மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
மின்சாரம் தாக்கியதில் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.
இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை
மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வெற்றிபெற்றோர் தத்தம் பிரதேசங்களை அன்றாடம் கண்காணித்து, இவ்வாறு வளர்ந்திருக்கும் மரங்கள், தேங்கியிருக்கும் ஆறுகள்,
பழுதடைந்திருக்கும் கிணறுகள், உடைந்திருக்கும் பாலங்கள், வீதிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுத்திருக்க கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை

- ஞானசார தேரோவின் ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு









