எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி
Spread the love

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி, அதிர்ச்சிகரமான சம்பவம் கொட்டவா ரூட்மேல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திடீரென வீட்டில் தீப்பற்றியதை அடுத்து அவ்வேளை அங்கிருந்த 19 வயது இளம்பொண் அந்த தீயில் கருகி பலியான பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பற்றல் நடவடிக்கை எடுத்து விரைந்து சென்ற மீட்பு குழு மற்றும் அயலவர்கள் வீட்டு தீயை அணைத்த பொழுதும் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

இந்த வீட்டில் இந்த தீ பற்றல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பாக, தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு காரணமாக அல்லது மின்சார காசிவின் காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

எனினும் குற்றப் புலனாய் பிரிவுகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

விசாரணையின் முடிவிலேயே இந்த தீப் பற்றல் சம்பவம் என்பது ,விபத்து சம்பவமா ,அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவமா என்பது தெரியவரும் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

எரிவாய்வு சிலிண்டர்கள் வெடித்தும், மின்சார காசிவின் காரணமாக பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இதுபோன்று இந்த அப்பாவி 19 வயது சிறுமியும் ,தீயில் கருகி பலியான சம்பவம் இடம்பெற்று இருக்கலாம், என்கின்ற சந்தேகம் மத்தியில் காணப்படுகிறது.

விசாரணையின் முடிவிலேயே ,காவல்துறை என்ன நடந்தது என்பதை அறியத் தருவார்கள் என்பதாக மக்கள் பேசுகிறார்கள்.