dunant private geriatric மருத்துவமனை முன்பாக மர்ம

ஆயுததாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணமாகியுள்ளார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

சில நிமிடங்கள் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது

தற்பொழுது காவல்துறையினர் குவிக்க பாட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,மூன்று

நாட்களுக்கு முன்னரே ஐந்து தாக்குதல் தாரிகள் தாக்குதல் தொடுக்க முன்னர் கைது செய்யப்பட்டதும் ,ஆயுதங்கள் மீட்க பட்டதும் இங்கே குறிப்பிடப் தக்கது

பிரான்ஸ் மருத்துவமனையில்
பிரான்ஸ் மருத்துவமனையில்
    Posted in இலங்கை செய்திகள்

    காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் – முற்றுகையில் குற்றவாளி

    காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் – முற்றுகையில் குற்றவாளி

    இலங்கை பாசறை பகுதியில் நடைபாதை வியாபாரி மீது லஞ்சம் பெறும் நோக்கில் கடும் வார்த்தை பிரயோகத்தில்

    ஈடுபட்டு அவரது வாழ்வாதாரத்தை முடக்கும்நிலையில் செயல் பட்ட கான்ஸடபிள் தர அதிகாரி மீது ஆத்திரமுற்ற

    வர்த்தகர் தாக்குதலை நடத்தினார்
    இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

    அடாவடி மன்னன் நாட்டை ஆளும் பொழுது ,அவர் அதிகார காவல்துறையும் அடவாடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

      விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

      மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர்

      கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

      இவர்களில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 40 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306

      பேரும் மற்றும் பிற குற்றச் செயல்கள் தொடர்பில் 518 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது – விமல் வீரவன்ச

        நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு

        தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன்இ ஒற்றையாட்சி முறைமையின் கீழான அம்சங்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

        இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன என்றார்.

        அநுராதபுரம்- சல்காது பிரதேசத்தில், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’ உற்பத்தி பொருள்கள் அடங்கிய கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

        ‘ஜெனீவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனீவா விவகாரத்தை

        அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது’ என்றார்.

        ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சியென எதிர்தரப்பினர், பராளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள். ரஞ்சனின்

        வெற்றிடத்துக்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க சிறை

        செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை

        எதிர்த்தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவரது விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது என்றார்

        Posted in இலங்கை செய்திகள்

        காராச்சில் சிறுவன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

        மெதிரிகிரிய, யாய 6, திக்கல்புர பிரதேசத்தில் வாகன திருத்துமிடமொன்றில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

        மெதிரிகிரிய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தமித் இந்துசர என் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

        தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வாகன திருத்துமிடத்தில் ட்ரக்டர் வாகனமொன்றை கழுவிக்

        கொண்டிருந்த போது இன்று (11) மதியம் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        குறித்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

        எவ்வாறாயினும், மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு

          1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு

          சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ .1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

          அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .500 மில்லியன் இழப்பீடு கோரப்படும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

          இதற்கிடையில், புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 105 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக ´பாபரா´ என்ற கப்பல் நாளை (13) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

          இதற்கிடையில், நுகர்வோர் விவகாக அதிகார சபையினால் சந்தையில் இருந்து பெறப்பட்ட 125 தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஆய்வகத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டன.

          இவற்றில் 109 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் இல்லாதது கண்டறியப்பட்டது.

          மேலும் 10 மாதிரிகளில் அதிகபட்ச சாத்தியமான அளவை விட குறைவான அஃப்லாடொக்சின் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, மேலும் 06 மாதிரிகளில் அஃப்லாடொக்சின் அதிகபட்ச அளவை விட அதிகமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

          எவ்வாறாயினும், உணவுச் சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளின்படி மாதிரிகள் எதுவும் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என கூறப்படாததால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் கவலையடையத் தேவையில்லை என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

          புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் பிரச்சினை தொடர்பாக இலங்கை பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்

            கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்

            இலங்கை அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது

            அவ்வழியால் சென்றவர்கள் தூர் நாற்றம் வீசுவதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் சடலம்
            மீட்க பட்டுள்ளது

            இவ்வாறு சடலமாக மீட்க பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

            ,கோட்டா ஆட்சியில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை வீரர்

              பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை வீரர்

              இலங்கை விமானப்படையை சேர்ந்த ரோசன் அபேசுந்தர என்பவர் பாக்கு நீரிணையி நீந்தி கடந்து சென்று சாதனை படைத்துள்ளார் .


              பாக்குநீரிணையை நீந்தி கடந்து செல்ல சுமார் 28 மணிநேரமும் 19 நிமிடங்கள் பிடித்து சாதனை

              தலைமன்னாரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த அவர் அங்கே மீண்டும் திரும்பி வந்து

              சாதனையை படைத்துள்ளமை குறிப்பிட தக்கது

              பாக்கு நீரிணையை
              பாக்கு நீரிணையை
                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் மேலும் பொலித்தீன் ,பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்திட உத்தேசம்

                இலங்கையில் மேலும் பொலித்தீன் ,பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்திட உத்தேசம்

                இலங்கையில் பொலித்தீன் ,மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் புதிய

                சட்டம் ஒன்று ஏற்படுத்த தீவிர கவனம் செலுத்த பட்டு வருகிறது ,

                சுற்று புற சூழல் மற்றும் உயிரினங்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த கவனம் செலுத்த

                பட்டு வருவதாக அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  லண்டனில் தமிழர் சந்தை – அசத்தும் தமிழர் – சீமானுக்கு என் ஒட்டு வீடியோ

                  லண்டனில் தமிழர் அசத்தும் – சத்தும் தமிழர் – வீடியோ

                  லண்டனில் அகதியாக வந்த தமிழர்கள் அசத்தும் அளப்பெரும் சாதனைகளில் இவையும் ஒன்று

                  ,வர்த்தகரீதியில் பிரிட்டனில் ,குறிப்பாக லண்டனில் கொடி கட்டி பறக்கின்றனர்

                  அவ்விதமான காட்சி பதிவு இது,

                  click here video

                  https://www.youtube.com/watch?v=iaqphwswBVo
                  https://www.youtube.com/watch?v=zWBbU65d1ic
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல் video

                  இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல்

                  இலங்கையில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை வழங்கி இலங்கையை சிங்கப்பூராக மாற்றி

                  செல்ல வேண்டிய சூழலை மறந்து தற்போது இனவாதத்தை கக்கி தமது வாக்கு பெறும் நகர்வுகளை

                  நோக்கி செல்கின்றார்கள் ,தமிழர்களின் அடிப்படை அரசியலை புரிந்து கொள்ள ஆளும் சிங்கள அரசுகள் மறந்து வருகின்றன

                  இந்த தவறான பார்வை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ,சமத்துவம் ,ஒற்றுமை என்பது

                  தவறி செல்கிறது ,இதனால் தமிழர்கள் தோற்று போனார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

                  சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பித்து கொண்டது ,ஆயினும் அதனை அடுத்த

                  கட்டத்திற்கு நகர்த்தி இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட வேண்டும் எனவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

                  கூட்டமைப்பின் கடத்தி கொடுப்பு ,மற்றும் உள்ள அடி தடிகள் என்பனவற்றையும் இடித்துரைக்கின்றார்

                  CLICK HERE VIDEO

                    Posted in இலங்கை செய்திகள்

                    பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது

                    பொலிஸ் திடீர் சோதனை – போதையில் வண்டிகள் செலுத்தியவர்கள் கைது

                    இலங்கையில் எதிர்வரும் தமிழ் சிங்களபுத்தாண்டை முன்னிட்டு 8500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                    இவர்கள் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் பொழுது பலநூறு சாரதிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

                    போதையில் வண்டி செலுத்தி சென்ற சாரதிகள் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,அவர்கள்பயணித்த

                    வண்டிகளும் பறிக்க பட்டுள்ளது ,இவ்விதமான சாரதிகளினால் தான் வீதி விபத்து ஏற்படுவதாக குற்றம் சுமத்த பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      புத்தாண்டுக்கு மக்களுக்கு 5000 பணம் வழங்கும் கோட்டா அரசு

                      புத்தாண்டுக்கு மக்களுக்கு 5000 பணம் வழங்கும் கோட்டா அரசு

                      இலங்கையில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசினால் ஐந்தாயிரம் ரூபா வழங்க பட உள்ளது

                      சில எம்பிக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிதி வழங்க படவுகள்ளதாக தெரிவிக்க

                      படுகிறது ,தமிழகத்தை போன்று பணத்தை வழங்கி வாக்கினை அள்ளி செல்லும் புதிய அரசியல்

                      கலாச்சாரத்தை ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் ஆரம்பித்து வைக்க படுகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

                        கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ளதை அருந்தியவர் மரணம்

                        யாழ்ப்பாணம் கடலில் மிதந்துந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய நபர்

                        ஒருவர் அவ்விடத்திலேயே சுருண்டுவீழ்ந்து மரணமாகியுள்ளார்

                        மரணமானவர் 47 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது

                        குடிபானம் என நினைத்து அதனை அருந்திய நபரே இவ்விதம் மரணமாகியுள்ளார் ,சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          உளவுத்துறை டிரக்ட்டர் திடீர் மாற்றம் -கோட்டா அதிரடி

                          உளவுத்துறை டிரக்ட்டர் திடீர் மாற்றம் -கோட்டா அதிரடி

                          இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியில் இராணுவ படைத்துறை கட்டுமானங்களில் திடீர் இட மாற்றங்கள்

                          இடம் பெற்று வருகிறது அவ்விதம் தற்போது குற்ற தடுப்பு பிரிவின் செயல் பாட்டு தலைமை அதிகாரியாக பணியாற்றி

                          வந்தவர காவல்துறை தலைமையக குற்ற பிரிவிற்கு நியமிக்க பட்டு ,இவரது இவ்விடத்திற்கு SSP

                          Rohan Premaratne நியமிக்க பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

                            98 கடவுச்சீட்டுகளுடன் 3 பேர் கைது

                            98 கடவுச்சீட்டுக்களை தன்னகத்தே வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            கடவுச்சீட்டுக்கு உரிமையானவர் களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி

                            வைப்பதற்கு குறித்த நபர்கள் முயன்று உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

                            மேலும் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?

                              தீயில் எரிந்து அழிந்த கடை – நடந்தது என்ன ..?

                              இலங்கை புறக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் விற்பனை புரியும் கடையில் திடீரென தீ பரவல்

                              ஏற்பட்டுள்ளது ,இதனால அந்தக் கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

                              இந்த தீ பரவுக்குக்குரிய காரணம் உடனடியாகா தெரியவாவில்லை விசாரணைகள் தொடர்ந்து

                              இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

                                கழுத்து வெட்ட பட்ட நிலையில் வாலிபன் சடலம் மீட்பு

                                இலங்கை தலைநகர் கொலும்பை அண்மித்த கல்கிஸை காலி வீதியில் வீடொன்றுக்கு அருகில் இருபத்தி

                                இரண்டு வயது வாலிபன் ஒருவர் கழுத்து வெட்ட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இது படுகொலை

                                என தெரிவிக்க படுகிறது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                கோட்டா ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் இவ்வாறான மர்ம கொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே கவனிக்க தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்

                                  மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கு, குறைந்தது 6 மாத காலம் தேவையென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சரான ஜி.எல். பீரிஸ், குழப்பகரமான சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. சிறந்த தீர்வு கண்டதன் பின்னரே நடத்தப்படும் என்றார்.

                                  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (5) நடை​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                                  மாகாண சபை தேர்தலில் எல்லை நிர்ணய பிரச்சினை பிரதானமாக கருதப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண எல்லை நிர்ணய குழுவினை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த அவர்,மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

                                  “தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காக மாகாண சபை தேர்தலில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியது.

                                  2017 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் தொடர்பிலான தேர்தல் முறைமை இரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக பிறிதொரு தேர்தல் முறைமை அப்போது அறிமுகப்படுத்தப்படவில்லை” என்றார்.

                                  உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான வரைவு எதிர்வரும் ஜூன் மாதம் முழுமையாக கிடைக்கப் பெறும் என தெரிவித்த அவர், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்குவோமென நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பல ஏற்பாடுகள் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாற்றதாக உள்ளது என்றார்.

                                  தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை நிலையான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு சாதகமாக அமையவில்லை. 2020ஆம் ஆண்டு இடம் பெற்று முடிந்த

                                  பொதுத்தேர்தலிலும் இத்தன்மை காணப்படுகிறது. விருப்பு வாக்குமுறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் மாத்திரமல்ல, அரசியல் கட்சிக்குள்ளும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

                                  நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, குறைப்பாடுகளுக்குத் தீர்வு காண பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து

                                  அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 15 பேரை கொண்ட குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு

                                  பாண்டிகை காலத்தில் இவை இல்லை – இராணுவம் அறிவிப்பு

                                  இலங்கையில் இடம்பெற்றவுள்ள பண்டிகளி காலப்பகுதியில் பயன் கட்டுப்பாடுகள் விதிக்க பட

                                  மாட்டாது என இராணுவ தளபதி தெரிவித்துளளார்

                                  இந்த பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு பணியில் பல்லாயிரம் இராணுவம் போலீசாரை

                                  கடமையில் ஈடுபடுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது