Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்

பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை – பலர் காயம் – தீவிரவாதிகள் தாக்குதல்

இன்று காலை ஒன்பது மணியளவில் பிரான்ஸ் Catholic church in Nice பகுதியில் உள்ள தேவாலயம்

ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை

நடத்தினர் ,இதில் இருவர் கோரமாக கழுத்து வெட்டி படு கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,கொலையாளி காவல்துறையிரால் கைது செய்ய பட்டுள்ளனர்

பிரபல ஊடகம் ஒன்று இஸ்லாமிய மதத்தை இழிவு படுத்தி காட்டூன்

வெளியிட்டதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

தற்போது போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த

பட்டுள்ளது ,இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது

பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை
பிரான்சில் இருவர் தலைவெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

கொரனோ பரவல் எதிரொலி – 11 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

கொரனோ பரவல் எதிரொலி – 11 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள 11 வர்த்தக நிலையங்களை

இன்றிலிருந்து மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புத்தேகம

சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரி மிலான் யஹத்துகொட தெரிவித்துள்ளார்.

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார

மத்திய நிலைதயத்துக்கு வருகைத் தந்த வர்த்தகர் ஒருவருக்கு தொற்று

உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே, குறித்த பொருளாதார

நிலையத்தின் வர்த்தக நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

மேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை

மேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை

செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள்

பிரவேசிக்கவோ அல்லது வெளியேரவோ முடியாது என்றும் கூறினார்.

நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

இதேபோன்று குளியாப்பிட்டி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை காலை 5.00 மணியுடன் நிறைவடைகின்றது.

ஏனைய 68 பொலிஸ் பிரிவுகளில் அதேபோன்று ஊரடங்கு சட்டம் இடம்பெறும். இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள

காலப்பகுதியில் எந்த வகையிலும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கோ மேல் மாகாணத்திற்கு வருவதற்கோ யாருக்கும் வாய்ப்பில்லை.

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில் அமைந்துள்ள இடங்களில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்த

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீதி தடைகள் நாளை முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மேல் மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்குகின்றது. இந்த வீதி உடாக மேல்

மாகாணத்திற்கு வருவதற்கும் மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கும் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை.

விபத்துக்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். விசேடமாக அத்தியவசிய சேவையில்

ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு தமது கடமைகளை முன்னெடுக்க செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இதை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்டிருந்த திருமண வைபவங்கள் அல்லது வேறு எந்த வைபவங்களையும் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுதல்,

மண்டபங்களில் மக்கள் ஒன்று கூடுதல் இந்த காலப்பகுதியில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது கவனத்திற்கு

கொண்டு வந்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸ் தொற்று மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நாட்டில் பரவ ஆரம்பித்தது. அப்போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடனும், பொறுப்புடனும் அதனை தடுப்பதற்கு

அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இதனை மீண்டும் நினைவில் கொண்டு பொதுமக்கள் செயல்படுவது அவசியம்.

வைரஸ் தொற்று தொடர்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காக தொலைபேசி மூலம்

தொடர்பு கொள்வதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நடமாடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு

எதிராக சட்ட நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்..

Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது

இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து

வைரயறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ந்து கடவத்தை மற்றும்

கடுவல நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்

சேவை ஆரம்பிக்கப்படாது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?

இன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …?

கடந்த 22ஆம் திகதியன்று நிறை​வேற்றப்பட்ட, 20ஆம் திருத்தச்

சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

அந்த சட்டம் இன்று (29) முதல் அமுலாகும் என

அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

குண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி

குண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி

இலங்கைக்கு வஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்

பொம்பியோ கொழம்பு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயதிற்கு விஜயம் செய்தார்.

இதகை; தொடந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இவர் இந்திய விஜயத்தின் பின்னர் நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதவிக் காலத்தில் நாட்டிற்கு

வருகை தந்த உயர் அமெரிக்க இராஜாங்க அதிகாரி மைக் பொம்பியோ என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

கொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு

கொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு

கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனியில் அடுத்த மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலை – ஜெர்மனியில் மீண்டும்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு

பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்

தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது.

இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக ஜெர்மனி நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மற்ற ஐரோப்பிய

நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துவந்த போதும் ஜெர்மனி அரசின் நடவடிக்கைகளால் அந்நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது.

இதையடுத்து, அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கியது.

ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டத்தையடுத்து ஜெர்மனியில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தொடங்கியுள்ளது.

இதனால், அந்நாட்டில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 964 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் வைரஸ்

பரவியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 275 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நேற்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவும் வேகம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளதையடுத்து ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர்

30 வரை (4 வாரங்கள்) ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஊரடங்கின் எவை செயலில் இருக்கும், எவை மூடப்படும் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • கேளிக்கை விடுதிகள், பார்கள் மூடப்படுகிறது.
  • உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி
  • உடற்பயிற்சி நிலையம், சினிமா, தியேட்டர்கள் மூடல்
  • தனியார் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை.
  • தங்கும் விடுதிகள் மூடல்
  • தேவையற்ற பயணங்களை தவிர்த்தல்
  • அத்தியாவசிய கடைகள் உரிய பாதுகாப்பு வழிமுறையுடன் செயல்பட அனுமதி
  • பள்ளிகள், மழலையர் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி
  • நர்சிங் ஹோம்களில் பார்வையாளர்கள் வர அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும் 2 வாரங்களுக்கு பிறகு மறு சீராய்வு செய்து முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்

எட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்

பிரிட்டனில் அதிகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவல் மற்றும்

இ றப்புக்களை அடுத்து எதிர் வரும் எட்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும்

இடைக்கால அடித்து பூட்டும் நிகழ்வு இடம் பெறும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

இவை நத்தார் தினத்திற்கு முன்னதாக முழுமையாக இடம்பெறும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது .


தற்போது இறப்பு எண்ணிக்கையை அதிகரித்து அரசு காண்பித்து வருவதன் நோக்கம் இதன் தொடக்கம் என எதிர்வு கூறப்படுகிறது

வரும் சிலவரங்களில் இதன் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஐநூறை தாண்டும்

பொழுது புதிய லொக்கடவுன் தொடர்பான இறுக்கமான தடைகள்

அறிவிக்க பட்டு பின்னர் முழுமையான நகர்வுகள் ஆரம்பிக்க படும் என எதிர்வு கூறப்படுகிறது

மக்களே தற்பொழுது அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து

கொள்ளுங்கள் ,வெளியியல் நடமாட முடியாத படி கடுமையான சட்ட நகர்வுகள் முன் வைக்க படும் அபாயம் உள்ளது

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை

12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை

பிரிட்டனில் Scarborough பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பன்னிரண்டு

வயது சிறுமி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் ,

இவரது கற்பழிப்பு தொடர்பாக நீதிமன்றில் இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில்

குற்றவாளி என அடையாளம் காணப் பட்ட நிலையில் இருபது வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இவர் மீது ஒன்பது குற்ற சத்துக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?

பிரிட்டனில் கணவன் இறந்த மூன்றாம் நாளில் கொரனோ

நோயினால் பாதிக்க பட்டு இருந்த மனைவி இறந்துள்ளார்

தந்தையின் இறுதி கிரியை நிகழ்வுகளை நடத்த பிள்ளைகள்

முனைந்த பொழுது தயாரும் இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து மேலோகத்தில் வாழ்வார்கள் என பிள்ளைகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

ஒருவரை ஒருவர் பிரிந்து வசித்தது இல்லை எனவும், இப்பொழுது இவர்கள்

இணைந்தே சென்றுள்ளனர் என அயலவர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்

இது தான் பந்த பாசம் என்பதா ..?

கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி - இது தான் காதலா ..?
கணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..?
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் இரு சிறுவர்களுடன் வீதியில் நடந்து சென்ற 32 தாய்

ஒருவர் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்

தள்ளு வண்டியில் சிசு ஒன்றும் அவரை மூத்தவர் தள்ளு வண்டியின் கை பிடியை

பிடித்த வண்ணம் நடந்து சென்றனர் , அவ்வேளை பிள்ளைகளை தள்ளி

விழுத்தி விட்டு தாயின் தலை மற்றும் உடல்கள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது

மேற்படி கொலை வெறி தாக்குதல் தொடர்பில் தீவிர நீதி விசாரணைகள்

இடம் பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் Doncaster Road, in Belgrave, Leicester பகுதியில் இடம் பெற்றுள்ளது

காயங்களுக்கு உள்ளான தயார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டு தேறியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்

நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா சென்ற நபர்களில் 6 சிறுவர்கள் நீரோடையில் மூழ்கி பலியானார்கள்.

ஆந்திராவில் நீரோடையில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர்

அருகிலுள்ள வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள ஒரு நீரோடையில் இறங்கி

குளித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சிறுவர்கள் 6 பேரும் நீரோடையில் மூழ்கினர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீரோடைக்குள் இறங்கி சிறுவர்களை தேடினர். இதற்கிடையில் இதுபற்றிய தகவல்

அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் சிறுவர்களை தேடும் பணியில் இறங்கினர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவர்கள் 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்ற 2 சிறுவர்களின் உடல்கள் இன்னும்

கிடைக்கவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்

கண்டி மாவட்டம்  கம்பலை நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் தெரு நாய்களுக்கு நாளாந்தம் நாய்கள் காணப்படும்

இடங்களுக்கு சென்று உணவு வழங்கி வரும் மாமனிதர ஒருவரை கானும் வாய்ப்பு கிடைத்தது. பெயர் குறிப்பிட விரும்பாத இவர்

நாளாந்தம் அதிகாலை நித்திரை விட்டு எழுந்து குடும்பத்தாரின் உதவியுடன் நாய்களுக்காக சமைத்து தனது முச்சக்கர வண்டி

மூலம் நாய்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார்.


தினமும் குறித்த நேரத்திற்கு நாய்களுகான உணவுகள் வழங்கப்படுவதினால். நாய்கள் சரியான நேரத்திற்கு சரியான இடத்தில் ஒன்றாக வந்து நின்று தங்கள்

உணவுகளை பெற்றுக் கொள்கின்றன. சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு லஜ்சீட் போன்றவற்றையும்

நாய்களுக்கு உணவு வழங்கிவிட்டு உடனே எடுத்த செல்கின்றார்.   இந்த உன்னத புண்ணிய செயற்பாட்டை

தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் குறித்த நபருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை

தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்
தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்
Posted in இலங்கை செய்திகள்

இந்த பாதையை திருத்துவது எப்போது?

இந்த பாதையை திருத்துவது எப்போது?

ஹட்டன் கொழும்பு பிரதான பாதையில் குயில்வத்த பிரதேசத்தில் தொடர்ந்து மலையகத்தில் நிலவிய காலநிலை மாற்றத்தின் போது

பாதையின் ஒரு பகுதி பாதிப்படைந்து போக்குவரத்து ஒரு வழி பயணமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறைகள் முன் கொண்டு வரப்பட்டு பல மாதங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான எந்தவிதமான நடடிக்கைகளும் இது வரைக்கும் முன்னெடுக்கபடவில்லை. இதனால்

போக்குவரத்தில் ஈடுப்படும் வாகனங்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இரவு வேலையில் வாகனங்களை செலுத்தும் போது பழுதடைந்த பாதை தொடர்பில் தெரிந்துக்

கொள்ள எந்தவிதமான அறிவுருத்தல்களும் இல்லை எனவும் சாரதிகள் கூறுகின்றனர். பாதிப்டைந்த இடத்தில் பாதசாரிகளின்

கடவையும் காணப்படுகின்றது. தற்போது பாதசாரிகளினால் அதனை பாவிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த பாதையை உடனடியாக திருத்த வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின்

பொறுப்பாகும். இதனை உடனடியாக திருத்தி தறுமாறு சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த பாதையை திருத்துவது
இந்த பாதையை திருத்துவது
Posted in இலங்கை செய்திகள்

முன்னால் ஜனாதிபதியின் கம்பலை பழத்தோட்டம் எங்கே

முன்னால்ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒர்வில் நவதேவிட்ட

மகாவலி கங்கை ஆற்றங்கரையில் “புனருதய” தேசிய சுற்றாடல் பேணல் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழ் “வனரோபா” தேசிய

மரநடுகையை முன்னிட்டு மாதிரி “வளர்சோலை” ஒன்று 2015 ஆம் ஆண்டு  முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வனரோபா வளர்சோலை செயற்திட்ட்த்தின் கீழ் பயன் தரும் மரங்கள் உட்பட குறுகிய காலத்தில் பயன் தரும் மர

பழச்செய்கையையும் முன்னெடுப்பதற்கும் இதன் மூலம் நாட்டுக்கு மருந்துகள் அற்ற பழங்களை வினியோகிப்பதற்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டன.

தற்போது இந்த வேலைத்திட்டம் கைவிடப்டடுள்ளது. இதற்கான கட்டடம் பற்றைகளால் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில்

காணப்படுகின்றன. செயற்திட்டத்திற்கு என சுத்தப்படுத்தபட்ட பாரிய இடங்கள் தற்போது மீண்டும் காடாகி பயனற்று காணப்படுகின்றது.

குறித்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட அரசியல் ஸ்தீர தன்மை காரணமாக இந்த செயற்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிய

வந்தாலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வது கட்டாயமானதாகும்.

பயனற்று இருக்கும் இந்த இடத்தை பயனுள்ளதாக வேண்டியதும் கட்டாயமானதாகு

Posted in இலங்கை செய்திகள்

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி

( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதியினை மையப்படுத்தி

அமெரிக்க வெளியுறவுச் செயலர் பொம்பியோவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விடயத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2020க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பது போல், சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள

சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் நிலை என்பது, இந்தியப் பெருங்கடலுக்குள் அதிகார நீட்சிக்கு

இத்துறைமுகதளத்தை சீனம் இராணுவ நோக்கில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதவுரிமை மீறல்களிலும், சுற்றுசூழலை வலிந்து அழிவுப்பதிலும், சீனத்தின் நடத்தை என்பது உலகறிந்த விடயம் என்பதும், சீனம்

இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிய அச்சம் அறிவார்ந்த ஒன்றெனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்தச் சிக்கல்களைக் கவனிக்க உங்கள் பதவிப் பொறுப்பின் அதிகாரத்தையும் விருப்புரிமையையும் பயன்படுத்துவது குறித்துக் கருதிப் பார்க்கும் படி சிறிலங்காவுக்கு

பயணம் செய்யவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், ஹம்பாந்தோட்ட துறைமுகத்தைச் சீனம் பயன்படுத்திக் கொள்ளல் ஆகிய

வியடங்களில் சிறிலங்காவை நேரடியாக கேள்விக்குட்படுத்துமாறு கோரியுள்ளது.

மேலும் அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கு எழுதிய கடித்தில், இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, 70 000க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, சிறிலங்கா அரசு

புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நம்பத்தக்க சான்றுகள் இருப்பதாக, ஐநாவின்

முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் அமர்த்திய வல்லுநர் குழு அறிக்கையினை பிரதமர் வி.உருத்திரகுமாரன்

சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் 2015ம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் தந்த சிறிலங்கா பற்றிய புலனாய்வு

(OISL) அறிக்கையில் முதன்மையாக சிறிலங்கா அரசு அமைப்புசார் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிகாட்டியுள்ளார்.

இதேவேளை அமைதிக்கும் நீதிக்கும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆகச் சிறந்த தீர்வாக, ஸ்காட்லாந்திலும், எரித்ரியாவிலும், கொசாவோவிலும் நடத்தப்பட்டது போல்

தமிழர்களுக்கான ஒரு பொதுவாக்கெடுப்பே என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நம்பிக்கை என சுட்டிக்காட்டிய பிரதமர்

வி.உருத்திரகுமாரன், இந்தியப் பெருங்கடலின் புவிசார் கேந்திரமாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதியின் 700 கிலோ மீற்ற்ர்

கடலோரப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான வேணவா நியாயமானது, செல்லத்தக்கது என பிரதமர்

வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளமை அமெரிக்காவின் இந்தியப் பெருங்கடல் அரசியலின் முக்கியமான விடயமாக உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்

பிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்

பிரிட்டனில் உணவகம் ஒன்றுக்குள் புகுந்த இரண்டு திருடர்கள் அங்கிருந்த

பியர்,மற்றும் சீஸ் கேக் போன்ற சில பொருட்களை திருடி மப் அடிக்கும் வாளி ஒன்றுக்குள்

நிரப்பி வைத்து விட்டு அங்கிருந்த பியர்களை உடைத்து குடித்து ,கேக்கையும் சாப்பிட்டுள்ளனர்

போதை தலைக்கேற அப்படியே அந்த கழிவறைக்குள் நித்திரை கொண்டுள்ளனர்

காலை உணவக்கத்தை திறக்க வந்த உரிமையாளர்கள் குறட்டை சத்தம்

வருவதை கண்டு சென்று பார்த்தால் அங்கு திருடர்கள் இருவர் அழகாக

குறட்டை விட்டபடி தூங்கிய வண்ணம் இருந்துள்ளனர் அந்த காட்சிகளை

அப்படியே படம் பிடித்த அவர் பேஸ்புக்கில் பதிவிட்டதுடன் பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்

வந்த போலீசார் அவர்களை கைது செய்து சென்றுள்ளனர்

இப்படியும் நல்ல திருடர்கள் இருக்கத்தான் செய்கின்றனர், வட போச்சே

பிரிட்டனில் உணவகத்தை உடைத்து
பிரிட்டனில் உணவகத்தை உடைத்து
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் கடந்த தினம் செய்வ்வாய் கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன்

குழுக்களில் கீழ் வரும் இலக்கங்களை பெற்றுThe numbers were 13, 15, 28, 44, 32

and the Lucky Stars were 3 and 12. நபர் ஒருவர்
எழுபத்தி ஒன்பது மில்லியன் பவுண்டுகளை தனதாக்கி சென்றுள்ளார்

வாரம் தோறும் முப்பது மில்லியன் பவுண்டுகளை பல்வேறு பட்ட லொத்தர்

குழுக்கள் மூலம் வெற்றியர்கள் தட்டி செல்வதாக குறித்த நிறுவனம்

தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை
பிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை
Posted in உலக செய்திகள்

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை

லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை

பிரிட்டனுக்கும் நுழையும்ம் முகாமாக பிரான்ஸ் மற்றும் லண்டன் கலை

வழியாக நுழையும் முகமாக படகு ஒன்றில் பயணித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள்

பயணித்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த ஐந்து மாதம் மற்றும் எட்டு மாத சிசு உள்ளிட்ட நால்வர் பலியாகினர்

மேலும் பதின் ஐந்து பேர் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளனர்

மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்

காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

லண்டனுக்குள் நுழைய முயன்ற
Tலண்டனுக்குள் நுழைய முயன்ற
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி

பிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாகபரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த தினம் 367 பேர் பலியாகியுள்ளனர் ,இந்த நோயின் தாக்குதலில்

சிக்கி இதுவரை சுமார் 61,000 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 54,609 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

வேகமாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலின்எதிரொலியால் நான்கு மாகாணங்கள் முற்றாக அடித்து பூட்ட பட்டுள்ளன

லண்டன் மாநகரம் அதிக உச்ச நோயாளர்களை கொண்ட பகுதியாக

அறிவிக்க பட்டுள்ளது
வரும் மாத இறுதியில் முழு லோக் டவுனுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என தெரிவிக்க படுகிறது